1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

ராமாயண வரியை பாடலுக்கு எழுதிய கண்ணதாசன்

மயக்கமென்ன இந்த மௌனமென்ன ..
வசந்தமாளிகையில் இடம் பெற்ற இந்த பாடலின் மிக முக்கியமான வரி ஒன்றுஉண்டு.
இந்த வரியை கண்ணதாசன் எதிலிருந்து எடுத்து இந்த பாடலை உருவாக்கினார் என்பதை அறிந்தால் நாம் ஆச்சர்யப்படுவோம்.
கண்ணதாசன் கையாண்ட அந்த வரி என்ன?  எதை உதாரணமாக எடுத்து அந்த வரியை எழுதினார் என்பதை பார்க்கலாம்.
அதற்கு முன்பு இதற்கு ஆதாரமான ராமாயணக்கதை ஒன்று .
சீதையை கடத்தி சென்ற ராவணன் சீதையை ஒரு வனத்தில் சிறை வைத்தான் அது தான் அசோக வனம் ஆயிற்று.
சீதை எங்கே இருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க பலரையும் பல பகுதிகளுக்கு ராமன் அனுப்பி வைத்தான். அவர்களில் அனுமனும் ஒருவன்.அனுமனும் இலங்கையில் சீதையை சந்தித்து விட்ட பின் ,ராமன் எவ்வாறேனும் உன்னை மீட்பான் என்று சீதையிடம் சொல்கிறான்.சீதையும் அனுமன் மேல் நம்பிக்கை கொண்டாள்.
"சீதையை கண்டேன் "என்று ராமனிடம் சொல்ல என்ன சேதி சொல்கிறீர்கள் ? என்று சீதையிடம் அனுமன் கேட்க,திருமண இரவன்று ராமன் சொன்ன, இனி சிந்தையிலும் பிறிதொரு மாதை தொடேன் என்ற சத்தியத்தை சொல்லி ,கூடவே தன் கணையாளியையும் கொடுத்து அனுப்புகிறாள்.
கம்பனின் இந்த வரிகள் கண்ணதாசனின் மனதில் ஆழப் பதிந்து விட்டது.அந்த வரிகளின் பாதிப்பால் கவிதையும் எழுதி வைத்திருந்தார்.
இந்த இடம் இந்த ஒரு வரிதான் ,கம்பன் கையாண்ட இந்த வார்த்தைகளைத்தான் கண்ணதாசன் ,மயக்கமென்ன பாடலில் புகுத்தினார்.
மயக்கமென்ன இந்த மௌனமென்ன பாடலில் வரும் வரிகளான ,
உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தில் நானும் தொடமாட்டேன் என்று கவிதையாக்கி வைத்திருந்தார்.
வசந்த மாளிகை படத்திற்காக கண்ணதாசன் எழுதி வைத்திருந்த கவிதைகள் தான் பாடல்களாக உருப்பெற்றது.யார் யாரோ கேட்டும் கொடுக்காத கண்ணதாசன் இந்த படத்துக்கு மட்டும் ஏன் தந்தார் ..
இந்த வரிகளை எந்த கதாநாயகன் பாடினால் உயிர் வரும் என்று ,தான் அறிந்து வைத்ததால்தான் வசந்தமாளிகை படத்துக்கு கொடுத்தார் கண்ணதாசன்.
கம்பனின் இதிகாச ராமாயண வரிகளை ஒரு காதல் பாடலுக்கு மாற்றிய   கண்ணதாசனின் சிறப்பை என்னவென்று சொல்வது .அதை யார் பாடினால் நன்றாக இருக்கும் என்று அவர் போட்டு வைத்திருந்த கணக்கையும் என்னவென்று சொல்வது ?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்