சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

மக்களை பெற்ற மகராசி -செங்கோடனின் கொங்குத்தமிழ்

புதிய பதிவு..

மக்களை பெற்ற மகராசி...

பேச்சுத் தமிழில் கொங்கு பாஷைக்கு தனி மரியாதை உண்டு.மற்ற வட்டார பாஷைகளை காட்டிலும் கொங்கு பாஷையில் மரியாதை அதிகம் கொட்டும்.தமிழ் திரைப்படங்களில் வட்டார பாஷைகளை முழுதும் காட்டிய படங்கள் விரல் எண்ணிக்கையில்தான்.கொங்கு பாஷையை சிலகாட்சிகள் தான் சில படங்கள் காட்டியிருந்தன.முழுவதும் காட்டிய படமாகவும், முத்தாய்ப்பான படமாகவும் மக்களைப் பெற்ற மகராசியை  சொல்லலாம்.
செந்தமிழ் வசனங்கள் , வீர வசனங்கள்  கர்ஜனை புரிந்த வசனங்கள், அடுக்கு மொழி வசனங்களில் மிரட்டிய நடிகர்திலகம் கொங்கு பாஷையையும் விட்டு வைக்கவில்லை.செந்தமிழ் வசனங்களையே பேசி வரும் எவருக்கும் வட்டார பாஷை சறுக்கவே செய்யும்.அந்த சறுக்கலில் விழாமலும், ஜெயித்தும் காட்டியவர் நடிகர்திலகம்.மக்களைப் பெற்ற மகராசி கொங்கு மண்ணுக்கு பெருமை சேர்த்த படம்.

செங்கோடன் என்ற பாத்திரத்தில் நடிகர்திலகம்.இந்த பாத்திரத்தின் தன்மையை கொண்ட இளைஞர்களை 
இன்றும் கொங்கு மண்டல விவசாயம் செய்வோரிடம் காணலாம்.
அதிகம் படிக்காத, மூர்க்கத்தனமான வீரம், 
உறவுகளிடம் தோழமை, நேர்மையான உழைப்பு கலந்த குணங்களை கொண்டது
தான் இப் பாத்திரத்தின் தன்மை.
.அதிக காலம்  பழகியிலிருந்தாலொழிய அவற்றை பிரதிபலிக்க இயலாது.வேறு பாஷையில் வாழ்ந்தவர்கள் திரையில் செய்ததில் இயல்புத் தன்மையில் செயற்கைத்தனம் தனியே தெரியும்.இதில் நிறைவை தந்தவர்  நடிகர்திலகம்.படத்தின் வெற்றி இதன் மூலம் வந்ததே.
மணப்பாறை மாடு கட்டி பாடலிலேயே அவர் 
தேர்ந்த விவசாயியை பார்க்க வைத்திருப்பார்.
தங்கை படித்து முடித்து ஊருக்கு திரும்பி வருகிறாள் என்ற செய்தியைக் கேட்டதும்,
"படிச்சு முடிச்சுட்டு ரயில்ல வர்றாளாமா? அப்ப நாம ஸ்டேசனுக்கு போகோனுமா? "
என்று வசனம் பேசும்  காட்சியைத் தொடர்ந்து எம்.ஆர். சந்தானத்தை இழுத்து விளையாடுவதும், வைக்கோல் போரில் குதித்து விளையாடுவதுமாய் முதல்  காட்சியே வெகுவாக கவரும்.
மாட்டு வண்டியில் வரும் பானுமதியிடம் வம்பு செய்வதும், பதிலுக்கு பதில் பேசுவதிலும் கொங்கு பாஷை ரசிக்க வைக்கின்றது.வாக்குவாதத்தின் முடிவில், "இப்ப போ, இந்த தடத்துல வருவியல்ல, அப்ப வச்சுக்கிறேன்"  னு  ஒரு பஞ்ச் அடிப்பார், கலகலப்பாக செல்லும் அந்த காட்சி.
தங்கையை அழைத்து வர வில்லு வண்டியை இரவல் கேட்டு, காளைகளுக்கு பதிலாய் தாங்களே இழுத்து வருவதும்,
"என்றா மடையா,  என்ர  ஊட்டு சாப்பாட்டை மாடு மாதிரி தின்னுகிட்டு, இழுக்கறதுக்கு என்னடா, இழுடா " என்று சொல்வதும் ரசிக்க வைக்கிறது.
அந்த ரயில் நிலைய களேபர காட்சிகள் பின்னாளில் வந்த தேவர்மகன் காட்சிகளுக்கு முன்னோடியாக இருக்கிறது.
முன் பகை ஒன்றை வைத்து தான் கதையின் காட்சிகள் நகர்கின்றன.அதை தொய்வில்லாமல் ரசிப்புத் தன்மையுடன் ஒவ்வொரு காட்சியையும் அமைத்திருப்பது சிறப்பு.
நம்பியாரிடம் பேசும் தங்கையை கண்டிக்கும் காட்சியில் கண்ணாம்பாவும்,  அவரும்  காட்டும்  உணர்ச்சிகரமான நடிப்பு 
இயல்பான குடும்பச் சண்டையை பார்க்கும் படியாக அமைந்திருக்கும்.
வம்புக்கு வரும் சகாதேவனை,
"அந்த சர்க்கஸெல்லாம் எங்கிட்ட காட்டாதே, மாட்டிப்போடுவேன், மாட்டி "
என்று வீராவேசத்தை காட்டும்போது அசல் கிராமத்து வாலிபனை பிரதிபலித்திருப்பார்.
கண்ணாம்பா அடித்த சோகத்தை சாரங்கபாணியிடம் சொல்லி ஆறுதல் தேடுவதும், அதன்பின் பானுமதியுடனான குழைவுக் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன.மறந்து சென்ற துண்டை எடுக்க வரும் காட்சியையும் பின்னாளில் பரம்பரை படத்தில் வைத்திருந்தனர்.
ஏனுங்க, போங்க, வர்றனுங் போன்ற சகஜமான கொங்கு வார்த்தைகளை அவர் உச்சரிக்கும் போது நமக்கு ஆனந்தமே!
கடிதத்தை பானுமதியிடம் கொடுத்து படிக்கச் சொல்லும் காட்சியும் சுவாராஸ்யமாக இருக்கும். குழைவும், கொந்தளிப்பும், நெகிழ்ச்சியுமான பாவங்கள் நம் ரசனைக்கு தீனிதான்.
 கண்ணாம்பா கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் அமைதியாக இருந்து விட்டு கடைசியில் சிறு பிள்ளை போல் அழுது சிணுங்குவாரே!  உணர்வு கலந்த நடிப்பு! 
விகேஆரும் நடிகர்திலகமும் மோதும் வாக்குவாத சண்டை காட்சி கிராமத்து  மனிதர்களின் போக்கை அச்சு அசலாக படம் பிடித்திருக்கும்.

கடும் உழைப்பையும், நேர்மையுமாய் வாழும் பெரும்பாலான ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் பெரிதாக நினைப்பது தன்மானத்தைதான்.அதற்கொரு களங்கம் என்றால் சீறி விடுவார்கள்.தன்னிலை இழந்து கோபத்தை கட்டுப்படுத்த முடியாதவர்களாக அந்த நிலையில் அவர்களின் குணம் இருக்கும்.இந்த குணம் தான் செங்கோடன் பாத்திரமும் கொண்டிருக்கிறது.நடிகர்திலகத்தின் உண்மையான அர்ப்பணிப்பை ஒவ்வொரு காட்சியிலும் காணலாம்.
சீரான திரைக்கதை, தொய்வில்லாத காட்சி அமைப்புகள், சிறப்பான பாடல்கள்,
மாறுபட்ட கதைக்களம், வெகுவாக ரசிக்க வைத்தது.

கொங்கு தமிழில் அமைந்த பாடல்கள் திரைப்படங்களில்  அதிகம் 
பயன்படுத்தவில்லை எனலாம்.அப்படிப்பட்ட பாடலை நாம் தேடத் தொடங்கினால் நம் நினைவுகளில் சீக்கிரம் வருகின்ற பாடல்களாக இதில் இடம் பெற்ற இரண்டு பாடல்கள்தான் நினைவுக்கு வரும்.ஒன்று முதலில் வரும்  மணப்பாறை மாடு கட்டி.அது அறிமுகப் பாடலும், தனித்த பாடல் வரிசையிலும் அமைந்தது.
இணைப்பாடலாக இதைச் சொல்லலாம். "போறவளே போறவளே பொன்னுரங்கம் " 
சிறப்பான மெட்டு, இசையில், மனதுக்கு இனிமை தரும் பாடல்.தாழையாம் பூ முடிச்சு இந்த காட்சி அமைப்பில் இருந்தாலும் கொங்கு தமிழால் இது தனித்த வரிசையில் சிறப்பானதாக இருக்கின்றது.இப்பாடலில் நடிகர்திலகத்தின் சிறு நடனஅசைவுகள், அங்க அசைவுகள், மிகுந்த ரசிப்பை உண்டு செய்கிறது.
வயல்வெளி சண்டைக்காட்சி இப்பொழுது பார்த்தாலும் இப்படி ரசிக்க வைக்கின்றதே! நிஜமான சண்டைக் காட்சி போல் உள்ளது.

நம்பியாரை தாக்கி விட்டார் என்று கருதி கைதுசெய்யும் போலீசாரிடம் கெஞ்சும் கண்ணாம்பாவிடம், "அம்மா, என்னம்மா நீங்களே என்னிய கொலைகாரன்னு சொல்லி செயிலுக்கு அனுப்பிச்சு வச்சுடுவீங்க  போலிருக்கு " என்று சொல்லுவதும், அதை தொடர்ந்து பேசுவதும் போன்ற காட்சிகள் எல்லாம் நாம் திரையில்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விட வைக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும்.
யார் அடித்தது என விசாரிக்கும் போலீசிடம், "அதெப்படீங்கய்யா தெரியும்? எல்லாரும் மனுசங்க மாதிரி தான்னே இருக்காங்க!"என்று சொல்லும் போதும்,
ஸ்டேசனுக்கு வெளியே சாரங்க பாணி, பானுமதியிடமும் குழைந்து, நெளிந்து பேசும் காட்சிகளிலும்,
தற்கொலை செய்து கொள்கிறேன் என்று சொல்லும் ராஜத்திடம் உருகி உருகி பேசுவதும்,
கண்ணாம்பாவிடம் நடந்தவற்றை விவரிக்கும் போதும் போன்ற இது போன்ற சின்ன சின்ன காட்சிகள் கூட  பெரிய பெரிய ரசிப்புகளுக்கு ஆளாக்கி விடுகிறது.

தங்கையின் வாழ்வுக்காக பகைமை மாறி வீகேஆரிடம் இறங்கி வந்து பேசும் காட்சியில்,
கால் ஜென்ம பகையை ஒரு நிமிடத்தில் உடைத்தெறிவதும் , மீண்டும் கோபமுறுவதும், பணிவதுமாயும் மாறி மாறி அந்த நடிப்பு ஆச்சர்யங்களாய்  விழிகளில் விரிகின்றன.

இறுதிக்காட்சியில்,
"ஒன்னு ரெண்டு தப்பு பண்ணி இருந்தாத்தானே அந்த ஆளு  பேசறதுதுக்கு இருக்கு, ஆரம்பத்தில் இருந்தே நம்ம குடும்பத்திற்கு கெடுதல் பண்ணிட்டு வர்ற அந்த ஆளு இனியும் உயிரோட இருக்க கூடாது, அந்தாள வெட்டி பொலி போட்டுடறேன் "
கிராமிய வசனங்களில் அனல் பறக்கும்.
இயல்பான பேச்சுக்களே  வசனங்களாக இருக்கும்.அதனால் நாம் நேரிடையான காட்சிகளை தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே வருகிறது.
வசனங்களுக்கு  மெருகு போடாத இயல்பு வார்த்தைகள் வெகுவே சுவாராஸ்யம்தான்.

எந்தவித வன்முறையையும் காட்டாத சிறந்த முடிவாக படம் முடிவது  சிறப்பு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற