சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

வெட்கப்படவோ செல்லக்கிளி என வட்டமிடவோ... ரயிலில் ஒரு பாட்டு

பச்சைப்பசேல் என்று எங்கும் மரம் செடிகள் நிறைந்த பகுதி.கண்களுக்கு ரம்மியமான காட்சி. கூட்ஸ் ரயில் வண்டி ஒன்று மெதுவாக ஊர்ந்து வந்து கொண்டிருக்கிறது.அதிக பெட்டிகளை கொண்டதாய் நீளமாய் அந்த ரயில் வண்டி வளைந்து செல்லும் அழகு எல்லோரையும் கவரும்.மேலே இந்தப் பிரபஞ்சத்தை நினைக்க வைக்கும் நீல நிற ஆகாயம்.ரயில் வண்டி செல்லும் இருபுறமும் பசுமை நிறைந்த காட்டுப்பகுதி.இப்போது கூரையில்லாத அந்த திறந்த நிலைப்பெட்டிகளில் பயணம் செய்ய விரும்பாத மனமும் உண்டோ இப்பூவுலகில்?ஒரு ஆணும் பெண்ணும்ஆடிக்கொண்டு அந்த இன்பத்தை அனுபவித்துக்கொண்டு வருகிறார்கள்.அது மேலும் உற்சாகத்தை கூட்டுகிறதே. இப்போது அவர்கள் பாடத்தொடங்குவார்கள் போல் தெரிகிறது.அவர்கள் பாடும் அந்த பாட்டை சற்று கேட்போமா?
இப்போது அந்த மங்கைஹம்மிங் செய்கிறாள்.

ஹாஹாஹாஹாஆகாகாகாகேகேகே
குரலிலே குயில் போலும்.இவ்வளவு நேரம் அதிசயித்த அந்த இயற்கையையே மறக்கசெய்து விட்டதே.சில நேரங்களில் இயற்கையையும் மீறி ரசிக்க வைக்கும் ஆற்றல் மனிதர்களுக்கும் இருப்பதும் இயற்கைதானோ?

இப்போது ஒரு உயர்ந்த பாலத்தின் மேல் அந்த ரயில் சென்று கொண்டிருக்கிறது.கீழே அழகான நீர்நிலை.
மேலே ஆகாயம்,இடையில் பாலத்தில் செல்லும் ரயில்,கீழே ஒரு ஏரி. 
ரசித்த மனம் இப்போது பிரமிப்பில்.இயற்கையும்,
செயற்கையும் கலந்த கலவையான காட்சி அது.
காட்டுப்பகுதியை பிளப்பது போல் வந்து கொண்டிருக்கிறதுஅந்த நீள ரயில் வண்டி.
அவர்களே இந்தக் காட்சியின் பிரதானம்என்பதால் இனி மங்கை, மன்னவன் என்று அழைப்போம்.

மங்கை தொடங்குகிறாள்:
வெட்கப்படவோ செல்லக்கிளியென வட்டமிடவோ
மெல்லத்தொடுகையில்பூவாகி,
காயாகி,கனியாகி வண்ணம் பெறவோ
மங்கை முடித்ததும் மன்னவர் தொடர்கிறார்...
ஹஹாஹாஹாஹாக ஹேஹேகாஹஹாஹாஹாஹா
அடேங்கப்பா என்ன ஒரு வசீகரமான குரலய்யா.இந்த ஹஹஹாஹாஹாஹஹாவுக்குக் கே இப்படி ஒரு ஈர்ப்பு சக்தி என்றால் பாடலைக் கேட்டால்....

பக்கம் வரவோ பத்து விரல்களில்
பந்தல் இடவோ
வஞ்சிக்கொடியின் மேலாடை மேலாட
நூலாடைபோலாடஎண்ணம்
இல்லையோ

"மேலாடை மேலாட
நூலாடை போலாட" 
என்று பாடுவதை கேட்கத்தான் எத்தனை இன்பம்.
மறுபடியும் அந்த ஹம்மிங்.
ஹஹஹஹஹஹாஹாஹாஹாஹாஹாஹாகஹஹஹஹஹஹாகாகஹா
'இந்த ஹம்மிங்கில் இன்னும்இனிமை.

இனிமை மென்மை
அந்த 
மென்மை பெண்மையின் குரலில்
வெளிப்படும்போது கூடுதல் இனிமை.
ஆகாயப் பார்வையில் ரயில் நின்று கொண்டு இருப்பதை பார்ப்பதே அழகு.அது மலைப்பாதையில் ஊர்ந்து செல்வதை பார்ப்பது அழகிலும் அழகு.அப்படித்தான் இந்தக்காட்சிசெல்கிறது.
இருட்டான ஆகாயத்தில் முழுநிலவு
இருக்கும் போது பார்ப்பதற்கு எப்படி இருக்குமோ அது போல மலையை குகைபோல பாதையாக்கி.,அந்த குகைக்குள்ளிலிருந்து பார்த்தால் இருட்டு குகை வெளிப்பிரதேச வான் வெளிச்சத்தில் வான் +முழு நிலவுகாட்சியைப் போல் இருக்குமல்லவா?அதே போன்ற இடத்தை நோக்கித்தான் இந்த ரயில் பயணம் இப்போது ஆரம்பிக்கிறது.மன்னவனும்,
மங்கையும் இணைந்தபடி இருக்க
அந்தநீள் தொடர் ஊர்தி குகைக்குள் 
செல்ல ஆரம்பிக்கிறது.ஊர்தி குகைக்குள் நுழைய நுழைய பக்கவாட்டு காட்சிகள் சிறிது சிறிதாக மறைந்து கொண்டே வர,கண்ணில் ஏற்படும்" க்ளாக்கோமா"நோய் போல்
அந்தக்காட்சி கண்கள் காணும் பேரின்ப கவிதை.மன்னவனும்,மங்கையும் குகையை நெருங்கும் சமயம் அவர்களின் மேல் மட்டும் வெளிச்சம் பட்டு அவர்கள் அந்தரத்திலே நிற்பது போல காட்சி அளிக்கும் அந்தக் 
காட்சி க்கு மனம் மயங்கும். விழிகள் விரியும்.இப்படி ஒரு காட்சி கிடைக்கும் என்று யார்தான் யோசித்திருப்பார்கள்?
அந்த தண்டவாள ஊர்தி வட்டமான குகைப்பாதையில் நுழைந்ததும்
அந்த வட்டம் சிறிதாகி,மறைந்து இருள் சூழ்ந்து.,பின் சிறிது சிறிதாகபிறை போலஆரம்பித்து அந்த வட்டப்பாதை வெளிச்சம் பெறுவது,
கண்ணுக்கு கிடைத்த விருந்து.
மன்னவன் கீழே அமர்ந்திருக்க மங்கை நாணத்துடன்எழுந்து பொய்க்கோபத்துடன் நடக்கிறாள்.

மன்னவன் பாடுகிறான்:

நான் புஷ்பாஞ்சலிஒன்று செய்ய
நீ பொன்னோவியம் என்று மாற

மன்னவன் இடது புறமாக லேசாக சாய்ந்து வலது கையால்பாடல் வரிகளுக்கு காற்றில் அபிநயம் செய்வது வித்தைதெரிந்தவனின் ஜால வித்தை இது என்பது புரிகிறது.அவருடைய கை அசைவுகள் இவர் சாதாரண மனிதரில்லைஎன்பதை காட்டுகிறது."நான்ன்ன்ன் புஷ்பாஞ்சலி"என்று தொடங்குவது சுகமான ராகம்."நீ பொன்னோவியம் என்று மாற"என்பதை ஓவியம் வரைவது போல் காட்டும் விரல் அசைவுகள்
அதிக அலட்டல்கள் இல்லாமலும்
உடல் அசைவுகள் அதிகம் இல்லாமலேயே விரல்களின் அபிநயங்கள் மூலமாகக் கூட சிறந்த ரசிப்பை பார்ப்பவனுக்கு கொடுக்க முடியும் என்று மன்னவன் மூலம் நடிப்பை உணர முடிகிறது.

நான் புஷ்பாஞ்சலி ஒன்று செய்ய
நீ பொன்னோவியம் என்று மாற
அந்த ரசனைகளின் இந்த ரசிகையது 
தேர்தேர்தேர் என்று ஆட
இன்பக் கவிதைகளின்வண்ணம் முழுவதையும் பார்பார்பார் என்று பாட

வெட்கப்படவோ செல்லக்கிளியென வட்டமிடவோ
மெல்லத் தொடுகையில் பூவாகி,காயாகி,கனியாகி
வண்ணம் பெறவோ...

சில பாடல்களை கேட்கும்போது நம்மையறியாமலேயே தாளம் போட வைக்கும். அதற்கு அந்தப்பாடல் உற்சாகமான மெட்டிலும் ,குஷியான இசையிலும் அமைந்திருக்க வேண்டும்.அப்படி ஒரு மெட்டிலும் இசையிலும் அமைந்த பாடல்தான் இது.இப்படி ஒருமெட்டு,இசைக் கலவையில் ,தேன் மதுர குரல்களும் சேர்ந்து கொண்டால் பார்ப்பவர்களுக்கு கொண்டாட்டம்தானே!

ரயில் 
மலை 
அலுக்காது.பார்த்துக் கொண்டே இருக்கலாம் .இப்போது இரண்டையும் ஒன்றாகப் பார்க்கும்போது அந்த இன்பம் இன்னும் மேல்.உயர்ந்த அந்த பாலத்தில் ரயில் செல்லும் அந்தக் காட்சி தமிழ் சினிமாவின் அப்போதைய பிரமாண்டம்.அதிரடி பாட்டுக்கள் சண்டைக்காட்சிகளுக்கு மட்டுமே இது போன்றரயில்காட்சிகளை படம் பிடித்து வந்த தமிழ்திரையுலகில் ஒரு மென்மையான காதல் பாட்டுக்கு 
இந்த ரயில் பயண காட்சி படம் பிடிக்க பட்டிருப்பது புதுமையும் கூட.
யானைகள் நின்று கொண்டிருக்க மரம் செடி கொடிகளுக்கு இடையில் ரயில் செல்வது போல் படம் பிடிக்கப்பட்டிருப்பது காட்சிக்கு கூடுதல் சிறப்பு.

மங்கை பாடுகிறாள்:
நான் புல்லாங்குழல் என்று ஆக
நீ கண்ணன் விரல் என்று சேர

புல்லாங்குழல் இசை கேட்பது ஒரு சுகம் என்றால்,இங்கே புல்லாங்குழல் என்று பாடுவதைக் கேட்பதே அதனினும் சுகம்.
ரயில் செல்லும் விளைவால் பின்புல காட்சிகளும் மாயையால் நகர, அதனுடன் இருவரின் ஆடலும்,பாடலுமாயும் அந்தக் காட்சி 
இனிமையாக சென்று கொண்டிருக்கிறது.

நான் புல்லாங்குழல் என்று ஆக
நீ கண்ணன் விரல் என்று சேர
என்று அவள் முடிக்க,
சின்னக்கொடிமலர்கள் கன்னங்கரு விழிகள் பார்பார்பார் என்று துள்ள
மன்னவனின் காந்தமும் சாந்தமும் இணைந்த குரல் நம்மை மென்மையாக மயக்க,

தன்னந்தனிமையிது தனிமை இனிமையிது யார்யார்யார் தடை சொல்ல 
என பெண் முடிக்க.,
முடிப்பது மேலும் தொடராதோ
என நாம் ஏங்க...
ஒரு சுற்றுலா சென்று வந்த சந்தோசத்தை அளித்து விட்டது இப்பாடல்.

பாடல்:
பெண்:வெட்கப்படவோ செல்லக்கிளியென வட்டமிடவோ
மெல்லத்தொடுகையில் பூவாகி,காயாகி,கனியாகிவண்ணம் பெறவோ
ஆண்: பக்கம் வரவோ பத்து விரல்களில் பந்தலிடவோ
வஞ்சிக்கொடியின் மேலாடை மேலாட
நூலாடை போலாட எண்ணம் இல்லையோ
(வெட்கப்படவோ...
ஆண்:நான் புஷ்பாஞ்சலி ஒன்று செய்ய
நீ பொன்னொவியம் போன்று மாற
பெண்:அந்த ரசனைகளின் இந்த ரசிகையது தேர்தேர்தேர் என்று ஆட
ஆண்:இன்பக்கவிதைகளின் வண்ணம் முழுவதையும் பார்பார்பார் என்று பாட
(வெட்கப்படவோ.,
பெண்:நான் புல்லாங்குழல் என்று ஆக
நீ கண்ணன் விரல் என்று சேர
ஆண்:சின்னஞ்சிறு கொடிமலர்கள் கன்னங்கரு விழிகள் பார்பார்பார் என்று துள்ள
பெண்:தன்னந்தனிமையிது தனிமை இனிமையிது யார்யார்யார் தடை சொல்ல
(வெட்கப்படவோ...


செந்தில்வேல் சிவராஜ் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற