சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜியின் ரசிக்க வைக்கும் பஞ்ச் டயலாக்குகள் ...

தமிழ் சினிமாவின் கதைகளையும் வசனங்களையும் நன்றாக எழுகிறார்களோ  இல்லையோ,பஞ்ச் டயலாக் எழுதுகிறேன் பேர்வழி என்று மொக்கை மொக்கையாக எழுதித் தள்ளுகின்றனர் ..
அந்த பஞ்ச் டயலாக் செலவழித்த நேரத்தில் கதைகளுக்கும் வசனங்களுக்கும்  முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் ..
ஒரு வரி வசனம் எழுதினாலும் அது உருப்படியாக எழுத வேண்டும். வசனங்கள் என்று வந்துவிட்டாலே அது நடிகர் திலகத்தின் படங்களை தவிர வேறு எதை கூற முடியும் ? வசனம் அதற்கேற்ற நடிப்பு என்றால் நடிகர் திலகத்தின் ஞாபகம் தான் வரும் ..வசனமே இல்லாமல் கூட நடிப்பார் நடிகர் திலகம் ..ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கும் நடிகர் திலகத்தின் ஒருவரி வசனங்களை
நாம் பார்க்கலாம்  .

தமிழ்நாட்டின் முதல் குரலே நன்றாக இருக்கிறதே -இது பராசக்தி

என் வாழ் களத்திலேதான் விளையாடும் கனிகளை காயப்படுத்தாது-இது மனோகரா 

வேங்கை பதுங்கி போனாலும் விருந்தை கண்டால் சீர் கொண்டு கொண்டு எழும்-வீரபாண்டிய கட்டபொம்மன் 

அது என் குற்றமல்ல உன்னையும் என்னையும் படைத்தவனின் குற்றம் இது- உத்தமபுத்திரன் 

ஏன்  எப்படியும் சொல்லலாமே !இருண்ட வீட்டுக்கு ஒரு விளக்கு என்று -சாக்கரடீஸ் ஆக ,ராஜா ராணியில் ..

ஆனந்தா  !நான் என் கண்ணையே உன்கிட்ட நான் ஒப்படைக்கிறேன்.
அதில் எப்பவும் ஆனந்த கண்ணீரைத்தான்  நான் பாக்கணும் . -இது பாசமலர்..

சொற்சுவை  பொருட்சுவை அனைத்தும் கூட்டி சுந்தரத் தமிழில்  கவிபாடும் புலவன் நான்-திருவிளையாடல் 

எல்லோரையும் என்  பக்கம் திருப்பித்தான் பழக்கம்- இது தங்கப்பதக்கம் .

குழந்தே  குழந்தைன்னு கோகுலாஷ்டமி கொண்டாடினாலும் கம்சனுக்கு என்னமோ கிருஷ்ணன்  கர்ப்ப விரோதி தானடி - இது கௌரவம் பாரிஸ்டர் ரஜினிகாந்த்.

காக்கைக்குகூட  தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு சொல்லுவாங்களே அந்த காக்கையா நான் பிறந்திருக்க கூடாதா - இது தெய்வமகன்

கரையான் புற்றென்ன  கருநாகங்களுக்கு சொந்தமா? இது சத்ரபதி சிவாஜி  ராமன் எத்தனை ராமனடி .

உலகத்திற்கே நாகரிகத்தை கத்துக் கொடுத்த நாட்டில் பிறந்த மறத்தமிழன் பரம்பரையில பொறந்தவன்டி - இது மூக்கையா பட்டிக்காடா பட்டணமா

இதத்தான் அவங்க பாசங்கறாங்க!
அத நீ மோசம்கறயா -இது வசந்த மாளிகை ஆனந்த்.

எச்ச இல மேல பறந்தாலும் எச்ச இலை  தான். கோபுரம் கீழ சாஞ்சாலும்  கோபுரம் தான்.

என் வாழ்க்கை குட்டையில் ஓடிக்கொண்டிருக்கும் கழிவுநீர் அல்ல ..சுத்தமான மழைநீர் ..- இது டாக்டர் சிவா 

இவையெல்லாம் சாம்பிள்கள் தான். ஒவ்வொரு படத்திலும் ஏராளமான வசனங்கள் இதுபோல் உள்ளன. கடைசி காலத்தில் வெளிவந்த தேவர் மகனில் கூட, நடிகர் திலகத்திற்கு எழுதபட்ட வசனமான "வெத நாம் போட்டது இதெல்லாம் என்ன பெருமையா "
என்ற வசனம் தான் மீம்ஸ் உலகிலும் டாப்பாக உள்ளது ...

நன்றி!
செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற