சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

பொள்ளாச்சியும் சிவாஜியும்

சிவாஜியும் பொள்ளாச்சியும்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பொள்ளாச்சிக்கும் உறவு முறை ஆரம்பத்தில் அது நட்பு முறையாகவும் ,அதுவே பின் உறவு முறையாகவும் ஆனது.
எத்தனையோ வெளிநாடுகளுக்கு போயிட்டு வந்த மனுஷன், தமிழ்நாட்டுல அவருடைய காலடி படாத இடமே இல்லை, இந்தியாவோட எல்லா முக்கிய பிரபல நகரங்களுக்கும் போயிட்டு வந்தவர் நடிகர்திலகம்.இப்படி சிவாஜி பற்றின உண்மைகள் இருந்தாலும் சிவாஜிக்கு ரொம்ப பிடிச்ச இடம் உலகத்திலேயே சேர்த்து மடை தான் .சிவாஜி எங்க போனாலும் நடிகர் திலகம் பிரமிப்பா எல்லோரும் பார்க்கிறார்கள். பொள்ளாச்சிக்கு போனா எளிமையான மனுசனா
இயல்பா இருக்கிற ஒரு சந்தோசத்தை அங்க அங்க கிடைக்குதுன்னு ரொம்ப பீல் பண்ணினாரு.
90களுக்கு பின்னால் தான் பொள்ளாச்சிக்கு அடிக்கடி சிவாஜி வந்துட்டு போயிட்டு இருந்தார். 
சிவாஜி பொள்ளாச்சி வந்தார்னா கோயம்புத்தூர் ஐஏபி ஸ்டுடியோவில் இருந்து கார் அனுப்புவாங்க .கோயமுத்தூரில் இருந்து  வேட்டைக்காரன் புதூர் வரைக்கும் கார்ல போவாரு.அவர் அடிக்கடி கார்ல போறத பாத்தவங்க எல்லாரும் சொல்லுவாங்க .அப்போ தலையில ஒரு துண்டை கட்டிட்டு சாதாரணமா கார்ல ஒக்காந்து போவார் என்று சொல்லுவாங்க.
வேட்டைக்காரன் புதூர் சேத்துமடை போனா வயல் வெளி தோப்பு எல்லாத்தையும் சுத்தி பார்ப்பார் .அங்க  வாக்கிங் போவார் .அங்க வயல் வெளியில வேலை செய்யறவங்க தொழிலாளிக்கு கிட்ட எல்லாம் இயல்பா பேசி அங்க இருக்கிற விஷயத்த தெரிஞ்சுக்ககுவார்.
பொள்ளாச்சிக்கும் நடிகர் திலகத்துக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டுச்சு.
60 வருஷத்துக்கு முன்னால சிவாஜி சூட்டிங் வந்திருந்தார் பொள்ளாச்சிக்கு. அப்ப நடந்த ஒரு நிகழ்ச்சியில வேட்டைக்காரன் புதூர் முத்துமாணிக்கத்தை பத்தி அங்கிருந்த அவங்க சொன்னாங்க. அவர் அந்த ஊர்ல பெரிய மிராஸ்தார் வேட்டைக்கெல்லாம் போவாரு அப்படின்னு சொல்லி இருக்காங்க.
அங்கு இருக்கிறவங்க சொன்ன விஷயங்களை கேட்ட சிவாஜிக்கு 
முத்துமாணி கிட்ட பாக்கணும் விருப்பம் வந்துதுச்சு .
முத்துமாரி சும்மா ஜூன் சந்திக்கக் கூடிய வாய்ப்பு அமைஞ்சது. அவர் கிட்ட பேசிகிட்டு இருக்கப்பா அவர் தான் அடிக்கடி வேட்டைக்கு போற விஷயத்தை சிவாஜி கிட்ட சொல்லி இருக்கிறார். சிவாஜி ஒரு தானும் வேட்டைய பாக்கணும் அப்படின்னு முத்து மாணிக்கத்திடம் சொல்ல அவரும் சிவாஜி வேட்டைக்கு கூட்டிட்டு போனார். ஒருமுறை போயிட்டு வந்த பின்னால சிவாஜிக்கு அதுல ரொம்ப ஆர்வம் வந்துருச்சு .அதுக்கு பின்னால அடிக்கடி பொள்ளாச்சி வர்றதும் முத்துமாணிக்கத்தோட சேர்ந்து வேட்டைக்கு போறதுஅடிக்கடி நடந்த விஷயங்கள்.

1980கள்ள சிவாஜி கோயம்புத்தூர்ல சூலூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் பேசிட்டு இருக்கிறப்ப தான் எதிர்க்கட்சி ஆளுக ஒருத்தர் சிவாஜி மேல ஒரு பொருளை வீசினார். சிவாஜுக்கு தலையில் அடிபட்டு ரத்தம் வந்தது.இந்த விஷயம் அப்ப ரொம்ப பெரிய பரபரப்பா பேசப்பட்டுச்சு. சிவாஜி ரசிகர் மன்றத்தை சேர்ந்தவங்க இதைக்கேட்டு கொதிச்சு  போயி
சூலூர் ஏரியா பீளமேடு சுற்றி இருக்கிற எதிர்முகாகேம் ஆளுகளோட மன்றங்கள் போர்டு கொடியில அடிச்சு நொறுக்குனாங்கன்னு சொல்லுவாங்க.
சூலூர்ல அடிபட்ட சம்பவத்துக்கு பின்னால அடுத்த நாள் பொள்ளாச்சியில் திடலில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்துச்சு. அதுல சிவாஜி பேசினார். பிங்க் கலர் பைக் ஆனா வேட்டி கட்டிக்கிட்டு தலையில் கட்டு போட்டுவிட்டு சிவாஜி பேசுவது நல்லா ஞாபகம் இருக்கு. இந்த கலாட்டாக்களுக்கு எல்லாம் நான் பயங்கரமாட்டேன் இதுக்கு மேல பெரிய கலாட்டா எல்லாம்  நான் பார்த்திருக்கிறேன் நான் பனங் காட்டு நரி,இந்த சலசலப்புக்கு எல்லாம்  அஞ்ச மாட்டேன் அப்படின்னு அவர் பேசுனதும் நல்லா ஞாபகம் இருக்கு .

இந்த சம்பவத்துக்கு பண்ணால பல வருஷம் கழிச்சு 1986ல வீரபாண்டியன் படம் சூட்டிங்க்காக பொள்ளாச்சிக்கு வந்து இருந்தாரு சிவாஜி .அந்தப் பட சூட்டின் எங்க ஊரு ஜமீன் ஊத்துக்குடியிலும் நடந்துச்சு. நான் அப்பா பத்தாவது படிச்சுக்கிட்டு இருந்தேன். சிவாஜி வி கே ஆர் ராமசாமி ரெண்டு பேரும் பேசிகிட்டு இருக்குற மாதிரி சீனு தான் நான் முதல்ல பார்த்தேன்.

அதுக்கப்புறம் 92 ல தேவர்மகன் ஷூட்டிங் காக பொள்ளாச்சி வந்திருந்தாரு சிவாஜி. தேவர்மகன் படத்தில் சிவாஜி சம்பந்தப்பட்ட சீனு எல்லாமே பொள்ளாச்சியில் தான் எடுத்தாங்க.

அதுக்கப்புறம் 1994 பசும்பொன் சூட்டிற்காக வந்திருந்தாரு சிவாஜி.
அந்தப் படத்தோட சூட்டிங் பொள்ளாச்சி சிங்காநல்லூர் பங்களாவில் நடந்தப்போ நடிகர்திலகத்தை பார்த்து நாங்க பேசினோம்.போட்டோ எடுக்குறதுக்கு பர்மிஷன் கேட்டப்ப இது பாரதிராஜா படம் பட வெளியில வர வரைக்கும் இந்த மியூசிக் வெளில காட்டக்கூடாதுன்னு சொல்லி இருக்கிறான் ஆனால் படம் படம் முடியட்டும். அடுத்த முறை வரும்போது எடுத்துக்கலாம் இல்லன்னா மெட்ராஸ்ல வீட்டுக்கு வாங்க, அங்க வச்சு எடுத்துக்கலாம் சொன்னாரு.

சிவாஜியோட தம்பி வீசி சண்முகத்தோட மகன் கிரிய பொள்ளாச்சிக்கு தான் சம்பந்தம் பேசி முடித்தார். அந்த வகையில அவங்க நண்பர்களாக இருந்தவங்க சம்பந்தி ஆயிட்டாங்க. அந்த கல்யாண கோயம்புத்தூரில் இருக்கிற ஈச்சனாரில தான் கல்யாணம் நடந்துச்சு .அந்த கல்யாணத்துல ரஜினி கமல் வைஃப் எல்லாம் சீர்வரிசை தட்டை தூக்கிட்டு வந்தாங்க .

90 க்கு பின்னால அடிக்கடி பொள்ளாச்சி வந்தார் சிவாஜி. 
வர்றப்ப வெள்ளை வேட்டி சட்டை,
வெள்ளை துண்டு எடுத்து தலையில் விழுந்து உருமா கட்டு இப்படி சர்வ சாதாரணமா கார் உக்காந்துட்டு போறது தான் அவரோட வழக்கம் 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற