திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

ஒரே வார்த்தையில் தொடங்கும் சிவாஜி வாழ்க்கை வரலாறு

ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு சிவாஜிகணேசன் வரலாறு..
'க' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது....

கமலாவை
கரம்பிடித்த
கணேசனுக்கு
கலைமகளின்
கருணைதான்
கம்பளத்தானை 
கண்டு
கட்டபொம்மனானவன்தானே
கரிபெருமாளவர்தம்
கலைப்படத்திலே
கணேசன்தான்
கட்டாயமென்றாரே
கஷ்டப்பட்டே
கலையுலகில்
கரை
கடந்தான்
கடந்தோன்
கலையுலகின்
கருவூலமானானே
கமலத்தால்
கருநான்கு
கணேசமூர்த்திக்கே
கலையார்வத்தால்
கலைஞனவன்
கனமாக
கர்ஜித்தே
கலையுலகை
கலங்கடித்தானே
கலையும்
கழகமும்
கண்களேயவனுக்கு
கழகமும்
கலையும்
கலந்தே
கடந்தனவே
கறையில்லாதவனை
கண்டு
கட்சியொன்று
கலக்கமானது
கலந்தே
கணேசனுக்கு
களங்கமிழைத்தது
கலங்கிய 
கணேசனுக்கு
கருணைசெய்ததே
கடல்வண்ணணின்
கடாட்சமே
கலையுலகிலே
கட்டபொம்மனாக
கர்ணனாக
கப்பலோட்டியவனாக
கடந்தானே
கடல்தனை
கடந்து
கவுரவம்
கண்டானே
கன்னித்தமிழால்
கலையுலகை
கடைசிவரை 
கலங்கடித்தானே
கர்மவீரரின்
கண்ணியத்தால்
கட்சியவரின்
களமிறங்கி
கடமையாற்றினானே
கஷ்டப்பட்டதை
கரைத்தான்
கட்சிக்காக
கர்மவீரனுக்காக
கரமுயர்த்திய 
கர்ணனேயானானே
கண்டபாரதத்திற்காக
கர்மவீரரும்
கடந்தாரே
கணேசன்
கவலை
கரை
கடக்காதது
கரம்
கலந்தாரன்னைகாந்தி
கலைப்பயணத்திலும்
கலக்கியெடுத்த
கலைச்சதமிரண்டு
கடந்தயகவையோ
கணேசனுக்குக்கரைநூறு
கலையீடில்லா
கலைமகனுக்கீடாக
கலைஞரெவராக
கண்டதுண்டு
கவசமில்லா
கம்பீரத்தாயை 
கயவர்கள்
கணைகளால்
கலங்கடித்தாரே
கணேசரும்
கலங்கினாரே
கவுரமில்லா
கட்சியிலே
கணேசனிருப்பாரா 
கரமாக
கலந்தவர்களுக்கு
கட்சி
கண்டான்
கர்மவீரரையே
கவுத்தவர்கள்தானே
கறைபடியா
கணேசனுக்குமதானே
கட்சிகளே
கடைசியானதே
கலைமகனுக்கு
கலைத்தமிழனுக்கு
கடலுந்தாண்டிய
கவுரவச்செவாலியே
கலையுலகபால்கே
கலைமன்னன்
கண்மூடினானே
கலையுலகம்
கதறியதே
கலைச்சக்கரவர்த்தி
கலந்தேயுள்ளான்
கலைமனங்களில்...

செந்தில்வேல் சிவராஜ்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற