திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

சிவாஜி -எதச் சொல்ல எத விட....

உச்சி பூரா
உள்ளம் பூரா
குளிச்சியா இருக்குதய்யா
உன் நடிப்ப பாக்கையிலே
வெச்ச பார்வைய 
வெலக்கிடத்தான் தோணலய்யா
உன் முகத்த பாக்கையிலே!
நீ 
பேசினாக்க
நடந்தாக்க
அத பாத்தாக்க
நெஞ்சுக்குள்ளே
ரத்தமா பாயுதய்யா 
உன்ன பத்தி பேசத்தா
உதடெல்லாம் துடிக்குதய்யா

கொஞ்சமா செஞ்சீரு
நீரெல்லாம்
கொள்ளாம கொள்ளாம
நெஞ்செல்லாம் திணறுதய்யா
உன்னை மட்டுந்தா பாக்க வெச்சே
அத கொள்கையா மாத்த வெச்சே!
கற்பூரமா பத்திக்குது
கண்ணெல்லாம் சொக்குது
காலமெல்லாம் கூட வந்து
கவலையெல்லாம் மறக்க வெச்சே
எத பேச
எப்படிப் பேச
எடுத்துச் சொன்னா
அம்புட்டு எழுத்தும் பத்தாதே!

ரெண்டாயிரம் வருச சோழன
ரெண்டு மணியிலே மறக்க வெச்சயே
நூறு பேரு பாரதத்துல 
ஒத்தையாளு கர்ணனைத்தா
மனசுல நிக்க வெச்சேயே
பாஞ்சால சிங்கத்த பாருங்கன்னு
பாருக்கெல்லம் புரிய வெச்சயே 
சிவனே என் சிவனேன்னு
கையெடுத்து கும்பிட்டாக்க
உன் முகத்தை நிலைக்க வெச்சயே 
நீ வந்து என்பது வருஷமாச்சு
எல்லாமே உன்னாலே மாறிப் போச்சு 

ஓயாம உழச்சு ஓடா தேஞ்சேம்பாங்க
ஆனா
ஓயாம உழச்சு மலையா 
வளந்தவனே
மலையா வளந்தாலும்-அத
பெரிசா நெனக்கலியே 
அந்த குணத்துலே 
உன்ன மீற யாருமில்லையே

சித்தனா ஒரு பித்தனா
முரடனா ஒரு திருடனா
அறிவாளியா ஒரு கோமாளியா
கோபமா ஒரு சாந்தமா
கள்ளத்தனமா ஒரு பிள்ளைதனமா 
சோகமா ஒரு சந்தோஷமா 
எத்தனையோ வேஷங்க இப்படி
நீங்க செஞ்சதெல்லாம் அத்துபடி

மொத்தமா சொல்லணும்னா நீங்க
சொன்னதெல்லாம் பாடம்
அதத்தா நாங்க பாக்குறோம் தினம் தினம்
எத்தன பேரு வந்தாலுஞ் சரி
எத்தன பேரு நடிச்சாலுஞ் சரி
அத்தனையும் தேறாது
உங்களுக்கு முன்னாடி..


செந்தில்வேல் சிவராஜ்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற