சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

தஞ்சை மைந்தனும் ராஜராஜனும்

ஆண்டு 950 கால கட்டம்.

குந்தவை நாச்சியார்:
தம்பி ராஜராஜா,உன் எண்ணப்படிதான் மகாகோவில் வளர்ந்து கொண்டிருக்கிறதே!உன் முகத்தில் சற்று மாற்றம் தெரிகிறதே.என்ன விஷயம்?
ராஜராஜன்:
தமக்கையே!ராஜராஜன் மகா கோயிலை கட்டிக்கொண்டிருக்கின்றான் என்று ஊரே சொன்னாலும் அதைச் செய்தவன் என்னை ஆட்கொண்ட அந்த சிவனல்லவா.உலகையே ஆளும் சக்கரவர்த்தி என்றாலும் வாழ்நாள் சக்திகள் எல்லா மனிதர்களைப் போலத்தானே!
குந்தவை நாச்சியார்:
அப்படியல்ல ராஜராஜனே.செயற்கரிய காரியங்களை எல்லோராலும் செய்துவிடமுடியாது.உன் கடின உழைப்பும் விடாமுயற்சியும் திறமையுமே காரணம்.உன் போன்று சரித்திரத்தில் பெயர் சொல்ல ஒருவன் பிறப்பது அரிது.
ராஜராஜன் : !!!

*****

1973 மார்ச் 31
தமிழ் திரையரங்குகளில் ஒலித்த குரல்களும்,அந்த காலகட்டத்தில் வந்த ஏடுகளும்...

தலைவா!உண்மையான ராஜராஜனே உன்னைப்போல இருந்திருக்கமாட்டான்.

ராஜராஜ சோழனை யாரும்பார்த்திருக்க முடியாது.அவன் எப்படி இருந்திருப்பான் என்று கண்முன் நிறுத்தி விட்டாரே நடிகர்திலகம்.

ராஜராஜன் கூட இப்படி கம்பீரமாய் இருந்திருப்பானா?

ஒருவேளை அந்த ராஜராஜன்தான் இப்போது பிறந்து வந்துள்ளானோ?

இப்படி ஒரு தேஜஸ் அந்த மன்னனிடம் கூட இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

மாமன்னனுக்கு உயிர் கொடுத்த கலையுலக மன்னவா!இந்த சரித்திரத்தை மாற்ற எவராலும் இயலாது.
****

கைலாயத்தில் சிவனும் பிரம்ம தேவரும்:

சிவன:பிரம்ம தேவரே சில சமயங்களில் நீர் படைக்கும் படைப்பு நமக்கே அதிசயமாக உள்ளதே.முன்பு ராஜராஜன் என்னும் மன்னன் தன் வீரத்தால் பெரும் ராஜ்ஜியங்களை வென்று எல்லாவற்றுக்கும் சக்கரவர்த்தியாக ஆட்சி செய்தான்.எத்தனையோ வருடங்கள் முயற்சி செய்து
உலகே வியக்கும் ஆலயம் கட்டி முடித்தான்.அவனுடைய சாதனைகள் எல்லாம் போற்றத்தக்கதே.
அதனால் பெரும் சாம்ராஜ்யத்திற்கே அதிபதியாய் இருந்தனால் இந்த செயல்களை செய்ய முடிந்தது என்றும் கொள்ளலாம்.
பிரம்மதேவன்:
ஆம்.அய்யனே.நான் அவனைக்கண்டு பெருமைப்பட்டாலும் அதை விட இந்த கலைமகன் வியக்க வைத்து விட்டானே.30வருட வாழ்க்கைச்சரித்திரத்தை 3மணி நேரத்தில் வாழ்ந்து காட்டி எல்லோரையும் வாய் பிளக்க வைத்து விட்டானே.
சிவன்:
அது சரி பிரம்மதேவா. அவன் நானே அவதாரம் எடுத்தது போல் அரிதாரம் பூசி 
என்னையே வியக்க வைத்தவன் ஆயிற்றே.இனி நானே அந்த உருவில் பூலோகம் சென்றால் என் தோற்றத்திற்கு மதிப்பிருக்குமா என்று தெரியவில்லையே!
பிரம்மதேவர்:
ஆனாலும் என் மனதில் ஒரு ஆதங்கம் இல்லாமல் இல்லை. அது என்னவெனில்,அந்த கலைமகனின் திறமையை சில பூலோகவாசிகள் சரியாக அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்களே என்பதுதான் அது.
சிவன்:
மர்மப்புன்னகையுடன் மாயமாகிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற