1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

புகழை கர்வமாக்கிக் கொள்ளாத சிவாஜி

சிவாஜியின்
படங்கள் 
தேன்கூடு 
போலே
அதிலும்
தேனெடுத்தால்
தேனீக்கள் 
கொட்டாத 
கூடு

நாகரீகம் வளரும் போது கலாச்சார  சீர்கேடுகளும் உண்டாவது தான்.அதிலிலிருந்து மக்களை நல்வழிப்படுத்தவே கலைகள் தோற்றுவிக்கப்பட்டன.
கலாச்சாரம்,பண்பாடு, கடமைகள் போன்றவை நல்வழிகள் சொல்லி மக்களை  பண்படுத்தவே கலைகள் பிறந்தன.
கலைகளை பரப்ப நல்ல படைப்பாளிகள் இதிலிருந்தே  வந்திருக்க வேண்டும். அவர்களின் கலை அம்சம்  ஈர்க்கப்பட்டதால் மக்கள் அவர்களை கலைஞர்களாக மதித்து போற்றப்பட்டனர்.நல்ல கலைஞனின் வேலை சமூகத்திற்கு பயன்படும் கலைகளை பரப்புவது தான்.இப்படி தோன்றிய கலைகள் தான் இன்று எப்படி மாறியுள்ளது!
இன்று நாகரீகம் எவ்வளவோ வளர்ந்திருக்கலாம்.அந்தளவு நல்ல கலைகள் உருவாக்கப்படுகிறதா?
இங்கே தான் நடிகர்திலகத்தின் படங்களை நாம் சொல்ல வேண்டியுள்ளது.
சமுகத்தை பண்படுத்தும் படங்களாகவே அவர் படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்.
நல்ல கலைஞனாக அவர் செய்ததை செய்துவிட்டார்.அதை பின்பற்றுவது மக்களின் கையில்.

கலைகள் வளர எதை எடுத்துச் சொல்வது?
சமூகத்தில் நடந்த நல்ல நிகழ்வுகள் ,எழுதப்பட்ட காவியங்கள், சிறந்த மனிதர்களின் வரலாறுகள்,
இன்னும் பல நல்ல விஷயங்கள்.
இதை வைத்து நல்ல கலையென்று ஆராயத் தொடங்கினால் இந்த நூற்றாண்டில் நடிகர்திலகத்தின் பங்களிப்பை சொல்லாமல் இருக்க முடியுமா? இவற்றுக்கு உதாரணங்கள் சொல்லி பட பட்டியலை எழுத வேண்டிய அவசியம் இல்லை.

ஈடுபாட்டுடன் செய்த நல்ல கலைகள் கொடுக்கும் புகழ்மோகம் நாளடைவில் போதையாக மாறும்.இதற்கு  ஆளாகதவர்கள் குறைவுதான்.ஆரம்பத்தில் அர்ப்பணிப்புடன் ஆரம்பிப்பவர்கள் இறுதி வரை தொடர்கிறார்களா? 
அதில் சறுக்கியவர்கள் ஏராளம்.இறுதி மூச்சு வரை கலையை மட்டுமே நேசிப்பவன் தான் கலைஞரில் மாணிக்கமாகிறான்.அப்படி கடைசிவரை தன் அர்ப்பணிப்பை கலைக்காக கொடுத்தவர் நடிகர்திலகம் என்பதற்கும் அத்தாட்சி் தேவையில்லை.கலைஞனுக்கு கர்வம் இருப்பது சகஜம் என்றாலும் இதிலும் விலகி நிற்கிறார் நடிகர்திலகம்.புகழ்போதைகளுக்கு மயங்கி தலைக்கனத்தை ஏற்றிக் கொள்ளாத மாபெரும் மேதையாக கடைசி வரை வாழ்ந்தார்.

நாட்டிற்கேற்ற நல்லவராய் இருத்திடல் வேண்டும்
நல்ல பண்புகளை தன்னகத்தே வைத்திடல் வேண்டும்
நல்மொழியாய் தாய்மொழியை பரப்பிடல் வேண்டும்
நல்லோரை எந்நாளும் மதித்திடல் வேண்டும்
இதுதான் நல்ல கலைஞர்களுக்கு தேவையான குணம்.
படித்தாரோ இல்லை
அறிந்தாரோ இல்லை
ஆனாலும்,
இவையனைத்தும் பிறவிக் குணமாய் அமைந்து விட்டது நடிகர்திலகத்துக்கு.

நாட்டிற்கு செய்வன எல்லாம் கலைஞனாக செய்து விட்டார்.நல்ல கலைஞர்களை கௌரவிப்பதும் நாட்டிலுள்ளோர்  கடமையன்றோ?
இங்கே தான் அந்த கேள்வி எழுகின்றது?
அவர் இங்கே பெற்ற வரம் என்ன? 

நன்றி
செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்