சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

எளிமையும் கம்பீரமும் -நடிகர்திலகம்

சிவாஜி! 
மிக எளிமையான 
மனிதர் தான்
உருவத்திலும் பேச்சிலும்
ஆனால் 
கேமராவை வைத்தால்
அவர்  பிரம்மராட்சஷன்-ஆனால்
யாரையும் விழுங்காத ராட்சஷன்

ஒரு நடிகன் நன்றாக நடித்தால்
இவன் நன்றாக நடிக்கின்றானே 
என்பார் பொதுஜனம்
எவனையும் நன்றாக 'நடக்கிறான் '
என்றதில்லை அதே ஜனம்
என்ன காரணம்  என்போரே
சிவாஜியின் நடையை பாருங்கள்

அள்ளி அள்ளி கொடுத்தாரா அத்தாட்சி எங்கே?
வாரி வாரி கொடுத்தாரா 
பத்திரத்தை காட்டுங்கள்? 
அறியா மக்கள்
கேட்கும்  கேள்விகள் இவை! 
என் செய்வது! 
அப்படித்தானே  பழக்கப்பட்டுள்ளீர்கள்!
கொடை என்றால் என்ன?
கொடுப்பவன் சொல்லாதது
வாங்கியவனை சொல்ல விடாதது
எல்லோருக்கும் தெரிய 
சிவாஜி செய்தது விளம்பரக் கொடையல்ல 
விளம்பாத கொடை

படத்துக்கு படம் உடைகளை
மாற்றுவான் நடிகன்
சிவாஜியோ உடலையே  
மாற்றும் நடிகன்

இவ்வளவு செய்தாயிற்று
இன்னும் என்ன 
ஓய்வுக்கும் ஓய்வு கொடுக்கலாமே?
இப்படி கேட்டதுண்டு பலபேர்..
அய்யன் சொன்ன பதிலில்(பரா)சக்தியுண்டு
'உடல் சவமாகும்வரை
சிவமாக இயங்குவேன்'

நீ செத்து பிழைத்தவனில்லை
செத்தும் பிழைப்பை கொடுத்தவன் நீ

நேரத்துக்கே நேர்மையை காட்டியவன் நீ
ஆதலால் தான்,
நேரத்தை உதாரணமாக சொல்ல
சிவாஜி என்கிறார்கள்

'பதவி மூன்றெழுத்து
மோகம்' மூன்றெழுத்து
இல்லை ' மூன்றெழுத்து 
சிவாஜி மூன்றெழுத்து
சிவாஜிக்கு பதவி மோகம் இல்லை

பகவத் கீதை உன் மனவாழ்வு
மகாபாரதம் உன் புற வாழ்வு
பாரதம் போல் போர்கள் நிரம்பியதுதான் 
உன் வாழ்க்கை-அதை
கீதை நிரம்பிய மனத்தால்
செம்மையாக்கி கொண்டவன் நீ! 

நண்பர்களே அதிகம் துரோகிகளாக மாறியது 
உன் வரலாற்றில் தான்!
எப்படி உன்னால் மறக்க முடிந்தது?
மன்னிக்க முடிந்தது?
காலமானாலும் கடவுள் கூட தண்டிப்பானே!
உன்னை என்ன சொல்வது?

நடிப்புக்கு இலக்கணம் இல்லையாமே?
அது தெரியாது?
ஆனால் சிவாஜி நடிப்புத்தான்
இலக்கணம் ஆகி விட்டது
அது தெரியும்!

தமிழுக்கில்லை  பஞ்சம்தான்
வாரி வாரி கொடுக்கிறதே வார்த்தைகளை! 
ஆனால்
உன்னை எழுதும் போதுதான் உணர்கின்றேன்
அதற்கும் கூட சிறிது பஞ்சமென்று!

செந்தில்வேல் சிவராஜ் .....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற