சிவாஜியின் பாசிடிவ் சாங்ஸ்.
பாட்ட கேட்டா அது மனதுக்குள்ள போயி அந்த டயத்துல ரசிச்சு முடிக்கிறதோட முடிஞ்சிரக்கூடாது .அது காலமெல்லாம் வரணும் நம்ம மனச மாத்தணும். நல்ல விஷயத்தை சொல்லணும்.சிவாஜியோட இந்த பாடல்களை கேட்டால் அது நாம சாகுற வரைக்கும் வரும்.அதுதான் பாசிடிவ் சாங்ஸ்.
பச்சை விளக்கு படத்துல வர்ற அந்த ஒளிமயமான எதிர்காலத்தை பாட்டை கேளுங்க. இந்த பாட்டோட பெருமையை பத்தி சிவாஜி ரசிகர் யாரு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பொதுமக்கள் ஒரு தன்னம்பிக்கை ஒரு பாட்ட உதாரணமாக சொல்ல ஆரம்பிச்சாங்கன்னா இந்த பாட்ட தான் முதல்ல உதாரணமா சொல்லுவார்கள்.இந்த பாட்டுல ஒரே ஒரு விஷயம் மட்டும் சுத்தி சுத்தி வராது பலவகப்பட்ட விஷயத்தையும் இந்த பாட்டுல நம்ம பார்க்கலாம். பாட்டோட ஆரம்பம் எதிர்காலத்தை பத்தி பாடுற மாதிரி வரும். அப்புறம் ஒரு வீட்டுக்கு பெருமை சேர்க்கிற அந்த பெண் குலத்தோட பெருமையா பேசுற மாதிரி வரும்.
கூடவே இந்தியாவோட மதச்சார்பின்மை ,இந்தியாவோட மக்கள் பலம் எல்லாத்தையும் சேர்த்து எழுதி இருப்பார் கண்ணதாசன். வெறும் பாட்டா கேட்டுட்டு கடந்துட்டு போயிட முடியாது இந்த பாடலை கேட்டா.
நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கும். நெஞ்சிருக்கும் வரை படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை விட தன்னம்பிக்கை அளிக்கக்கூடிய பாடல் வேறு எதுவும் இருக்க முடியாது. சிவாஜி படத்துல சம்மந்தமில்லாமல் கதைக்கு பொருத்தம் இல்லாமல் பாடல் இருக்காது. கதையோட பொருந்தி வர்ற பாட்டாக தான் தன்னம்பிக்கை பாடல்கள் இருக்கும் .அதுக்கு ஒரு நல்ல உதாரணம் இந்த பாடல். இந்த படத்துல மூணு இளைஞர்கள் வேலை இல்லாம கஷ்டப்படுறாங்க. வறுமையில வாடறாங்க. அந்த சூழ்நிலையிலும் அவங்க தன்னம்பிக்கை இழக்கக்கூடாது என்பது போல அவங்க பாடுற மாதிரி பாட்டு. இது சமூகத்துக்கு தேவையான தன்னம்பிக்கை கருத்தாவும் அமைஞ்சு போச்சு .
சோம்பலா இருக்குறப்ப இந்த பாட்ட கேட்டா நல்லா சுறுசுறுப்பாக ஆக்கும் .
பலே பாண்டியா படத்துல வர்ற வாழ நினைத்தால் வாழலாம் பாட்டு. என்ன ஒரு அருமையான பாட்டு. மனுஷன் கஷ்டப்படுற போது தான் அவன் தன்னோட உயிரை விடலாமான்னு நினைப்பான்.இந்த சமயத்துல அவனுக்கு வேற ஏதும் வழி தெரியாது. வழி இருக்கும். ஆனா யோசிக்கிற மனநிலையில் அவன் இருக்க மாட்டான். இந்த மாதிரி ஆளுகளுக்கு தான் கவிஞர் எழுதுன பாட்டு இந்த பாட்டு.
பாசமலர் படத்தில் இடம்பெற்ற எங்களுக்கும் காலம் வரும் பாடல் ஒரு நல்ல பாசிட்டிவ் எனர்ஜியை தரக்கூடிய பாடல் ஆகும். இந்தப் பாடல் மற்றவர்களையும் வாழ வைப்போம் என்ற கருத்தை கேட்பவரின் உள்ளங்களில் தோன்ற வைக்கும் பாடல்.
படித்தால் மட்டும் போதுமா படத்தில் வரும் ஓஹோ மனிதர்களே ஓடுவதெங்கே சொல்லுங்கள் பாடல் மனிதனின் மனதில் தோன்றும் எதிர்மறை சிந்தனைகளை மாற்றச் சொல்லும் கருத்தை சொல்கின்றது.
அமர தீபம் படத்தில் இடம்பெற்ற நாணயம் மனுஷனுக்கு அவசியம் பாடல் மனிதன் நேர்மையாக நடக்க வேண்டும் என்பதை சொல்கின்றது ..
இளைய தலைமுறை படத்தில் இடம்பெற்ற நாளை என்ன நாளை இன்று கூட நமது தான் என்ற பாடல் இளைஞர்களை ஊக்குவிக்கும் தன்னம்பிக்கை பாடல் ஆக அமைந்திருந்தது.
சிவாஜியின் முதல் படமான பராசக்தி படத்திலேயே வந்த
கா கா கா ஆகாரம் உண்ண எல்லோரும் ஓடி வாருங்கள் பாடல்
நல்ல பாசிடிவ் எண்ணத்தை கொடுக்கறதோட ஒரு நல்ல சமூக சிந்தனையையும் அந்த பாடல் மனசுக்குள்ள தோற்றுவிக்கும் .
நான் பெற்ற செல்வம் நலமான செல்வம் பாடல்,
மணப்பாற மாடுகட்டி மாயவரம் ஏறு பூட்டி, மக்களைப் பெற்ற மகராசி பாடல்,
மலையே உன் நிலையே நீ பாராய் வணங்காமுடி பாடல்,
சிந்தனை செய் மனமே அம்பிகாபதி படத்தில் வரும் பாடல் ,
வீடு நோக்கி ஓடிவந்த நம்மையே பதிபக்தி படத்தில் வரும் பாடல் ,
முகத்தில் முகம் பார்க்கலாம் தங்கப்பதுமை படத்தில் வரும் பாடல்,
உள்ளதைச் சொல்வேன் சொன்னதைச் சொல்வேன் படிக்காத மேதை படத்தில் வரும் பாடல்,
எல்லோரும் கொண்டாடுவோம் பாவமன்னிப்பு படத்தில் வரும் பாடல்,
ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் நிச்சயதாம்பூலம் படத்தில் வரும் பாடல்,
உலகம் இதிலே அடங்குது குலமகள் ராதை படத்தில் வரும் பாடல்,
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும் பழனி படத்தில் வரும் பாடல்,
ஒண்ணா இருக்க கத்துக்கணும் அன்பு கரங்கள் படத்தில் வரும் பாடல்,
பாட்டும் நானே பாவமும் நானே திருவிளையாடல் படத்தில் வரும் பாடல்,
கல்வியா செல்வமா வீரமா சரஸ்வதி சபதம் படத்தில் வரும் பாடல்,
கேட்டவர் எல்லாம் பாடலாம் என் பாட்டுக்கு தாளம் போடலாம் தங்கை படத்தில் இடம்பெற்ற பாடல்,
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே திருவருட்செல்வர் படத்தில் வரும் பாடல்,
ஊட்டி வரை உறவு படத்தில் வரும் ஹேப்பி இன்று முதல் ஹேப்பி பாடல்,
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா தெய்வமகன் படத்தில் வரும் பாடல்,
நான் தன்னந்தனி காட்டு ராஜா எங்க மாமா படத்தில் வரும் பாடல்,
ஏரு பெருசா இந்த ஊரு பெருசா விளையாட்டுப் பிள்ளை படத்தில் வரும் பாடல் ,
பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் சொர்க்கம் படத்தில் வரும் பாடல்,
ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் சவாலே சமாளி படத்தில் வரும் பாடல்,
நடப்பது சுகமென நடத்து மூன்று தெய்வங்கள் படத்தில் வரும் பாடல்,
பாபு படத்தில் வரும் வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா பாடல்,
இசை கேட்டால் புவி அசைந்தாடும் தவப்புதல்வன் படத்தில் வரும் பாடல்,
உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வண்ணம் சிவகாமியின் செல்வன் படத்தில் வரும் பாடல்,
உலகம் பெரிது சாலைகள் சிறிது கிரகப்பிரவேசம் படத்தில் வரும் பாடல்,
வணக்கம் பலமுறை சொன்னேன் அவன் ஒரு சரித்திரம் படத்தில் வரும் பாடல்,
இப்படி இந்தப் பாடல்களை கேட்கும்போது மனதில் நேர்மறையான எண்ணங்களை விதைப்பதுடன் புத்துணர்ச்சியும் சந்தோஷத்தையும் கொடுக்கும்படி இருக்கின்றது .
இங்கே குறிப்பிட்டவை எல்லாம் ஒரு தனி தலைப்பில் அமைந்த பாடல்கள். அதை மட்டுமே சிவாஜி செய்தார் இல்லை.
குடும்ப உறவுகளைப் பற்றிய பாடல்கள், தேசத் தலைவர்களைப் பற்றிய பாடல்கள், நாட்டைப் போற்றும் பாடல்கள், இப்படி பலவிதமான தலைப்புகளில் அவருடைய பாடல்கள் அடங்கும். இப்படி எல்லா வகையான கலவைகளிலும் அமைந்த பாடல்கள் சிவாஜி பட பாடல்கள் மட்டும் தான்.
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக