இடுகைகள்

Sivajiganesan லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜியின் படங்களில் துப்பாக்கி காட்சிகள்

படம்
ஒரு டைரக்டர் கதை சொல்றாரு ஹீரோகிட்ட..  ஓபன் பண்ணுனா கொஞ்சம் சீன் பரபரப்பா இருக்கும். என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு ஜனங்களுக்கு புரிய கூடாது. கொலை  கொள்ளை தீவிரவாதம்னு  சீனு கொஞ்சம் ஓடும்.  அந்த டயத்துலதான் ஹீரோ என்ட்ரி கொடுக்கிறார். கொஞ்சம் லைட்டான வெளிச்சத்தில் கொஞ்சம் டார்க்கா ஹீரோ துப்பாக்கிய புடிச்சுட்டு வர்றார். அப்போ அங்க நிறைய அடி ஆளுங்க. ஹீரோ என்ட்ரிய ஸ்லோ மோஷன்ல வச்சுக்கலாம். ட்ரிக்கரை அழுத்தறாரு ஹீரோ. புல்லட் பாஞ்சு வருது. சடார்ன்னு ஒரு அடியாளு தலை சிதறி விழுகிறான். அப்ப ஆரம்பிக்குது ஹீரோவோட வேட்டை. அந்த சின்ன சைஸ் துப்பாக்கில இருந்து தோட்டா பாஞ்சி பாஞ்சி வருது .அடியாட்கள் அங்க போய் இங்க போய் விழறாங்க .ஸ்கிரீன் பூரா ரத்தம் தெளிக்குது. ஹீரோவுக்கு ஒண்ணும் ஆகாது. எல்லா அடியாளுகளும் விழுந்த பின்னால துப்பாக்கில  இருந்து வர்ற புகைய வாயால ஊதுவாரு ஹீரோ !இதுதான் சார் ஹீரோ என்ட்ரி. படத்தில் இது மாதிரி ரொம்ப சீனு இருக்கு சார். இது போன்ற காட்சி அமைப்புகள் ஒரு படத்திலோ இரண்டு படத்திலோ அல்ல.பெரும்பான்மையான ஹீரோயிச படங்கள் அனைத்தும் இப்படித்தான். அந்த  துப்பாக்...

எங்கள் வீட்டிற்கு வந்த இளையதிலகம்

படம்
முக்கிய கதைக்குள் நுழையும் முன் .... 1988 ஆம் வருடம்.பொள்ளாச்சியில் ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி. ஒரு புதிய பட படப்பிடிப்புப்புக்காக இந்த கிராமம் கதைக்கேற்ற இடம் என்று  தேந்தெடுக்கப்பட்டு,  அந்த கிராமத்தில் ஒரு சினிமா ஷுட்டிங் யூனிட் வந்திறங்கியது. ஒரு படப்பிடிப்புக்காக.. ஷுட்டிங் பற்றி அதிகம் தெரிந்திராத கிராமம் அது. அவர் ஒரு பெரிய நடிகர். அவர் மகன்தான் இப்படத்தில் நடிக்கிறார்.  அவர் வருகிறார் என்று ஊரெல்லாம் பேச்சு. முதல் நாள் படப்பிடிப்புக்காக யூனிட் தயாராக இருக்கிறது.அப்போது ஒரு மாருதி வேன் வந்து நிற்கிறது .சைட் டோர் திறக்கிறது. அவர் இறங்குகிறார். ஆச்சர்யத்தில் மக்கள் கூட்டம். இது வரை அவரை பார்த்ததில்லை.முன் பின் பார்த்திராத மக்கள்.அவரோ சிரித்த முகத்துடன் எல்லோரையும் பார்த்து கை கூப்புகிறார்.முகம் மலர சிரிக்கிறார். தொடர்ந்து ஷுட்டிங் நடைபெறுகிறது. இடையிடையே ஷீட்டிங் இடைவெளியில் மக்களை சந்திக்கிறார்.பேசுகிறார்.ஏதோ நெடுநாள் பழக்கம் போலே அந்த மக்களுடன் பேகிறார். பழகுகிறார்.சந்திப்பவர்களை , 'உங்கள் பெயர் என்ன ?என்ன தொழில் செய்கிறீர்கள் ?என்று கேட்பதுடன் குடும்ப உறுப்பினர்...

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

படம்
வருட வாரியாக நூறு நாள் ஓடிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் படங்கள். 1952 பராசக்தி.. 42 வாரங்கள் ஓடியது.. சிவாஜியின் முதல் படமான பராசக்தி வெள்ளிவிழாவையும் தாண்டி ஓடி சாதனை படைத்த படம் . 1953 திரும்பிப்பார் 1954 மனோகரா  கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி  தூக்குத்தூக்கி  எதிர்பாராதது 1955  காவேரி  மங்கையர் திலகம்  1956 பெண்ணின் பெருமை  அமரதீபம் 1957 மக்களைப் பெற்ற மகராசி வணங்காமுடி  புதையல்  தங்கமலை ரகசியம் .1958 உத்தமபுத்திரன்  பதிபக்தி  சம்பூர்ண ராமாயணம் அன்னையின் ஆணை சபாஷ் மீனா  1959 தங்கப்பதுமை வீரபாண்டிய கட்டபொம்மன் பாகப்பிரிவினை 1960 இரும்புத்திரை  தெய்வப்பிறவி  படிக்காத மேதை  விடிவெள்ளி 1961 பாவமன்னிப்பு  பாசமலர் பாலும் பழமும் 1962 படித்தால் மட்டும் போதுமா பந்தபாசம்  ஆலயமணி 1963 இருவர் உள்ளம் அன்னை இல்லம் 1964 கர்ணன் பச்சை விளக்கு கைகொடுத்த தெய்வம் புதிய பறவை நவராத்திரி 1965 சாந்தி திருவிளையாடல் 1966 மோட்டார் சுந்தரம் பிள்ளை சரஸ்வதி சபதம் 1967 கந்தன் கருணை ஊட்டி வரை உறவு இரு மலர்கள் 1968 கலாட்டா கல்யாண...

சிவாஜிக்காக

படம்
ஒரு கணேசனை தானே படைத்தோம் இந்த மனிதன் என்ன  முந்நூறாய் நிற்கின்றானே!  இது பிரம்மனின் ஆச்சரியம். கடவுள் நிஜமா என்று கேட்டேன் போட்டோ கடைக்காரனிடம் .. ஆமாம் என்றான் கடைக்காரன்  அப்படியானால் நிஜ சிவனை கொடு என்றேன் அவன் சற்றும் அசரவில்லை திருவிளையாடல் சிவாஜியை கொடுத்தான். நாட்டுக்காக செக்கிழுத்தார் சிதம்பரனார் சிதம்பரனாருக்காக செக்கிழுத்தார் சிவாஜியார் சிதம்பரனாரை உதாரணம் காட்ட சிவாஜியை காட்டினார் ஆசிரியார் செக்கிழுத்த செம்மல் யார் என்ற கேள்விக்கு சிவாஜி என்றார் மாணவனார் இது சரியா ?தவறா? இரண்டும்தானே! ஒரு சூரியன் இரு துருவம் மும் மூர்த்திகள் நான்கு வேதம் ஐந்து பூதங்கள் ஆறு சுவைகள் ஏழு சுரங்கள் எட்டு வகை சித்திகள் நவரசங்கள் இந்த வரிசையில்  சிவாஜி யுகமும்.. நகலெடுக்கும் இயந்திரங்கள் கூட ஒன்று போல் தான் நகலெடுக்கும் உன்னை நகலெடுத்தால் ஓராயிரமாய் வரும். பழனிக்குச் சென்றால் பஞ்சாமிர்தம் வாங்குவது கூட  இரண்டாம் பட்சம் தானாம் ஒரு ரசிகருக்கு சித்தநாதன் கடையில் சிவாஜி படத்தை பார்ப்பதில் தான்  முதல் நாட்டமாம். விபூதி வாசனையை விட சிவாஜி படம் தான் தூக்கலாக இருக்குமாம் .. தம...

சிவாஜியின் மீசை

படம்
சிவாஜியின் மீசை 7 வயதில் இருந்து நடிகர்திலகத்தின் படங்களை பார்த்த நினைவுகள் இன்று வரை நன்றாகவே ஞாபகம் உள்ளது.எங்களூர் பெரியவர்களின் பெரிய  மீசைகளை பார்க்கும் போது ஏன் இவ்வளவு பெரிதாய்?   என்று யோசிப்பதுண்டு.சிலரிடம் மீசை பற்றி  பேசினால் கட்டபொம்மன் மீசையை சிலாகிப்பார்கள்.பலர் சொல்லி சொல்லி அந்த மீசை மேல் பெரும்  ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது. மீசை என்றாலே கட்டபொம்மன்தான் என்ற எண்ணமே பல காலங்களாக என் மனதில் நிலைத்து விட்டது. இந்த எண்ணத்தில் சிறிது தடுமாற்றம் ஏற்பட்டது காவல்தெய்வம் சாமுண்டியின் போஸ்டரைப் பார்த்த பின்புதான்.சாமுண்டியின் மேல் நோக்கி முறுக்கிய மீசை  பெரும் கம்பீரத்தை எனக்குள் எற்படுத்தியது.அது அச்சமூட்டுவதாகவும் இருந்ததும் ஒரு காரணமோ? அப்போதிருந்து சாமுண்டியின் மீசைபோல் யாராவது வைத்திருந்தால் அதை உற்று நோக்கியே பார்த்துக் கொண்டிருப்பேன்.முகம் பார்க்காமல்  மீசை மட்டுமே கண் முன்னால் வந்து நிற்கும் . அடர்கறுத்த மீசைகள் தான் பெரும் கம்பீரம் என்ற என் எண்ணத்தை உடைத்தது எங்க ஊர் ராஜா விஜயரகுநாத சேதுபதிதான்.எங்களூரிலேயே  அடர்ந்த வெண் மீசை வைத்திருந...

சிவாஜி வாழ்க்கை வரலாறு.. நடித்த படத்தலைப்புகளை வைத்தே ...

படம்
பிறப்பு :விடிவெள்ளி வளர்ப்பு :தாய் உடன் பிறப்புகள் :ரத்த பாசம் பள்ளிப்படிப்பு :தியாகம் இளமைப்பருவம் :உலகம் பலவிதம் நாடக நடிப்பு :அறிவாளி சிவாஜி பட்டம் :நான் பெற்ற செல்வம் பராசக்தி தேர்வு :புதையல் திருமணம் :பாதுகாப்பு துணைவியார் :இல்லற ஜோதி பிள்ளைகள் :செல்வம் முதல் பட ரிலீஸ் :ஆலய மணி திரைப்பட வளர்ச்சி :நேர்மை தொழிலில் :நானே ராஜா நடிப்பில் :இமயம் திமுக விலகல் :ஆண்டவன் கட்டளை அன்னை இல்லம் :குடும்பம் ஒரு கோயில் கட்டபொம்மன் படம் :சாதனை நயாகரா மேயர் :உயர்ந்த மனிதன் காமராஜர் சேர்க்கை :அன்பை தேடி காங்கிரஸ் வளர்ப்பு :சவாலே சமாளி எதிர்க் கட்சிகளுக்கு :சிம்ம சொப்பனம் ரசிகர்கள் :அன்பு கரங்கள் தேச சேவையில் :கர்ணன் காமராஜர் மறைவு :எதிர் பாராதது அன்னை இந்திரா :அன்பு  இந்திரா காங்கிரஸ் :நல்ல வீடு MP பதவி :கௌரவம் மொழிப்பற்று :என் தமிழ் என் மக்கள் இந்திரா மறைவு :அமரதீபம் ராஜிவ் நட்பு :கூண்டுக்கிளி காங்கிரஸ் துரோகம் :பாகப் பிரிவினை கட்சி விலகல் :திரும்பிப்பார் தமிழக முன்னேற்ற முண்ணனி :புதிய பறவை திருவையாறு :தர்மம் எங்கே?  ஜனதா தளம் :திருப்பம் அரசியல் விலகல் :சாந்தி  பத்மஸ்ரீ , பத்ம பூஷண் :அ...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற