இடுகைகள்

ஜூலை, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜி வி பி சிங்

படம்
தமிழக முன்னேற்ற முண்ணனி கட்சியை சிவாஜி கலைத்தது ஏன்?  ஜனதாதளத்தில் இணைந்தது எப்படி ? சிவாஜி வீட்டுக்கு விபிசிங் வருகை தந்தது எதனால் ? ஜனதாதள கட்சிக்கும் சிவாஜி செலவழித்த சொந்த பணம் எவ்வளவு? ஜனதாதளத்தை விட்டு ஏன் விலகினார்? மீண்டும் காங்கிரசில் சேர சிவாஜி முடிவெடுத்தாரா?  அரசியலை விட்டு சிவாஜி விலக காரணம் என்ன ?  மேற் சொன்ன விஷயங்களை தெரிஞ்சுக்க இந்த பதிவை பாருங்கள். முதல்லே விபி.சிங்.ராஜிவ் அமைச்சரவையிலே அமைச்சரா இருந்தவர் வி.பி. சிங். காங்கிரஸ்லே நடந்த ஊழலை தட்டிக் கேக்க அதனாலே நடந்த பிரச்சினையாலே காங்கிரஸை விட்டு விலகிட்டார் விபி. சிங். ஜனதாதளம்னு கட்சியை தொடங்கினார்.பாரதீய ஜனதாவோட கூட்டு சேந்து அடுத்து வந்த எலெக்சன்லே ஜெயிச்சு பிரதமர் ஆனார். விபி.சிங் ஒரு நல்ல நேர்மையான அரசியல்வாதி. அவர் ஜெயிச்சது சிவாஜிக்கு சந்தோசம். தன்னோட வாழ்த்துக்களை விபி. சிங்குக்கு சொன்னார் சிவாஜி. தமிழ்நாட்டுலே ஜனதாதளத்தை வளர்க்க வேண்டி சிவாஜியை ஜனதாளத்துக்கு வரும்படி அழைச்சார் விபி.சிங். இந்த சூழல்லே தான் தமுமு செயற்குழு கூட்டம் தஞ்சாவூர்லே நடந்துச்சு.தமுமு கட்சியை ஜனதாதளத்தோட இணைச்சுக்கிட்டா ...

பூ முடித்தாள் இந்த பூங்குழலி

படம்
தமிழ் சினிமாலே கண்ணதாசன் எழுதி விஸ்வாநாதன் மியூசிக் அமைச்சு TMS பாடுனா அந்த பாட்டு கொடுக்கற சுகமே தனிதான். மேக்சிமம் பாட்டுக சூப்பர் ஹிட்டுதான்.இதுலயுமே வித்தியாசமான பாட்டுக ஒரு தனி வரிசையா இருக்கு.இந்த தனி வரிசையிலே ஒரு முக்கியமான வித்தியாசமான பாட்டுதான் இது. கல்யாணம்னு ஒண்ணு முடிவான பின்னாலே அதக்கு அடுத்து முடிவாகற விஷயம் கல்யாண பத்திரிக்கை. அந்த கல்யாண பத்திரிக்கைலே என்ன விஷயம் இருக்கும். கல்யாணம் என்னிக்கு ,அந்த வருசத்தோட பேரு ,பொண்ணு மாப்பிள்ளை பேரு ,இன்னும் பல விஷயங்கள் சேத்து ,கடைசியா தங்கள் நல்வரவை விரும்பும்னு ஒரு பேரு  .ஆடம்பர கல்யாணம் ,எளிமையான கல்யாணம் ,கோடீஸ்வரன் வீட்டுகல்யாணம்,ஏழை வீட்டு கல்யாணம்னு எத்தனையோ கல்யாணங்க நடந்தாலும் பத்திரிக்கை மேட்டர் இதுதான். இந்த ஒரு விஷயத்தையே பாட்டா எழுதுனா எப்படியிருக்கும். அப்படியும் பாட்டெழுதி ஆச்சர்யம் கொடுத்தவர் கண்ணதாசன். கண்ணதாசன் ஏன் இப்படி பாட்டெழுதினார் எந்த படத்துக்கு இப்படி பாட்டெழுதினார். ஸ்ரீதர் டைரக்சன் செஞ்ச படம் நெஞ்சிருக்கும் வரை. ஸ்ரீதர் ஒரு பிடி மண் அப்படிங்கற தலைப்புலே சிவாஜியை ஹீரோவா வெச்சு படம் எடுக்கறதா பிளான் ...

சிவாஜி நினைவுநாள்

படம்
ஜூலை 21,2001.. இந்த நாள் அன்றைய மாலை 7 மணி வரை தமிழகத்துக்கு ஒரு சாதாரண நாள் தான்.அதன் பின் பெரும் கருத்த போர்வை ஒன்று சோகத்தை சுமந்து தமிழகத்தை மூடும் என்று யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். நேரிலே நீ பார்த்ததுண்டா வீரசிவாஜி என்ற பாடல் விடுதலையில் இடம் பெற்றது.அது நடிகர்திலகத்துக்காக எழுதப்பட்ட வரிகள் தான். இது வரை பார்க்காத, பார்க்க முடியாமல் இருந்த சிவாஜியை இப்போதாவது ஒரு முறை பார்த்துவிடலாம் என்று லட்சக்கணக்கானவர்கள் சிவாஜியின் அன்னை இல்லம் வந்தார்கள். இது நடிகர்திலகம் மரணம் குறித்த செய்தி வெளிவந்த பின்பு. செவாலியே சிவாஜிகணேசன் சாலை அடுத்த இரண்டு நாட்களும் பூகம்பம் போல் அதிர்ந்து கொண்டிருந்தது.. இது என்ன அடங்கிப்போகும் கூட்டமா ?அவர்  ஐந்து வருட அரசியல் ஆட்சியை, அதிகாரத்தை ஆண்டவரில்லை.ஆண்டது 50 வருட கலையாட்சி.மறக்குமா நெஞ்சம்.நூற்றுக்கணக்கான உருவ சித்திரங்களாய் ,ஓடும் பிலிம் சுருள்களாய் தமிழன் நெஞ்சில் என்றும் உலா வந்து கொண்டிருக்கும் கலைப் பேராசான் நடிகர்திலகம். இழுத்த இழுப்புக்கெல்லாம் வருபவரா சிவாஜிகணேசன். ஒரு தகவலும் சொல்லாமல் வந்தார் பந்துலு.ஒரு படப்பிடிப்பில் சிவா...

sivajiganesan cvr combo

படம்
செவாலியர் சிவாஜியின் FanBoy சி.வி.ராஜேந்திரன் சிவாஜியை வைத்து அதிக படங்களை இயக்கிய இயக்குனர்களில் நான்காம் இடத்தில் இருக்கிறார் சிவி ராஜேந்திரன். மாற்றுமுகாம் நடிகரை வைத்து படமெடுக்காத இயக்குனர்களிலும் பீம்சிங்குக்கு அடுத்த இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அத்தகைய பெருமைக்குரிய சிவி ராஜேந்திரன் அவர்களைப் பற்றிய பதிவே இந்த வீடியோ. சிவி ராஜேந்திரன் சிவாஜியை வைத்து இயக்கிய படங்கள் 14. சிவாஜியை இயக்கிய முதல் படம் கலாட்டா கல்யாணம்.  சிவாஜி கால்ஷீட் கிடைச்சாச்சா.பிடி சீரீயஸ் சப்ஜெக்ட்டை என்று கொடி தூக்கிக் கொண்டு வந்த இயக்குனர்கள் தான் ஏராளம். பந்துலு மட்டும் மூணு படம் பண்ணினார்.கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி பலே பாண்டியா சபாஷ்மீனா என்று.. சிவி ராஜேந்திரனுக்கு முதல் படம்  வாய்த்தது ஒரு சிரிப்பு படம்தான்.கலாட்டா கல்யாணம்.சிவாஜியை காமெடி ஹீரோவாக மட்டுமல்ல.ஸ்மார்ட் பாயாகவும் காட்டினார்.சிவாஜி செய்தது தான் இது என்றாலும் சிவி ராஜேந்திரனுக்கும் பெயர் கிடைத்தது. தலைவனை புதுசா பாக்க வெச்சுட்டியே என்று ரசிகர்கள் ஆனந்தப்பட்டார்கள் . கலாட்டா கல்யாணம் கூட போகிற போக்கில் அமைந்ததுதான். ஶ்ரீதரின் உ...

1976 சிவாஜி பட பிரச்சினைகள்

படம்
காமராஜர் இறந்த பின்னால சிவாஜி இந்திரா காங்கிரஸில் சேர்ந்தார் .அதனால பல பிரச்சனைகள் சிவாஜிக்கும் சிவாஜி படங்களுக்கும் ஏற்பட்டுச்சு.அது பத்தின விவரங்களை இந்த பதிவுலே நாம முழுசா பாக்கலாம் . 1973 ஆம் வருசம் நவம்பர் 16 ம் நாள் சசிகபூர் சர்மிளாதாகூர் நடிப்புலே உருவான இந்தி  படம்  'ஆ கலே லக் ஜா '.பிரமாதமான பாட்டுகள் அமைஞ்ச இந்த படம் வெளியான எல்லா தியேட்டர்களிலும் வசூலை வாரி குவிச்சது.பீட்டர் பைராவின் ஒளிப்பதிவில் காஷ்மீரின் அழகான காட்சிகள் கண்ணுக்கு விருந்தா இருந்தது.. இந்த படத்தை தமிழ்லே தயாரிக்க பிரபல தெலுங்கு பட நிறுவனமான ஜெகபதி ஆர்ட் பிக்சர் முடிவு செஞ்சது. இந்த பட நிறுவனம் ஏற்கெனவே சிவாஜியை வெச்சு எங்கள் தங்க ராஜா படத்தை தயாரிச்சு இருந்தது. மூணு வருசம் கழிச்சு மறுபடியும் சிவாஜியை வெச்சு படம் எடுக்க நெனச்சப்போ ஆ கலே லக் ஜா பட வெற்றியை பாத்து அந்த இந்தி படத்தை தமிழ்லே எடுக்கலாம்னு முடிவு செஞ்சது. சிவாஜி மஞ்சுளா ஜோடியா நடிக்க பாலாஜி ஒருகுணச்சித்திர வேஷத்துலே நடிச்சார்.அந்த படம்தான் உத்தமன்.கேவி மகாதேவன் அருமையா பாட்டுகளை போட்டிருந்தார். பாட்டெல்லாம் செம ஹிட். 25.6.1976 அன்னைக்கு வெ...

சந்திப்பு Nasseb

படம்
நடிகர்திலகம் சிவாஜி  நடிச்சு சிவாஜி புரொடொக்சன் தயாரிச்சு வெள்ளிவிழா ஓடுன  சந்திப்பு படத்தை பத்தி இந்த பதிவுலே பாக்கலாம். சந்திப்பு படம் வெளியான தேதி 16.6.1983. நடிகர்திலகத்தோட திரைப்பட வரிசையிலே 235 வது படம். இளையதிலகம் பிரபு சிவாஜியோட நடிச்ச 3 வது படம். நடிகை ஸ்ரீதேவி சிவாஜிக்கு ஜோடியா நடிச்ச ரெண்டாவது படம்.நடிகர்திலகம் சிவாஜி இரட்டை வேஷத்துலே நடிச்ச 19 வது திரைப்படம். 1981 லேவெளியான நஸீப் என்ற இந்தி படத்தோட ரீமேக்தான் தமிழ் சந்திப்பு படம். நஸீப் என்னும் இந்தி வார்த்தைக்கு விதி அல்லது தலையெழுத்துன்னு அர்த்தம் . சந்திப்பு படம் இந்தி ரீமேக்கா இருந்தாலும் தமிழ் திரைக்கதையிலே பல மாற்றங்களை செஞ்சு எடுத்திருந்தாங்க. முக்கியமா படத்தோட ஆரம்ப கட்ட காட்சிகள். சந்திப்பு படத்துலே கோயில் தர்மகர்த்தாவா இருப்பார் சிவாஜி. கோயில் நகைகளை கொள்ளையடிக்க மேஜரும் நம்பியாரும் பிளான் பண்ணி நகைகளை கொள்ளையடிச்சு ,ஒரு கொலைப்பழியையும் சிவாஜி மேலே சுமத்தி ,சிவாஜியை அடிச்சு போட்டு ரயில் தண்டவாளத்துலே போட்டுட்டு போயிருவாங்க.படத்தோட இந்த ஆரம்ப காட்சிகள் ,கேரக்டர் வடிவமைப்பு  நஸீப் படத்துலே வேற மாதிரி இ...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்