சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

உங்களை விட்டால் வேறு யார் ?

உங்களை விட்டால் வேறு யார்? 
உதட்டுப் புன்முறுவலில் மறைத்து வைத்தீர்கள்.
அது காதலா? அன்பா? 
மெல்லிய புள்ளியில் ஒரு 
ராஜ பேரிகை காதல் சொன்னீர்கள்!
அழகாபுரியின் ஆனந்தாக!
இதைச் செய்ய 
எங்களை மயக்க 
உங்களை விட்டால் வேறு யார்?

பாசப் பார்வையில் சோறிட்டு 
அன்பு காட்டியதற்காக
வாழ்க்கையையே அர்ப்பணித்த 
பாபுவின் தியாகம் சொல்ல,
உங்களை விட்டால் வேறு யார்?

வாழ்ந்து மரணித்த காதலை 
மனதில் ஓரமாய் புதைத்து 
சோகத்தை மனதிலும், 
கம்பீரத்தை கண்களிலும்  காட்டி
உயர்ந்த மனிதராய் வாழ்ந்த
 சரித்திரத்தை சொல்ல 
உங்களை விட்டால் வேறு யார்?

உதட்டில் புன்னகையையும்
முகத்தில் சாந்தத்தையும் 
கொண்ட இளைஞன்  ரஹீமாக
பாத்திரமேற்றீர்கள்.
மதத்தை தாண்டியது மனிதம்
என்பதை அழகாக சொன்னீர்கள்.
எம்மதமும் இப்படியோர் இளைஞன் 
நமக்கும் கிடைப்பானா என ஏங்க வைத்தீர்கள்.
ரசிக்க வைத்த ரஹீமாக செய்ய உங்களை விட்டால் வேறு யார்?

வான் பொழியும் பூமி
தேன் சொறியும் காடு
மான் துள்ளும் பூமி 
சோழமண்டலம்.
நீதியின் பரிபாலனம் 
நீர்த்து போகாத தேசம்.
அரசே அநீதிக்கு தலை வணங்கியதால் 
அதை எதிர்த்து பொங்கியெழுந்த 
மனோகரனாக நீங்கள்.
இதற்கும் உங்களை விட்டால் வேறு யார்?

புதியபறவையில் நீங்கள் செய்தது என்னமோ கொலைகாரரர் பாத்திரம்தான்.
இத்தனை ஆண்டுகளாயினும் அது கவனத்தில் வருவதில்லை.
இதைச் செய்ய உங்களை விட்டால் வேறு யார்?

கொலைகாரனை,
கண்ணன் தண்டனைக்கு முயற்சிக்கிறான்.
ரஜினிகாந்த் விடுவிக்க முயற்சிக்கிறார்.
நியாயம் என்னவோ கண்ணன் பக்கம்தான்.
எல்லோரின் ஆதரவும் ரஜினிகாந்திற்கே!
எந்த ஊர் நியாயம் இது!
உங்களால் இந்த முரண் நியாயமாக்கப்பட்டது.
இதைச் செய்ய உங்களை விட்டால் வேறு யார்?

படம் முழுதும் ஒரே டிரஸ்தான்.
எதிர்பாராத கொலைகேஸ்ஸிலும் தண்டனை கைதி
குடிகாரன் கூட.
பாதி படத்தில் மீசையையும் எடுக்கணும்.
நிறைய அவமானப்பட வேண்டிய சீன்களும் உண்டு.
டூயட் பாட்டு கிடையாது.
ஆனால் படம் கிளாஸா இருக்கணும்
மாஸா ஹிட்டாகணும்.
யாரய்யா  செய்வான் இதை?
அதற்கும் உங்களை விட்டால் வேறு யார்?

செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற