1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

வெள்ளிவிழா கண்ட சிவாஜி படங்ளின் பார்முலா


இந்தப் பதிவில் சொல்லப்படும் சிவாஜியின் வெள்ளி விழா படங்களில் ஓர் ஒற்றுமை உள்ளது. அது ' பிரிவு ' என்பதை மையமாக வைத்து அமைந்த திரைப்படங்கள். அவை என்னென்ன படங்கள் என்னென்ன வகையில் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

சிவாஜியின் மூன்று வெள்ளி விழா படங்களில் நடித்த நடிகை K.R.விஜயா.
தங்கப்பதக்கம் ,திரிசூலம்,
நீதிபதி.தங்கபதக்கம் படத்தில் சில காலம் மகனை பிரிந்து இருப்பார் சிவாஜி.திரிசூலம் படத்தில் மனைவி மகனை பிரிந்து இருப்பார் சிவாஜி.நீதிபதி படத்திலும் காதலி சுஜாதா ,மகன் பிரபுவை பிரிந்து இருப்பார் சிவாஜி.இந்த மூன்று படத்திலும் உள்ள ஒற்றுமை இது.தங்கபதக்கம் வெளியான போது அதுவரை வெளியான வசூல் சாதனைகளை முறியடித்தது.திரிசூலம் வெளியான போது அதற்கு  முன் வெளியான அத்தனை படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்தது.
இந்த மூன்று படங்களிலும் மனைவியோ அல்லது மகனோ பிரிந்திருக்கும் காட்சி அமைப்புகள் இடம் பெற்று இருக்கும் 

பாவமன்னிப்பு. 177 நாட்கள் ஓடி வெள்ளிவிழா சாதனை செய்த படம் பாவ மன்னிப்பு. இந்தப் படத்தில் சிவாஜி ,அப்பா 
எம் .ஆர். ராதா ,அம்மா எம் வி ராஜம்மா, தம்பி ஜெமினி கணேசன் ஆகியோரை சிறுவயதிலேயே பிரிந்து வாழ்வது போல படத்தின் காட்சி அமைப்புகள் இருக்கும். 

சிவாஜியின் முதல் படமான பராசக்தி வெள்ளிவிழா ஓடி வெற்றி கண்ட சித்திரமாகும்.
இந்தப் படம் தொடங்கி சிறிது நேரத்திலேயே தன் சகோதரர்களை பிரிந்து வாழக்கூடிய காட்சி அமைப்புகள் படத்தின் கடைசி வரை  இருக்கும்.

சிவாஜியின் மகத்தான வெள்ளி விழா வெற்றி கண்ட 
கிராமிய கருப்பு வெள்ளை திரைகாவியம் பாகப்பிரிவினை. பெயரிலேயே 'பிரிவினை ' என்ற வார்த்தையை கொண்ட இந்தப் படத்தில் இரு குடும்பங்கள் பிரிந்து வாழ்வது போன்ற காட்சி அமைப்புகள் இருக்கும். 

பட்டிக்காடா பட்டணமா படத்தில் சிவாஜி ஜெயலலிதாவை திருமணம் செய்து கொள்வார். திருமணத்திற்கு பின்பு சிவாஜியை விட்டு  ஜெயலலிதா பிரிந்து சென்று விடுவார்.
இந்தப் படத்திலும் மனைவி ஜெயலலிதாவை சிவாஜி பிரிந்திருக்கும் காட்சி அமைப்பு இருக்கும்.
கருப்பு வெள்ளை கிராமிய படங்களில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்த படம் பட்டிக்காடா பட்டணமா. 

இலங்கையில் 203 நாட்கள் ஓடி 
வெள்ளி விழா சாதனை படைத்த படம் உத்தமன்.சிவாஜி மஞ்சுளா ஆகிய இருவரும் காதலர்கள்.மஞ்சுளாவின் அப்பாவாக வரும் விகே ராமசாமியின் சூழ்ச்சியால் மஞ்சுளா சிவாஜியை விட்டு பிரிந்து வாழ்வது போல காட்சி அமைப்புகள் இடம் பெற்று இருக்கும்.

காதல் படங்களின் தாஜ்மஹால் ஆன வசந்த மாளிகை திரைப்படத்தில் வாணிஸ்ரீயை பிரிந்து இருப்பார் சிவாஜி .சிவாஜியின் 125 வது படமான உயர்ந்த மனிதன் திரைப்படத்தில் தான் முதன் முதலாக வாணிஸ்ரீ ஜோடி சேர்ந்து நடித்திருப்பார். அதில் அப்பா சூழ்ச்சி செய்து சிவாஜி வாணிஸ்ரீயை  பிரிப்பார் .வசந்த மாளிகை திரைப்படத்தில் அம்மா சூழ்ச்சி செய்து சிவாஜி வாணிஸ்ரீயை பிரிப்பார் .

வெள்ளி விழா கண்ட புராணப்படமான திருவிளையாடல் படத்தில் சிவனாக வரும் சிவாஜியின் மகன் முருகன் கோபித்துக் கொண்டு பிரிந்து போவார் .

சிவாஜியின் வெள்ளி விழா படமான தியாகம் திரைப்படத்தில் சிவாஜி லட்சுமி ஜோடியாக நடித்திருப்பார்கள் .
இதில் சிவாஜியின் மேல் தவறான அபிப்ராயம் கொண்டு லட்சுமி சிவாஜியை விட்டு பிரிந்து இருப்பார்.

சிவாஜி புரொடக்சன் தயாரித்த வெள்ளிவிழா படமான சந்திப்பு திரைப்படத்தில் மனைவி சுஜாதா மகன்  பிரபு ஆகியோரை பிரிந்து வாழ்வார் சிவாஜி.

சிவாஜி ரஜினி சேர்ந்து நடித்து வெள்ளிவிழா கண்ட திரைப்படம் படிக்காதவன். இந்த திரைப்படத்தில் தம்பி ரஜினியை பிரிந்து இருப்பார் சிவாஜி.

செந்தில் வேல் சிவராஜ் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்