சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

ராமாயண வரியை பாடலுக்கு எழுதிய கண்ணதாசன்

மயக்கமென்ன இந்த மௌனமென்ன ..
வசந்தமாளிகையில் இடம் பெற்ற இந்த பாடலின் மிக முக்கியமான வரி ஒன்றுஉண்டு.
இந்த வரியை கண்ணதாசன் எதிலிருந்து எடுத்து இந்த பாடலை உருவாக்கினார் என்பதை அறிந்தால் நாம் ஆச்சர்யப்படுவோம்.
கண்ணதாசன் கையாண்ட அந்த வரி என்ன?  எதை உதாரணமாக எடுத்து அந்த வரியை எழுதினார் என்பதை பார்க்கலாம்.
அதற்கு முன்பு இதற்கு ஆதாரமான ராமாயணக்கதை ஒன்று .
சீதையை கடத்தி சென்ற ராவணன் சீதையை ஒரு வனத்தில் சிறை வைத்தான் அது தான் அசோக வனம் ஆயிற்று.
சீதை எங்கே இருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க பலரையும் பல பகுதிகளுக்கு ராமன் அனுப்பி வைத்தான். அவர்களில் அனுமனும் ஒருவன்.அனுமனும் இலங்கையில் சீதையை சந்தித்து விட்ட பின் ,ராமன் எவ்வாறேனும் உன்னை மீட்பான் என்று சீதையிடம் சொல்கிறான்.சீதையும் அனுமன் மேல் நம்பிக்கை கொண்டாள்.
"சீதையை கண்டேன் "என்று ராமனிடம் சொல்ல என்ன சேதி சொல்கிறீர்கள் ? என்று சீதையிடம் அனுமன் கேட்க,திருமண இரவன்று ராமன் சொன்ன, இனி சிந்தையிலும் பிறிதொரு மாதை தொடேன் என்ற சத்தியத்தை சொல்லி ,கூடவே தன் கணையாளியையும் கொடுத்து அனுப்புகிறாள்.
கம்பனின் இந்த வரிகள் கண்ணதாசனின் மனதில் ஆழப் பதிந்து விட்டது.அந்த வரிகளின் பாதிப்பால் கவிதையும் எழுதி வைத்திருந்தார்.
இந்த இடம் இந்த ஒரு வரிதான் ,கம்பன் கையாண்ட இந்த வார்த்தைகளைத்தான் கண்ணதாசன் ,மயக்கமென்ன பாடலில் புகுத்தினார்.
மயக்கமென்ன இந்த மௌனமென்ன பாடலில் வரும் வரிகளான ,
உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தில் நானும் தொடமாட்டேன் என்று கவிதையாக்கி வைத்திருந்தார்.
வசந்த மாளிகை படத்திற்காக கண்ணதாசன் எழுதி வைத்திருந்த கவிதைகள் தான் பாடல்களாக உருப்பெற்றது.யார் யாரோ கேட்டும் கொடுக்காத கண்ணதாசன் இந்த படத்துக்கு மட்டும் ஏன் தந்தார் ..
இந்த வரிகளை எந்த கதாநாயகன் பாடினால் உயிர் வரும் என்று ,தான் அறிந்து வைத்ததால்தான் வசந்தமாளிகை படத்துக்கு கொடுத்தார் கண்ணதாசன்.
கம்பனின் இதிகாச ராமாயண வரிகளை ஒரு காதல் பாடலுக்கு மாற்றிய   கண்ணதாசனின் சிறப்பை என்னவென்று சொல்வது .அதை யார் பாடினால் நன்றாக இருக்கும் என்று அவர் போட்டு வைத்திருந்த கணக்கையும் என்னவென்று சொல்வது ?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற