1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

கடைசி வரை மாறாத சிவாஜி ரசிகர்கள்

1956ல் புயல் நிவாரணத்திற்காக பலர் நிதி வசூல் செய்து கொடுத்தனர்.  அதிக  வசூல் செய்தவர் சிவாஜிதான். அதிகமாக வசூலித்துக் கொடுத்தவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. சிவாஜி 
அழைக்கப்படவில்லை. எம்.ஜி.ஆரை மேடையில் கௌரவித்தனர். அண்ணாதுரை அவர்கள் சிவாஜியை பற்றி கேட்கும் போது " கணேசனால் வர முடியவில்லை" என்று கூறியிருக்கிறார்கள்.
வஞ்சகர்களுக்கு சிவாஜியின் பதில்....

வெறும் அமைதிதான்..

பீம்சிங் வருகிறார்.சிவாஜியின் மன கிலேசம் தீர திருப்பதி அழைத்தார்.
சிவாஜி போனார்.
திருப்பதி சாமியை  பார்த்தார்.
சாந்தி அடைந்தார்.
திருப்பதியை பார்த்தால் பசி தீரும்.

கணேசா! உனக்கொரு நல்ல தலைவன் தேவை! இங்கேயும் ஒரு காந்தி இருக்கின்றார்.அதோ கர்மவீரர் காமராஜர்.
நீ ஒரு உத்தம தொண்டன்
காமராஜ் ஒரு உத்தம தலைவன்

காமராஜர் ஏற்றார் உன் சேவையை.
கலைச்சேவை ஒரு புறம்
காங்கிரஸ் வளர்ப்பு ஒரு புறம்
காங்கிரஸிலும் புல்லுருவிகள்.
அங்கேயும் தடைகள் தானே உன் பணிக்கு..

பெருந்தலைவரின் பின்னால் சிவாஜியின் பயணம்.எங்கேயெல்லாம் வாய்ப்பு கிடைத்ததோ அங்கேயெல்லாம் கர்மவீரருக்காக கட்சியை வளர்த்தாய்.கடமையை செய்தாய் ..பலனுக்காக அல்ல..

1975 அக்டோபர் 2.
அணைந்தது தீபம்.
எளிய மனிதர் காமராஜ் இல்லாது போனார்.
உன்னை நோகடித்ததும்
தமிழகத்தை சாகடித்ததும்
அந்த மரணம்..

அந்த சூழ்நிலை விபரீதமானது.சிவாஜி எந்த முடிவெடுத்தாலும் தவறாகத்தான் இருக்கும் மற்றவர்களுக்கு.
யாருடைய தயவும் தேவையில்லை சிவாஜிக்கு.சிவாஜியின் ஆதரவு இருந்தால் மற்றவர்களுக்கு உதவும் என்ற நிலையில் தான் ஆதரவு கரம் நீட்டினார் அன்னை இந்திரா காந்தி.

இந்திரா காங்கிரஸில் இணைந்து சிவாஜி அந்த கட்சியையும் வளர்த்தார்.சிவாஜி இருந்தால் தங்களால் வளர முடியாது என்று இருந்தவர்கள் ஏராளம்.சிரித்துக் கொண்டே கழுத்தறுக்க நிறைய பேர் அங்கேயும்..

இப்படித்தான் 1988 வரை எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு கட்சிக்காக உழைத்தார்.மாற்றுமுகாம் கட்சித்தலைவர் கூட சிவாஜியைத்தான் நம்பினார்.அவர் மறைந்தார் .அந்த கட்சிக்கு ஆதரவளித்து வந்த காங்கிரஸ் கையை விரித்து விட்டது.அந்த நம்பிக்கை துரோகத்தை சிவாஜியார்  ஏற்றுக் கொள்ள முடியாததால் கட்சியை விட்டு விலகினார்.

சிவாஜியையே  நம்பி இருந்த பிள்ளைகளுக்காக புதுக்கட்சி தொடங்கினார்.சுயநலம் பாராது ஆரம்பிக்கப்பட்ட கட்சி தமிழக முன்னேற்ற முண்ணனி.நம்பியவர்களை ஏமாற்றாத ஏணியாய் தன் சிவாஜி இருந்தார்.

சிவாஜிதான் சுயநலத்துக்காக கட்சி ஆரம்பிக்கவில்லையே.பொது நலத்தை மக்களே யோசிப்பதில்லையே இங்கே! 
அதனால் தமுமு தோல்வி அடைந்தது.

பின் விபி சிங் என்னும் நல்ல தலைவன் அழைத்ததால் ஜனதாதளத்தில் சிவாஜி சேர்ந்தார்.தன்னை நம்பி இருப்பவர்களுக்காக.
அடித்துத்தான் பிழைக்க வேண்டும் அரசியலில்.சிவாஜிக்கு அது தெரியாது என்பதை விட பிடிக்காது என்பது தான் சிவாஜியின் கொள்கை.அங்கேயும் பிரச்சினைகள் தான்.அது தானே அரசியல் இங்கு.
மனம் வெறுத்து கட்சிகளில் இருந்து ஒதுங்கி கொண்டார் சிவாஜி!
அப்போதும் சிவாஜி ரசிகர்கள் அவர் பின்னால் நிறைய பேர் இருந்தார்கள்.அது சிவாஜியை விட்டு பிரியாத கூட்டம்.எதற்காக சிவாஜி பின் வந்தார்களோ அதற்காகவே கடைசி வரை இருந்த கூட்டம்.
தன் நிம்மதியை விட சிவாஜியின் நிம்மதியே உண்மையான சிவாஜி ரசிகன் விரும்பினான்.இது தான் அவருக்கு கிடைத்த மாபெரும் சொத்து.
இது தான் தானாக சேர்ந்த கூட்டம்.திருவையாறு தோல்வியெல்லாம் சிவாஜி ரசிகனை சிதற விடாது.அவன் பராசக்தியின் வெற்றியில் இருந்தே சிவாஜியுடன் கலந்தவன்.

ஜெய்ஹிந்த்! 
தான்

செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்