சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜி ரசிகர்களுக்காக ....

மெழுகுவர்த்தி வெளிச்சம் உலகின் இருள் போக்கிடுமா?
சிவாஜி இல்லாத திரையுலகத்தை மறைக்க முடியுமா?

நெருப்பென்றால் வெந்திடுமா நாக்கு?
சிவாஜியை சொல்லாமல் ஏது நடிப்பு 

காற்றில்லாமல் உயிர் வாழும் ஜெகமேது?
கலைவேந்தன் பேர் சொல்லாத நாவேது !

வான்மழை பொழியாத வையகம் செழிக்குமா ?
சிவாஜி இல்லாத திரையுலகம் 
சிறக்குமா !

தங்கத்தின் நிறத்தை மாற்ற  முடியுமா ?
தவப்புதல்வனின்புகழைத்தான் மறைக்க முடியுமா !

இயற்கையை தான்  மாற்ற முடியுமா 
சிவாஜியை தான் மீற முடியுமா?

எல்லாவற்றிலும் உச்சம் ஒன்றுண்டு
சிவாஜியை மிஞ்ச எவருண்டு

அனல் பறந்தால் வெந்து தணியும் காடு
சிவாஜி பேசினால் அதிர்ந்து போகும் தேகக்கூடு

இடியோசை கேட்டால் அஞ்சுமாம் நாகங்கள்
சிவாஜி கர்ஜித்தால் 
அதிருமே திரைகள் 

எழுத எழுத தீர்ந்து போக தமிழுக்கு என்ன பஞ்சமா?
சிம்மக்குரலில்  வசனம் கேட்க கேட்க மனம்தான் கூசுமா !

பொன் கொடுப்பான் பொருள் கொடுப்பான் பெயர் பெறுவான் வள்ளலாவான்
நாட்டுக்கு ஈதல் நல் புரிந்தான் 
நானிலத்து கலைஞன் கணேசனாவான்

அறுந்துபோன வில் அம்பெய்ய உதவுமா?
சிவாஜி பேசாத வசனம் இனிக்குமா?

மடை திறந்தால்  பாசனம் செழிக்கும்
இவன்வாய் திறந்தால் வார்த்தைகள் இனிக்கும்

நாவறுந்த வாயில் சொல்லம்புகள்  தொடுக்க முடியுமா?
இடறும் சொற்கள் கூட இவன் நாக்கில் தடுமாறுமா!

உரசினால்தான் தங்கத்தின் தரம் தெரியும்
இவன் பேசினால்தான் தமிழின் அருமை புரியும் 

கட்டை விரல்தான் களிமண் கலைக்கு பிடிமானம்
சிவாஜிதான் நடிப்புக் கலைக்கு
உவமானம்

சூரியன் முன் ஜொலிக்காது நட்சத்திரங்கள்
சிவாஜிக்கு முன் எடுபடுமா மற்றவர்களின் ஜோடனைகள்

நீலகண்டனின் தொண்டையோடு நின்று போனது ஆலகால விஷம்
சிம்மக்குரலோனோடு முற்றுப் பெற்றது  நடிப்பபெனும் ரசம்

பிடிபட பிடிபட கலைகள் வளர்ந்துதான் போனது
பொடிபட பொடிபட நடிப்பானது சிவாஜியால் உடைந்து போனது
இதற்கு மேலும் நடிப்பா என்று!

கலைமன்னன் போனவழி யாரும் போகாத வழி 
இவன் போன பின் அது எல்லோருக்குமான பொதுவழி 

அசர அசர அடித்த நடிப்பாயுதம்
வியக்க வியக்க வைத்த சொல்லாயுதம்
ஜால ஜாலமாய் காட்டிய விரலாயுதம்
திகைக்க திகைக்க பார்க்க வைத்த  விழியாயுதம்
எத்தனை ஆயுதம் அவன் எண் சாண் உடம்பில்

துடிக்குது புஜம்
நடிப்பது நிஜம்
மெய்சிலிர்க்குது மனம்
அது சிவாஜி நடிப்பின் குணம்
இதை மறுக்குமோ இந்த ஜெகம்

அஞ்சும் விழியோன் 
கொஞ்சும் முகத்தோன்
தஞ்சமென வந்தால்
பஞ்சம் போக்கிடுவான்
வஞ்சமில்லா ஞானக் கலைஞன்

மின்னலென வரும் நடிப்பு
இடியோசை போன்ற குரலோசை
துடிக்க துடிக்க வரும் பாவனைகள்
வெடிக்க வெடிக்க மாறும் உடல்மொழி
இது நடிகர்திலகம் என்பார்
ஓர் நொடியில்

செந்தில்வேல் சிவராஜ்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற