இடுகைகள்

ஏப்ரல், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

ஒரே பேமிலி..5 போலீஸ்...

படம்
இன்னைக்கு நாம பேசப்போற மேட்டர் சாதாரணமானது இல்ல... இது ஒரு 'லெஜண்டரி ரெக்கார்ட்'. ​சினிமாவுல வாரிசுகள் வர்றது புதுசு இல்ல, ஆனா வந்த அத்தனை பேரும் 'சிங்கத்தோட கால்தடத்தை' அப்படியே ஃபாலோ பண்றதுதான் இங்கே ஆச்சரியமே! உலக சினிமா வரலாற்றை எடுத்துப் பாருங்க... ஹாலிவுட்ல இருந்து கோலிவுட் வரைக்கும் எத்தனையோ பெரிய ஃபேமிலிஸ் இருக்கு. ஆனா, ஒரே குடும்பத்துல இருந்து மூணு தலைமுறை, அஞ்சு பேரு, 'போலீஸ்' அப்படிங்கிற அந்த ஒரு கெத்தான ரோலை செஞ்சு காட்டியிருக்காங்கன்னா... அது  'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் அவரோட குடும்பம் மட்டும்தான்! ​மத்தவங்களுக்கு எல்லாம் இது ஒரு கேரக்டரா இருக்கலாம்... ஆனா இந்த குடும்பத்துக்கு அது ஒரு பரம்பரை ரத்தம்! 'தங்கப்பதக்கம்' சௌத்ரில ஆரம்பிச்சு, இன்னைக்கு 'லெனின் பாண்டியன்' தர்ஷன் ராம்குமார் வரைக்கும்... அந்த போலீஸ் யூனிஃபார்முக்கே ஒரு தனி கம்பீரத்தைக் கொடுத்திருக்காங்க. ​"போலீஸ் யூனிஃபார்ம் இவங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு நச்சுனு செட் ஆகுது?" ​"என்னதான் ஊர்ல ஆயிரம் பேர் காக்கி சட்டை போட்டு நடிச்சாலும், இந்த சிவாஜி...

டபுள் ஆக்சன் ரகசியங்கள்

படம்
 ஒரே ஆளு... ஆனா ரெண்டு பேரு! சிவாஜி கணேசனின் Double Action மேஜிக்!  இன்னைக்கு நாம சூர்யாவோட '24' படத்தையோ இல்ல கமலஹாசனோட 'தசாவதாரம்' படத்தையோ பார்த்துட்டு, 'என்னடா டெக்னாலஜி இது!'ன்னு வியந்து போறோம். ஆனா, இந்த 'ஒரே ஆளு ரெண்டு பேரு' மேஜிக் எப்படி ஆரம்பிச்சது? அதுக்கும் முன்னாடி, அந்த காலத்துல கம்ப்யூட்டரே இல்லாதப்போ இது எப்படி சாத்தியமாச்சு? இதைப் பத்தின ஒரு செம இன்ட்ரஸ்டிங் ஹிஸ்டரி தான் இந்த பதிவு. ​"1898-ல வந்த 'த ஃபோர் டிரபிள்சம் ஹெட்ஸ்' (The Four Troublesome Heads) அப்படிங்கிற பிரெஞ்சு படத்துல ஜார்ஜ் மெலியஸ் ,இவர் ஒரு மேஜிக் மேன்  ஒரு செம வித்தை காட்டியிருப்பாரு. ​அந்தக் காட்சியில என்ன நடக்கும் தெரியுமா? மெலியஸ் ஸ்கிரீனுக்கு வருவாரு. திடீர்னு தன்னோட தலையைத் தானே கழட்டி பக்கத்துல இருக்கிற மேஜை மேல வைப்பாரு. ஆனா அடுத்த செகண்டே அவரோட கழுத்துல இன்னொரு புதுத் தலை முளைக்கும்! இப்படி வரிசையா மூணு தலையை கழட்டி மேஜை மேல வைப்பாரு. இப்போ மேஜைல மூணு தலை, அவர் கழுத்துல ஒரு தலைன்னு மொத்தம் நாலு தலைகளும் ஒரே நேரத்துல பேசும், சிரிக்கும். கடைசியில எல்லா த...

சிவாஜி கே ஆர் விஜயாவின் 33 பட கதை தொகுப்பு

படம்
​திரையுலகின் 'சிம்மக் குரலோன்' ஒரு பக்கம், பார்ப்பவர் நெஞ்சை அள்ளும் 'புன்னகை அரசி' மறுபக்கம்! இவர்கள் இருவரும் திரையில் தோன்றினால், அது வெறும் நடிப்பு அல்ல; ஒரு வாழ்வியல் பாடம். சிவாஜி கணேசன் எனும் நடிப்புக் கடலில், கே.ஆர். விஜயா எனும் மென்மையான அலைகள் மோதியபோது பிறந்தவைதான் இந்த முப்பத்தி மூன்று காவியங்கள்! ​சில படங்களில் அவர்கள் 'இரு மலர்களாக' மணம் வீசினார்கள்; சிலவற்றில் 'தங்கப் பதக்கமாக' நேர்மை பேசினார்கள். 'திருவருட்செல்வராக' ஆன்மீகத்தில் திளைத்தாலும் சரி, 'திருடன் ' என்று அதிரடி காட்டினாலும் சரி, இவர்களது ஜோடிப் பொருத்தம் என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம். ​பாசத்திற்காகத் தியாகம் செய்யும் அண்ணனாக, நீதிக்காகப் போராடும் அதிகாரியாக, காதலுக்காக ஏங்கும் காதலனாக என சிவாஜி விஸ்வரூபம் எடுக்க... அவருக்கு இணையாகத் தனது அமைதியான, ஆழமான நடிப்பால் அணை கட்டி நின்றவர் கே.ஆர். விஜயா. ​காலத்தின் சுவடுகளில் அழியாத அந்த 33  'கற்பனைச் சித்திரங்களின்' கதை சுருக்க அணிவகுப்பை இப்போது பார்க்கலாம். ​செல்வம்:  ​ஜாதகப்படி க...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்