1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

ஒரே வார்த்தையில் தொடங்கும் சிவாஜி வாழ்க்கை வரலாறு

ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு சிவாஜிகணேசன் வரலாறு..
'க' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது....

கமலாவை
கரம்பிடித்த
கணேசனுக்கு
கலைமகளின்
கருணைதான்
கம்பளத்தானை 
கண்டு
கட்டபொம்மனானவன்தானே
கரிபெருமாளவர்தம்
கலைப்படத்திலே
கணேசன்தான்
கட்டாயமென்றாரே
கஷ்டப்பட்டே
கலையுலகில்
கரை
கடந்தான்
கடந்தோன்
கலையுலகின்
கருவூலமானானே
கமலத்தால்
கருநான்கு
கணேசமூர்த்திக்கே
கலையார்வத்தால்
கலைஞனவன்
கனமாக
கர்ஜித்தே
கலையுலகை
கலங்கடித்தானே
கலையும்
கழகமும்
கண்களேயவனுக்கு
கழகமும்
கலையும்
கலந்தே
கடந்தனவே
கறையில்லாதவனை
கண்டு
கட்சியொன்று
கலக்கமானது
கலந்தே
கணேசனுக்கு
களங்கமிழைத்தது
கலங்கிய 
கணேசனுக்கு
கருணைசெய்ததே
கடல்வண்ணணின்
கடாட்சமே
கலையுலகிலே
கட்டபொம்மனாக
கர்ணனாக
கப்பலோட்டியவனாக
கடந்தானே
கடல்தனை
கடந்து
கவுரவம்
கண்டானே
கன்னித்தமிழால்
கலையுலகை
கடைசிவரை 
கலங்கடித்தானே
கர்மவீரரின்
கண்ணியத்தால்
கட்சியவரின்
களமிறங்கி
கடமையாற்றினானே
கஷ்டப்பட்டதை
கரைத்தான்
கட்சிக்காக
கர்மவீரனுக்காக
கரமுயர்த்திய 
கர்ணனேயானானே
கண்டபாரதத்திற்காக
கர்மவீரரும்
கடந்தாரே
கணேசன்
கவலை
கரை
கடக்காதது
கரம்
கலந்தாரன்னைகாந்தி
கலைப்பயணத்திலும்
கலக்கியெடுத்த
கலைச்சதமிரண்டு
கடந்தயகவையோ
கணேசனுக்குக்கரைநூறு
கலையீடில்லா
கலைமகனுக்கீடாக
கலைஞரெவராக
கண்டதுண்டு
கவசமில்லா
கம்பீரத்தாயை 
கயவர்கள்
கணைகளால்
கலங்கடித்தாரே
கணேசரும்
கலங்கினாரே
கவுரமில்லா
கட்சியிலே
கணேசனிருப்பாரா 
கரமாக
கலந்தவர்களுக்கு
கட்சி
கண்டான்
கர்மவீரரையே
கவுத்தவர்கள்தானே
கறைபடியா
கணேசனுக்குமதானே
கட்சிகளே
கடைசியானதே
கலைமகனுக்கு
கலைத்தமிழனுக்கு
கடலுந்தாண்டிய
கவுரவச்செவாலியே
கலையுலகபால்கே
கலைமன்னன்
கண்மூடினானே
கலையுலகம்
கதறியதே
கலைச்சக்கரவர்த்தி
கலந்தேயுள்ளான்
கலைமனங்களில்...

செந்தில்வேல் சிவராஜ்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்