1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

அன்னைஇல்லத்தின் அரசனடா

அன்னைஇல்லத்தின் அரசனடா
அவருக்கு இணையில்லை எவருமடா
ராஜாமணி ஈன்ற சிங்கமடா
சின்னையா போலே தங்கமடா
நடிப்பில் அவனே வேந்தனடா
ரசிகனுக்கு அவனே திலகமடா!
(அன்னை இல்லத்தின்..)

உலகம் போற்றிய கலைஞனடா
உயர்பண்பில் அவன்தான்மனிதனடா 
கலைகளும் அவனிடம் தஞ்சமடா
கற்காத அவனோரு மேதையடா 
எதிரியும் மயங்கும் நடிகனடா
எல்லைகள் இல்லா சிகரமடா
(அன்னை இல்லத்தின்..)

நடிப்பே அவனுக்கு வேதமடா
நடிகருக்கெல்லாம் அவனே பாடமடா
தேவர்க்கெல்லாம் பொருந்திய உருவமடா
தேகமெல்லாம் நடிப்பை கொண்டவனடா
மண்ணில் உதித்த அதிசயமடா
மகேசனை காட்டிய முகமடா
(அன்னை இல்லத்தின்..)

எவனடா இவரைப் போலே எவனடா 
என்றுமே இவரே உச்சமடா
தமிழனுக்கு இவரால் பெருமையடா 
தரணியெல்லாம் வியந்த மனிதனடா
இல்லை இவருக்கோர் இணையடா 
இவர் பெயரே ஆண்ட மன்னன் சிவாஜியடா..
(அன்னை இல்லத்தின் ..)

செந்தில்வேல் சிவராஜ்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்