ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய பேச்சில் நடிகர்திலகத்தை பற்றி கூறியது :
இப்ப பார்த்தீங்கன்னா சிவாஜி சார்க்கு
ஒரு ஏ.பீம்சிங்,
ஒரு ஏ.பி.நாகராஜன்,
ஒரு பி.மாதவன்,
ஒரு ஏ.சி.திருலோகசந்தர்
அந்த மாதிரி டைரக்டர்ஸ்ங்க இல்லைன்ன சொன்னா
சிவாஜி சாருக்கு வந்து
"நடிகர் திலகம்னு" பேரு வந்திருக்குமான்னு சந்தேகம் தான்னு பேசியிருக்கிறார்..
ரஜினி குறிப்பிட்ட இந்த டைரக்டர்கள் எல்லாம் மிகச் சிறந்த டைரக்டர்கள் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
ஆனால் இவர்கள் படங்களில் நடித்ததால்தான் சிவாஜி கணேசனுக்கு நடிகர் திலகம் சென்ற பட்டம் கிடைத்தது என்ற பேச்சு தான் இங்கு விவாதத்துக்கு உள்ளாகிறது.
நடிகர் திலகம் பட்டம் பெறுவதற்கு முன்பு சிவாஜி என்ற பட்டத்தை பெற்றவர் வி சி கணேசன்.
விசி கணேசனுக்கு சிவாஜி என்ற பட்டத்தை கொடுத்தது ஒரு சாதாரண மனிதர் அல்ல. யாரையும் அவ்வளவு எளிதில் புகழ்ந்து பேசக்கூடியவர் அல்ல. சிவாஜி என்ற பட்டத்தை விசி .கணேசனுக்கு கொடுத்தது பராசக்தி படத்தில் நடித்ததற்கும் அதற்குப் பின்பும் வந்த படங்களுக்கு அல்ல .
ஊரறியாத உலகமறியாத ஒரு சாதாரண நாடகத்தில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்த நாடக நடிகனுக்குத்தான் கொடுத்தார். எதனால் கொடுத்தார்? ஏன் கொடுத்தார்?
மிகப்பெரும் வீச்சை கொடுக்கும் நடிப்பு அந்த விசி. கணேசனிடம் இருந்ததால்.
ரஜினி சொன்ன பேச்சை பார்ப்போம்.அந்த இயக்குனர்களின் படங்களில் நடித்ததால் தான் சிவாஜிகணேசனை (நன்றாக கவனியுங்கள் கணேசன் இப்போது சிவாஜிகணேசன்) நடிகர்திலகம் என்றழைக்கப்பட்டாராம்.
பீம்சிங்கின் பா வரிசை படங்கள் என்று எடுத்துக் கொண்டால் 1958 களுக்கு பின் தான் தொடங்குகிறது.
இது போலவே மற்ற இயக்குனர்களின் படங்களும்.
இந்த காலகட்டத்துக்கு முன் வந்து சிறப்பான பெயரை பெற்றுத் தந்த சிவாஜிகணேசனின் படங்கள் :
பராசக்தி
திரும்பிப்பார் அந்த நாள் உத்தம புத்திரன் மனோகரா சம்பூர்ண ராமயணம் ரங்கோன்ராதா தூக்குதூக்கி தெனாலிராமன்
அமரதீபம் என்று இன்னும் பல படங்களில் அவர் திரையுலக ராஜாவாகி விட்டார்.
இப்படி நடிக்கிறாரே இந்த மனிதர் என்று வியக்காத மனிதர்களே இல்லை அப்போது தமிழ்நாட்டில்.அதில் ஒருவர்தான் இப்படி மிரட்டி எடுக்கிறாரே இந்த சிவாஜிகணேசன் இவருக்கு நடிகர்திலகம் என்ற பட்டத்தை கொடுத்தால் என்ன? என்ன என்று ஒரு கேள்வியாக பேசும்படம் பத்திரிகைக்கு அனுப்பி விட்டார்.ஒரு பத்திரிக்கைகக்கு வாசகர் கேள்விகள் என்று ஆயிரம் வரும்.எல்லாவற்றையுமா பத்திரிக்கைககள் பிரசுரிக்க முடியும்? பிரசுரம் செய்யப்படாத கேள்விகளில் சிறந்த கேள்விகள் இருக்கதா?
ஆனால் பேசும்படம் பத்திரிக்கைகக்கு அந்த கேள்வி சரியெனப்பட்டது? படாமல் இருக்குமா? உடனே பதில் சொல்லி விட்டது.ஆகா! அருமையான பட்டம்தான் அவருக்கு. அவ்வாறே இனிஅழைப்போம் என்னும் அர்த்தத்தில் பதில் சொல்லி விட்டது.இந்த விஷயம் எப்போது நடந்தது என்று முக்கியமாக இந்த பதிவுக்கு பதில்சொல்லும்படியான காலகட்டத்தை நாம் பார்க்க வேண்டும்.
அது 1957 ல்.
இதைப்பார்த்த அம்பிகாபதி தயாரிப்பாளர் இந்த நடிகர்திலகம் என்னும் பட்டத்தை சிவாஜிகணேசன் என்னும் பெயருக்கு முன் நான் தயாரித்துக் கொண்டிருக்கும் அம்பிகாபதி படத்தில்போட்டு விட வேண்டும் என்று முந்திக் கொண்டு விட்டார்.இதெல்லாம் எப்படி நடந்தது?
சிவாஜிகணேசனின் நடிப்பு ஆளுமையை பார்த்து மயங்கி அதை விட சிறந்தது இருக்க முடியாது என்று செய்த காரியங்கள்.
இப்போது ரஜினி சொன்ன பேச்சை நினைத்துப் பாருங்கள்.அவர் சொன்ன இயக்குனர்களின் படங்களே இந்த கால கட்டத்துக்குள் வரவில்லை.பீம்சிங்கின் ராஜா ராணி மட்டும்.நாகராஜனின் நான் பெற்ற செல்வம் மட்டும்.
அந்த இயக்குனர்களின் படங்களில் அவர்கள் இயக்கிய சிவாஜிகணேசன் படங்களில்
சிவாஜிகணேசனின் அந்த கேரக்டர்களை வேறு யாராவது நடித்திருந்தால் படம் பேசப்பட்டிருக்கலாம்.ஆனால் சிவாஜிகணேசன் கொடுத்த நடிப்பை நினைத்துப் பார்க்க முடியுமா? அந்த இயக்குனர்கள் மிகச் சிறந்தவர்கள்.அவர்களின் திறமையானஆக்கத்தை சிவாஜிகணேசன் சிகரமாக்கி விட்டார்.ரஜினி பேசி விட்டார்.ஆனால் எப்படி பேசியிருக்க வேண்டும்?
பீம்சிங் மாதவன் நாகராஜன் திருலோகசந்தர் சிவாஜிகணேசனுக்கு எப்படிப்பட்ட அருமையான படங்களை கொடுத்திருக்கிறார்கள் .
சிவாஜிகணேசனை பற்றி பேச ஆரம்பித்தால் இவர்கள் இயக்கிய படங்கள் நினைவுக்கு வராமல் போகாதே .நடிகர்திலகம் என்னும் பட்டத்திற்கு பொருத்தமாய் படங்கள் எப்படி அமைந்து விட்டன என்கிற அர்த்தத்தில் பேசியிருந்தால் தானேஅது சரியாக இருக்கும்!
ஆக அந்த பேச்சைத்தான் நாம் குறை சொல்கிறோம்.இதே விழாவில் ரஜினி பேசிய பேச்சையே நாம் உதாரணம் காட்டுகின்றோம்.என்ன பேச்சுஅது ?
மனுசனா பொறந்தா குறை சொல்லாத வாயே இருக்காதுன்னு பேசியுள்ளார்.அது சரிதான்.அதைத்தான் நாமும் செய்கிறோம்.ரஜினியும் செய்துவிட்டார்.சிவாஜி என்று அந்த நடிப்பு சிங்கத்துக்கு சோளப் பொரியை போட்டு நாம் வளர்த்து விட்டோம் என்று ஒருவர் பேசியது எவ்வளவு சரியான வார்த்தை.
நடிகர் திலகம் எனும் நடிப்பு ஆளுமைக்கு சரியான கதைக் களங்களை அமைத்து விளையாட விட இயக்குனர்கள் முயற்சிக்கவில்லை என்பதுதான் உண்மை. அந்த வகையில் பார்த்தால் இது சரியான பேச்சு அல்ல.
செந்தில் வேல் சிவராஜ் ...
கருத்துகள்
கருத்துரையிடுக