சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜியின் நடிப்பு என்னும் ஆயுதம்

நடிப்பாயுதம்....

கண்ணில் நீர் பெருக 
 நடிகர்திலகம் திரையில் நிற்கும் நிலை பார்த்து  பெண்டிர் விட்ட கண்ணீர்த்துளிகளே கலையுலகில் அதிகமிருக்கும்.

எல்லோரும் போகும் வழி
 நடிகர்திலகம் போனபின் அது யாரும் போக முடியாத தனிப்பாதை சிறப்பை அடைந்து விடும்

தண்ணீர் தனல் போல் எரியும்
செந்தனலும் நீர் போல் குளிரும் ..
என்பது எப்படியோ  அதுபோல் சிங்கம் போல் கர்ஜிக்கும் குரலை மறு நிமிடமே சிறுமான் போல் பேசும் பாவனைக்கு தொனியை மாற்றும் திறமையை கொண்டிருப்பவர் நடிகர்திலகம்.

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா 
நடிப்பெல்லாம் நடிகர்திலகம் நடிக்கும் நடிப்பை போலாகுமா?

சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்ததும் ,
அதன்பின் கலைகள் தோன்றியதும், 
அதன்பின் தொடர்ச்சியாய் நடிப்புக்கலை தோன்றியதும் ,
அதன்பின் சிவாஜி நடிக்க தொடங்கியதும், அதன்பின் நடிப்பென்றால்  நடிகர்திலகமே என்று தொடர்வுகள் முற்றுப் பெற்று  முடிந்து போனது.

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எல்லாப் படைப்புக்கும் மூலம் உண்டென்றால்,
எதனை கண்டார் நடிகர்திலகம்?
நடிப்பதில் புதுமையை படைத்தார்?

காவலுக்கு வேலுண்டு 
ஆடலுக்கு மயிலுண்டு
நடிப்புக்கு பொருளென்னடா - சண்முகத்தண்ணனே 
நீயிருக்கும் இடம் தானய்யா!

பாளை போல் சிரிப்பிருக்கு.. 
பக்குவமா குணமிருக்கு..
ஆணழகும் சேர்ந்திருக்கு
எங்கேய்யா?
அதை சூரக்கோட்டை 
சொல்லுமய்யா
கதை கதைய்யா ..

கவியுரைத்த கற்பனை போல்
கைபிடித்த பூங்கொடியாள்
கமலம்மை துணையினிலே
காலம் போற்ற வாழ்ந்தவரே!

மழை கொடுக்கும் கொடையுமொரு
இரண்டு மாதம்...
வயல் கொடுக்கும் கொடையுமொரு
மூன்று மாதம்...
பசு வழங்கும் கொடையுமொரு
நான்கு மாதம்...
நடிக வள்ளல் நடிகர்திலகத்தின்
நடிப்புக்கோ ஏது காலம்! 

மாலையில் தென்றல் வரும் வாசலைக் கூட்டி விடும்..
மல்லிகை பூக்கள் விடும் வாசனைக் கோலம் இடும்...
நடிப்பினை அள்ளித்தரும்
நல்லுணர்வை  பரப்பிவிடும்
நடிகர்திலகம் நடிப்பினிலே
நானிலம் மெய்மறக்கும்
இவர் போலே யாருமில்லை
இணை சொல்ல எவருமில்லை
இவர் வேர்வைகளால்
இவர் சேவைகளால்
கலையுலகம் பொன்னாக மின்னியதே!

அபாய அறிவிப்பு!
அய்யா!
அபாய அறிவிப்பு!
சிவாஜி நடித்த கதையென்றால்
நடிகருக்கெல்லாம்
நடிப்பதென்பது அபாய அறிவிப்பு!

நெஞ்சில் போராட்டமா 
கண்ணில் நீரோட்டமா 
அதை நீ காட்டினால்
மயங்காத மனிதரெல்லாம்
மண்ணில் இல்லையே!

கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாரதத்திலே 
கடமை சொல்ல ராமன் வந்தான் காவியத்திலே
நடிப்பை சொல்ல கணேசன் வந்தார்
கலையுலகிலே 
என்னசொல்ல அவரை மிஞ்ச ஆளுமில்லை  இந்த மண்ணிலே! 

சிங்கத்தமிழனடா!
எங்கள் தலைவனடா!!
சிவாஜி என்னும் பெயரைக் கொண்ட 
நடிகர்திலகமடா!

நன்றி 
செந்தில்வேல் சிவராஜ்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற