இடுகைகள்

ஆகஸ்ட், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சந்திரமுகி உருவானதின் பிண்ணனி

ரஜினிக்கு கை கொடுத்த அன்னை இல்லம்..சந்திரமுகி... சந்திரமுகிக்கு எப்ப பூஜை போட்டாங்களோ அப்ப இருந்து இதே பேச்சு வந்துகிட்டே இருக்கு. அன்னை  இல்லம்  ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கிறதாகவும் அந்த டயத்துல ரஜினி கால் சீட் கொடுத்ததுனால சிவாஜி புரொடக்ஷன்ஸ் சந்திரமுகி படத்தை தயாரிச்சு அந்தக் கஷ்டத்தை எல்லாம் போக்கிட்டதாகவும்  பேச்சு வந்துகிட்டே இருக்கு.இப்ப கூட யூடியூப் சேனல்ல செய்யார் பாலு அப்படிங்கறவரு ரஜினி கால் சீட் கொடுத்ததாலே தான் அன்னை  இல்லம்  கஷ்டத்திலிருந்து மீண்டு வந்துருச்சு அப்படின்னு பேட்டி கொடுத்து இருந்தார். ஏதோ அந்த ஒரு படத்தை தயாரிச்சு வெளியிட்டு அதுல வந்த லாபத்தில் தான் அன்னை இல்லம் ரொம்ப செழிப்பா வளர்ந்துருச்சு அப்படிங்கிற அர்த்தத்திலேயே அந்த சைடு இருக்கிறவங்க பேசிக்கிட்டே இருக்காங்க. இத பேசறதுக்கு முன்னால ரஜினி அதுக்கு முன்னால நடிச்ச பட சங்கதியை கொஞ்சம் நினைச்சு பாக்கணும். அந்தப் படம் பாபா ...அது எப்படி ஓடுச்சு.. அதுக்கு என்னவெல்லாம் பிரச்சனை வந்துச்சு ,அப்படிங்கறத அவங்க பேச மாட்டேங்குறாங்க!  அந்த கால கட்டத்துல நடந்த ஒரு சம்பவம்.கர்நாடகாவில் நடந்த ...

சிவாஜி புரொடக்சன்சின் 100 நாள் வெள்ளிவிழா படங்கள்

படம்
சிவாஜி பிலிம்ஸ்  சிவாஜி புரொடக்சன் தயாரித்து 100 நாள் வெள்ளிவிழா ஓடிய திரைப்படங்கள் : நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பல திரைப்படங்கள் சிவாஜிபிலிம்சால் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இது போக ,ராஜா மணிபிச்சர்ஸ், சாந்தி பிலிம்ஸ் ,பிரபு ராம் பிக்சர்ஸ் ,ராம்குமார் பிக்சர்ஸ் என்ற பெயர்களில் நடிகர் திலகம் நடித்த பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.  இந்தப் பதிவில் சிவாஜி பிலிம்ஸ் சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரித்த படங்களை மட்டும் நாம் பார்க்கலாம்  1956 இல் சிவாஜி நடித்த படம் அமரதீபம். ஸ்ரீதர் கதை வசனத்தில் டி பிரகாஸ்ராவ் இயக்கிய படம் இது .தமிழில் வெற்றி அடைந்த இந்த படத்தை  இந்தியில் தயாரிக்க சிவாஜி கணேசன்  முடிவு செய்தார்.சிவாஜி புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு தேவானந்த் ,வைஜெயந்தி மாலா நடிக்க இந்தப் படம் ஹிந்தியில் தயாரிக்கப்பட்டது. அமர்தீப் என்பது இந்தி பட தலைப்பாகும் . சிவாஜி ப்ரொடக்சன் தயாரித்த முதல் படம் இது .இந்தியிலும் இது நல்ல வெற்றி பெற்றது. தமிழ் அமரதீபம் 100 நாள் ஓடி வெற்றி கண்ட படம். 1964ல் நடிகர் திலகம் தனது சிவாஜி பிலிம்ஸ் என்ற பேனரில் மிகுந்த பொருட்...

சிவாஜியோடு நடித்து பெயர் வாங்கிய குழந்தை நட்சத்திரங்கள்

படம்
குழந்தைகளோடு நடிப்பதென்றால் நடிகர்திலகம் சிவாஜி கணேசனுக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கும்.மிகப் பெரும்பான்மையான குழந்தை நட்சத்திரங்கள் சிவாஜியோடு இணைந்து நடித்திருக்கிறார்கள். மாஸ்டர் ஸ்ரீதர் குட்டி பத்மினி கமலஹாசன் பேபிஇந்திரா ஸ்ரீதேவி பப்லு நடிகை மீனா நடிகை ஷாலினி பேபி வினோதினி என்று இன்னும் ஏராளமான குழந்தை நட்சத்திரங்கள் சிவாஜியோடு நடித்திருக்கிறார்கள் . குழந்தை பட்டாளங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிகர் திலகம் நடித்த படங்கள் என்றால் குழந்தைகள் கண்ட குடியரசு எங்க மாமா படங்களை சொல்லலாம் .. அதிலும் குழந்தைகள் கண்ட குடியரசு படத்தில் சிறுவர் சிறுமிகளே  கதாநாயக வேடங்களில் நடித்திருப்பார்கள். குழந்தைகள் கண்ட குடியரசு படத்தில் நடிகர்திலகத்துக்கு கௌரவ வேடம் தான் . விஞ்ஞானியாக நடித்திருப்பார் . இது குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட திரைப்படமும் கூட. நான் பெற்ற செல்வம் நலமான செல்வம் பாடல்  பாபு படத்தில் இடம் பெற்ற  இதோ எந்தன் தெய்வம் முன்னாலே பாடல்  என் தம்பி படத்தில் இடம்பெற்ற முத்து நகையே  உன்னை நான் அறிவேன்  உத்தமன் படத்தில் இடம்பெற்ற கேளாய் மகனே கேள் ஒரு வார்த்த...

ஜெயிலர் பேசியது சரியா?

ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய பேச்சில் நடிகர்திலகத்தை பற்றி கூறியது : இப்ப பார்த்தீங்கன்னா சிவாஜி சார்க்கு   ஒரு   ஏ.பீம்சிங்,  ஒரு ஏ.பி.நாகராஜன்,  ஒரு பி.மாதவன்,  ஒரு ஏ.சி.திருலோகசந்தர்   அந்த மாதிரி டைரக்டர்ஸ்ங்க இல்லைன்ன  சொன்னா   சிவாஜி சாருக்கு வந்து   "நடிகர் திலகம்னு" பேரு வந்திருக்குமான்னு  சந்தேகம் தான்னு  பேசியிருக்கிறார்.. ரஜினி குறிப்பிட்ட இந்த டைரக்டர்கள் எல்லாம் மிகச் சிறந்த டைரக்டர்கள் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் இவர்கள் படங்களில் நடித்ததால்தான் சிவாஜி கணேசனுக்கு நடிகர் திலகம் சென்ற பட்டம் கிடைத்தது என்ற பேச்சு தான் இங்கு விவாதத்துக்கு உள்ளாகிறது. நடிகர் திலகம் பட்டம் பெறுவதற்கு முன்பு சிவாஜி என்ற பட்டத்தை பெற்றவர் வி சி கணேசன். விசி கணேசனுக்கு சிவாஜி என்ற பட்டத்தை கொடுத்தது ஒரு சாதாரண மனிதர் அல்ல. யாரையும் அவ்வளவு எளிதில் புகழ்ந்து பேசக்கூடியவர் அல்ல. சிவாஜி என்ற பட்டத்தை விசி .கணேசனுக்கு கொடுத்தது பராசக்தி படத்தில் நட...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்