1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜி -எதச் சொல்ல எத விட....

உச்சி பூரா
உள்ளம் பூரா
குளிச்சியா இருக்குதய்யா
உன் நடிப்ப பாக்கையிலே
வெச்ச பார்வைய 
வெலக்கிடத்தான் தோணலய்யா
உன் முகத்த பாக்கையிலே!
நீ 
பேசினாக்க
நடந்தாக்க
அத பாத்தாக்க
நெஞ்சுக்குள்ளே
ரத்தமா பாயுதய்யா 
உன்ன பத்தி பேசத்தா
உதடெல்லாம் துடிக்குதய்யா

கொஞ்சமா செஞ்சீரு
நீரெல்லாம்
கொள்ளாம கொள்ளாம
நெஞ்செல்லாம் திணறுதய்யா
உன்னை மட்டுந்தா பாக்க வெச்சே
அத கொள்கையா மாத்த வெச்சே!
கற்பூரமா பத்திக்குது
கண்ணெல்லாம் சொக்குது
காலமெல்லாம் கூட வந்து
கவலையெல்லாம் மறக்க வெச்சே
எத பேச
எப்படிப் பேச
எடுத்துச் சொன்னா
அம்புட்டு எழுத்தும் பத்தாதே!

ரெண்டாயிரம் வருச சோழன
ரெண்டு மணியிலே மறக்க வெச்சயே
நூறு பேரு பாரதத்துல 
ஒத்தையாளு கர்ணனைத்தா
மனசுல நிக்க வெச்சேயே
பாஞ்சால சிங்கத்த பாருங்கன்னு
பாருக்கெல்லம் புரிய வெச்சயே 
சிவனே என் சிவனேன்னு
கையெடுத்து கும்பிட்டாக்க
உன் முகத்தை நிலைக்க வெச்சயே 
நீ வந்து என்பது வருஷமாச்சு
எல்லாமே உன்னாலே மாறிப் போச்சு 

ஓயாம உழச்சு ஓடா தேஞ்சேம்பாங்க
ஆனா
ஓயாம உழச்சு மலையா 
வளந்தவனே
மலையா வளந்தாலும்-அத
பெரிசா நெனக்கலியே 
அந்த குணத்துலே 
உன்ன மீற யாருமில்லையே

சித்தனா ஒரு பித்தனா
முரடனா ஒரு திருடனா
அறிவாளியா ஒரு கோமாளியா
கோபமா ஒரு சாந்தமா
கள்ளத்தனமா ஒரு பிள்ளைதனமா 
சோகமா ஒரு சந்தோஷமா 
எத்தனையோ வேஷங்க இப்படி
நீங்க செஞ்சதெல்லாம் அத்துபடி

மொத்தமா சொல்லணும்னா நீங்க
சொன்னதெல்லாம் பாடம்
அதத்தா நாங்க பாக்குறோம் தினம் தினம்
எத்தன பேரு வந்தாலுஞ் சரி
எத்தன பேரு நடிச்சாலுஞ் சரி
அத்தனையும் தேறாது
உங்களுக்கு முன்னாடி..


செந்தில்வேல் சிவராஜ்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்