இன்றைய தமிழ் சினிமா சீரழிய யார் காரணம்?
இன்னைக்கு ஒரு படம் ரிலீஸ் ஆச்சுன்னா அந்த படம் எப்படி இருக்குன்னு படம் பாத்துட்டு வர்றவங்கள கேட்டா ஒருத்தர் ரெண்டு பேர் இல்லேரொம்ப பேர்
படம் வேற லெவல், மாஸ், தெறி அப்படின்னு ரெண்டு மூணு வார்த்தைகளை தவிர வேற எதையும் சொல்ல மாட்டாங்க.
இந்த ரெண்டு மூணு வார்த்தைகளை தவிர வேற எதையும் சொல்லத் தெரியாதா?
அப்புறம் இன்னொரு வார்த்தையும் கூடவே சேர்த்து சொல்லுவாங்க. பக்கமே வர முடியாது ..என்ன பக்கமே வர முடியாது ..? எந்த தமிழ் படமும் பக்கத்திலேயே வராது அப்படிங்கற அர்த்தத்துல ..தமிழ்ல இதுவரைக்கும் 6000 படம் வந்து இருக்குது .அந்த 6000 படங்களும் பக்கத்துல வர முடியாதா இந்த படத்துக்கு ..
என்ன பேசணும் தெரிஞ்சு தான் பேசுறாங்களா ..
அதுல அந்த நடிகர் நடிச்ச படமும் இருக்குதுல்ல ...
இந்த மாதிரி ரசிகர் கிட்ட வந்து என்னைக்குமே நல்ல விமர்சனத்தை எதிர்பார்க்க முடியாது.
காலைல படம் பாக்க நடுராத்திரியே போய் தியேட்டர்ல உக்காந்துக்குறாங்க ரொம்ப பேரு.
அந்த தூக்க மப்பான்னு தெரியல .
படத்துல விஷயம் இருக்குதோ இல்லையோ அந்த நடிகரை காட்டுறப்ப எல்லாம் ஒரே காட்டுக்கத்தலா தான் இருக்கும் ,தியேட்டர் பூராவும்.
இந்த லட்சணத்தில படத்தை எப்படி பார்க்க முடியும்?
பெரும்பாலும் உச்ச நடிகர்கள் நடிக்கிற படங்களில் தான் இந்த மாதிரி பிரச்சனைகள் அதிகம்.
உச்ச நடிகர்கள் படத்துல அமைதியா இருந்தா மெதுவா பேசுவாங்க. சண்டை சீனுகன்னா ஒரே கத்தல் தான் மேக்ஸிமம் எல்லா படத்திலும். இதே ரியாக்சன் தான் பாக்குற ரசிகர்களும் செஞ்சிகிட்டே இருப்பாங்க.
ஒரு படம் ரெண்டு படம்னா பரவால்ல ..ரிலீசாகிற முக்காவாசி படங்கள் அப்படித்தான் ..
தரம்னு டெக்னாலஜியை நம்பி இருக்காங்க .நடிக்கிறதுக்கு உண்டான தரத்தை மேம்படுத்திக்கவே இல்ல .
இப்ப வெளியாகிற தமிழ் சினிமாவோட தரம் கெட்டுப் போறதுக்கு காரணம் அந்த மாதிரி நடிகர்களா? இல்ல இந்த மாதிரி ரசிகர்களாளா?
நாலு சண்டை, நாலு குத்து பாட்டுன்னு படம் ஒரு 40 நிமிஷத்துக்கு போயிரும். மொக்க டயலாக், மொக்க காமெடி, அப்படி இப்படின்னு கொஞ்சம் சீனுக, கதையை ஒப்பேற்ற கொஞ்சம் சீனுக அப்படின்னு படத்தை ஒரு ரெண்டரை மணி நேரத்துக்கு இழுத்து விடுவாங்க.மேல ஒரு வரில கதைன்னு தப்பா சொல்லிட்டேன்.
அன்னைக்கு கதைகளை செலக்ட் பண்ணி அதுக்கேத்த மாதிரி காட்சிகளா அமச்சாங்க .இன்னைக்கு டைரக்டரு மனசுல நாலஞ்சு காட்சிக கிளிக் ஆயிடுச்சுன்னா போதும் .அத வச்சு ஏதோ ஒண்ண கதைன்னு சொல்லி படத்தை ரெடி பண்ணிடுவாங்க.
ரெண்டு மூணு உச்ச நடிகர் கிட்ட தமிழ் சினிமா மாட்டிகிட்டு முழிக்குது. அந்த நடிகர் அதே மாதிரி பத்து படத்தை நடிச்சு
வெளியிட்டாலும் அத பாக்குறதுக்கு தயாரா இருக்கிறாங்க அந்த நடிகரோட ரசிகர்கள் .அந்தப் படத்த முதல் நாளு ஆயிரம் ரெண்டாயிரம் ரூபாய்னு கொடுத்து பாக்குறதுக்கும் தயாரா இருக்காங்க அந்த நடிகரோட ரசிகர்கள் .
படம் பாத்துட்டு வந்து அந்த ரசிகர்கள் சொல்றாங்க :
'என் தலைவனோட படத்தை இன்னும் 2000 வேணாலும் கொடுத்து பார்ப்பேன்னு..'
அந்த உச்ச நடிகர்க்கு 100 கோடி ரூபாய் சம்பளம் ,இந்த உச்ச நடிகருக்கு150 கோடி ரூபாய் சம்பளம் ,அப்படின்னு பேப்பர்ல நியூஸ் வந்தா போதும்..இந்த நடிகர்களோட ரசிகர்களுக்கு தலைகால் புரியாது ..என் தலைவன் தான் அதிக சம்பளம் ,என் தலைவன் தான் அதிக சம்பளம்னு பெருமையா பேசிக்குவாங்க ..
அது சரி உங்க தலைவர் அந்த படத்துல நடிச்சாரா ..?
இப்படி கேள்வியை கேட்டா அவங்க சொல்ற பதிலை கேட்டா நாமதான் மண்டைய பிச்சுக்கணும் ...
நடிகர்களுக்கு அவங்க சம்பளம் தான் முக்கியம்.அது எப்படின்னா முந்தின படத்துக்கு வாங்குனத விட ஜாஸ்தியா தான் வாங்குவாங்க.
ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் சம்பந்தமே இருக்காது. நடிப்புலேயா?இல்ல..
அது எதுலேன்னா , அவங்க வாங்குற சம்பளம் தான் .
இப்படி சம்பளம் கொடுத்தால் இந்த படம் 200 கோடி செலவில் எடுத்த படம், 300 கோடி செலவில் எடுத்த படம் அப்படின்னு சொல்லாம இருக்க முடியுமா?
வருசத்துக்கு ஒரு படம் இல்லைனா ரெண்டு படம் விடறாங்க .இதுல பாதி வேலை கம்ப்யூட்டர்லயே முடிஞ்சிருது.
இவங்களோட பலம் எதுக்கும் துணிஞ்ச ரசிகர் கூட்டம்தான்.போட்டியா படம் வந்தா அவ்வளவுதான்.இப்ப பெரும்பாலும் ஒரே காம்ப்ளக்ஸ்தானே.அந்த படம் சரியில்லேன்னா இந்த நடிகரோட ரசிகர்கள் அந்த நடிகரோட பேனர்களை கிழிக்க வேண்டியது.தாறுமாறா சண்ட போட வேண்டியது. தியேட்டரை உடைக்க வேண்டியது.இப்படித்தான் ஓடிட்டிருக்கு.இதையெல்லாம் செய்யறது நல்லா படிச்சி அதிக சம்பளம் வாங்கற கூட்டமா? இல்லே ஸ்கூல் படிப்ப தாண்டாத வொர்க்க்ஷாப்ல வேலை செய்யற கூட்டமான்னு ரொம்ப நாள் சந்தேகம்.
முதல் நாளு அந்த கூட்டத்தோட கூட்டமா பாக்கறப்போ அந்த மன கிளர்ச்சி,கூட்டத்தோட பாக்கறப்போ ஒரு உற்சாகம், ஒரே அலை வரிசை நண்பர்களோட சகவாசம், தப்புன்னு சொல்ல அங்க நல்ல பிரெண்டு இருக்க மாட்டாங்க, இவங்க படம், நல்ல நடிப்பு எல்லாம் முக்கியமா பாக்க மாட்டாங்க,நடிகர்களோட ஸ்டைல்லுன்னு அவங்களா நினச்சுக்கற விஷயங்கள் ,அதிக இரைச்சலோட வர்ற மியுசிக்,ரொம்ப கூட்டத்தோட ஆடற டான்ஸ், இது மாதிரி விஷயங்களில் தான் இவங்க மனசு இப்ப போயிட்டிருக்கு...
இப்படி நடிக்கிறத தான் ரசிகர்கள் விரும்பறாங்கன்னு நடிகர்கள் நினைச்சுகிட்டா என்ன அர்த்தம்? எல்லாம் அந்த வசூல் வேலைதான் காரணம். ஒரு டிக்கட்ட
200, 300 ன்னு ,படத்த 500 தியேட்டர் 600 தியேட்டர்னு போட்டு 3000 ஷோ 4000 ஷோன்னு ஒரு வாரம் போட்டா போதுமே? வசூல் வராம என்ன? இந்த வசூல் கணக்கே தப்புன்னு சொல்றதுதுக்கும் ஒரு கூட்டம் இருக்கு.இப்ப நம்மளுக்கு என்னனன்னா கொடுக்கிற காசுக்கு அந்த படம் வொர்த்தா ,படம் உருப்படியான்னுதான்.
அந்த ரசிகன இப்படி ஏமாத்தறமேன்னு நடிகர்கள் யோசிக்கறது உண்டா? அதெல்லாம் கிடையாது.படம் சேல்ஸ் ஆகணும்.ரொம்ப காசு பாக்கணும்.இது தான் குறிக்கோள் அவங்களுக்கு.
எந்த படம் பாத்தாலும் துப்பாக்கி இல்லேன்னா கத்தி, அருவா.
50, 100 ன்னு அடிட்யாளுக. எல்லா படத்திலும் எல்லா குண்டர்களையும் அடிச்சு துவம்சம் பண்ற கதா நாயகன்.வில்லனுக நம்பியாரு மாதிரி கத்தி பேச வேண்டாம்.எல்லா படத்துலேயும் ஹஸ்கி வாய்ஸ்ல தான் பேசணுமா?
ரசிகர்கள் இதைத்தான் விரும்பறாங்க அப்பிடின்னு நடிகர்கள் நினைச்சுங்கறாங்களா?
நம்ப தலைவன் எப்படி படம் கொடுத்தாலும் அதை குத்தம் சொல்லாம பாக்கறாங்களே ரசிகர்கள்?
இந்த ரெண்டும் எப்ப புரிஞ்சு எப்ப
தெளிவா ஆகப் போறாங்களோ?
பொதுவா சினிமா பாக்கறவன்
சினிமா பாக்காம இருந்து விடுவதுதான் மனசுக்கு நிம்மதி! காசும் மிச்சம்.
செந்தில்வேல் சிவராஜ்..
கருத்துகள்
கருத்துரையிடுக