1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

பொன்னொன்று கண்டேன்

இன்னைக்கு நாம் பார்க்கப் போகும் பாட்டு வெறும் டியூன் மட்டுமல்ல, அது ஒரு கால இயந்திரம் (டைம் மெஷின்).
​தமிழ் இசை பல ராகங்களைக் கடந்து வந்திருக்கிறது. ஆனால், சில பாடல்கள் மட்டும் இருக்கும். அது காலம், தலைமுறை என எல்லையையும் தாண்டி, நம் மனசுக்குள்ளே ஒரு தங்கக் கோவில் கட்டிவிடும். அப்படி காலத்தால் அழிக்க முடியாத இரண்டு ஜாம்பவான்கள், ஒன்று சேர்ந்து, ஒரு பெண்ணின் அழகையும், நண்பர்கள் போல் பழகிய இரண்டு சகோதரர்களின் ஆழமான நட்பையும், உச்சகட்ட தத்துவத்தையும் பேசிய ஒரு பாட்டுதான் 1962-ல் வந்த "படித்தால் மட்டும் போதுமா?" திரைப்படத்தில் இடம்பெற்ற "பொன் ஒன்று கண்டேன்".

இந்த இனிமையான பாடலின் ராகம் பொதுவாக பிருந்தாவன சாரங்கா என்று அறியப்படுகிறது. இது தமிழ் இசையின் இரண்டு மாபெரும் பாடகர்கள் இணைந்து பாடிய, நண்பர்களின் உரையாடல் போன்ற ஒரு சிறப்பு மிக்கப் பாடலாகும்.

​டி.எம்.எஸ் குரல்: கம்பீரமாகவும், ஆழமாகவும் இருக்கும். இது சிவாஜி கணேசனின் பாத்திரத்திற்குச் சரியாகப் பொருந்தும்.
​பி.பி. ஸ்ரீனிவாஸ் குரல்: தண்ணீர் போல மென்மையாகவும், இனிமையாகவும், கனிவுடனும் இருக்கும். இது கே. பாலாஜியின் அமைதியான பாத்திரத்திற்கு செட்டாகும்.
​இந்த இரண்டு துருவங்களும் ஒன்று சேரும்போது, இரண்டு நண்பர்கள் பேசிக்கொள்ளும் உணர்வை, அப்படியே நம் மனசில் இறக்கிவிடுவார்கள். இதற்குப் பெயர்தான் குரல் மேஜிக்.
​கவியரசர் கண்ணதாசன் இந்தப் பாடலில் செய்திருக்கும் ஒரு நுட்பமான விளையாட்டுதான் ஹைலைட். நண்பர்கள் போல் பழகும் இரண்டு சகோதரர்கள்.
இருவரும் பெண் பார்த்திருக்கிறார்கள். ஆனால், அவளை வர்ணிப்பதிலேயே அவர்களின் ரசனையையும், குணத்தையும் காட்டிவிடுவார் கண்ணதாசன்.
​சிவாஜிக்காக ஒலிக்கும் டி.எம்.எஸ் குரல், பெண்ணை மாடர்ன் ரசனையுடன் வர்ணிக்கும். அவர், அவள் நடக்கும்போது மேகம் மிதப்பது போல் மென்மையாக இருக்கிறாள் என்று 'நடமாடும் மேகம்' என்றும், லேட்டஸ்ட் ஸ்டைல் கொண்ட ட்ரெண்டி பியூட்டி என்பதால் 'நவநாகரீகம்' என்றும், அவள் துள்ளிவரும் உற்சாகமான அழகை 'துள்ளிவரும் வெள்ளி நிலா' என்றும், வானைத் தொடும் அளவுக்குப் பெரிய லட்சியங்கள் கொண்டவள் என்று 'விண்ணோடு விளையாடும் பெண்ணந்தப் பெண்ணலவோ' என்றும் வர்ணிக்கிறார். இவரின் ரசனையில் புதுமையின் வேகம் தெரிகிறது.
​ஆனால், கே. பாலாஜிக்காக ஒலிக்கும் பி.பி.எஸ் குரல், பெண்ணை பாரம்பரிய ரசனையுடன் வர்ணிக்கிறது. அவர், அவளது அழகு அழியாத விலைமதிப்பற்ற செல்வம் என்று 'நடமாடும் செல்வம்' என்றும், தெய்வீக அழகு இருந்தும் அடக்கத்துடன் இருப்பதால் 'பணிவான தெய்வம்' என்றும், அவள் இடை மெல்லிய கொடி போல் அசைவதால் 'துவண்டுவிழும் கொடியிடையாள்' என்றும், எவ்வளவு அழகு இருந்தாலும் யதார்த்தமாக மக்களுடன் உறவாடும் எளிமையான நல்ல குணம் கொண்டவள் என்று 'மண்ணோடு உறவாடும் பெண்ணந்தப் பெண்ணலவோ' என்றும் வர்ணிக்கிறார். இவரின் ரசனையில் பண்பாட்டின் மென்மையும், எளிமையும் தெரிகிறது.
​அழகை வர்ணிப்பதிலேயே ஒருவருக்கு புதுமை ரசனையும், மற்றவருக்கு பாரம்பரிய ரசனையும் இருப்பதை கண்ணதாசன் காட்டிவிடுகிறார்.
 
​இந்த நான்குவரிகளிலேயே
காதல், நட்பு, ஏக்கம், உச்சகட்ட பிரமிப்பு என எல்லாவற்றையும் கண்ணதாசன் நம் மனதில் இறக்கிவிடுகிறார்:

​சிவாஜி (TMS): பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை.
​பாலாஜி (PBS): பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை.
​காதல் ஏக்கம்: "நான் பார்த்தது தங்கத்தைப் போல் விலைமதிப்பற்ற ஒரு விஷயம்... 
பெண்ணாக காட்சி தரவில்லை.
." நான் பார்த்தது பூவைப் போல அவ்வளவு மென்மையான அழகு...

இதுதான் காதலின் ஆரம்பகட்டத்தில் வரும் தயக்கமும், உச்சகட்ட பிரமிப்பும்.
​நட்பின் ஆழம்: "என்னென்று நான் சொல்லலாகுமா?" என சிவாஜி கேட்க, "என்னென்று நான் சொல்ல வேண்டுமா?" என பாலாஜி கேட்கிறார். நீ வாயைத் திறந்து சொல்வதற்கு முன்னாலேயே உன் மனசில் ஓடும் உணர்வை இந்த நண்பனால் புரிந்துகொள்ள முடியும்டா! என்று நட்பின் ஆழமான புரிதலை ஒரே வரியில் வெளிப்படுத்துகிறார்.
கடைசி வரிகளில், கவியரசர் ஒரு போடு போடுவார்: "நான் பார்த்த பெண்ணை நீ பார்க்கவில்லை, நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை." என்று இரண்டு பேரும் வேறு வேறாகச் சொல்லிவிட்டு, முடிவில் என்ன சொல்கிறார் தெரியுமா? "நீயின்றி நானில்லை, நானின்று நீ இல்லையே!".
 நம் பார்வை வேறு வேறாக இருக்கலாம். ஆனால், ஒரு நல்ல நண்பனாக, என்னோட கண்ணில் தெரியும் அழகை நீ ரசிக்கிறாய். உன்னோட கண்ணில் தெரியும் அழகை நான் ரசிக்கிறேன். நாம் தனித்தனியாக உலகத்தைப் பார்த்தாலும், நம்மோட உணர்வும், நட்பும் ஒன்றுதான்! இதுதான் உண்மையான நட்பின் தத்துவம்.
​பாட்டு என்றால் அது வெறும் டியூன் இல்லை, அதனுள் ஒரு வாழ்க்கை தத்துவமே இருக்கும் என்று நிரூபித்த பாட்டுதான் இந்த "பொன் ஒன்று கண்டேன்".
செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்