சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

71 வயதிலும் சபரிமலைக்கு சென்ற சிவாஜி

71 வயதிலும் சபரிமலைக்கு சென்று வந்த சிவாஜி...



நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் 1999 ஆம் வருடம் சபரிமலை சென்றார். அப்போது தன் மனைவி கமலா அம்மாவையும் சபரிமலைக்கு அழைத்துச் சென்றார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கமலா அம்மாவோடு சபரிமலைக்கு சென்றது அதுதான் முதலும் கடைசியுமான நிகழ்ச்சியாகும்.
சிவாஜி அவர்கள் அதற்கு  முன்பு 1987 ஆம் வருடம் தான் சபரிமலைக்கு சென்று இருந்தார்.கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து 1999 ஆம் வருடம் தான் சபரிமலைக்கு சென்றார். சிவாஜி அவர்கள் சபரிமலைக்கு சென்றது 20 தடவைகளுக்கு மேல் இருக்கும்.
இதற்கு முன்பு பல தடவை சபரிமலை சென்ற போது நம்பியார் தலைமையில் இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று இருக்கிறார்.
1999 ஆம் வருடம் அவர் சபரிமலைக்கு சென்ற போது அவருடன் அவரது மனைவி கமலம்மாள் மகன் நடிகர் பிரபு தம்பி மகன் கிரி தங்கை மகன் குமார் பேரன் ஆகியோரும் சென்றார்கள்.
அன்னை இல்லத்திலேயே விசேஷ பூஜை நடத்தி இருமுடி கட்டும் நிகழ்ச்சி முடிந்ததும் மாலையில் சிவாஜி கணேசனும் அவரது மனைவி கமலாமாலும் மகன் பிரபுவும்  மற்றவர்களும் ரயில் மூலம் சபரிமலை புறப்பட்டு சென்றார்கள். கோட்டயத்தில் இறங்கி அங்கிருந்து கார் மூலம் பம்பை சென்று பின்னர் சபரிமலை சென்றார்கள்.
சிவாஜி அவர்கள் 12 ஆண்டுகளுக்குப் பிறகு 1999 ஆம் வருடம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றார்.
சிவாஜி அவர்கள் சபரிமலை செல்வதற்கு முதல் நாள் கருணாநிதியை  சந்தித்து பேசினார். அந்த நிகழ்வை கேள்விப்பட்ட சில நிருபர்கள் சிவாஜி அவர்கள் திமுகவில் சேரப் போவதாக சில பத்திரிகைகளில் செய்தியை பரப்பினார்கள். 


இதை அறிந்த மற்ற சில பத்திரிக்கை நிருபர்கள் அவரை அன்னை இல்லத்தில் சந்தித்து பேசினார்கள்.
அப்போது நிருபர்களிடம் நடிகர் திலகம் கூறியதாவது :
நான் நேற்று என் நண்பர் கருணாநிதியை சந்தித்தது பற்றி அறிந்த ஒரு பத்திரிக்கை நான் திமுகவில் சேரப் போகிறேன் என்று  பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டு உள்ளது. சும்மா சந்தித்தால் கூட அரசியலில் சேருகிறான் என்று கூறுவதா?
என் நண்பர் உயர்ந்த இடத்தில் இருக்கிறார் .என் நண்பர் உயர்ந்த இடத்தில் இருப்பதை பார்க்க எனக்கு சந்தோசமாக இருக்கிறது .அவர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும். அவர் நல்ல உடல் நலத்தோடு நீண்ட காலம் வாழ வேண்டும் என விரும்புகிறவன் நான்.

இப்போது இங்கு ஐயப்ப பூஜை நடந்தது ..

இந்த பூஜையில் கூட என் நண்பர் உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என்றுதான் வேண்டிக் கொண்டேன். நண்பரை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் போய் பார்ப்பேன் உடல் நலம் பற்றி விசாரிப்பேன் இது வழக்கமாக நடைபெறுவதுதான் .நேற்று சந்தித்தபோது கூட என் உடல்நிலை பற்றி வருத்தப்பட்டார் .நான் சமீபத்தில் இரண்டு தடவை உடல் நலம் சரியில்லாமல் ஆஸ்பத்திரிக்கு போய் செக் அப் செய்தேன் .

அதை தெரிந்து கொண்ட நண்பர் கருணாநிதி என்னிடம் ஏன் தெரிவிக்கவில்லை ? என்று கடிந்து கொண்டார்.

கலைஞர் மீது எனக்கும் என் மீது கலைஞருக்கும் இடையே அப்படி ஒரு பாசம். நீண்டகால நண்பர் அல்லவா இந்த பாசத்தை அரசியல் ஆக்கிவிட்டார்களே, நான் அரசியலை விட்டு விலகி பல வருடம் ஆகிவிட்டது எனக்கு வயதாகிவிட்டது இனிமேல் போய் எந்த கட்சியில் சேர வேண்டிய அவசியமோ நிர்ப்பந்தமோ எனக்கு இல்லை காமராஜர் இருந்தபோது அவருக்காக ஓடி ஓடி உழைத்தேன். அவரும் போய் சேர்ந்து விட்டார். அப்போது நானும் அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும் .ஆனால் அப்படி செய்யாமல் தொடர்ந்து அரசியலில் இருந்தேன் பாருங்கள் அதுதான் மாபெரும் தவறு.

இப்போது நான் எந்த அரசியலிலும் இல்லை. எந்த கட்சியிலும் இல்லை .சந்தோஷமாக இருக்கிறேன் சில மாதங்களுக்கு முன்பு என் மனைவியை காசிக்கு கூட்டிட்டு போய் வந்தேன் .ரொம்ப சந்தோஷப்பட்டார் .

முன்பு வடக்கே போனேன் .இப்போது தெற்கே போகிறோம் .என் மனைவிக்காக இப்போது சபரிமலை செல்கிறேன். என் மனைவியும் மாலை போட்டு இருக்கிறார் இதுதான் அவருக்கு முதல் தடவை நான் 20 தடவையாவது சபரிமலை போயிருப்பேன். 12 வருடத்திற்கு பிறகு இப்போது தான் போகப் போகிறேன் என்று நடிகர் திலகம் நிருரிடம் தெரிவித்தார்.

சிவாஜி கணேசன் அவர்கள் வில்லன் நடிகர் எம் என் நம்பியார் அவர்களை குருசாமியாக கொண்டு சபரிமலைக்கு சென்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்மகன் நடிகரான இணையதிலகம் பிரபு அவர்களுடனும் பல முறை சபரிமலை சென்று வந்துள்ளார் சிவாஜி அவர்கள். அந்த 1999 ஆம் வருடம் தான் முதன்முறையாக தன் மனைவி கமலாம்மாவை சபரிமலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த 1999 ஆம் வருடம் தான் நடிகர் திலகம் கடைசியாக சபரிமலைக்கு சென்று வந்தார்.அப்போது வயது அவருக்கு 71 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 71 வயதிலும் நடிகர்திலகம் அவர்கள் சபரிமலைக்கு சென்றுள்ளார்.

நடிகர் திலகம் நடித்த வாழ்க்கை திரைப்படத்தில் ஐயப்பனுக்கு மாலையிட்டு சபரிமலை செல்வதாக வீட்டில் பூஜை செய்வது போல  காட்சி இருக்கும் .

செந்தில் வேல் சிவராஜ் ..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற