1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

நீல வானம்

சிவாஜி தியேட்டரான சாந்தி திரையரங்க ஸ்கிரீனை காண்பித்து அந்த ஸ்கிரீனில் டைட்டில் ஓடுவதாக காட்டப்பட்ட திரைப்படம் நீலவானம்
அந்த டைட்டில் வரும்முன்பு சிவாஜியின் புதிய பறவை பாடலான சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து பாடல் ஒலிக்கும்.
சாந்தி திரையரங்கில் டிக்கட் கிழிக்கும் தியேட்டர் ஊழியராக
சிவாஜி நடித்திருப்பார்.
நீச்சல் குளத்திலேயே முழுப்பாடலும் எடுக்கப்பட்ட நடிகர்திலகத்தின் திரைப்படமும் நீலவானம் ஆகும்.இது படத்தின் முதல் பாடல்.
சாந்தி தியேட்டருக்கு தேவிகாவுடன் படம பார்க்க வருவார் சிவாஜி. அப்போது தியேட்டரில் ஒலித்து கொண்டிருக்கும் பாடல் பார்த்த ஞாபகம் இல்லையோ   ...

மிக வித்தியாசமான நடன அசைவுகளுடன் அழகாக எடுத்த பாடல் ஓ லிட்டில் பிளவர் ..

1965 ல் வெளிவந்த சிவாஜியின்  எல்லா( 5 )படங்களிலும் தேவிகா நடித்திருப்பார். பழனி அன்புக்கரங்கள் சாந்தி...திருவிளையாடல் ..
நீலவானம் தேவிகாவுக்கு மிக நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. நீலவானம் உச்ச நிலையில் கடைசி ஜோடிப்படமானது ஆச்சர்யமாக இருக்கிறது. நீண்ட வருடம் கழித்து சத்யம் படத்தில் ஜோடியாக நடித்திருப்பார்.

ராஜஸ்ரீயை லவ் பண்ணும் போது, ஒரு ஹேர் ஸ்டைலும், தேவிகாவை திருமணம் செய்த பின் வேறொரு ஹேர் ஸ்டைலும், தேவிகா இறந்த பின் பழைய ஹேர் ஸ்டைலுமாக! கலக்கி இருப்பார்  நடிகர் திலகம் .

சிவாஜி நடிப்பதில் இமேஜ் பார்க்காதவர் .தன் உருவத்தை வைத்து எழுதப்பட்ட வரியையும்  இமேஜ் பார்க்காமல் தான் நடித்திருப்பார் இந்த பட பாடலில்.உதாரணம் :உனக்கும் எனக்கும் உருவ பொருத்தமே என்று ஓ லிட்டில் பிளவர் பாடல் வரி வரும்.

செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்