சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

ஜானி மேரா நாம் VS ராஜா

பெரிய ஹிட் ஆன இந்தி படங்களை தமிழாக்கமோ ,ரீமேக்கோ செய்யப்படும்போது  பெரும்பாலும் இந்தியில் வெற்றி பெற்ற அளவுக்கு வெற்றிகளை பெற்றதில்லை.
ஒன்றோ இரண்டோ விதிவிலக்கு..
ஆனால் ,ஜானி மேரா நாம் ஹிந்திப்பட 
ரீமேக்கான ராஜா கலக்கியெடுத்தது.
1970 ல் வெளியான ஜானி மேரா நாம் படத்தை 1972 ல் ராஜாவாக்கினார் பாலாஜி.படம் அதிரி புதிரி ஹிட்டானது.

ஜானி மேரா நாம் இந்திப்படத்தின் டைட்டில் இசை  மயங்க வைக்கும்..
தமிழிலும் விஸ்வநாதன் பட்டையை கலக்கியிருப்பார்.ரொம்ப பாப்புலர் ஆனது.இது எந்த அளவுக்கு என்றால் அந்த டைட்டில் மியூசிக் மட்டும் தனி ரெக்கார்டாக வெளியிடப்பட்டு சாதனை செய்யும் அளவுக்கு இருந்தது.ராஜா படத்துக்கு மட்டும் தான் டைட்டில் இசையே தனி ரெக்கார்டாக முதன்முதலாக வெளியிடப்பட்டது.

படத்தின் ஆரம்ப காட்சி அமைப்புக்களில் பெரிய மாறுதல்கள் இல்லை.பாக்ஸிங் போடும் சகோதரர்கள், போலீஸ் அப்பாவை வில்லன் கத்தியால் குத்துவது எல்லாம்.
ஹீரோ அறிமுகம் ஆகும் காட்சிக்கு முன்புவரை இந்திப்படத்தின் படமாக்கம் சொல்லப்போனால் அதன் பிண்ணனி,கள அமைப்பு நன்றாகவே இருக்கும்.சிறைசாலையில் ஹீரோ சிகரெட் லைட்டர் நீட்டும் காட்சி இரண்டிலும் ஒன்றுதான்.தேவ்ஆனந்த் தனக்கு வந்த நடிப்பை இந்தியில் செய்திருப்பார் .தமிழ் ராஜாவில் சிவாஜி காந்தம்.ஈர்த்து விடுவார்.ஒரு நிமிஷம் கூட இல்லாத ஷாட்டான அந்த முதல் ஷாட்டில் கூட "போலீஸ்காரன விரோதம் பண்ணிக்காதே,நண்பனாவும் பழகாதே..."
சிவாஜி இன்ட்ரோ சீன் அதகளம்  பண்ணிய  காட்சி..
அந்த காட்சியில் இருந்து சிவாஜி வரும் காட்சிகளில் ஸ்டைல் நடிப்புகளால் சிவாஜி அதிர வைப்பார்..

டென்னிஷ் ராக்கெட்டை எடுத்துக்கொண்டு ஹீரோ ஹீரோயினை பார்க்கப்போகும் காட்சிகள் உள்பட எல்லாக் காட்சிகளும் இரண்டு படத்திலும் வேறுபாடு இல்லை.என்ன இந்திப்படத்தில் ஹேமாமலினியின் ரூம் நெம்பர் 203.தமிழில்ஜெயலலிதாவுக்கு 207.அவவ்வளவுதான் வித்தியாசம்.CV .ராஜேந்திரன் அதிக வித்தியாசத்தை காட்சி அமைப்புகளில் காட்ட ரிஸ்க் எடுக்காததற்கு காரணம் இந்தி பட காட்சி அமைப்புகளில் காட்சிகள் எல்லாம் மிக சுவாராஸ்யமாக ,ரசிக்க ரசிக்க பார்க்கும் படி இருந்ததால்.இதையே தமிழில் காட்டினாலும் ரசிகர்களுக்கு அது இன்ட்ரெஸ்டிங்காகவே இருக்கும் என்று கருதியிருக்கலாம்.இங்கே ஹீரோவான நடிகர்திலகத்தை விட்டு விடலாம். மற்ற நடிகர் நடிகைகள் ,ஏன் படத்தில் சிறு காட்சியில் வந்து போகும் துணை நடிகர்கள் கூட பட்டையை கிளப்பியிருப்பார்கள்.
இந்தி தேவ் ஆனந்த் ,தமிழ் சிவாஜி ,இருவரின் செய்கைகள்,டிரஸ் உள்பட பெரிய வித்தியாசம் இல்லையென்றாலும் ,நம்மை அசரடித்தது ராஜாவின் அந்த ஸ்டைல்கள்.
சிவாஜியின் அந்த முதல் சிறைச்சாலை சிகரெட் லைட்டர் காட்சியிலேயே ஜானி மேரா நாமை மறக்கடித்து விடுவார் சிவாஜி..

டென்னிஷ் ராக்கெட் வலையில் ஜெயலிதாவின் முகம் பார்த்து சிவாஜி பேசும் காட்சிகளில் அவருடைய ஸ்டைல் ஷாட் பை ஷாட்டாக மனம் கொள்ளை கொள்ளும்..இந்தியில் ஸ்டைல் மன்னன் என்று சொல்லப்பட்ட தேவ் ஆனந்த் நடித்த இந்த காட்சியை பார்ப்பவர்களுக்கு ராஜாவை ரசித்த திருப்தியை கொடுக்காது.

oh o meri raja 
ஜானி மேரா நாம் திரைப்பட பாடல் காட்சி.நமது ராஜாவின் மூலப்படம். தேவ் ஆனந்த் மற்றும் ஹேமாமாலினி. அதைப் பார்த்த போது நமது நடிகர் திலகம் எவ்வளவு ஸ்டைலாக செய்திருப்பார் என்ற எண்ணமே வந்தது.பாடல் காட்சியை கிட்டத்தட்ட அதே போல் எடுத்திருப்பார் சி.வி.ஆர். இந்தி பாடலில் மூன்றாவது சரணத்தில் கேபிள் காரில் போவதாக எடுத்திருப்பார்கள். அது ஹிமாச்சல் பிரதேஷ் ஆக இருக்கலாம்.அப்போது தமிழகம்/கேரளத்தில் கேபிள் கார் இல்லாததால் அதை தமிழில் கொண்டு வரவில்லை. 

அது போல் தன் தந்தையை தேடி ரங்காராவ் மாளிகைக்கு போகும் நாயகி சித்தாள் வேடத்தில் உள்ளே நுழைவதாக வரும். இந்தியில் பாடல் உண்டு. அது தமிழில் இல்லை. இரண்டில் ஒன்று பாடல் முடிந்தவுடன் உடனே வரும் காட்சி என்பதாலும் படத்தின் நீளம் கருதியும் அந்த பாடலை தவிர்த்து விட்டார்கள்.

சிவாஜியை பாலாஜி குரூப் ஆட்கள் சேரில் கட்டி வைத்து அடிக்கும் காட்சிகளும் ,அதை தொடர்ந்து சிவாஜியின் அதிரடி ஆக்டிங்கும் ராஜாவில் எவ்வளவு  பரவசத்தை உண்டு பண்ணியது.ஜானி மேரா நாம் படத்தில் இதே காட்சியை பார்த்த போது காரசாரம் இல்லாத ,உப்பு குறைந்த சாப்பாடு சாப்பிட்டது போல இருக்கும்.

படம் ஓட ஓடத்தான், தமிழில் 'ராஜா'வை சி.வி.ஆர். எவ்வளவு சுவாரஸ்யப் படுத்தியிருந்தார் என்பது தெரிந்தது. தேவ் ஆனந்தின் அறிமுகக்காட்சி, ஆரஞ்சுகலர் முடி வைத்த கடத்தல் கையாளுடன் அவர் போனில் பேசும் காட்சி எல்லாம் சப்பென்றிருந்தது. டென்னிஸ் ராக்கெட் டீப்பாயின் மீது கிடக்க ஜஸ்ட் ஒரு சோபாவில் உட்கார்ந்துகொண்டு, டீப்பாயின் மேல் கால்களை நீட்டி வைத்துக்கொண்டு 'மேராநாம் ஜானி' என்று பேசும்போது நம் நினைவுக்கு வருவது, கையில் டென்னிஸ் ராக்கெட்டுட்ன் சுழல்நாற்காலியில் அமர்ந்து 'என் பெயர் ராஜா' என்று ஆரம்பித்து, ஒவ்வொரு பதிலுக்கும் ஒவ்வொரு மாதிரி சுழன்று சுழன்று ஸ்டைல் காட்டும் நடிகர்திலகமும், அவ்வாறு செய்ய வைத்த சி.வி.ஆரும் வேற லேவலில் செய்திருப்பார்கள்.

அதே போலத்தான் 'ஓ..மேரி ராஜா' பாடல் காட்சியும். மலைப்பிரதேசத்தில் படமாக்கப்பட்டதால்  தேவானந்தும் ஹேமாமாலினியும் ரோப்காரில் போக, போலீஸ் ஆபீஸர் இன்னொரு ரோப்காரில் துரத்தும் காட்சி. 'ராஜா'வில் இப்பாடல் கேரளாவில் எடுக்கப்பட்டதால், கடலோர பாறைப்பகுதிகளில் எடுக்கப்பட்டிருக்கும்.

கொச்சின் ஏர்போர்ட்டில், 'வைரங்கள் எங்கே' என்று கேட்கும் ஜெயலலிதாவிடம் 'கோட்டில் இருக்கு' என்று கோட்டைக்கழற்றி அவருக்குப் போர்த்திவிடும் இடத்தில் பேண்ட், 'டக்-இன்' செய்யப்பட்ட ஷட்டில் படு ஸ்மார்ட் ஆக இருப்பார் சிவாஜி.

அதுபோலவே, தன்னை ஏமாற்றி விட்டு பணத்துடன் தப்பியோடப்பார்க்கும் ரந்தாவாவைப்பிடிக்க காரில் தேவானந்தும் , பிரானும் போகும் கட்டமும் ரொம்பவே படுசுமார். அதையே தமிழில் கற்பனை செய்து பாருங்கள்.
'பாபு, நான் கொண்டுவந்த பெட்டியை இன்னைக்கு ஒருத்தர் கையில பார்த்தேன்'
'யெஸ், குமார் எடுத்திட்டுப்போயிருக்கான். உரிய இடத்துல சேர்த்துடுவான்'
'உங்களுக்கு நம்பிக்கை அதிகம்'
'அவன்கிட்டே நாணயம் அதிகம்'
'அந்த நாணயத்துக்கு குறுக்கே ஒரு பொண்ணு வந்தா...?'
'ராஜா, என்ன சொல்றே? குமாருக்கு...'
'காதலிக்க வேண்டிய வயசுதானே..?'
'யெஸ், அவன் அடிக்கடி ஒரு டான்ஸ் பொண்ணைப் பார்க்கப் போவான்'.
'மை டியர் சார், எனக்குத்தெரிஞ்சவரைக்கும் அள்ளிக்கொடுக்கும் முதலாளியைவிட அள்ளி அணைக்கும் காதலியின் பேச்சுக்குத்தான் மதிப்பு அதிகம்'
'ராஜா, உனக்கு கார் ஓட்டத்தெரியுமா?'
'எக்ஸ்பர்ட்'
பாலாஜி கார் சாவியைத்தூக்கிப்போட (அதுக்கும் ஒரு சவுண்ட் கொடுப்பார் MSV), சாவி நடிகர்திலகம் கையில் கிடைத்த அடுத்த வினாடி, நீலநிறக்கார் போய்க்கொண்டிருக்கும் (அதுதான் சி.வி.ஆர்). மஸ்தானின் அற்புத ஒளிப்பதிவில், கார் குறுகலான சந்தில் போகும் காட்சி டாப் ஆங்கிளில் காட்டப்பட, மெல்லிசை மன்னர் சும்மாயிருப்பாரா?. தனது அதிரடி சவுண்டோடு Vocal Humming ஐயும் கலந்து அசத்துவார்.

நீ வர வேண்டும் பாடலில் முதலில் ஜெயலலிதா 
 ஒ ராஜா ... என்றவுடன் படிகளின் மேல் நின்று கொண்டு நடிகர் திலகம் அந்த கோட்.. டை ...பறக்க "ராஜா" என்று அவருக்கே உரித்தான ஸ்டைல்- இல் சொல்லுவார். உன்னிப்பாக ஒரிஜினல் ஜானி மேரா நாம் - ஐயும் ராஜா-வையும் கவனித்தால், ராஜா-வில் ஒவ்வொரு இடத்திலும் - ஒரு இடம் விடாமல் நடிகர் திலகம் வேறு விதமான ஸ்டைல்-இல் உணர்வு பூர்வமாகவும் ( அந்த கடைசி காட்சியிலும் தான் - ஒரு மாதிரி சிரிப்பாரே - பண்டரிபாய் -ஐ மனோகர் சவுக்கால் அடிக்கும் போது. எத்தனை கை தட்டல்கள் விழுந்திருக்கும் அந்த காட்சிக்கு !) கலக்கி இருப்பார். 

வட இந்தியாவில் தேவ் ஆனந்த்தை ஸ்டைல் மன்னன் என்று கூறுவார்களாம். - மற்றும் எவர்க்ரீன் ஹீரோ என்றும் கூட சொல்வார்களாம். 
நம் சிவாஜி செய்ததை நாம் என்ன சொல்ல..

 கல்யாணப்பொண்ணு பாடல்  இந்தியிலும் தமிழிலும் கதாநாயகனுக்கான உடையலங்காரம் ஒன்று போல இருக்கும்.டை கலர் மட்டும் சிவப்பு ராஜாவுக்கு.கண்ணாலே பாத்து துடிப்பது நானா என்னும் போது டை மட்டும் காற்றில் பறப்பது போலே பார்க்க அதுவும் ஸ்டைலாக இருக்கும்.
பாடலுக்கு முன்பு சிவாஜி ஜெயலலிதாவை வர்ணிக்கும் வசனம் கவிதையாக நிறைய ரசிக்கும்படி இருக்கும்.பாட்டு ,டான்ஸ் இரண்டும் ராஜாவில் தூள் கிளப்பும்.

கங்கையிலே ஓடமில்லையேயோ பாடல் காட்சியும் அதைத் தொடர்ந்து ஹீரோ போலீஸ் வேடத்தில் கோவிலுக்கு வந்து திருட்டு கும்பலை பிடித்து செல்லும்காட்சிகள்,ஒவ்வொரு விதமாக ஹீரோ ஹீரோயின் அறைக்குள் நுழைய முற்படும் இரண்டில் ஒன்று பாடல் காட்சி எல்லாம ஜானி மேரா நாம் படத்திலிருந்து அப்படியே தமிழிலும் இடம் பெற்றன.காட்சிகளில் வித்தியாசம் இல்லையென்றாலும்  சிவாஜி பல மடங்கு ரசிக்க வைப்பார்.

இறுதியாக சொல்ல வேண்டியது ,படத்தின் நீளமான அந்த க்ளைமேக்ஸ் காட்சி.அட்சரசுத்தமாக இரண்டு படத்திலும் அதே காட்சியமைப்புதான் ஒன்று மட்டும் மிஸ்ஸிங்.அது நடிப்பு.தமிழில் பின்னியிருப்பார்கள் எல்லோரும்.இதன் சிறப்பை மனோகர் பேசும் வசனமே சொல்லும்.விஸ்வமாக வரும் R.S.மனோகர் ரங்காராவிடம் சொல்வார்.'இங்க இருக்கவறங்க எல்லாரும் பெரிய நடிகர்கள்'என்பார் .அது மிகச் சரியானது.சிவாஜி சிரிப்பது போல அழும் காட்சியில்  தியேட்டர்களில் அலப்பறை பறந்தது என்றே சொல்ல வேண்டும்.

ஜானி மேரா நாம் படத்தின் கதையை மட்டுமல்ல, ரந்தாவா மற்றும் பத்மா கன்னா இருவரையும் கூட ஜானி மேரா நாம் படத்திலிருந்து இறக்குமதி செய்திருந்தார் பாலாஜி.

இந்தியில் வில்லனாக பிரேம்நாத் .அந்த வேடத்தை  தமிழில் ரங்காராவ் பின்னியிருப்பார்.

இந்தியில் தேவ்ஆனந்தின் அண்ணனாக பிரான் செய்த வேடத்தை தமிழில் பாலாஜி செய்திருப்பார்.பாலாஜி ஸ்டைலே தனி கெத்துதான்.

ஹேமாமாலினி செய்த வேடத்தை ஜெயலலிதா செய்திருப்பார்..

காட்சிகளை வைத்து சொல்லப்பட்டால்,இந்தியில் விளையாடப்பட்ட அதே ஆடுகளம்தான் தமிழிலும் ..
தமிழில் எல்லோரும் சிக்ஸர்களாக விளாசித் தள்ளியிருப்பார்கள்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற