சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜியைப் பற்றி...உலகத் தலைவர்கள் முதல் உள்ளூர் மந்திரி வரை ...

சிவாஜிகணேசன் பாரதத்தின் புகழுக்காக பாடுபட்டவர் என்றார் ஜவஹர்லால் நேரு

சிவாஜிகணேசன் நடிப்புக் கலையின் நாயகன் என்றார் அன்னை இந்திரா காந்தி 

சிவாஜிகணேசன்  இந்தியாவுக்கே பெருமை என்றார்  ஒய் பி சவான்

இந்தியப் பண்பாட்டை திரையிலேயே வடித்தவர் என்றார் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.

காங்கிரசின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் என்றார் முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன்.

சிவாஜி கணேசன் தன்னிகரற்ற நடிகர் என்றார் கே ஆர் நாராயணன் முன்னாள் ஜனாதிபதி .

ஏழை எளிய மக்களின் நல்வாழ்வுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என்றார் ராஜீவ் காந்தி.

வாழும் காலத்தில் ஒரு காவியமாக திகழ்ந்தவர் என்றார் அடல் பிகாரி வாஜ்பாய்.

தமிழ் திரைப்பட உலகில் தனக்கென தனி இடம் பிடித்த ஒப்பற்ற கலைஞர் என்றார் டாக்டர் அப்துல் கலாம்.

சிவாஜி அவர்களின் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தை நான் பார்த்து வியந்திருக்கிறேன் என்றார் எல் கே அத்வானி.

லட்சக்கணக்கான மக்களால் போற்றி புகழப்பட்ட மாபெரும் மனிதர் சிவாஜி கணேசன் என்றார் சோனியா காந்தி .

நான் சிவாஜியின் தீவிர ரசிகன் எனக்கு அவரது நடிப்பு ரொம்ப பிடிக்கும் என்றார் தேவே கவுடா.

நடிகர் சிவாஜி கணேசன் நடிப்புலகின் தலைவர் என்றார் கிருஷ்ணகாந்த் முன்னாள் துணை ஜனாதிபதி .

கலை உலகில் ஈடு இணையற்றவராக திகழ்ந்த எனது ஆருயிர் நண்பர் என்றார் குலாம் நபி ஆசாத்.

சிவாஜி கணேசன் இந்திய தேச ஒருமைப்பாட்டை  போற்றும் உயர்ந்த தேசியவாதி என்றார் பால் தாக்கரே .

சிவாஜியின் நடிப்புதான் இன்றைய சினிமாவில் உள்ள நடிகர் நடிகர்களுக்கு தூண்டுகோலாக உள்ளது என்றார் சுஷ்மா சுவராஜ் மத்திய அமைச்சர்.

தேசிய உணர்வு கொண்ட மாமனிதர் நடிகர் திலகம் சிவாஜி என்றார் பிரமோத் மகாஜன் .

சிவாஜியிடம் அளவற்ற நடிப்புத் திறமை அடங்கியுள்ளது என்றார் இங்கிலாந்து ராணி எலிசபெத்.

சிவாஜி அவர்கள் உலகிலேயே சிறந்த நடிகர் என்றார் எகிப்து அதிபர்  நாசர்.

இந்தியாவின் ஈடு இணையற்ற நடிகர் சிவாஜி கணேசன் என்றார் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே .

நாம் வாழும் காலத்தில் இந்தியாவின் மிக உன்னதமான நிலையை அடைந்த சினிமா நடிகர் என்றார் இலங்கை அதிபர் சந்திரகா குமாரதுங்கா.

சிவாஜி தமிழ் சினிமாவின் பட்டத்து இளவரசர் என்றார் டத்தோ சாமிவேலு மலேசிய பொதுப்பணித்துறை மந்திரி .

சிவாஜி அவர்கள் நிறைய செய்திகளை தெரிந்து வைத்திருக்கிறார் என்றார் திபெத்திய தலைவர் தலாய்லாமா.

பாவமன்னிப்பு என்ற ஒரே படத்தின் மூலம் எங்கள்குடும்பத்தோடு ஒன்றாகி விட்டார் அண்ணன் சிவஜிகணேசன்  என்றார் லதா மங்கேஷ்கர். 

மக்களிடையே ஆன்மீக சிந்தனையும்  நாட்டுப் பற்றும் வளர தன் நடிப்பால் பெரிதும் தொண்டாற்றி இருக்கிறார் என்றார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்  .

நாடகத்துறையில் தலை சிறந்தவராக  விளங்கி தமிழ் தொண்டு செய்து வரும் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க என்றார் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

தலைசிறந்த கலைஞனோடு நான் நடித்தது எனது பாக்கியம் என்றார் என்டி ராமராவ் ஆந்திர முதல்வர்

சிவாஜி கணேசன் பிரபல நடிகர் மட்டுமல்ல சிறந்த தலைவரும் ஆவார் என்றார் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வர்.

இந்திய சினிமா உலகிற்கு சிவாஜி கணேசன் ஒரு தலை சிறந்த ஆச்சாரியார்( குரு) என்றார்
 ஏ கே அந்தோணி  கேரள முதல்வர்.

இன்று புதுச்சேரி மாநிலத்தின் முதல்வராக இருந்தாலும் அன்று கலைத்தாயின் தலைமகன் சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் ரங்கசாமி நான், என்றார் புதுவை முதல்வர் ரங்கசாமி .

சிவாஜி கணேசன் தன்னலம் கருதாத காங்கிரஸ் இயக்கத்தை வளர்க்க பாடுபட்ட உன்னதமான தலைவர் என்றார் , பா சண்முகம் புதுச்சேரி முன்னாள் முதல்வர். 

 உலகப் பெரு நடிகர் சிவாஜி கணேசன் என்றார் மூதறிஞர் ராஜாஜி.

உலகத்திலேயே சிறந்த நடிகர் சிவாஜி கணேசன் என்றார் தந்தை பெரியார்.

நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்றார் பெருந்தலைவர் காமராஜர்.

சிவாஜி கணேசனின் நடிப்பு திறமையை நான் எடுத்துச் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலையில் யாருமே இல்லை என்றார் பேரறிஞர் அண்ணா.

எனது திரைக்கதை உரையாடல்களுக்கு உயிரோட்டம் தந்தவர் சிவாஜி என்றார் கருணாநிதி.

சிவாஜி கணேசன் எப்பாத்திரத்தையும் ஏற்று நடிக்க வல்லவர் என்றார் சிலம்புச் செல்வர்  ம பொ சி.

 சிவாஜி கணேசன் தெய்வபக்தியும் தேசபக்தியும் நிரம்பியவர் என்றார் கக்கன் தமிழக முன்னாள் அமைச்சர் .

தர்ம உள்ளத்தோடு சமுதாயத்துக்கு சிறந்த சேவை செய்தவர் சிவாஜி என்றார் 
ஈ வி கே சம்பத் .

தமிழ் உலகில் தமிழ் உச்சரிப்பு சிவாஜி அவர்களால் தனித்தன்மையும் பெருமையும் பெற்றது என்றார் தமிழர் தந்தை ஆதித்தனார்.

காலங்களைக் கடந்தும் கலையுலகின் ஒளியாய் அழியாப் புகழுடன் என்றும் வாழ்வார் சிவாஜி என்றார் வைகோ .

நண்பர் சிவாஜிகணேசன் நடிப்பின் இலக்கணம் என்றார்
 கி வீரமணி திராவிடர் கழகம்.

சிவாஜி தலைமையேற்றால் சென்னை ஜார்ஜ் கோட்டையில் காங்கிரஸ் கொடி பறக்கும் என்றார் செங்கல்வராயன் காங்கிரஸ் தலைவர், விடுதலைப் போராட்ட வீரர் .

காமராஜரின் தளபதியாக தமிழ்நாடு எங்கும் முழக்கமிட்ட ஒரு லட்சிய வீரர் சிவாஜி என்றார் இலக்கியச் செல்வர் குமரி ஆனந்தன் .

காங்கிரஸ் கட்சிக்கு கொடிகட்டவும் போஸ்டர் ஒட்டவும் தனது ரசிகர்களை தொண்டர்களை தந்தவர் சிவாஜி என்றார் வாழப்பாடி ராமமூர்த்தி .

300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மராட்டிய சிவாஜியை 
 நம் கண் முன்னே நிறுத்தியவர் சிவாஜி என்றார் ரா செழியன் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் .

அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல ஒரு பல்கலைக்கழகமாக விளங்கியவர் என்றார் 
பா சிதம்பரம் .

சிவாஜி அவர்கள் உலக அளவில் தலைசிறந்த நடிப்புத் திறன் கொண்டவர் என்றார்
டாக்டர் ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி .

தமிழகத்துக்கு பெருமை தேடித் தந்தவர் சிவாஜி என்றார்
 ஆர் நல்ல கண்ணு  இந்திய கம்யூனிஸ்ட் .

சிவாஜி கணேசன் நடிப்புத் துறையில் மிகச்சிறந்த சாதனை படைத்தவர் என்றார் 
என் .சங்கரய்யா  மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் .

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு மலை என்றார் இல கணேசன், பாஜக.

உலக மக்களை  தனது நடிப்பால் கவர்ந்தவர் சிவாஜி என்றார் வசந்தகுமார் .

நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் தென்னாட்டின் இமயம் என்றார் திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

என் மகனால் எனக்குப் பெருமை என்றார் சிவாஜியின் தாயார்  அன்னை ராஜாமணி அவர்கள் .


பூரணத்துவம் அமைந்த குடும்பத்தைப் பெற்ற ஒரே நடிகர் சிவாஜிதான் என்றார் 
தியாகி சின்ன அண்ணாமலை .

சிவாஜியை போல் என்னால் நடிக்க முடியாது என்றார் மார்லன் பிராண்டோ.

சிவாஜி கணேசன் அவர்களை விருந்தினராக பெற்றது குறித்து பெருமைப்படுகிறோம் என்றார் ஹாலிவுட் நடிகர் சார்லஸ் ஹெஸ்டன்.

இந்திய நாட்டுக்கே கிடைத்துள்ள கலை பொக்கிஷம் சிவாஜி என்றார் இந்தி நடிகர் திலீப்குமார் .

சிவாஜி ஒரு சகாப்தம் ,நடிப்பில் ஈர்த்தவர், எல்லைகளை தொட்டவர் என்றார் இந்தி நடிகர் தேவானந்த்.

எனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் சிவாஜி போல பேசும் சக்தி வேண்டும் என்று கேட்பேன் என்றார் இந்தி நடிகர் சசிகபூர்.

சிவாஜியின் நடிப்பை உலகில் உள்ள வேறு எந்த நடிகராலும் செய்ய முடியாது என்றார் இந்தி நடிகர் ராஜேஷ் கண்ணா.

சிவாஜி கணேசன் நம் எல்லோரையும்  கவர்ந்த தலைசிறந்த நடிகர் என்றார் இந்தி நடிகர் தர்மேந்திரா .

தமிழ்நாட்டில் எனது சகோதரர் சிவாஜிகணேசன் என்றார்  ஹிந்தி நடிகர் அம்ஜத் கான்.

ஆற்றலும் திறமையும் ஒரு சேரப் பெற்ற ஒப்பற்ற நடிகர் சிவாஜி என்றார் இந்தி நடிகர் சத்ருகன் சின்கா .

உலகப் பெருநடிகர் சிவாஜி என்றார் இந்தி நடிகர் சஞ்சீவ்குமார் .

நடிப்பில் அவரை மிஞ்சுவதற்கு உலகில் எவரும் இல்லை என்றார் தெலுங்கு நடிகர் ஏ நாகேஸ்வர ராவ்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ரசிகன் நான் என்றார் கன்னட நடிகர் ராஜ்குமார்.

நாட்டு மக்களை தன் பால் இழுக்கும் திறமை சிவாஜி கணேசன் ஒருவருக்குத்தான் உண்டு என்றார் மலையாள நடிகர் பிரேம் நசீர்.

சிவாஜி கணேசனை விட சிறந்தவர்கள் யார் இருக்க முடியும். என்னால் வேறு யாரையுமே ஒப்புக் கொள்ள முடியாது என்றார் மலையாள நடிகர் திலகன் .

சிவாஜி கணேசன் கடவுள் என்றால் நான் குழந்தை. அவர் கோவில் என்றால் நான் பக்தன் என்றார் மலையாள நடிகர் மது .

சிவாஜி கணேசனின் பாணி தனி வழி. அந்த நடிப்புக்கு ஈடாக யாரும் நடிக்க முடியாது என்றார் மலையாள நடிகர் மம்முட்டி .

உலக அதிசயங்கள் ஏழு அல்ல சிவாஜியோடு அதனை எட்டு என்று திருத்திக் கூறுவோம் என்றார் மலையாள நடிகர் மோகன்லால்.

நடிப்பு என்றால் சிவாஜி. சிவாஜி என்றால் நடிப்பு என்றார் கன்னட நடிகர் அம்பரீஷ் .

அவரால்தான் நான் நடிகனானேன் என்பது  சத்தியமான உண்மை என்றார் கன்னட நடிகர் சாய்குமார் .

சிவாஜி கணேசனிடம் உயர்ந்த பண்பும் திறமையும் இருக்கின்றன என்றார்கள்  இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு .

கலை உலகை தனது வெற்றி திறத்தால் காக்கும் சக்தி பெற்றுள்ளவர் சிவாஜி என்றார் இயக்குனர் எல் வி பிரசாத்.

சிவாஜியிடம் கற்க வேண்டியவை பல இருக்கின்றன என்றார் இயக்குனர் பீம்சிங்.

மகாத்மா காந்தியால் இந்தியாவுக்கு பெருமை .சிவாஜியால்  தமிழ் திரைப்பட உலகுக்கு பெருமை என்றார் இயக்குனர் பி ஆர் பிந்துலு.

நடிப்புத் தொழிலுக்காகவே தன்னை ஒப்படைத்துக் கொண்டு அனுபவித்து நடிப்பவர் நடிகர் திலகம் என்றார் ஏ பி நாகராஜன்.

சிவாஜியின் உதடுகள் வாய் கண்கள் புருவம் கன்னங்கள் நடித்தன என்றார் இயக்குனர் 
கே எஸ் கோபாலகிருஷ்ணன் .


என்னை மிகப் பெரிய திரைப்பட தயாரிப்பாளராக உயர்த்தியது சிவாஜியின் பெருந்தன்மை என்றார் இயக்குனர் ஸ்ரீதர் .

சிவாஜி எப்பேர்பட்ட கலைஞர்! அவருக்கு குழந்தை போன்ற மனசு என்றார் இயக்குனர் திருலோக சந்தர் .

சகாப்தங்கள் மாறினாலும் நிமிர்ந்து நிற்கும் ஆலமரம் அவர் என்றார் இயக்குனர் கே. சங்கர் 

சிவாஜி ஒரு நடிப்பின் சிகரம் என்றார் இயக்குனர் பி மாதவன்.

சிவாஜியால்  திரை உலகில் உயர்ந்த நிலைக்கு வந்த பிறகு நன்றி மறந்து அவரை விட்டு விலகியவர் எவரும் நல்லபடியாக வாழவில்லை என்றார் இயக்குனர் சி வி ராஜேந்திரன் .

இயக்குனரையும் உயர்த்தும் ஆற்றல் சிவாஜி என்ற மாபெரும் கலைஞனுக்கு தான் உண்டு என்றார் இயக்குனர் ராமண்ணா.

சிவாஜி ..சினிமா உலகில் மிகப்பெரிய தூண் அவர் ஒரு சாம்ராஜ்யம் என்றார்  
கே பாலச்சந்தர்.

சிவாஜியால்  தான் உயர்ந்த நிலையை அடைந்துள்ளேன் என்றார் வியட்நாம் வீடு சுந்தரம் .

சிவாஜி படங்கள் தான் நடிப்பு கற்றுக் கொள்ள நல்ல புத்தகங்கள் என்றார் இயக்குனர் எஸ் பி முத்துராமன் .

ஒரு திருவள்ளுவர் ஒரு மகாத்மா காந்தி. அதைப்போல கலை உலகில் ஒரே ஒரு சிவாஜி தான் என்றார் இயக்குனர் மகேந்திரன்.

அவர் தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் வாழ்ந்தவர் என்றார் பாரதிராஜா.

தமிழ்நாட்டின் தன்னிகரில்லா அற்புத நடிகர் நண்பர் சிவாஜிகணேசன் என்றார் இசை மேதை ஜி.ராமநாதன் .

நடிப்பின் இலக்கணம் சிவாஜி கணேசன் என்றார் திரையிசை திலகம் கேவி மகாதேவன் .

ஒரே சூரியன் ஒரே சந்திரன் ஒரே சிவாஜி என்றார் இசை அமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன்.

ராஜராஜ சோழனாகவே மாறிவிட்டவர் சிவாஜி என்றார் குன்னக்குடி வைத்தியநாதன் .

நடிப்புக்கு சிம்மாசனம் அமைத்து தந்தவர் சிவாஜி என்றார் இசையமைப்பாளர் இளையராஜா.

இமயமலை போன்று ஈடு இணையில்லாத நடிகர் சிவாஜி ஒருவர் தான் என்றார் டி எம் சௌந்தரராஜன்.

உலக அரங்கிலேயே சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் நடிகர் திலகம் என்றார்   சீர்காழி எஸ் கோவிந்தராஜன் .

நடிப்புக்கு நடிப்பினை சொல்லிக் கொடுத்தவர் சிவாஜி என்றார்
 பி பி ஸ்ரீனிவாஸ் .

ஒவ்வொரு துறைக்கும் தெய்வங்கள் உண்டு. நடிப்பு துறைக்கு கடவுள் படைத்த கடவுள் தான் சிவாஜி என்றார் கே ஜே ஜேசுதாஸ்.

தமிழ் இருக்கும் வரை சிவாஜி இருப்பார் நடிப்பு இருக்கும் வரை சிவாஜி புகழ் இருக்கும் என்றார் எஸ் பி பாலசுப்பிரமணியம் .

சிவாஜி மிக உயர்ந்த நடிகர் மட்டுமல்ல மிக உயர்ந்த கலை ரசனை உள்ளவர் என்றார் பின்னணி பாடகி வாணி ஜெயராம்.

சிவாஜி பிறந்தது தமிழ்நாட்டின் அதிர்ஷ்டம் என்றார் தயாரிப்பாளர் ஏவிஎம்.

பாரத நாட்டிற்கு பெருமை தேடித்தந்தவர் சிவாஜி என்றார் எஸ் எஸ் வாசன் .

பஞ்சுவாலிட்டியில் அவர் மன்னர் என்றார் கே.ஆர். விஜயா.

சிவாஜிக்கு இணை அவரே என்றார் ஜெயலலிதா.

ஒரே வார்த்தையில் சொன்னால் அவர் ஒரு மகான் என்றார் நடிகை வாணிஸ்ரீ.

என் உடன்பிறவாத அண்ணன் சிவாஜி என்றார் மனோரமா.

என் புதல்வன் சிவாஜி பல்லாண்டு வாழ்க என்றார் பி கண்ணாம்பா.

சிவாஜி கணேசனை விட சிறந்த நடிகர் யாருமில்லை என்றார் நடிகை டி ஆர் ராஜ்குமாரி.

அன்றிலிருந்து இன்று வரை கர்வம் இல்லாத நடிகர் சிவாஜி என்றார் நாட்டிய பேரொளி பத்மினி .

தன்னோடு நடிக்கும் கலைஞர்களும் புகழ் பெற வேண்டும் என்ற பரந்த மனப்பான்மை உள்ளவர் சிவாஜி என்றார் நாகேஷ்.

சிவாஜி கணேசன் ஒரு நல்ல ஆக்டர் ஆசியாவிலேயே தலைசிறந்த நடிகர் என்றார் சந்திரபாபு .

சிவாஜி ஓர் மலை சிவாஜி ஒரு கடல் என்றார் கவியரசு கண்ணதாசன்.

குரலில் மட்டும் சிங்கம் அல்ல செயல்களிலும் அப்படியே என்றார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் .

கலைசேர்சிவாஜி என்றார் கிருபானந்த வாரியார்

ஒற்றை நடிகன் 50 கோடியிலே என்றார் கொத்தமங்கலம் சுப்பு.

 சிவாஜியின் நடிப்புத் திறன் போற்றத் தகுந்தது என்றார் முத்தமிழ் காவலர் விஸ்வநாதம்.

தமிழகம் பெருமை கொள்ளத்தக்க தலைசிறந்த நடிகர் என்றார் டாக்டர் மு வரதராசனார் .

சிவாஜி பண்பாளர் கலைவேந்தர் வள்ளல் என்றார் 
கி.வா .ஜெகநாதன் .

எவரும் எட்டாத இமயம் என்றார் டாக்டர் அவ்வை நடராஜன்.

சிவாஜி நடிப்பு படத்துக்கு படம் வளரும் என்றார் எழுத்தாளர் சாண்டில்யன் .

சிவாஜியின் புகழ் இந்த உலகம் இருக்கும் வரையிலும் நிலையாக இருக்கும் என்றார் உமையாள்புரம் சிவராமன்.

சிவாஜி போல் உலக மகா கலைஞன் நடிப்பில் யாருமே இல்லை என்றார் பரதநாட்டிய கலைஞர்  தனஞ்செயன்.

நாதஸ்வரம் வாசிக்கும் போது கழுத்துப் புடைப்பதை கூட அழகாக பண்ணி இருப்பார் சிவாஜி என்றார் நாதஸ்வர மேதை எம் பி என் பொன்னுச்சாமி.

தமிழ் உச்சரிப்பை சரியாக கற்றுக் கொடுத்த முதல் ஆசிரியர் சிவாஜி தான் என்ற ரவி ஆறுமுகம் ஐபிஎஸ்.

சிவாஜியின் ஸ்டைலை பற்றி நிறைய பேச வேண்டும் என்றார் திலகவதி ஐபிஎஸ்.

தமிழும் கலையும் உள்ளவரை அவர் புகழ் நிலைத்து நிற்கும் என்றார் வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் .

நடிப்புக் கலைக்கு தெய்வமானவர் சிவாஜி என்றார் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்.

அம்மா என்ற வார்த்தையை உணர்ச்சிப் பிழம்பாக சொல்லி கைதட்டல் பெற்ற ஒரே நடிகர் சிவாஜி தான் என்றார் 
எம் கே தியாகராஜ பாகவதர் .

பராசக்தியின் வெற்றி சிவாஜி கணேசனின் புகழேணி  என்றார் என் எஸ் கிருஷ்ணன் .

நடிகர் திலகத்தின் நடிப்பு இளமை குன்றாதது என்றார் எம் என் நம்பியார்.

சிவாஜி என்ன சாதாரணமானவரா ? நடிப்பு சக்கரவர்த்தி அல்லவா!  என்றார் நடிகவேள் எம் ஆர் ராதா .

சிவாஜியின் நற்பண்பு மேலும் என்னை அவரிடம் அதிகமாக ஈடுபடச் செய்தது என்றார் அவ்வை சண்முகம் 

சிவாஜி ஓர் அற்புதக் கலைஞர் அபூர்வப் பிறவி தெய்வீக நடிகர் என்றார் பி எஸ் வீரப்பா.

ஆயிரத்தில் சில முத்துக்கள் இவை ...

தொகுப்பு செந்தில்வேல் சிவராஜ் 








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற