சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜி -எதச் சொல்ல எத விட....

உச்சி பூரா
உள்ளம் பூரா
குளிச்சியா இருக்குதய்யா
உன் நடிப்ப பாக்கையிலே
வெச்ச பார்வைய 
வெலக்கிடத்தான் தோணலய்யா
உன் முகத்த பாக்கையிலே!
நீ 
பேசினாக்க
நடந்தாக்க
அத பாத்தாக்க
நெஞ்சுக்குள்ளே
ரத்தமா பாயுதய்யா 
உன்ன பத்தி பேசத்தா
உதடெல்லாம் துடிக்குதய்யா

கொஞ்சமா செஞ்சீரு
நீரெல்லாம்
கொள்ளாம கொள்ளாம
நெஞ்செல்லாம் திணறுதய்யா
உன்னை மட்டுந்தா பாக்க வெச்சே
அத கொள்கையா மாத்த வெச்சே!
கற்பூரமா பத்திக்குது
கண்ணெல்லாம் சொக்குது
காலமெல்லாம் கூட வந்து
கவலையெல்லாம் மறக்க வெச்சே
எத பேச
எப்படிப் பேச
எடுத்துச் சொன்னா
அம்புட்டு எழுத்தும் பத்தாதே!

ரெண்டாயிரம் வருச சோழன
ரெண்டு மணியிலே மறக்க வெச்சயே
நூறு பேரு பாரதத்துல 
ஒத்தையாளு கர்ணனைத்தா
மனசுல நிக்க வெச்சேயே
பாஞ்சால சிங்கத்த பாருங்கன்னு
பாருக்கெல்லம் புரிய வெச்சயே 
சிவனே என் சிவனேன்னு
கையெடுத்து கும்பிட்டாக்க
உன் முகத்தை நிலைக்க வெச்சயே 
நீ வந்து என்பது வருஷமாச்சு
எல்லாமே உன்னாலே மாறிப் போச்சு 

ஓயாம உழச்சு ஓடா தேஞ்சேம்பாங்க
ஆனா
ஓயாம உழச்சு மலையா 
வளந்தவனே
மலையா வளந்தாலும்-அத
பெரிசா நெனக்கலியே 
அந்த குணத்துலே 
உன்ன மீற யாருமில்லையே

சித்தனா ஒரு பித்தனா
முரடனா ஒரு திருடனா
அறிவாளியா ஒரு கோமாளியா
கோபமா ஒரு சாந்தமா
கள்ளத்தனமா ஒரு பிள்ளைதனமா 
சோகமா ஒரு சந்தோஷமா 
எத்தனையோ வேஷங்க இப்படி
நீங்க செஞ்சதெல்லாம் அத்துபடி

மொத்தமா சொல்லணும்னா நீங்க
சொன்னதெல்லாம் பாடம்
அதத்தா நாங்க பாக்குறோம் தினம் தினம்
எத்தன பேரு வந்தாலுஞ் சரி
எத்தன பேரு நடிச்சாலுஞ் சரி
அத்தனையும் தேறாது
உங்களுக்கு முன்னாடி..


செந்தில்வேல் சிவராஜ்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற