சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

எங்கள் வீட்டிற்கு வந்த இளையதிலகம்

முக்கிய கதைக்குள் நுழையும் முன் ....

1988 ஆம் வருடம்.பொள்ளாச்சியில் ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி.
ஒரு புதிய பட படப்பிடிப்புப்புக்காக இந்த கிராமம் கதைக்கேற்ற இடம் என்று  தேந்தெடுக்கப்பட்டு, 
அந்த கிராமத்தில் ஒரு சினிமா ஷுட்டிங் யூனிட் வந்திறங்கியது.
ஒரு படப்பிடிப்புக்காக..
ஷுட்டிங் பற்றி அதிகம் தெரிந்திராத கிராமம் அது.
அவர் ஒரு பெரிய நடிகர். அவர் மகன்தான் இப்படத்தில் நடிக்கிறார். 
அவர் வருகிறார் என்று ஊரெல்லாம் பேச்சு.
முதல் நாள் படப்பிடிப்புக்காக யூனிட் தயாராக இருக்கிறது.அப்போது ஒரு மாருதி வேன் வந்து நிற்கிறது .சைட் டோர் திறக்கிறது.
அவர் இறங்குகிறார்.
ஆச்சர்யத்தில் மக்கள் கூட்டம்.
இது வரை அவரை பார்த்ததில்லை.முன் பின் பார்த்திராத மக்கள்.அவரோ சிரித்த முகத்துடன் எல்லோரையும் பார்த்து கை கூப்புகிறார்.முகம் மலர சிரிக்கிறார்.
தொடர்ந்து ஷுட்டிங் நடைபெறுகிறது.
இடையிடையே ஷீட்டிங் இடைவெளியில் மக்களை சந்திக்கிறார்.பேசுகிறார்.ஏதோ நெடுநாள் பழக்கம் போலே அந்த மக்களுடன் பேகிறார். பழகுகிறார்.சந்திப்பவர்களை ,
'உங்கள் பெயர் என்ன ?என்ன தொழில் செய்கிறீர்கள் ?என்று கேட்பதுடன் குடும்ப உறுப்பினர்களையும் ,நலமாக விசாரிக்கிறார்.கூச்சத்துடன் வரும் மக்களுக்கு அவர் செய்கை பெரிய ஆச்சர்யத்தை கொடுக்கிறது. 
ஊரெல்லாம் பெரும் செய்தியாக பரவுகிறது.அடுத்தடுத்த நாட்களில் மக்கள் கூட்டம் அலை அலையாய்.
கிராமம் முழுவதும் அவர் பற்றித்தான் பேச்சு.
அவர்...
இளையதிலகம் பிரபு.

இந்த பதிவின் முக்கிய நிகழ்வு :
அந்த ஜமீன் ஊத்துக்குளி கிராமத்தில் சைக்கிள் கடை ஒன்று உள்ளது.வாடகை சைக்கிள் கடை அது.அதை அப்போது பார்த்துக் கொண்டவர் ஒரு அம்மா.பட யூனிட்டில் வேலை செய்யும் ஒரு நபர் கிடைக்கும் படப்பிடிப்பு இடைவேளையில் ஊரை சுற்றி பார்ப்பார்.மெயின் ரோட்டுக்கு வந்து வேண்டியதை வாங்க கடைக்கு செல்வார் .அதற்காக அவர் சீக்கிரம் சென்று வர சைக்கிள் வாடகைக்கு எடுக்க வந்தார்.அவரையோ முன் பின் தெரியாது.சைக்கிள் கடைக்கு வந்தவர் முன் அறை ,அதற்கடுத்த அறைக்குள் பார்த்தார்.ஆச்சர்யத்தால் வாய் பிளந்து பார்த்துக் கொண்டே நின்றார்? அப்படி என்ன? ஒரு போட்டோவா இல்லை இரண்டு போட்டோக்களா? ஏராளமான போட்டோக்கள். சுவர்களே காலி இல்லை என்னும் படி போட்டோக்கள் வரிசையாய் இருந்தன.
எல்லாமே நடிகர்திலகம் சிவாஜி போட்டோக்கள்.அம்மாவை பார்த்தார்.ஆர்வமாய் விசாரித்தார்.பேசினார்..பேச்சினூடே அவர் மகன்களான எங்களை பற்றியும் எங்கள் சிவாஜியின் பற்றுதலைப் பற்றியும் பேசினார் ..பேசினார்.
அவர் இளையதிலகத்தை சந்தித்தீர்களா? என்று கேட்டுவிட்டு ,இளையதிலகத்தை சந்திக்க தான் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.மேலும் அவர், ஷீட்டிங் இடைவெளியில் இளையதிலகத்திடம் எங்களை பற்றி கூறி, வியந்து பேசியுள்ளார்.நடிகர்திலகத்தின் இவ்வளவு போட்டோக்கள் நிறைந்த வீட்டை தமிழ்நாட்டில் தான் எங்கும் பார்த்ததில்லை என்றும் கூறியுள்ளார்.அவர்கள்  உங்களை சத்ததித்து பேச ஆர்வமாக உள்ளார்கள் எனக் கூற, இளையதிலகமும் சம்மதம் சொல்லியுள்ளார்.
அதன்படி அண்ணன் அடுத்த நாள் இளையதிலகத்தை நேரில் சந்தித்து பேசினார்.எவ்வளவு கனிவாக, அன்பாக அவர் பேசியது, நடந்து கொண்டது எல்லாம் இன்றுவரை பிரமிப்பாகவே இருக்கிறது.நாங்கள் ரசிகர்கள் என்பதற்காக அல்ல, இளையதிலகம் எல்லோரிடமுமே இப்படித்தான்.அவரின் அந்த குணத்திற்கு ஈடு சொல்லவே முடியாது.வேறு எந்த நடிகனுமே இல்லை.
அண்ணன் இளையதிலகத்துடன் பேசிக் கொண்டிருக்கும் போது, எதார்த்தமாக,வீட்டிற்கு வர வேண்டும் என்று சொல்ல, சற்றும் யோசிக்கவே இல்லை அவர்.கண்டிப்பாக ஷுட்டிங் இடைவேளையில் நாளை வருகிறேன் என்று கூறினார்.

சாதாரண ஒரு ஓட்டு வீடு.எங்கள் வீட்டிற்கு வருவாரா? என்று காலையில் இருந்தே காத்திருந்தோம்.இளையதிலகம் வருவதை வெளியில் யாருக்கும் சொல்லவில்லை.எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் தான்.சரியாக ஒரு மணியளவில் அந்தி மாருதி வேன் வந்து நிற்கிறது.அது மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும் போதே சைட்டோர் திறந்து சாதாரணமாக இறங்குகிறார் ராஜகுமாரன் பிரபு.அவரை அப்படியே அழைத்துச் செல்வதா? என் அக்காமார்கள் ஆரத்தி எடுத்து கரைத்து நடிகர்திலகத்தின் இளைய குமாரனை வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறோம்.
கதவு சாத்தப்பட்டது.சுவர்களை பார்த்தார்.ஆச்சர்யப்பட்டார்.பால் கலந்த ஹார்லிக்ஸ், இரண்டு பிஸ்கெட் தயக்கமில்லாமல் சாப்பிட்டார்.அம்மாவுடன் மிகவும் அன்பாக பேசினார்.பின் குடும்பத்தாரை அறிமுகம் செய்தோம்.நிதானமாக, கவனமாக கேட்டார்.அரை மணி நேரம் எங்கள் வீட்டில் இளையதிலகம்.பரபரப்பான ஷுட்டிங்கிலும்...கடைசியாக போட்டோ எடுத்துக் கொண்டோம்.அப்போது இளையதிலகத்தின் ஒரு செய்கை எங்களை வியக்க வைத்தது. தான் உட்கார்ந்திருந்த சேரில்  (Chair) இருந்து எழுந்து அம்மாவை அந்த சேரில் உட்கார வைத்து அவர் அம்மா பின்னால் நின்று கொண்டு ,குடும்ப உறுப்பினர்கள் சூழ புகைப் படங்களை எடுத்தோம்.
செல்கையில் எல்லோரிடமும் சென்று வருவதாக சொன்னார்.
நடிகர்திலகத்தின் ரசிகன் என்று எங்களை கர்வம் கொள்ள வைத்த நாள்.
32 வருடங்கள்.
மறக்கத்தான் முடியுமா அந்த நாளை...

