இடுகைகள்

நவம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

வெள்ளிவிழா கண்ட சிவாஜி படங்ளின் பார்முலா

படம்
இந்தப் பதிவில் சொல்லப்படும் சிவாஜியின் வெள்ளி விழா படங்களில் ஓர் ஒற்றுமை உள்ளது. அது ' பிரிவு ' என்பதை மையமாக வைத்து அமைந்த திரைப்படங்கள். அவை என்னென்ன படங்கள் என்னென்ன வகையில் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.  சிவாஜியின் மூன்று வெள்ளி விழா படங்களில் நடித்த நடிகை K.R.விஜயா. தங்கப்பதக்கம் ,திரிசூலம், நீதிபதி.தங்கபதக்கம் படத்தில் சில காலம் மகனை பிரிந்து இருப்பார் சிவாஜி.திரிசூலம் படத்தில் மனைவி மகனை பிரிந்து இருப்பார் சிவாஜி.நீதிபதி படத்திலும் காதலி சுஜாதா ,மகன் பிரபுவை பிரிந்து இருப்பார் சிவாஜி.இந்த மூன்று படத்திலும் உள்ள ஒற்றுமை இது.தங்கபதக்கம் வெளியான போது அதுவரை வெளியான வசூல் சாதனைகளை முறியடித்தது.திரிசூலம் வெளியான போது அதற்கு  முன் வெளியான அத்தனை படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்தது. இந்த மூன்று படங்களிலும் மனைவியோ அல்லது மகனோ பிரிந்திருக்கும் காட்சி அமைப்புகள் இடம் பெற்று இருக்கும்  பாவமன்னிப்பு. 177 நாட்கள் ஓடி வெள்ளிவிழா சாதனை செய்த படம் பாவ மன்னிப்பு. இந்தப் படத்தில் சிவாஜி ,அப்பா  எம் .ஆர். ராதா ,அம்மா எம் வி ராஜம்மா, தம்பி ஜெமினி கணேசன் ஆகியோரை சிறுவயதிலேயே...

சிவாஜிக்கு மகளாக நடித்த நடிகைகள்

படம்
நடிகர்திலகம் சிவாஜி கணேசனுக்கு மகளாக நடித்த நடிகைகள் பற்றிய விவரங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம் . முதல் தேதி. 12 3 1955 இல் வெளியான படம் இது. சிவாஜி முதன்முதலாக வயதான தோற்றத்தில் நடித்த படம் இது.சிவாஜியின் 21வது திரைப்படம் இதுவாகும்.இந்தப் படத்தில் சிவாஜிக்கு மகளாக பேபி உமா என்பவர் நடித்திருந்தார். சிவாஜிக்கு மகளாக முதன் முதலில் நடித்த நடிகை என்று இவரை சொல்லலாம். 12 7 63 ல் வெளியான படம் பார் மகளே பார். இந்தப் படத்தில் சிவாஜியின் மகள்களாக விஜயகுமாரி புஷ்பலதா இருவரும் நடித்திருந்தார்கள்.  தனக்குப் பிறந்த இரு மகள்களில் ஒரு மகள் தனக்கு பிறந்தவர் இல்லை என்ற பிரச்சனை எழுவதும் அதற்குப் பின் நடக்கும் சம்பவங்களே படத்தின் கதையாகும். மோட்டார் சுந்தரம் பிள்ளை. 13 குழந்தைகளுக்கு தந்தையாக நடித்தார் சிவாஜி கணேசன் . ஜெயலலிதாவும் காஞ்சனாவும் அந்த 13 குழந்தைகளில் இரு மகள்களாக நடித்திருந்தார்கள்.  திருமால் பெருமை படத்தில்   பெரியாழ்வார் என்ற பாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகர் திலகம்.  கே ஆர் விஜயாவின் வளர்ப்பு தந்தையாக சிவாஜி நடித்திருப்பார். சிறு வயது மகளாக குட்டிபத்மினி நடித...

ஒவ்வொரு காலகட்டத்திலும் சிவாஜியின் முக உடல் தோற்றங்கள்

படம்
ஒவ்வொரு காலகட்டத்திலும் வித விதமாக வடிவெடுத்த சிவாஜி கணேசனின் முக தோற்றம் மற்றும் உடற் தோற்றங்கள் : முதலில் 1952ல் வெளியான பராசக்தி திரைப்படத்தில் இருந்து 1956ல் சிவாஜி கணேசன் நடித்து வெளியான அனைத்து திரைப்படத்திலும் ஒரே மாதிரியாகவும் ஆனால் அதற்கு இடையே 1954ல் சிவாஜி கணேசன் லேசான திடகாத்திரமான உடற் தோற்றத்தில் கொஞ்சம் பூசினாற் போல் தோற்றத்தில் நடித்தார்.  அதன் பின் 1957 முதல் 1960 வரையிலான அனைத்து திரைப்படங்களிலும் சிவாஜி கணேசன் முக தோற்றமும், உடல் தோற்றமும் இன்னும் சற்று மாறி இருந்தது. ரசிக மக்களை தனது நடிப்பின் முக பாவத்தாலும், உடல் மொழியாலும் (பாடி லாங்வேஜ்)லும் வெளுத்து வாங்கியிருப்பார். அதன் பிறகு 1961 முதல் 1966 வரையிலான காலகட்டத்தில் சிவாஜி கணேசன் ஒரு அழகான உடற்தோற்றத்தில் அமூல் பேபி என்று சொல்லமாக நமது குழந்தைகளை அழைப்பது போன்றான குண்டான உடற்தோற்றத்தில் சிவாஜி கணேசன் நடித்து அசத்தியிருப்பார். இன்னும் தெளிவாக சொல்ல போனால் அந்த காலகட்டத்தில் ரத்ததிலகம், புதிய பறவை, கர்ணன், ஆண்டவன் கட்டளை, பச்சை விளக்கு படங்களில் கொஞ்சும் முக தோற்றத்திலும் உடற் தோற்றாலும் நடித்திருப்பார்....

சிவாஜியை வைத்து படம் தயாரித்த நடிகர் நடிகைகள் இயக்குனர் இசையமைப்பாளர்

படம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து படம் தயாரித்த நடிகர் நடிகையர்கள் இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர்கள் .. ஸ்ரீதருக்கு ஓர் அமரதீபம்.... ஸ்ரீதர் திரைப்பட இயக்குனர் ஆவதற்கு முன்பு திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதிக் கொண்டிருந்த காலம்.கதை வசனம் எழுதிக் கொண்டிருந்த ஸ்ரீதருக்கு சிவாஜியை  வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று ஆசை வந்தது.கையிலோ காசு இல்லை. அந்த சமயத்தில் அவர் எழுதி வைத்திருந்த ஒரு கதையை சிவாஜிக்கு சொன்னார். அந்தக் கதையை சிவாஜிக்குசொன்ன ஸ்ரீதர்  உங்களை வைத்து நான் இந்த படத்தை எடுக்க  வேண்டும் என்று தன் ஆசையை சொன்னார். ஆனால் உங்களுக்கு அட்வான்ஸ் கொடுப்பதற்கு கூட என்னிடம் பணம் இல்லை என்று சிவாஜியிடம் கூறினார். நீங்கள் சம்மதம் கொடுத்தால் நீங்கள் நடிப்பதாக ஒரு விளம்பரம் பத்திரிக்கையில் செய்து விடுகிறேன். விநியோகஸ்தர்கள் தரும் பணத்தை வைத்து படத்தை முடித்து விடுகிறேன் என்று சிவாஜியிடம் கூறினார் .சிவாஜியும் அவருக்கும் ஒரு வாழ்வளிக்கலாமே என்று தன் சம்மதத்தை கூறிவிட்டார்.  அப்படி சிவாஜி அட்வான்ஸ் எதுவும் வாங்காமல் ஸ்ரீதர் தயாரிக்க சம்மதம் கொடுத்த படம் அமரதீபம். ஸ்ரீதர...

சிவாஜியின் ரிலீஸ் ஆகாத படங்கள்

படம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து பாதியுடன் நின்று போன படங்கள் மற்றும் வெளிவராத படங்களை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம். ஏழு ஜென்மங்கள்.. ஏழு ஜென்மங்கள் என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கும் திட்டம் ஆரம்பமானது. இந்தப் படத்தின் கதாசிரியர் ஏ எஸ் பிரகாசம்.இயக்குனராக திருநாகசந்தர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். முதல் ஜென்மத்தில் காதலர்களாக இருந்து தம்பதிகளாக மாறி ஏழு ஜென்மத்திலும் வெவ்வேறு இடங்களில் பிறந்து இணைவது தான் கதை .இதில் சிவாஜிக்கு ஒவ்வொரு ஜென்மத்திலும் ஒவ்வொரு ஒப்பனை. ஏ எஸ் பிரகாசம் கூறிய இந்த கதை சிவாஜிக்கும் மிகவும் பிடித்திருந்தது .நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார். எம் எஸ் விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்றும் இந்த படத்திற்காக ஒலிப்பதிவு செய்யப்பட்டது . பூஜை போடப்பட்டு பட வேலைகளும் ஆரம்பிக்க தொடங்கிவிட்டன. இதன் தயாரிப்பாளருக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வராததால் படம் அதோடு நின்று போனது. ஏழு ஜென்மங்கள் ஏழு விதமான ஒப்பனைகள் என்று விதவிதமாக நடிக்கலாமே என்று இருந்த சிவாஜிக்கு இந்தப் படம் நின்று போனதில் ஒரு வருத்தம். சாவித்திரி தயாரித்து நடித்த பிராப்தம் படத்தின் ...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்