இடுகைகள்

சிவாஜி கணேசன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

சிவாஜி கணேசன் கே ஆர் விஜயா இணைந்து நடித்த படங்கள்

படம்
தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘புன்னகை அரசி’ என அன்போடு அழைக்கப்படும் கே. ஆர். விஜயா அவர்கள், தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் தன்னுடைய கலைப் பயணத்தைத் தொடர்ந்த இவர், சுமார் 450–க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.   நாடக நடிகையாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு தமிழ் சினிமா ரசிகர்களால் ‘புன்னகை அரசி’ எனப் புகழப்பட்ட கே. ஆர். விஜயா அவர்கள் நடிகர்திலகத்தோடு இணைந்து நடித்த படங்களையும் அப் படங்களின் சாதனைகளையும் இதில் பார்க்கலாம். நடிகர்திலகத்துடன் சேர்ந்து நடித்த படங்கள். கை கொடுத்த தெய்வம்,சரஸ்வதி சபதம்,செல்வம்  கந்தன் கருணை நெஞ்சிருக்கும் வரை தங்கை பாலாடை திருவருட் செல்வர் இரு மலர்கள் ஊட்டி வரை உறவு திருமால் பெருமை திருடன் எதிரொலி ராமன்  எத்தனை ராமனடி சொர்க்கம் தவப்புதல்வன் பாரதவிலாஸ் தங்கப்பதக்கம்  கிரகப் பிரவேசம் நாம் பிறந்த மண் ஜெனரல் சக்கரவர்த்தி தச்சோளி அம்பு  ஜஸ்டிஸ் கோபிநாத் திரிசூலம் நான் வாழ வைப்பே...

சின்னையாவின் சுதந்திரப் போர்

படம்
வெள்ளை தலைகளின் காலம் களம் ஒன்று... 'வெடி போடணும்டா ' தமிழன் யாருன்னு அந்த வெள்ளை பறங்கிகளுக்கு காட்டணும்.எது செஞ்சாலும் அடக்கு முறைன்றாங்க,லத்தில வெளுக்ககறான் .நம்ம மண்ணுல இருந்துட்டே நம்மை வெரட்டறான் . அடி அடின்னு அடிச்சுகிட்டே இருப்பானுக ,நாம முதுக காமிச்சுகிட்டே நிக்க வேண்டியதுதான்.எத்தன நாளக்கு இந்த பொழப்பு. நாம யாருன்னு காட்டணும். அவர்கள் உறுமினார்கள் . அவர்கள் வெடித்தார்கள். ஏதோ செய்ய துடித்தார்கள்.  சத்தங்கள் இல்லாத அந்த இரவு. வெள்ளைமார்களின் நடமாட்டம் குறைவான அந்த நேரம். மனித வாசனை வராத அந்த நொறுங்கியிருந்த கட்டிடங்களின் ஒரு பகுதியில்... அந்த கூட்டம் கூடிற்று.. கூட்டத்திலே தலைவன் போல் இருந்தவர் பேசினார். நாம மறைமுகமாக நம்ம எதிர்ப்பை வெள்ளைத் தலையனுகளுக்கு எதிராக செஞ்சிட்டு வந்தோம்.எதும் பெரிசா செஞ்சுப்புடலே. பெரிசாவும் எதும் இல்லே.இப்படியே பொறுத்துக்க முடியாது.வேற பெரிசா என்ன செய்யலாம், உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுங்க. எது நல்லா இருக்குன்னு எல்லோரும் ஏத்துக்கற முடிவை செய்யலாம். பாதி இருட்டில் பனி  இரவில் அந்த உருவங்கள் ஒவ்வொன்றும் ஒன்று சொல்லின . 'வெடி வைப்போம் '...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற