இடுகைகள்

nadigartilagam லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜியின் மீசை

படம்
சிவாஜியின் மீசை 7 வயதில் இருந்து நடிகர்திலகத்தின் படங்களை பார்த்த நினைவுகள் இன்று வரை நன்றாகவே ஞாபகம் உள்ளது.எங்களூர் பெரியவர்களின் பெரிய  மீசைகளை பார்க்கும் போது ஏன் இவ்வளவு பெரிதாய்?   என்று யோசிப்பதுண்டு.சிலரிடம் மீசை பற்றி  பேசினால் கட்டபொம்மன் மீசையை சிலாகிப்பார்கள்.பலர் சொல்லி சொல்லி அந்த மீசை மேல் பெரும்  ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது. மீசை என்றாலே கட்டபொம்மன்தான் என்ற எண்ணமே பல காலங்களாக என் மனதில் நிலைத்து விட்டது. இந்த எண்ணத்தில் சிறிது தடுமாற்றம் ஏற்பட்டது காவல்தெய்வம் சாமுண்டியின் போஸ்டரைப் பார்த்த பின்புதான்.சாமுண்டியின் மேல் நோக்கி முறுக்கிய மீசை  பெரும் கம்பீரத்தை எனக்குள் எற்படுத்தியது.அது அச்சமூட்டுவதாகவும் இருந்ததும் ஒரு காரணமோ? அப்போதிருந்து சாமுண்டியின் மீசைபோல் யாராவது வைத்திருந்தால் அதை உற்று நோக்கியே பார்த்துக் கொண்டிருப்பேன்.முகம் பார்க்காமல்  மீசை மட்டுமே கண் முன்னால் வந்து நிற்கும் . அடர்கறுத்த மீசைகள் தான் பெரும் கம்பீரம் என்ற என் எண்ணத்தை உடைத்தது எங்க ஊர் ராஜா விஜயரகுநாத சேதுபதிதான்.எங்களூரிலேயே  அடர்ந்த வெண் மீசை வைத்திருந...

சிவாஜி வாழ்க்கை வரலாறு.. நடித்த படத்தலைப்புகளை வைத்தே ...

படம்
பிறப்பு :விடிவெள்ளி வளர்ப்பு :தாய் உடன் பிறப்புகள் :ரத்த பாசம் பள்ளிப்படிப்பு :தியாகம் இளமைப்பருவம் :உலகம் பலவிதம் நாடக நடிப்பு :அறிவாளி சிவாஜி பட்டம் :நான் பெற்ற செல்வம் பராசக்தி தேர்வு :புதையல் திருமணம் :பாதுகாப்பு துணைவியார் :இல்லற ஜோதி பிள்ளைகள் :செல்வம் முதல் பட ரிலீஸ் :ஆலய மணி திரைப்பட வளர்ச்சி :நேர்மை தொழிலில் :நானே ராஜா நடிப்பில் :இமயம் திமுக விலகல் :ஆண்டவன் கட்டளை அன்னை இல்லம் :குடும்பம் ஒரு கோயில் கட்டபொம்மன் படம் :சாதனை நயாகரா மேயர் :உயர்ந்த மனிதன் காமராஜர் சேர்க்கை :அன்பை தேடி காங்கிரஸ் வளர்ப்பு :சவாலே சமாளி எதிர்க் கட்சிகளுக்கு :சிம்ம சொப்பனம் ரசிகர்கள் :அன்பு கரங்கள் தேச சேவையில் :கர்ணன் காமராஜர் மறைவு :எதிர் பாராதது அன்னை இந்திரா :அன்பு  இந்திரா காங்கிரஸ் :நல்ல வீடு MP பதவி :கௌரவம் மொழிப்பற்று :என் தமிழ் என் மக்கள் இந்திரா மறைவு :அமரதீபம் ராஜிவ் நட்பு :கூண்டுக்கிளி காங்கிரஸ் துரோகம் :பாகப் பிரிவினை கட்சி விலகல் :திரும்பிப்பார் தமிழக முன்னேற்ற முண்ணனி :புதிய பறவை திருவையாறு :தர்மம் எங்கே?  ஜனதா தளம் :திருப்பம் அரசியல் விலகல் :சாந்தி  பத்மஸ்ரீ , பத்ம பூஷண் :அ...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்