சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜியின் குதிரை சவாரிகள்

குதிரை சவாரியிலும் மன்னர் நடிகர்திலகம் ..

நடிகர்திலகம் நடிப்பில் மட்டுமல்ல வேறு பல சிறப்பான கலைகளையும் தெரிந்து வைத்திருந்தார். ஆடல் கலைகள் ,பாடல் பாடுவது என்று அந்த கலைகளையும் தெரிந்து வைத்திருந்தார். அது போக குதிரை சவாரி செய்வதிலும் நிகரற்றவராக இருந்தார். 70 வயதுகளில் அவர் அமெரிக்கா சென்ற போது நீல நிற ஜீன்ஸ் பேண்ட் டி-ஷர்ட் ,கௌபாய் கேட் அணிந்து குதிரையில் அமர்ந்தபடி அவர் போஸ் கொடுத்தார். அந்தப் புகைப்படம் கூட இணையத்தில் வைரலானது. குதிரையில் அமர்ந்து அவர் போஸ் கொடுத்த அந்தப் புகைப்படம் எல்லோராலும் ரசிக்கப்பட்டது.
திரைப்படங்களில் குதிரையில் அமர்ந்து அவர் நடித்த காட்சிகள், குதிரைசவாரி செய்து கொண்டே  பாடும் காட்சிகள், ஆக்சன் காட்சிகள், குதிரை சவாரி காட்சிகள் என்னென்ன  படத்தில் இடம்பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம்.

உத்தமபுத்திரன் திரைப்படத்தில் நடிகர் திலகம் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.அந்த இரட்டை வேடத்திலும் அவர் குதிரை சவாரி செய்வது போல காட்சிகள் இருக்கும். படத்தின் இறுதி கட்ட காட்சியில் ரதத்தில் செல்லும் விக்கிரமனை புயல் வேகத்தில் துரத்துவார் பார்த்திபன். இது ஒரு அட்டகாசமான காட்சியாக இருக்கும். 

வீரபாண்டியன் கட்டபொம்மன் படத்தில் பல குதிரை சவாரி காட்சிகள் இருக்கின்றன. ஆங்கிலத் துரையை பார்ப்பதற்காக பட்டாளத்துடன் குதிரையில் அமர்ந்து செல்லும் காட்சி, மற்றும் குதிரையில் அமர்ந்து சண்டையிடும் போர்க்களக் காட்சிகள் என்று அமர்க்களப்படுத்தி இருப்பார் சிவாஜி கணேசன் .இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போதுதான் குதிரை மிரண்டு படப்பிடிப்பு தளத்தை விட்டு பல தூரம் சென்று விட்டதாம்.படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் பயந்த நிலையில் நின்று கொண்டிருக்க நடிகர் திலகம் பத்திரமாக திரும்பி வந்தாராம்.

சித்தூர் ராணி பத்மினியில் குதிரையில் வேகமாக வரும் நடிகர் திலகம் கோட்டையை காவல் காத்துக்கொண்டிருக்கும் காவலர்களிடம் வந்து குதிரையில் நின்று வசனம் பேசுவதாக காட்சி இருக்கும். வேகமாக வந்த குதிரை 
திமிறிக்கொண்டே இருக்கும். குதிரையின் லகானை  இழுத்துப் பிடித்துக் கொண்டு வசனம் பேசுவார் சிவாஜி.

மருதநாட்டு வீரன். இந்தப் படத்தில் சமாதானமே தேவை என்ற பாடலை பாடியபடி குதிரையில் வலம் வருவார் நடிகர் திலகம் .
ஒரு முழு பாடலும் குதிரையில அமர்ந்து பாடுவதாக காட்சிகள் இருக்கும்.எந்தவித அதிர்வுகளும் இல்லாமல் தெள்ளத் தெளிவாக இந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டு இருக்கும்.

படித்தால் மட்டும் போதுமா. நடிகர் திலகத்தின் அறிமுகக் காட்சியாக ஓஹோ ஓஹோ மனிதர்களே
 ஓடுவதெங்கே  சொல்லுங்கள் என்ற பாடலை பாடிய படி குதிரையில் பவானி வருவார்.
இந்தப் பாடல் முழுவதும் குதிரைச் சவாரி தான். குதிரைச் சவாரி செய்து கொண்டே  பாடும் பாடல்கள் என்றால் இந்தப் பாடல் கண்டிப்பாக நினைவுக்கு வரும் .

இரு துருவத்தில் நடிகர் திலகம் குதிரை சவாரி செய்யும் காட்சிகள் எல்லாம் அட்டகாசமாக இருக்கும். ரயில் பயணிகளிடம் கொள்ளையடிக்கச் செல்லும் அந்த குதிரை சவாரி காட்சிகள் மிகவும் பிரமிப்பாக இருக்கும். சிவாஜியின் குதிரை ஓட்டும் வேகம் நம்மை வியக்கச் செய்யும். தோளில் துப்பாக்கி ,குதிரை சகிதம் சிவாஜியின் புயல் வேகம் எல்லாம் இரு துருவத்தில் மிகவும் மிரட்டலாக படம் ஆக்கப்பட்டு இருக்கும்.

சுமதி என் சுந்தரியில் நடிகர் திலகத்தின் அறிமுக காட்சியே அந்தக் குதிரை சவாரி  தான் .
அந்த டீ எஸ்டேட்டில் இருக்கும் குறுகலான பாதைகளில் மிகவும் லாகவமாக ஸ்டைலாக 
அழகாக குதிரையில் அமர்ந்து வருவார். நல்ல ஒரு ரம்யமான காட்சி அது.

தர்மம் எங்கே படத்தில் பல குதிரை சவாரி காட்சிகள். வேகமாக குதிரையில் வந்து போர்க்களத்தில் குதித்து இவர் சண்டையிடும் காட்சிகள் சரியான ஆக்ஷன் காட்சிகள் .படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இடிந்த அந்தக் கோட்டைக்குள் குதிரையில்  சிவாஜி வரும் காட்சிகளிலும் சிவாஜியின் தோரணை அட்டகாசமாக இருக்கும் .


என்மகன் படத்தில் கொள்ளையடிக்கும் பல காட்சிகள் ஆரம்பத்தில் அறிமுகம் ஆகும். அந்தக் காட்சிகள் முடிந்த பின் டைட்டில் ஆரம்பிக்கும் போது தான் அட்டகாசம் ஆரம்பிக்கும். வேகமாக இரு புறங்களிலும் வந்து செல்லும் ரயில்களுக்கு இடையே சிவாஜி குதிரையில் பாய்ந்து வரும் காட்சி அமர்க்களமாக இருக்கும். ஆனால் ஒளிப்பதிவாளர் தான் சற்று இருட்டுப் பின்னணியில் படம் பிடித்து இருப்பார் .விரைந்து செல்லும் ரயிலின் ஓரத்தில் குதிரையில் அமர்ந்தபடி நடிகர் திலகம் வரும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கும்.


மன்னவன் வந்தானடி படத்தில் குதிரையில் வரும் அந்த ஆரம்பக் காட்சிக்கு பெரிய ரிஸ்க் இல்லை. குதிரையில் வரும் ஒரு நாடோடி, பாட்டு பாடுவதாக தான் அந்த காட்சி அமைக்கப்பட்டு இருப்பதால் அந்தப் பாடல் காட்சி அப்படி எடுக்கப்பட்டிருக்கும். இதே படத்தில் காதல் ராஜ்ஜியம் எனது என்ற பாடலுக்கு  மட்டுமே குதிரையில் வருவது போல  காட்சி எடுக்கப்பட்டிருக்கும். படத்தின் கதாநாயகி மஞ்சுளாவுக்கு குதிரை சவாரி தெரியாது என்பதால் நடிகர் திலகம் வேகமாக வரும் குதிரை சவாரி காட்சி இந்தப் பாடலில் இருக்காது .


உனக்காக நான் படத்தில் இடம் பெற்ற ராமு ஐ லவ் யூ என்ற பாடலில் சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் இருவரும் குதிரையில் அமர்ந்தபடி பாட்டு பாடியபடி காட்சிகள் இருக்கும்.இந்தப் படத்தில் இந்த பாடலானது மிகவும் அழகாக எடுக்கப்பட்டிருக்கும். குதிரையில் அமர்ந்தபடி வரும் சிவாஜியை பார்ப்பதே மிக அழகாக இருக்கும் .

சித்ரா பௌர்ணமி படத்தில் நடிகர் திலகத்துக்கு அடுத்து குதிரையும் ஒரு முக்கிய கேரக்டராக நடித்திருக்கும். காடு மலை பள்ளம் என்றும் சகல இடங்களிலும் சிவாஜி குதிரையில் பவனி வரும் காட்சிகள் நிறைய உண்டு. பார்க்கும் நமக்கு தான் அந்த காட்சிகள் ரிஸ்க்காக தெரியும்.ஆனால் சிவாஜியோ குதிரையை அனாயசமாக கையாண்டு இருப்பார் .


புண்ணிய பூமி. இந்தப் படத்தின் இறுதிக் காட்சிகளில் தான் குதிரை சவாரி காட்சிகள் வரும்.கரை புரண்டோடும் காற்றாற்று வெள்ளமாய் குதிரையில் அமர்ந்து புயல் வேகமாய் பயணிப்பார் சிவாஜி .சிவாஜி குதிரையில்  அமர்ந்த படி வரும் கடைசி கட்ட காட்சிகள் சம்பல் பள்ளதாக்கு கொள்ளையர்களை நினைவுபடுத்துவதாக இருக்கும் .மிகவும் பிரமிப்பான வகையில் படமாக்கப்பட்டிருக்கும் ,இந்த படத்தில் வரும் குதிரை சவாரி காட்சிகள்.


நாம் பிறந்த மண். இந்தப் படத்திலும் நிறைய குதிரை சவாரி காட்சிகள். குதிரையை விரட்டு விரட்டென்று விரட்டி தள்ளுவார் நடிகர் திலகம். வேகம் வேகம் ..அதிவேகம். யானை பாஷை தெரிந்த சிவாஜிக்கு குதிரை பாஷையும் தெரிந்திருக்குமோ என்னவோ ? சிவாஜி சொல்படி போல குதிரையும் நடித்திருக்கும். 
தங்கையை மானபங்க படுத்தியவனை அத்தனைக் கூட்டத்துக்குள்ளும் குதிரையில் வந்து இடையே புகுந்து வெள்ளையனின் தலையை சீவி தள்ளும் காட்சி அசத்தலாக இருக்கும். போலீஸ் ஜீப் துரத்தும் காட்சிகளில் சிவாஜி குதிரையில் வேகம் எடுத்து செல்லும் சவாரி காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கும்.


பக்த துகாராம்.சத்ரபதி சிவாஜியாக நடிகர் திலகம் நடித்த படம். நடிகர் திலகம் குதிரையில் அமர்ந்து வரும் காட்சிகள் கலக்கலாக இருக்கும். குறிப்பாக அந்தப் போர்க்களக் காட்சிகள் அட்டகாசமாக எடுக்கப்பட்டிருக்கும். நடிகர் திலகத்தின் குதிரை சவாரி காட்சிகளில் இது ஒரு முக்கியமான படம். 

சிவாஜி புரொடக்ஷன் தயாரித்த படங்களில் ஒரே ஒரு படத்தில் தான் சிவாஜி குதிரை சவாரி செய்திருப்பார். அந்தப் படம் ரத்தபாசம். மிகவும் ஒரு சீரியசான காட்சியாக படத்தில் அந்த காட்சி இடம் பெற்று இருக்கும். மேடு பள்ளமான மலைப்பகுதிகளில் அந்த குதிரை சவாரி காட்சி இடம் பெற்றிருக்கும் .

இங்கே குறிப்பிட்டவை போக இன்னும் பல படங்கள் இருக்கின்றன. குதிரை சவாரி காட்சிகளில் அதிகமாக நடித்த கதாநாயகன் சிவாஜியாகத்தான் இருப்பார். 

எப்படி இழுத்தால் அந்த குதிரை நிற்கும், எப்படி இழுத்தால் அதனை சுழல வைக்கலாம், குதிரையில் அமர்ந்து வசனம் பேசும்படி இருந்தால் அப்போது அந்தக் குதிரையை எவ்வாறு பிடித்து வைத்திருப்பது என்ற விஷயங்களை எல்லாம் நன்கு அறிந்து வைத்திருந்தார் நடிகர் திலகம். குதிரையில் தான் செல்கிறோமே வேகமாகச் சொல்ம்போது நடிப்பை எல்லாம் யார் பார்க்கப் போகிறார்கள் என்று நடிகர் திலகம் நினைத்ததில்லை. அப்போது கூட தன் முகபாவனைகளை அங்க அசைவுகளை அழகாக பிரதிபலிப்பார் நடிகர் திலகம்.
ஆக குதிரைச் சவாரி செய்வதிலும் நடிகர்திலகம்  ஒரு மன்னர் ..

செந்தில்வேல் சிவராஜ் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற