1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜியோடு நடித்து பெயர் வாங்கிய குழந்தை நட்சத்திரங்கள்

குழந்தைகளோடு நடிப்பதென்றால் நடிகர்திலகம் சிவாஜி கணேசனுக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கும்.மிகப் பெரும்பான்மையான குழந்தை நட்சத்திரங்கள் சிவாஜியோடு இணைந்து நடித்திருக்கிறார்கள்.
மாஸ்டர் ஸ்ரீதர் குட்டி பத்மினி கமலஹாசன் பேபிஇந்திரா ஸ்ரீதேவி பப்லு நடிகை மீனா நடிகை ஷாலினி பேபி வினோதினி என்று இன்னும் ஏராளமான குழந்தை நட்சத்திரங்கள் சிவாஜியோடு நடித்திருக்கிறார்கள் .
குழந்தை பட்டாளங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிகர் திலகம் நடித்த படங்கள் என்றால் குழந்தைகள் கண்ட குடியரசு எங்க மாமா படங்களை சொல்லலாம் ..
அதிலும் குழந்தைகள் கண்ட குடியரசு படத்தில் சிறுவர் சிறுமிகளே  கதாநாயக வேடங்களில் நடித்திருப்பார்கள். குழந்தைகள் கண்ட குடியரசு படத்தில் நடிகர்திலகத்துக்கு கௌரவ வேடம் தான் .
விஞ்ஞானியாக நடித்திருப்பார் .
இது குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட திரைப்படமும் கூட.
நான் பெற்ற செல்வம் நலமான செல்வம் பாடல் 
பாபு படத்தில் இடம் பெற்ற  இதோ எந்தன் தெய்வம் முன்னாலே பாடல் 
என் தம்பி படத்தில் இடம்பெற்ற முத்து நகையே  உன்னை நான் அறிவேன் 
உத்தமன் படத்தில் இடம்பெற்ற கேளாய் மகனே கேள் ஒரு வார்த்தை
எங்க மாமா படத்திலிருந்து செல்லக் கிளிகளாம் பள்ளியிலே என்ற பாடல்
பார்த்தால் பசி தீரும் படத்தில் இடம்பெற்ற பிள்ளைக்கு தந்தை ஒருவன் பாடல்
தங்கை படத்தில் இடம்பெற்ற தண்ணீரிலே தாமரைப்பூ என்ற பாடல், 
அவன்தான் மனிதன் படத்தில் இடம்பெற்ற ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரோ என்ற பாடல் ,
தங்கப்பதக்கம் படத்தில் இடம்பெற்ற ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் பாடல்
மன்னவன் வந்தானடி படத்தில் இடம்பெற்ற சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்
 கவரிமான் படத்தில் இடம்பெற்ற பூ போலே உன் புன்னகையில் என்ற பாடல் ,
இமயம் படத்தில் இடம்பெற்ற கண்ணிலே குடியிருந்து கருணை தரும் தெய்வம் ஒன்று என்ற பாடல்,
நான் வாழவைப்பேன்  படத்தில் இடம்பெற்ற எந்தன் பொன்வண்ணமே என்ற பாடல், 
ரத்த பாசம் படத்தில்  இடம்பெற்ற மான் குட்டி இப்போது என் கையிலே என்ற பாடல், கல்தூண் படத்தில்  இடம்பெற்ற சிங்கார சிட்டுத்தான் என்ட  புள்ள என்ற பாடல்,
வா கண்ணா வா படத்தில் இடம்பெற்ற எங்கள் வீட்டில் எந்த நாளும் கண்ணன் பாட்டு தான் என்ற பாடல், 
கருடா சௌக்கியமா படத்தில் இடம்பெற்ற கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாடல்,
பந்தம் படத்தில் இடம்பெற்ற பேபி பேபி ஓ மை பேபி என்ற பாடல்,
படிக்காதவன் படத்தில் இடம்பெற்ற ஒரு கூட்டு கிளியாக என்ற பாடல்,
மண்ணுக்குள் வைரம் படத்தில் இடம்பெற்ற ஜாதி மல்லிகையே நெஞ்சுல சாஞ்சு என்ற பாடல் ,

என்று இப்படி ஒரு நீண்ட ஒரு வரிசையில் குழந்தைகளுக்கு சிவாஜிகணேசன்  பாடிய பாடல்கள் ஏராளம் இருக்கின்றன.

கர்ணன் படத்தில் மாஸ்டர் ஸ்ரீதர் நடித்திருப்பார்.நடிகர்திலகத்தோடு அவர் நடித்திருப்பதை மிகவும் சிலாகித்து பேசுவார்.கர்ணன் படத்தில் மாஸ்டர் ஸ்ரீதரிடம் சிவாஜி பேசும் காட்சிகள் மிக மிக ரசிப்புத்தன்மையுடன் இருக்கும்.ஒரு அரசுக்கே  புத்தி கூறும் அறிவடா உனக்கு என்று மாஸ்டர் ஸ்ரீதரிடம் சிவாஜி பேசிய வசனம் நெஞ்சை விட்டு அகலாது.

பாபு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீதேவி சிவாஜி வரும் காட்சிகள் எல்லாம் மனதை தொடும் காட்சிகள்.
 பிச்சையெடுக்கும் ஸ்ரீதேவியை பார்த்து சிவாஜி பேசும் காட்சிகள் உணர்ச்சிகரமாக இருக்கும்.

எங்கமாமா பட கதைக்களமானது முழுக்க முழுக்க குழந்தைகள் சம்பந்தப்பட்டது.அநாதை குழந்தைகள் இல்லம் நடத்தி வரும் கேரக்டரில் சிவாஜி நடித்திருப்பார்.ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தேச தலைவர்களின் பெயர்களை சூட்டியிருப்பார் சிவாஜி.அதிலும் கூட தேசபக்தியை நினைவூட்டுவார்.

பிற்காலத்தில் பந்தம் படமும் 
வா கண்ணா வா படமும் மிக முக்கியமான படங்கள்.
பந்தம் படத்தில் கண்டிப்பான ரிடையர்டு ஆன கர்னல் வேடத்தில் சிவாஜி நடித்திருப்பார் .பேபி ஷாலினியுடன் சிவாஜி நடித்த காட்சிகள் எல்லாம் மக்களால் என்றும் மிகவும் ரசிக்கப்படுபவையாக இருக்கின்றன.

அதேபோல வா கண்ணா வா படமும். நடிகர் திலகத்தின் படு வித்தியாசமான நடிப்பில் அமைந்த  படம் வா கண்ணா வா. கலகலப்பான குடும்ப பாச சித்திரமான இந்த படம் கடைசியில் சோகத்தில் முடிவது உணர்வுகளை உருக்குவதாக இருக்கும்.


இமயம் உத்தமன் படங்களில் நடிகர்திலகத்துடன் ஒரு முக்கிய கேரக்டராக சிறுவன் கதாபாத்திரம் இருக்கும்.

சிவாஜி படங்களில் தான் அதிகமான குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். 

சிவாஜியை எல்லோரும் சிங்கமாகத்தான் பார்க்கிறார்கள்.
ஆனால் பழகிய பின்பு அவரை குணத்தில் ஓர் குழந்தையென்றே வர்ணிக்கிறார்கள்.
குழந்தைகளிடம் மிகவும் அன்பாக பழகுபவர் சிவாஜி.அது படங்களில் மட்டுமல்ல நிஜத்திலும் அப்படித்தான்.

செந்தில்வேல் சிவராஜ் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்