சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

பாட்டு புத்தகங்களும் பழைய வரலாறும்

Thanks to Mr Senthilvel Sivaraj

பாட்டு புத்தகங்களும் ,பழைய வரலாறும்...

பத்து பைசா கொடுத்து பாட்டு புத்தகத்தை வாங்கும் போதே அந்த பாடல்கள் இனி எனக்கே சொந்தம் என்பது போன்ற பரவசம் கிடைக்கும்.ஆளில்லா இடம் தேடி பாட்டு புத்தகத்தை  விரித்து ஒவ்வொரு பாடலாய் வாய்விட்டு உரக்க பாடி சந்தோசம் கொள்ளும் மனம்.இதெல்லாம் 1970 களில்.நடிகர்திலகத்தின் பாட்டு புத்தகங்களை தவிர வேறெந்த பாட்டுப் புத்தகங்களின் மீதும்  என் விரல் ஸ்பரிசங்கள் பட்டதேயில்லை.ஒன்று முடித்தவுடன் அடுத்த புத்தகத்தை வாங்குவதும் படிப்பதும் தொடரும்.பெரும்பாலும் விடுமுறை நாட்களில்தான்.
நண்பர் குழாமில் அடிக்கடி போட்டிகள் கூட நடக்கும்.நான் பாடுவது போலே முழுவதுமாய் உன்னால் பிசகாமல் பாட முடியுமா? என்று மார்தட்டி சவால் விடுவார்கள் எல்லோரும்.பெரிய பாகவதர்கள் போலும் நினைத்துக் கொள்வார்கள் தங்களை.
பின்னாட்களில் இதையெல்லாம் நினைத்து பார்க்கையில் எவனுக்குமே பாடவே வரவில்லையே! அப்படி இருந்தும் எப்படி சவடால் விட்டு பாட்டுப் பாடினோம்? அதுவே சிறப்பென எந்த நினைப்பில் பாடித் திரிந்தோம்!
இது ஒரு புறம் இருக்கட்டும்.
அடுத்து ,சேர்ந்த பல புத்தகங்களை ஊசியால் கோர்த்து ஒன்றாக இணைத்து மேலட்டை ஒட்டி அதில் வரிசையாக அதிலுள்ள பட பெயர்களை எழுதி  வைப்பது.
என் அனுபவத்தில் நடிகர்திலகத்தின் பாட்டு புத்தகங்களை சேர்த்து வைத்திருப்பவர்களைப் போல் வேறெவரின் பாட்டு புத்தகங்கள் சேர்த்து வைத்திருந்தவர்களை பார்த்ததில்லை.
அழகாக பைண்ட் செய்யப்பட்டு மேலட்டையில் பள்ளி லேபிள் போல், லேபிள் ஒட்டி பெயர் ,விலாசம் ஒட்டி வைத்திருந்ததை நிறைய பேரிடம் பார்த்துள்ளேன்.பெரும்பாலோர் பாட்டு புத்கககங்களை இரவல் கேட்டார் தரவே மாட்டார்கள். 
அன்றைய காலத்தில் பாட்டுப்புத்தகங்களின் வணிகம் கடைக்காரர்களுக்கு நல்ல வசூல் மழையாக அமைந்திருந்தது.ஏராளமான பதிப்பகங்கள் நிறைய சம்பாதித்தன.மிக அதிக படங்களை கொடுத்த வகையில் நடிகர்திலகத்தின் படங்கள் நல்ல வசூலை செய்தன.வருடத்திற்கு எட்டு படங்கள் சராசரியாக நடித்ததால் வணிகர்களுக்கு வருடம் முழுவதும் நல்ல பண வேட்டைதான்.மற்ற நடிகர்களை விட நடிகர்திலகத்தால் அதிக லாபம் வணிகர்களுக்கு.எப்படியெனில் வசன புத்கங்கள் .வசன புத்தகங்களை பொறுத்த வரை மற்ற நடிகர்களுக்கு சாய்ஸ் இல்லை.
ஒரே உள்ளடக்கத்தை கொண்டு வகை வகையான தலைப்புகளில் சிவாஜியின் வசன புத்தகங்களுக்கு மாற்று இல்லவே இல்லை.குறிப்பாக "சிம்மக்குரல் சிவாஜியின் வீர கர்ஜனை "புத்தகம் அசுர விற்பனை தான். ஏனெனில் அது பின்னாட்களில் எத்தனை நடிகர்களை உருவெடுக்க வைத்ததது? எத்தனை மேடை விழாக்களுக்கு பயன் கொடுத்தன! நடிகர்களுக்கு நடிப்புக் கையேடாகவும் விளங்கியது நடிகர்திலகம்  சிவாஜியின் வீர வசன புத்தகங்கள் தான்! 
சங்கிலித் தொடர் போலே திரைப்படங்களை மையப்படுத்தி ஒரு வர்த்தகம்.இந்த வகையிலும் எவ்வளவு பெரிய வர்த்தகம்  நடிகர்திலகம் மூலம் நாட்டிற்கு கிடைத்துள்ளது? 
பத்து பைசா பாட்டு புத்தக வியாபாரம் எவ்வளவு லட்சங்களை சம்பாதித்து கொடுத்துள்ளது.எவ்வளவு பேரை லட்சாதிபதிகளாக்கியுள்ளது? மொத்த வணிகத்தில் நடிகர்திலகத்தின் பங்கு அதிகம் .இது போலவே காலண்டர் வியாபாரமும்.25 பைசா 50 பைசாக்களில் வண்ண வண்ண காலண்டர்களின் வியாபாரமும் வெகுவே ஜோராக இருந்தன.
நடிகர்திலகத்தின் மூன்று கெட்டப்புகள்(சி.செல்வன் ,ராஜா, ரங்கதுரை)  காலண்டர்,குதிரையில் உட்கார்ந்து காட்சி தரும் ராஜ ராஜ சோழன், சௌத்ரீ போஸ் காலண்டர்கள்,சுதந்திர தின ஸ்பெசலாக கட்டபொம்மன் தேசியக் கொடி பிடித்திருக்கும் காலண்டர்களும், இன்னும் பிறவும் இன்றுவரை மறக்க இயலாதவை.அன்றைய சிவாஜி ரசிகர்களின் வீட்டுக் கதவுகளையும், பீரோக்களையும், சுவர்களையும் அலங்கரித்தவை காலண்டர்கள் படங்களே!
ஒரு நடிகர்திலகத்தின் திரைப்படம் திரைப்படம் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அது ஒரு பெரிய சங்கிலித் தொடர் வணிகமாய் நீண்டிருந்தது.எனக்கு சிறு வயதில் இருந்தே சினிமாவில் சிவாஜி மட்டுமே பழக்கம். தெரியும். அழியாத ஞாபகங்களும்.அது தான் இக் கட்டுரை.
பாட்டு புத்தகத்தில் ஆரம்பித்த கட்டுரை இங்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டது.
பிடித்தாலும் ,பிடிக்க விட்டாலும் கருத்தை தெரிவிக்கவும்.
நன்றி 
செந்தில்வேல் சிவராஜ்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற