1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

இதை விடவா பெரிய விருது ?

சிவாஜிக்கு சரியான விருது பாரத பூமியில்  கிடைக்கவில்லை என்று நினைக்கிறீர்களா?

என்னுடைய படத்தை ஏன் போஸ்டரில் அடித்துள்ளனர் என்று சிவாஜியின் திருநாவுக்கரசர் உருவத்தை பார்த்து காஞ்சிப் பெரியவர் சொன்னாரே?
அதை விடவா பெரிய விருது?

சிவாஜியின் நடையை பார்க்க அவரை காக்க வைத்து பின் சிவாஜி நடந்து வருவதை பார்த்து ரசித்து ,உங்கள் நடையழகை பார்க்கவே நான்  உங்களை நடந்து வரச் சொன்னேன் என்று விளக்கம் சொன்னாரே புட்டபர்த்தி சாய்பாபா? அதை விடவா பெரிய விருது? 

"என் தந்தையை நேரில் பார்த்தது போல இருந்தது!" என அய்யா.வ.உ.சிதம்பரனாரின்  மகன் சொன்னாரே?
அதை விடவா பெரியவிருது ? 

"என் தந்தையின் காலில் விழக்கூட இடம் காலம் பார்ப்பேன். ஆனால் அவரை எங்கு கண்டாலும் காலில் விழுந்து வணங்குவேன்!" என தன் தந்தையின் மேல் அன்பும் மரியாதையும் வைத்துள்ள ஒரு சிவாஜி ரசிகன்சொன்னது இது..
இதைவிடவா பெரிய விருது! 

சிவாஜியின் இறுதி ஊர்வலத்தில் "பத்மநாபா! போய் விட்டாயா?" என  ஒரு முதியவர் உருகி சத்தமிட்டாரே? அதை விடவா பெரிய விருது? 

இந்திய பிரதமருக்கு அடுத்ததாக நீங்கள் தான் இந்த நயாகரா நகருக்கு மேயர்? என்று தங்கச் சாவி கொடுத்ததே அமெரிக்க அரசாங்கம்!
அதைவிடவா பெரிய விருது ..

நீங்கள் மேடையில் வீற்றிருந்த போது ஓடி வந்து ஒரு பெண்மணி கையை கிழித்து  தன் ரத்தத்தை 
உங்கள் நெற்றியில் திலகம் இட்டாளே ஒரு பெண்மணி!
அதைவிடவா பெரிய விருது ..

சிவாஜி நடித்ததை படமாக்கும் போது என் கண்களில் வழியும் கண்ணீர் கேமராவின் 
லென்ஸ்களில் படிந்து என்னால் படமாக்க முடியவில்லை என்று உணர்ச்சி பொங்க கூறினாரே ஒளிப்பதிவாளர் விட்டல் ராவ்!
அதைவிடவா பெரிய விருது? ..

பிரமாண்ட பிரமிடுகளைக் கொண்ட எகிப்திய பூமிக்கு அதிபராக விளங்கிய நாசர்
அதிபருக்குண்டான ஒரு நாட்டின்  சட்ட திட்டங்களை மீறி தியாகராயநகர் அன்னைஇல்லத்தின் அன்பு பிடியில் கட்டுண்டு விருந்துண்டு மகிழ்ந்து,எந்த ஒரு தனி மனிதருக்கும் கிடைக்காத பெருமையை நடிகர் திலகத்திற்கு கொடுத்துச் சென்றாரே!
அதைவிடவா பெரிய விருது?

ஆசிய ஆப்பிரிக்கப்பட விழாவில்
உலகப் புகழ்வாய்ந்த கெய்ரோ விருதை 
உலக நடிகர்களின் நடிப்புகளை எல்லாம் புறம் தள்ளி ஆறடிக்கும் குறைவான சிவாஜிகணேசன் பெற்று வந்தாரே!
அதைவிடவா பெரிய விருது! ..

சிவாஜி  போல என்னால் நடிக்க முடியாது என்று உலக நடிகன் மார்லன் பிராண்டோ கூறி விட்டாரே! 
அதை விடவா பெரிய விருது? ..


சிவாஜிக்கு மேலே ஒரு நடிகரை பார்க்க முடியாது என்று இந்திய பிரதமர் நேரு சொல்லிய பின்பு 
அதை விடவா பெரிய விருது ?

இந்திய நடிகன் எவருக்குமே செய்யாத பெருமையாக சிவாஜியின் வருகைக்காக அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் வரவேற்பு தீர்மானம் போட்டு சிவாஜிக்கு சிறப்பு செய்ததே சிங்கப்பூர் அரசாங்கம் ..
அதைவிடவா பெரிய விருது ...

அமெரிக்கா சென்று திரும்பிய நடிகர் திலகத்தை வரவேற்க விமான நிலையத்திலிருந்து அன்னை இல்லம் வரை பல கிலோமீட்டர் தூரம் வரை இருபுறமும் மக்கள் கூட்டம் திரண்டு நடிகர்திலகத்துக்கு மரியாதை செய்ததே!
அதைவிடவா பெரிய விருது!

எந்த விருது சிவாஜிக்கு கிடைக்கவில்லை என்று நாம் வசை  பாடுகிறோமோ அந்த விருதைப் பெற்ற இயக்குனர் ,
எங்களின் கலை வாழ்க்கை சிவாஜி போட்ட பிச்சை என்று கூறினாரே..
அதை விடவா பெரிய விருது ..

தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜியின் நாதஸ்வர வாசிப்பு நடிப்பை பார்த்த அந்தப் படத்திற்கு நாதஸ்வரம் வாசித்த நிஜக் கலைஞரான உமையாள்புரம் சிவராமன் சொன்ன வார்த்தை, "சிவாஜி வாசித்ததே  அசல் " என்று...
அதைவிடவா பெரிய விருது ..

எந்த தயாரிப்பாளர் சிவாஜியை வேண்டாம் என்று சொன்னாரோ, அதே தயாரிப்பாளர் பிற்காலத்தில் நான் உலகம் முழுவதும் சுற்றி இருக்கிறேன் சிவாஜியை போல் ஒரு நடிகனை கண்டதில்லை என்று சொன்னாரே..
அதைவிடவா பெரிய விருது ...

எப்போது சிவாஜியின் நடிப்பை பார்த்து ரசிக்க ஆரம்பித்தேனோ,அப்போது இருந்து இன்று வரை அவருடைய நடிப்பைத் தவிர வேறு எந்த நடிப்பையும் ரசிப்பதில்லை என்று  தன்பால் லட்சக்கணக்கான ரசிகர்களை இன்று வரை உருக உருக வைத்திருக்கிறாரே 
நடிகர் திலகம்,
அதைவிடவா பெரிய விருது ...

செந்தில்வேல் சிவராஜ் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்