இடுகைகள்

ஏப்ரல், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

பொள்ளாச்சியும் சிவாஜியும்

படம்
சிவாஜியும் பொள்ளாச்சியும். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பொள்ளாச்சிக்கும் உறவு முறை ஆரம்பத்தில் அது நட்பு முறையாகவும் ,அதுவே பின் உறவு முறையாகவும் ஆனது. எத்தனையோ வெளிநாடுகளுக்கு போயிட்டு வந்த மனுஷன், தமிழ்நாட்டுல அவருடைய காலடி படாத இடமே இல்லை, இந்தியாவோட எல்லா முக்கிய பிரபல நகரங்களுக்கும் போயிட்டு வந்தவர் நடிகர்திலகம்.இப்படி சிவாஜி பற்றின உண்மைகள் இருந்தாலும் சிவாஜிக்கு ரொம்ப பிடிச்ச இடம் உலகத்திலேயே சேர்த்து மடை தான் .சிவாஜி எங்க போனாலும் நடிகர் திலகம் பிரமிப்பா எல்லோரும் பார்க்கிறார்கள். பொள்ளாச்சிக்கு போனா எளிமையான மனுசனா இயல்பா இருக்கிற ஒரு சந்தோசத்தை அங்க அங்க கிடைக்குதுன்னு ரொம்ப பீல் பண்ணினாரு. 90களுக்கு பின்னால் தான் பொள்ளாச்சிக்கு அடிக்கடி சிவாஜி வந்துட்டு போயிட்டு இருந்தார்.  சிவாஜி பொள்ளாச்சி வந்தார்னா கோயம்புத்தூர் ஐஏபி ஸ்டுடியோவில் இருந்து கார் அனுப்புவாங்க .கோயமுத்தூரில் இருந்து  வேட்டைக்காரன் புதூர் வரைக்கும் கார்ல போவாரு.அவர் அடிக்கடி கார்ல போறத பாத்தவங்க எல்லாரும் சொல்லுவாங்க .அப்போ தலையில ஒரு துண்டை கட்டிட்டு சாதாரணமா கார்ல ஒக்காந்து போவார் என்று சொல்லுவாங்க....

ஒப்பீடற்ற சிவாஜி படங்கள்

படம்
நடிப்பு ,வேடங்கள், திரைப்படங்கள் ஒரு கலைஞனால் உருவாக்கப்படும் போது அது சமூகத்திற்க்கு என்ன பயன் அளிக்கும் ,அளிக்கப்படவேண்டும் ,என்பதுதான் முக்கியம்.அதிக நாட்கள் ஓடியது ,சாதனை செய்தது  என்பதை  சில படங்களை வைத்து சமூகத்திற்கு உபயோகமான பயன் தந்த, தந்து கொண்டிருக்கக்கூடிய படங்களுடன் ஒப்பிடக்கூடாது.தமிழில் ஏராளமான ஓடிய படங்களை பார்த்தோமானால் அது வெறும் குப்பைகளாக உள்ளது.ஒரு படத்திற்கு முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கு வியாபாரமும் ,லாபமும் கண்டிப்பாக அவசியம், தேவையும்  தான். இந்த வரைமுறைகளில் உருவானவை தான் நடிகர்திலகத்தின் திரைப்படங்கள்.நடிகர்திலகத்தின் படங்களை வைத்தே சில விஷயங்களை பார்க்கலாம். உத்தமபுத்திரன் தெய்வமகன் சரஸ்வதி சபதம் தில்லானா மோகனாம்பாள் கௌரவம் .உதாரணத்திற்காக இந்த சில படங்கள்.தெய்வமகன் தில்லானா மோகனாம்பாள் படங்களின் பேச்சு வரும் போதெல்லாம் இந்த படங்களுக்கு இணையான படங்களை யாரும் சொல்ல முடியாது.வெள்ளிவிழா , வருடக்கணக்கில் ஓடிய படங்கள் தமிழில் நிறைய உண்டு.அந்த படங்கள் எல்லாம் இந்த படத்திற்கு இணையாகுமா ?இதில்  சிவாஜி ரசிகர்களின் கருத்துகளை ...

சிவாஜி -எதச் சொல்ல எத விட....

படம்
உச்சி பூரா உள்ளம் பூரா குளிச்சியா இருக்குதய்யா உன் நடிப்ப பாக்கையிலே வெச்ச பார்வைய  வெலக்கிடத்தான் தோணலய்யா உன் முகத்த பாக்கையிலே! நீ  பேசினாக்க நடந்தாக்க அத பாத்தாக்க நெஞ்சுக்குள்ளே ரத்தமா பாயுதய்யா  உன்ன பத்தி பேசத்தா உதடெல்லாம் துடிக்குதய்யா கொஞ்சமா செஞ்சீரு நீரெல்லாம் கொள்ளாம கொள்ளாம நெஞ்செல்லாம் திணறுதய்யா உன்னை மட்டுந்தா பாக்க வெச்சே அத கொள்கையா மாத்த வெச்சே! கற்பூரமா பத்திக்குது கண்ணெல்லாம் சொக்குது காலமெல்லாம் கூட வந்து கவலையெல்லாம் மறக்க வெச்சே எத பேச எப்படிப் பேச எடுத்துச் சொன்னா அம்புட்டு எழுத்தும் பத்தாதே! ரெண்டாயிரம் வருச சோழன ரெண்டு மணியிலே மறக்க வெச்சயே நூறு பேரு பாரதத்துல  ஒத்தையாளு கர்ணனைத்தா மனசுல நிக்க வெச்சேயே பாஞ்சால சிங்கத்த பாருங்கன்னு பாருக்கெல்லம் புரிய வெச்சயே  சிவனே என் சிவனேன்னு கையெடுத்து கும்பிட்டாக்க உன் முகத்தை நிலைக்க வெச்சயே  நீ வந்து என்பது வருஷமாச்சு எல்லாமே உன்னாலே மாறிப் போச்சு  ஓயாம உழச்சு ஓடா தேஞ்சேம்பாங்க ஆனா ஓயாம உழச்சு மலையா  வளந்தவனே மலையா வளந்தாலும்-அத பெரிசா நெனக்கலியே  அந்த குணத்துலே  உன்ன ம...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்