படத்தின் பெயரை இதுவரை குறிப்பிடவில்லையே!
என் தங்கச்சி படிச்சவ ..
அதிலிருந்து இதுவரை ஐந்து முறை இளையதிலகம் ஒவ்வொரு ஷூட்டிங்கின் போதும்  எங்கள் வீட்டிற்கு வந்து எங்களை  கௌரவப்படுத்தினார்..
என் தங்கச்சி படிச்சவ, உத்தம ராசா, மறவன், சீதனம்..
ஐந்தாவது முறை அண்ணனின் கல்யாணத்திற்கு அழைப்பு விடுத்தோம்.சம்மதமும் தெரிவித்தார்.கடைசியில் அண்ணனின் கல்யாண நாளில் சென்னையில் இருக்க வேண்டும் என்று சொல்லி நான்கு நாட்களுக்கு முன்பே வீட்டிற்கு வந்து அண்ணனுக்கு பேன்ட் சட்டை, மணமளுக்கு பட்டுப் புடவை கொடுத்து வாழ்த்திச் சென்றார்.
இளையதிலகம் வந்த நேரம் தெரியுமா?
அதிகாலை ஐந்து மணி.
எல்லோரும்  உறங்கிக் கொண்டிருந்தோம்.கதவை தட்டி கறுப்பு பேன்ட் ,மஞ்சள் சட்டையில் பிரகாசமாய் தெரு விளக்கு வெளிச்சம் அவர் மேல் விழுந்து கொண்டிருக்க பளபளப்பாக இளையதிலகம் நின்று கொண்டிருப்பதை பார்த்தவுடன் என்ன செய்வது என்றே தெரியவில்லை! தூக்க கலக்கம் முகங்களில்! இளையதிலகத்தை பார்த்தோமோ! அசந்து விட்டோம்!
இளையதிலகமோ  சாதாரணமாக 
உள்ளே வந்து ஊல்லோரிடமும் சகஜமாக பேசி வாழ்த்திச் சென்றார்.
அந்த 'பொன்மனம் 'என்றென்றும் வாழ்க!
என்றும் எங்கள் நெஞ்சங்களில் அவர் நினைவுகள்!! 

சைக்கிள் வாடகைக்கு எடுக்க வந்த
ஷுட்டிங் தொழிலாளியால் எபப்படிப்பட்ட திருப்ப நிகழ்ச்சி அது!
என் தங்கச்சி படிச்சவ ..
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் மலை உச்சியில் இருந்து ஒரு ஜீப் டிரைவர் விழுவது போன்ற காட்சி வரும்.அதில் ஒரு ஜீப் டிரைவர் அவர் தான்...

இளையதிலகம் காலடி பட்ட பின்,என் தங்கச்சி படிச்சவ வெற்றி அடைந்ததும் 
ஜமீன் ஊத்துக்குளி மிகவும் பிரசித்த பெற்ற சூட்டிங் ஸ்பாட் ஆகி விட்டது.அதற்கு பின் கிட்டத்தட்ட 100 படங்களின் படப்பிடிப்பு நடை பெற்றது எங்களூரில்.
இளையதிலகத்தின் படங்களான உத்தமராசா,மறவன், சத்தியவாக்கு ராஜகுமாரன்,காவலுக்கு கெட்டிக்காரன், சீதனம் படங்களின் படப்பிடிப்பும் இங்கு நடைபெற்றது.

இன்னும் பல சந்தர்பங்கள்.
பல விஷயங்கள்.
அவை
நேரம் வரும் போது...

அன்புடன்
சிவாஜி வெற்றிவேல் 
செந்தில்வேல் சிவராஜ்
ஜமீன் ஊத்துக்குளி
பொள்ளாச்சி ..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற