சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜி என்ற மாமனிதனின் சுயம்

48 வருடங்களாக சிவாஜியின் நடிப்பை மாய்ந்து மாய்ந்து ரசித்தான் சிவாஜி ரசிகன்.
யோசிக்க எங்கே நேரம்? படையாய் வந்தன 300 படங்கள் .
பார்க்கிறான் ..
பார்க்கிறான்.
பார்த்துக்  கொண்டே தான் இருந்தான்..
சிவாஜி ரசிகன்.
சலிக்கவே இல்லை..
அவர் 300 படங்கள் தந்தார்.
ரசிகனோ  ஒரு படத்தையே 300 தடவை பார்க்கிறான்.
சிவாஜியின் நடிப்பு..நடிப்பு..
அதைத்தாண்டி அவன் கவனம் எதிலும் இல்லை.
கலையைப் பொறுத்த வரை
அது ஒன்றே அவனுக்கு..
..சட்டென அந்த ..
2001 ஜுலை 21 உடைந்து போனது.
அன்று அன்னைஇல்லத்தில் கூடிய கூட்டத்தை பார்த்து 
அவனே திகைத்துத்தான் போனான் ..
அப்போதிருந்து தான் அவனே யோசிக்கிறான்.
சிவாஜி செய்தவைகளை நினைத்து நினைத்து மாய்கிறான்.
சிவாஜியின் நடிப்பை விட அந்த மாமனிதனின் சுயம் அவனை கண்ணீரால் நனைக்கின்றது.
அடடே! சிவாஜியின் அந்த பக்கத்தையே நினைக்காமல் போய்விட்டோமே! அதன் பின், 
சிவாஜியின் பண்புகளும்,கொடைகளும்தான் அவன் கண் முன் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.
அவர் மரணத்துக்கு பின் தான் ஏராளமான செய்திகள் அவனுக்கு ஒவ்வொன்றாய் தெரியவருகின்றது.
அந்த ஊரில் பள்ளிகட்ட பணம் தந்தார்
அந்த ஊரில் மருத்துவமனை
கட்ட உதவினார்,
இந்த மக்களுக்கு இடம் வாங்கித் தந்தார்,
இப்படி எத்தனை எத்தனையோ தகவல்கள், செய்திகள் ...
இப்படி, 
தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிவாஜி உதவி செய்த ஏதோ ஒரு விஷயம் வந்து கொண்டுதான் இருக்கின்றது.
ராஜாக்கள் கூட கொடுத்ததை எல்லாம் கல்வெட்டில் பொறித்தார்களே!...
அவரும் கொடுத்து சொன்னதில்லை
வாங்கியவனும் சொல்லியதில்லை.
பின் எவனுக்கு தெரியும்?
வைரம் வர நாளாகும்.
என்றேனும் ஒரு நாள் நல்லவைகள் வராமல் போகுமா?
அப்படி வராமல் போனால்தான் செய்யும் புண்ணியங்களுக்கு 
என்ன தான் அர்த்தம்? 
சிவாஜியின் மரணத்தோடு தன்னை மறைத்துக் கொண்ட ரசிகர்கள் ஏராளம்.எல்லாம் நொறுங்கிப் போன இதயங்கள்.
தொலைக்காட்சிகளில் ,பழைய தியேட்டர்களில் வெளியாகும் சிவாஜி படங்கள் தான் சிவாஜி ரசிகனுக்கு இன்பமான நேரங்கள்.
இப்படித்தான் பல வருடங்கள்...

கர்ணன் வந்தான்.
அதற்கு பின் ஒரு எழுச்சி.
எழுச்சி என்றால் மாபெரும் எழுச்சி .
ஒரே நாளில் அதே பராசக்தி பாப்புலர் மீண்டும்.இடையில் சில தொய்வுதான் ,சிவாஜி ரசிகன் பாதையில்.மறுப்பதற்கில்லை.
காரணம் சிவாஜியின் இழப்புத்தான்.அதை உணரவே அவனுக்கு பல வருடங்கள்.இடைப்பட்ட காலங்களில் உண்மையான சிவாஜி ரசிகன் வெறுத்து ஒதுக்கினான்.எதை? சிவாஜியல்லாத உலகத்தை..
சிவாஜியின் மரணத்தை  இன்று வரை ஏற்காதவர்கள், மனதில் தாங்காதவர்கள் ஏராளம்.
பின் கர்ணன் வந்தானா?
அவனுடன் கொடையும் வருமே!
இப்போது நிறைய பேர் பேசுகிறார்கள்!
சிவாஜி கொடுத்தவைகளுக்கு யார் செய்ததும் ஈடாகாது என்று! 

இது மீடியாக்களுக்கு....
சிவாஜி என்றால்,
இந்த மீடியாக்கள்  எல்லாம் ஒன்றே ஒன்றைத்தான் 
பிதற்றும்..
அது...
"சிவாஜி தோற்றார் "
என்று...
மீடியா பிரம்மன்களே!
பத்திரிக்கை தர்மவான்களே!
இனி அடுத்த தேர்தல் வரும் போது,
திருவையாறு செல்லுங்கள்..
அங்கே ஒவ்வொருவர் வீட்டு கதவையும் தட்டுங்கள்!
அங்கே கேளுங்கள்!
உங்களின் ஐந்து வருடம் சுபிட்சமா? 
சிவாஜிக்கு வாக்களிக்காததால்,
நீங்கள் பெற்ற உயர்வு என்ன?
என்று....

செந்தில்வேல் சிவராஜ்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற