சினிமாவுக்காக சிவாஜி சென்ற வெளிநாடுகள் ...
இப்போதெல்லாம் பல தமிழ் படங்கள் வெளிநாடுகளில் தான் படமாக்கப்பட்டு வருகின்றன. அப்படி இல்லையெனில் ஒரு பாடலுக்கு டூயட் பாடவாவது வெளிநாட்டிற்கு சென்று விடுகிறார்கள். உண்மையாகவே படத்திற்கு அந்த வெளிநாட்டு காட்சிகள் தேவையா அல்லது படப்பிடிப்பை சாக்காக வைத்து ஊர் சுற்றி பார்க்கிறார்களா என்று தெரியவில்லை.
சரி அதெல்லாம் இருக்கட்டும் தமிழ் சினிமாவில் வெளிநாடுகளில் சென்று படப்பிடிப்பு நடத்தும் கலாச்சாரம் எப்போது தோன்றியது என்று தெரியுமா? முதன் முதலில் எந்த தமிழ் படத்தை வெளிநாட்டில் சென்று படமாக்கினார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? அந்த தகவலை தான் நாம் இதில் பார்க்க போகிறோம்.
அதன்படி இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் கடந்த 1969ஆம் ஆண்டு வெளியான சிவந்த மண் என்ற தமிழ் படம் தான் முதன் முதலில் வெளிநாட்டில் படமாக்கப்பட்டது.இந்த படத்தில் சில காட்சிகளுக்காக யூரோப், ஈபிள் டவர் மற்றும் ஆல்ப்ஸ் மலைஆகிய இடங்களுக்கு சென்று படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள்.
இந்த படம் கிட்டத்தட்ட 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இடம்பெற்ற வெளிநாட்டு காட்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே இந்த படம் வெளியான பின்னர் தான் அனைத்து இயக்குனர் மற்றும் ஹீரோக்களுக்கு தாங்களும் வெளிநாடு சென்று படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்ற ஆசை வந்ததாம்.இந்தப் படம் வெளிவந்த ஆண்டு 1969
நடிகர் திலகத்தின் 175வது படம் அவன் தான் மனிதன். இந்தப் படத்தின் ஆரம்பக் காட்சிகள் ,சிவாஜி மஞ்சுளா பாடல் காட்சிகள் ,இன்னும் பல காட்சிகள் சிங்கப்பூரில் படமாக்கப்பட்டன.
சிவாஜி கணேசன் மஞ்சுளா ஜோடியாக நடித்த படம் இது இயக்கியவர் A.C.திருலோக சந்தர்.
படம் வெளிவந்த ஆண்டு 1975.
இயக்குனர் முத்தா ஸ்ரீனிவாசன் தன் சொந்தப்பட நிறுவனமான முக்தா பிலிம்ஸ் மூலமாக நடிகர் திலகத்தை வைத்து தயாரிக்கப்பட்ட படம் அந்தமான் காதலி. முழு திரைப்படமும் அந்தமானில் எடுக்கப்பட்டது.
அந்த மானின் முழு அழகையும் தமிழ் ரசிகர்கள் பார்த்து ரசித்தார்கள் இந்தப் படம் மூலமாக .நடிகர் திலகத்தின் திரைப்படம் ஒன்று முதன்முதலாக முழுக்க முழுக்க வெளிநாட்டில் எடுக்கப்பட்டது அந்தமான் காதலி திரைப்படம் தான். கண்ணை கவரும் அந்தமானின் அழகை நம் கண் முன் நிறுத்தியது அந்தமான் காதலி.படம் வெளிவந்த ஆண்டு 1978.
இந்திய இலங்கை கூட்டு தயாரிப்பான பைலட் பிரேம்நாத் திரைப்படம் முழுக்க இலங்கையில் எடுக்கப்பட்டது.
நடிகர் திலகத்திற்கு ஜோடியாக இலங்கை திரைப்பட நடிகை மாலினி பொன்சேகா நடித்திருப்பார். படத்தை இயக்கியவர்
ஏசி திருலோகச்சந்தர் .படம் வெளிவந்த வருடம் 1978
அந்தமான் காதலி படத்தை எடுத்த முத்தா பிலிம்ஸ் நிறுவனமே நடிகர்திலகத்தை வைத்து எடுத்த திரைப்படம் இமயம். இந்தப் படம் நேபாளத்தில் படமாக்கப்பட்டது. அந்தமான் காதலியில் அழகு நிறைந்த இயற்கை காட்சிகளும் ,அந்தப் படத்தின் வெற்றியும் முத்தா பிலிம்ஸ்க்கு இந்தப் படத்தை எடுக்க தூண்டுகோலாக அமைந்தன.இந்தப் படம் வெளிவந்த ஆண்டு 1979.
நடிகர் திலகத்தின் அடுத்த வெளிநாட்டு படம் தர்மராஜா. இந்த படத்தின் படப்பிடிப்பு சிங்கப்பூர் டோக்கியோ ஹாங்காங் பேங்க்காக் ஆகிய வெளிநாட்டு நகரங்களில் படம் பிடிக்கப்பட்டது. இந்தப் படத்தை தயாரித்தவர் சின்ன அண்ணாமலை.இந்தப் படம் வெளிவந்த ஆண்டு 1980
.சிவாஜி புரொடொக்ஷன் தயாரித்த படம் ரத்த பாசம். இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் நடித்திருப்பார் நடிகர் திலகம். இந்த படத்தின் சில குறிப்பிட்ட காட்சிகள் வெளிநாட்டில் படம் பிடிக்கப்பட்டன. படத்தின் பெரும் பகுதி வெளிப்புற படப்பிடிப்பு ஸ்பெயின் ரோம் லண்டன் நகரங்களில் படமாக்கப்பட்டது. இந்தப் படம் வெளியான ஆண்டு 1980.
ஸ்ரீதரின் இயக்கத்தில் உருவான படம் மோகனப் புன்னகை. இந்தப் படமும் இலங்கையில் எடுக்கப்பட்டது. படம் வெளியான வருடம் 1981. இலங்கையில் எடுக்கப்பட்ட நடிகர் திலகத்தின் இரண்டாவது படம் மோகனப் புன்னகை.
அடுத்ததாக வெளிநாடு சென்று நடித்த படம் வசந்தத்தில் ஒரு நாள். நாடு மலேசியா.இந்த படத்தை இயக்கியவர் ஏசி திருலோகசந்தர்.
சிவாஜி கணேசன் ஸ்ரீபிரியா நடித்த படம் இது.
இந்தப் படம் வெளி வந்த ஆண்டு 1982
1984 இல் வெளியான நடிகர் திலகத்தின் திரைப்படம் சிரஞ்சீவி. முழுக்க முழுக்க கப்பலிலேயே எடுக்கப்பட்ட படம் சிரஞ்சீவி. இந்தப் படம் கப்பலிலேயே எடுக்கப்பட்டிருந்தாலும் காட்சிகள் படம் எடுக்கப்பட்டவை சிங்கப்பூர் துறைமுகமும் அதை அதை சுற்றிய கடல் பகுதிகளும் தான் .
இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் கே சங்கர்
1986 இல் வெளியான படம் விடுதலை. இந்தப் படம் ஹிந்தி படமான குர்பானி படத்தின் ரீமேக் ஆகும். படத்தின் தயாரிப்பாளர் கே பாலாஜி. இந்தப் படத்தின் பிற்பகுதி படப்பிடிப்பு அமெரிக்காவில் எடுக்கப்பட்டது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரஜினிகாந்த் விஷ்ணுவர்தன் நடித்த படம் இது.
வெளிநாட்டில் எடுக்கப்பட்ட நடிகர் திலகத்தின் கடைசி படம் விடுதலை.
செந்தில்வேல் சிவராஜ் ..
கருத்துகள்
கருத்துரையிடுக