1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

எளிமையும் கம்பீரமும் -நடிகர்திலகம்

சிவாஜி! 
மிக எளிமையான 
மனிதர் தான்
உருவத்திலும் பேச்சிலும்
ஆனால் 
கேமராவை வைத்தால்
அவர்  பிரம்மராட்சஷன்-ஆனால்
யாரையும் விழுங்காத ராட்சஷன்

ஒரு நடிகன் நன்றாக நடித்தால்
இவன் நன்றாக நடிக்கின்றானே 
என்பார் பொதுஜனம்
எவனையும் நன்றாக 'நடக்கிறான் '
என்றதில்லை அதே ஜனம்
என்ன காரணம்  என்போரே
சிவாஜியின் நடையை பாருங்கள்

அள்ளி அள்ளி கொடுத்தாரா அத்தாட்சி எங்கே?
வாரி வாரி கொடுத்தாரா 
பத்திரத்தை காட்டுங்கள்? 
அறியா மக்கள்
கேட்கும்  கேள்விகள் இவை! 
என் செய்வது! 
அப்படித்தானே  பழக்கப்பட்டுள்ளீர்கள்!
கொடை என்றால் என்ன?
கொடுப்பவன் சொல்லாதது
வாங்கியவனை சொல்ல விடாதது
எல்லோருக்கும் தெரிய 
சிவாஜி செய்தது விளம்பரக் கொடையல்ல 
விளம்பாத கொடை

படத்துக்கு படம் உடைகளை
மாற்றுவான் நடிகன்
சிவாஜியோ உடலையே  
மாற்றும் நடிகன்

இவ்வளவு செய்தாயிற்று
இன்னும் என்ன 
ஓய்வுக்கும் ஓய்வு கொடுக்கலாமே?
இப்படி கேட்டதுண்டு பலபேர்..
அய்யன் சொன்ன பதிலில்(பரா)சக்தியுண்டு
'உடல் சவமாகும்வரை
சிவமாக இயங்குவேன்'

நீ செத்து பிழைத்தவனில்லை
செத்தும் பிழைப்பை கொடுத்தவன் நீ

நேரத்துக்கே நேர்மையை காட்டியவன் நீ
ஆதலால் தான்,
நேரத்தை உதாரணமாக சொல்ல
சிவாஜி என்கிறார்கள்

'பதவி மூன்றெழுத்து
மோகம்' மூன்றெழுத்து
இல்லை ' மூன்றெழுத்து 
சிவாஜி மூன்றெழுத்து
சிவாஜிக்கு பதவி மோகம் இல்லை

பகவத் கீதை உன் மனவாழ்வு
மகாபாரதம் உன் புற வாழ்வு
பாரதம் போல் போர்கள் நிரம்பியதுதான் 
உன் வாழ்க்கை-அதை
கீதை நிரம்பிய மனத்தால்
செம்மையாக்கி கொண்டவன் நீ! 

நண்பர்களே அதிகம் துரோகிகளாக மாறியது 
உன் வரலாற்றில் தான்!
எப்படி உன்னால் மறக்க முடிந்தது?
மன்னிக்க முடிந்தது?
காலமானாலும் கடவுள் கூட தண்டிப்பானே!
உன்னை என்ன சொல்வது?

நடிப்புக்கு இலக்கணம் இல்லையாமே?
அது தெரியாது?
ஆனால் சிவாஜி நடிப்புத்தான்
இலக்கணம் ஆகி விட்டது
அது தெரியும்!

தமிழுக்கில்லை  பஞ்சம்தான்
வாரி வாரி கொடுக்கிறதே வார்த்தைகளை! 
ஆனால்
உன்னை எழுதும் போதுதான் உணர்கின்றேன்
அதற்கும் கூட சிறிது பஞ்சமென்று!

செந்தில்வேல் சிவராஜ் .....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்