சிவாஜி கணேசன் முதல் 100 படங்களில் செய்த சாதனைகள்.
சிவாஜி கணேசன் நடித்த முதல் படம் பராசக்தி .வெளிவந்த ஆண்டு 1952. 100;வது படமான நவராத்திரி வெளிவந்த வருடம் 1964.
சிவாஜி கணேசன் முதல் 100 படங்களை12 வருடங்களில் நடித்து முடித்தார்.
தமிழ் சினிமா திரையுலகில் முதல் நூறு படங்களை பன்னிரண்டு வருடங்களில் நடித்து முடித்த முதல் நடிகர் சிவாஜி கணேசன் தான்.
1952 ஆம் வருடம் நடிகர் திலகம் நடித்த வெளிவந்த படங்கள் இரண்டு .முதல் படமே வருடக் கடைசி அக்டோபர் மாதத்தில் தான் வெளியானது. மீதம் 98 படங்களை 11 வருடங்களில் நடித்து முடித்தார். வருடத்திற்கு சராசரியாக எட்டு படங்களில் நடித்து சாதனை புரிந்திருக்கிறார் சிவாஜி கணேசன்.
இந்த நூறு படங்களில் வெள்ளிவிழா ஓடிய திரைப்படங்கள் ;
பராசக்தி
சம்பூர்ண ராமாயணம்
வீரபாண்டிய கட்டபொம்மன்
பாகப்பிரிவினை
இரும்புத்திரை
பாவ மன்னிப்பு
பாசமலர்
100 படங்களில் நடிகர்திலகம் நடித்து வெள்ளி விழா ஓடிய படங்கள் ஏழு..
100 நாள் ஓடிய திரைப்படங்கள் :
திரும்பிப் பார் ,மனோகரா ,கல்யாணம் பண்ணியும் ,,"பிரம்மச்சாரி ,தூக்குத்தூக்கி ,எதிர்பாராதது, காவேரி ,மங்கையர் திலகம் ,நான் பெற்ற செல்வம், தெனாலிராமன், பெண்ணின் பெருமை ,அமர தீபம், மக்களைப் பெற்ற மகராசி, வணங்காமுடி ,புதையல் ,
தங்கமலை ரகசியம் ,உத்தமபுத்திரன் ,
பதி பக்தி ,அன்னையின் ஆணை, சபாஷ் மீனா,தெய்வப் பிறவி, படிக்காத மேதை, தங்கப்பதுமை ,விடிவெள்ளி,
பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, பந்தபாசம், ஆலயமணி,இருவர் உள்ளம் அன்னை இல்லம், கர்ணன், பச்சை விளக்கு,கை கொடுத்த தெய்வம், புதிய பறவை ,நவராத்திரி
100 நாள் ஓடிய படங்கள் 37.
ஆக 7 வெள்ளி விழா 7 படங்களையும் சேர்த்து மொத்தம் 100 நாள் ஓடிய படங்கள் 44.
சிவாஜியின் முதல் 100 படங்களில் கலர் படங்கள் 3.அவை:
வீரபாண்டிய கட்டபொம்மன்
கர்ணன்
புதிய பறவை
அம்பிகாபதி ,தங்க மலை ரகசியம் ஆகிய படங்களில் சில காட்சிகள் மட்டும் வண்ணத்தில் எடுக்கப்பட்டு முதல் ரிலீசில் வெளியாகின.
சிவாஜியின் 100 படங்களில் 97 படங்கள் கருப்பு வெள்ளை படங்கள். கருப்பு வெள்ளை படங்களில் அதிக சாதனை செய்தவர் சிவாஜி.
கறுப்பு வெள்ளை திரைப்படங்களில் 6 படங்கள் வெள்ளிவிழா ஓடி சாதனை படைத்தவை.
நடிகர் திலகம் நடித்த தெலுங்கு படங்கள் :
பரதேசி
பெம்புடு கொடுகு
மனோகரா
பராசக்தி தெலுங்கு
பொம்மள பெள்ளி
நடிகர் திலகத்தின் மனோகரா திரைப்படம் இந்தியிலும் வெளியிடபட்டது .
தமிழ் இந்தி தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்த முதல் கதாநாயகன் சிவாஜி மட்டுமே .
100 படங்களில் நடிகர் திலகம் நடித்த இரட்டை வேட படங்கள் :
உத்தமபுத்திரன் ,அன்னையின் ஆணை
சிவாஜி நடித்த மூன்று வேட படம் பலே பாண்டியா.
இந்த நூறு படங்களில் தான் உலக சாதனை படைத்த ஒன்பது வேடங்களை செய்த நவராத்திரி படம் வெளியானது. நடிகர்திலகத்தின் நூறாவது படம் என்ற சிறப்பும் இதற்கு உண்டு. அந்த சிறப்புக்கும் சிறப்பு சேர்த்த படம் தான் இது.
இந்த முதல் நூறு படங்களில் தான் திரை உலகில் ஒரு புதுமையான படத்தையும் நடிகர் திலகம் செய்தார். அது நிறைய பாடல்களை கொண்டு திரைப்படங்கள் வெளிவந்த அந்தக் காலத்தில் வெளிவந்த பாடல்களே இல்லாத அந்த நாள் திரைப்படம் ஆகும்.
முதல் நூறு படங்களில் நடிகர் திலகம் நடித்து வெளியான சரித்திர படம் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன்.
புராணப்படங்கள்:
சம்பூர்ண ராமாயணம் ,கர்ணன்
நடிகர் திலகத்தின் முதல் படம் பராசக்தி
25 வது படம் கள்வனின் காதலி ஐம்பதாவது படம் சாரங்கதாரா
75 வது படம் பார்த்தால் பசி தீரும் நூறாவது படம் நவராத்திரி.
சிவாஜி நடித்து 1952 இல் வெளிவந்த படங்கள் 2
53 ல் வெளியான படங்கள் 7
54 இல் வெளியான படங்கள் 10
1955 இல் வெளியான படங்கள் 6
56-ல் வெளியான படங்கள் 9
1957 இல் வெளியான படங்கள் 9
58 ல் வெளியான படங்கள் 9
59 ல் வெளியான படங்கள் 6
60 ல் வெளியான படங்கள் 8
61-ல் வெளியான படங்கள் 8
62 ல் வெளியான படங்கள் 9
63 ல் வெளியான படங்கள் 10
64 வெளியான படங்கள் 7
இவற்றில் 54 ஆம் வருடமும் 63 ஆம் வருடமும் தலா 10 படங்களில் நடித்து சாதனை புரிந்திருக்கிறார் சிவாஜி.
1956, 57 ,58 ,62 ஆகிய வருடங்களில் தலா 9 படங்களில் நடித்து சாதனை புரிந்திருக்கிறார் .
1956, 57 ,58 ஆகிய தொடர்ந்த மூன்று வருடங்களில் தலா ஒன்பது படங்களில் நடித்து சாதனை செய்திருக்கிறார்.
நடிகர்திலகம் வித்தியாசமாக செய்த வேடங்கள்:
எதிர்மறை கதாநாயகனாக செய்த திரும்பிப்பார்,
நடிக்க வந்த அடுத்த வருடத்திலேயே மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்ட மனோகரா,
நாட்டையே காட்டிக் கொடுக்கும் தேச துரோகியாக பாடல்களே இல்லாத அந்த நாள் ,
காதலியே சித்தியாக வந்த எதிர் பாராதது,
கல்கியின் நாவலான கள்வனின் காதலி,
தெனாலிராமனின் பிரதாப கதை,
அண்ணாவின் கதையான ரங்கோன் ராதா ,
கொங்கு பாஷை பேசிய மக்களைப் பெற்ற மகராசி,
பாதி படம் டார்ஜானாக நடித்த தங்கமலை ரகசியம்,
கம்பர் மகன் அம்பிகாபதியின் கதை,
இரட்டை வேடம் செய்த உத்தமபுத்திரன்,
பரதனை கண்டேன் என்று ராஜாஜி சொன்ன சம்பூர்ண ராமாயணம்,
பழிவாங்கும் கதையை வித்தியாசமாக சொன்ன அன்னையின் ஆணை,
சந்திரபாபு உடன் இணைந்து காமெடி செய்த சபாஷ் மீனா,
காத்தவராயன் கதை,
கட்டபொம்முவின் வீர வரலாறு,
கை ஊனமுற்றவராக நடித்த பாகப்பிரிவினை,
தொழிலாளர் பிரச்சனை பற்றி பேசிய இரும்புத் திரை ,
இஸ்லாம் சமுதாயத்துக்கு பெருமை சேர்த்த பாவமன்னிப்பு,
பாசக் கதை சொன்ன பாசமலர்,
வ உ சி யின் வாழ்க்கையை சொன்ன கப்பலோட்டிய தமிழன்,
ராணுவ வீரனாக நடித்த பார்த்தால் பசி தீரும்,
மூன்று வேடங்களில் நடித்த பலே பாண்டியா,
வறட்டு கௌரவ பணக்காரனாக நடித்த பார் மகளே பார் ,
தேசத்துக்காக வாழ்ந்த வீரனின் கதை சொன்ன ரத்தத் திலகம்,
கர்ண மகா காவியம்,
இன்றைய தொழில்நுட்பங்களே வியக்கும்படியாக அன்றே செய்த புதிய பறவை ,
நவரசங்களை பிழிந்த நவராத்திரி ...
என்பவை குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் ...
சிவாஜியின் இந்த நூறு பட சாதனைகளில் சில குறிப்பிட்ட தகவல்கள் மட்டும் இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
செந்தில் வேல் சிவராஜ் ...
கருத்துகள்
கருத்துரையிடுக