1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

பஞ்ச் டயலாக்ஸ்

தமிழ் சினிமாவின் கதைகளையும் வசனங்களையும் நன்றாக எழுகிறார்களோ  இல்லையோ,பஞ்ச் டயலாக் எழுதுகிறேன் பேர்வழி என்று மொக்கை மொக்கையாக எழுதித் தள்ளுகின்றனர் ..
அந்த பஞ்ச் டயலாக் செலவழித்த நேரத்தில் கதைகளுக்கும் வசனங்களுக்கும்  முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் ..
ஒரு வரி வசனம் எழுதினாலும் அது உருப்படியாக எழுத வேண்டும். வசனங்கள் என்று வந்துவிட்டாலே அது நடிகர் திலகத்தின் படங்களை தவிர வேறு எதை கூற முடியும் ? வசனம் அதற்கேற்ற நடிப்பு என்றால் நடிகர் திலகத்தின் ஞாபகம் தான் வரும் ..வசனமே இல்லாமல் கூட நடிப்பார் நடிகர் திலகம் ..ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கும் நடிகர் திலகத்தின் ஒருவரி வசனங்களை
நாம் பார்க்கலாம்  .

தமிழ்நாட்டின் முதல் குரலே நன்றாக இருக்கிறதே -இது பராசக்தி

என் வாழ் களத்திலேதான் விளையாடும் கனிகளை காயப்படுத்தாது-இது மனோகரா 

வேங்கை பதுங்கி போனாலும் விருந்தை கண்டால் சீர் கொண்டு கொண்டு எழும்-வீரபாண்டிய கட்டபொம்மன் 

அது என் குற்றமல்ல உன்னையும் என்னையும் படைத்தவனின் குற்றம் இது- உத்தமபுத்திரன் 

ஏன்  எப்படியும் சொல்லலாமே !இருண்ட வீட்டுக்கு ஒரு விளக்கு என்று -சாக்கரடீஸ் ஆக ,ராஜா ராணியில் ..

ஆனந்தா  !நான் என் கண்ணையே உன்கிட்ட நான் ஒப்படைக்கிறேன்.
அதில் எப்பவும் ஆனந்த கண்ணீரைத்தான்  நான் பாக்கணும் . -இது பாசமலர்..

சொற்சுவை  பொருட்சுவை அனைத்தும் கூட்டி சுந்தரத் தமிழில்  கவிபாடும் புலவன் நான்-திருவிளையாடல் 

எல்லோரையும் என்  பக்கம் திருப்பித்தான் பழக்கம்- இது தங்கப்பதக்கம் .

குழந்தே  குழந்தைன்னு கோகுலாஷ்டமி கொண்டாடினாலும் கம்சனுக்கு என்னமோ கிருஷ்ணன்  கர்ப்ப விரோதி தானடி - இது கௌரவம் பாரிஸ்டர் ரஜினிகாந்த்.

காக்கைக்குகூட  தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு சொல்லுவாங்களே அந்த காக்கையா நான் பிறந்திருக்க கூடாதா - இது தெய்வமகன்

கரையான் புற்றென்ன  கருநாகங்களுக்கு சொந்தமா? இது சத்ரபதி சிவாஜி  ராமன் எத்தனை ராமனடி .

உலகத்திற்கே நாகரிகத்தை கத்துக் கொடுத்த நாட்டில் பிறந்த மறத்தமிழன் பரம்பரையில பொறந்தவன்டி - இது மூக்கையா பட்டிக்காடா பட்டணமா

இதத்தான் அவங்க பாசங்கறாங்க!
அத நீ மோசம்கறயா -இது வசந்த மாளிகை ஆனந்த்.

எச்ச இல மேல பறந்தாலும் எச்ச இலை  தான். கோபுரம் கீழ சாஞ்சாலும்  கோபுரம் தான்.

என் வாழ்க்கை குட்டையில் ஓடிக்கொண்டிருக்கும் கழிவுநீர் அல்ல ..சுத்தமான மழைநீர் ..- இது டாக்டர் சிவா 

இவையெல்லாம் சாம்பிள்கள் தான். ஒவ்வொரு படத்திலும் ஏராளமான வசனங்கள் இதுபோல் உள்ளன. கடைசி காலத்தில் வெளிவந்த தேவர் மகனில் கூட, நடிகர் திலகத்திற்கு எழுதபட்ட வசனமான "வெத நாம் போட்டது இதெல்லாம் என்ன பெருமையா "
என்ற வசனம் தான் மீம்ஸ் உலகிலும் டாப்பாக உள்ளது ...

நன்றி!
செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்