சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜி படம் ஓடுச்சா உங்க படம் ஓடுச்சா

சிவாஜி படம் ஓடுச்சா  ?
உங்க படம் ஓடுச்சா?

சிவாஜி படங்கள் ஓடியதையும் எதிர்முகாம் நடிகரின் படங்கள் ஓடியதையும் கம்பேர் பண்ணி குறை சொல்லி கருத்துக்கள் சொல்லி வெளியிடுவது இன்று வரை ஓய்ந்தபாடில்லை.சிவாஜியின் அசுர நடிப்பு சாதனைக்கு முன் வேறு எந்த ஒப்பீடுகளையும் முன் வைப்பது ஏற்புடை ஆகாது,  நமக்கும் உடன்பாடு இல்லை.
நம் கோணத்தில் ஒரு பார்வை இப் பதிவு.

சிவாஜி கணேசன் தன்னுடைய படங்களை எப்படி வெளியிட்டார் அவை எப்படி எல்லாம் ஓடியது என்பது எல்லாம் அவர்களுக்கு தெரியாதது அல்ல. அதை சொல்லக்கூடாது என்பது தான் அவர்களின் குறிக்கோளாக இருக்கிறது.
இல்லை மறந்து விட்டார்களா ? மறந்ததை நினைவூட்டுகிறேன் என்று மனோகரா பாணியில் சொல்கிறேன் ..
1961 இரண்டு வெள்ளிவிழா படங்களை கொடுத்தார் ஒரே ஆண்டில். பாசமலர் பாவமன்னிப்பு என்று. இதில் பாலும் பழமும் வெள்ளி விழாவை தவறவிட்ட படம். சிவாஜி நினைத்திருந்தால் இப்படி செய்திருக்கலாம்.பாசமலர் தான் சக்கை போடு போடுகின்றதே என்று அந்த வருடத்தில் எந்த படத்தையும் வெளியிடாமல், இல்லையென்றால் மேலும் ஒரு படத்தோடு நிறுத்தி இருக்கலாம். அப்படி அவர் மற்ற நடிகர்கள் போல் செய்திருந்தால் பாசமலர் 300 நாட்கள் அடுத்த படம் 300 நாட்கள் என்று ஓடி இருக்கும்.ஏன் பாசமலர் அந்த வருடம் முழுவதும் கூட ஓடி இருக்கலாம். அப்படி ஒரு தாக்கத்தை உண்டு பண்ணிய படம் தான் பாசமலர்.
வருடத்தில் ஏழு படங்களை வெளியிட்டு இதில் இரண்டு படங்களும் 175 நாட்கள் ஓடும் போது அந்த இரண்டு படங்களோடு நிறுத்தி இருந்தால் மேலும் பல வாரங்கள் சுலபமாகவே ஓடி இருக்குமே. அந்த ஓட்டத்திற்கு முட்டுக்கட்டை போடுவது போல தானே சிவாஜி படங்கள் வந்து கொண்டிருந்தன. ஆக , சிவாஜி படங்களுக்கு ஸ்பீடு பிரேக்கர்கள் சிவாஜி படங்களே! 

இதே போல 1959 ஆம் வருடம் வீரபாண்டிய கட்டபொம்மன் பாகப்பிரிவினை ஆகிய இரண்டு வெள்ளி விழா படங்களை கொடுத்திருந்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் தனது கனவுப்படமாயிற்றே என்று அந்த ஒரு படத்தோடு அந்த வருடத்தில் எந்த படத்தையும்  வெளியிடாமல் சிவாஜி செய்திருந்தால் அது அந்த வருடம் முழுதும் ஓடித் தள்ளி இருக்குமே! 
திருவிளையாடல் படத்திற்கு இணையாக எந்த ஆன்மீக படமும் கிடையாது. கடவுள் பக்தி மக்களிடம் எப்படி ஆட்கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். திருவிளையாடல் என்ற ஒரே ஒரு படத்தை மட்டும் அந்த ஆண்டில் வெளியிட்டு விட்டு மற்ற படங்களை நிறுத்தி இருந்தால் ..அது அந்த ஆண்டு முழுவதும் ஓடிக்கொண்டே இருந்திருக்குமே! ...1972 ஆம் ஆண்டில் வசந்த மாளிகை பட்டிக்காடா பட்டணமா என்று இரண்டு வெளிவிழா படங்களை கொடுத்திருந்தார் நடிகர் திலகம். வசந்த மாளிகை போட்ட போடில் அந்த ஒரு படத்தோடு சிவாஜி நிறுத்தி இருக்கலாம். அது அந்த வருடத்திற்கான படமாக இருந்திருக்கும். இப்படி படங்களை வெளியிட் டே இந்த படங்கள் வெள்ளி விழாக்களை கண்டன ...
ஆனால் சிவாஜி ஏன் அப்படி செய்யவில்லை?

வியாபாரத்தை முன்னிட்டு லாப நோக்குடன் திரைப்படங்கள் தயாரிக்கப்படாலும் அந்தப் படங்கள் மக்களுக்கு ஏதாவது ஒரு நல்ல கருத்தை சொல்வதாக இருக்க வேண்டும். கலைகள் அதற்காகத்தான் பிறந்தன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த இரண்டும் சேர்ந்தது தான் சிவாஜி சினிமாக்கள்.

வருடத்திற்கு எட்டு படங்கள் வீதம் நடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார் நடிகர் திலகம்.அந்த இரண்டு படங்கள் மட்டும் ஓடிக் கொண்டிருந்தால் அதில் வருமானம் பார்ப்பவர்கள் திரையரங்கு உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் தான். படத்திற்கான பேனர் வரைபவர்கள் போஸ்டர் ஒட்டுபவர்கள் பேப்பர் விளம்பரங்கள் மூலம் பத்திரிக்கைகளுக்கு வருமானம் என்று இன்னும் இதனுடன் கூட்டாக அமைந்த ஒரு நிரந்தர வருமான வாய்ப்பை சிவாஜி படங்கள் வரிசையாக கொடுத்துக் கொண்டிருந்தன என்பதைத்தான் அவர்கள் மறந்து விட்டார்கள்.

எங்க ஜமீனை நம்பி ஆயிரம் குடும்பம் இருக்கு உன்னை காப்பாத்துறது ஒன்னும் பெரிசில்லை என்று வசனம் பேசுவார் வசந்த மாளிகையில் சிவாஜி. ஆயிரம் குடும்பங்கள் பிழைத்துக் கொண்டிருந்தன சிவாஜியின் படங்களால் ..
இதைச் செய்தனவா அவர்களின் படங்கள் ? இருந்தால்தானே கொடுப்பதற்கு என்பது அவர்களின் நடிப்பு பாணி.
கர்ணன் எதையும் கொடுப்பான் என்பது சிவாஜி பாணி ..

ஒரே மாதிரி நடிப்பு பாணியை வைத்துக்கொண்டே நூற்றுக்கணக்கான மசாலா படங்களை சமூகத்துக்கு கொடுப்பதுதானா உண்மையான கலை ? வியாபாரத்தோடு இணைந்த லாப நோக்கும் தேவைதான். அது இருந்தால் தானே தயாரிப்பாளர்களின் வாழ்க்கை நடக்கும். இந்தக் கருத்தை தவறு என சொல்ல முடியாது தான்? பொது மக்களிடம் இருந்து வாங்கும் பணத்திற்கு அந்த நடிகர்கள் அந்த மக்களுக்கு செய்யும் கைமாறு என்ன.?
நல்ல கருத்துக்களை சொல்கிறார்களா ?
நல்ல ரசனையை கொடுக்கிறார்களா ?
நல்ல பண்பை விதைக்கிறார்களா ?
கவியரசரின் பாணியில் சொன்னால் எதைச் சொல்ல எதை விட?

ஒரு வெளிநாட்டுக்காரன் வருகிறான். இல்லை வெளிநாட்டு திரைப்பட விழாவுக்கு தமிழ்  படங்களை அனுப்புகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
சிவாஜி படங்களை விட்டு விடுங்கள் நீங்கள் சொல்வது போல, அந்த நடிகர்களின் திரைப்படங்களை வெளிநாட்டுக்காரன் பார்த்தால் என்ன சொல்வான்? வெளிநாட்டு திரைப்பட விழாவில் தமிழன் கர்வத்தோடு விருது பெற்று திரும்ப முடியுமா ? நான்கு சண்டைக் காட்சிகள் 5 காதல் பாட்டுகள் கொண்ட சினிமாவை உலக சினிமாக்காரன் மெச்சுவானா? 

அவர் படங்களை  எல்லாம் நீங்கள் பார்க்கவில்லை என்பதால் என்னவோ அதற்கான பண்பு உங்களிடம் வந்து சேர வாய்ப்பு இல்லாமல் போனது தான் காரணமா? 

நல்லது செய்கிறேன் என்று நஞ்சை கொடுத்து  விட்டாலே பாதகி என்று சம்பூர்ண ராமாயணத்தில் பரதன் பேசுவதாக வசனம் இருக்கும்.
பெற்ற அன்னையாக இருந்தாலும் தவறு தவறுதான் என்பதை சொன்ன  வரிகள்  அல்லவா இவை! இதைப் பார்ப்பவன் மனதில் என்ன எழும் ? புரிந்து கொள்வது உங்கள் பாடு.
சம்பூர்ண ராமாயணத்தால் வியாபாரமும் ஆயிற்று நல்ல கருத்தும் சொல்லி ஆயிற்று. இப்படித்தான் வந்தன சிவாஜி படங்கள்.

பொழுதுபோக்குக்காக தான் சினிமா பார்க்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இவன் தான் பார்க்கிறானே என்று சொல்லி அதில் காபரே நடனத்தையும் கிளுகிளுப்பான பாடல் காட்சிகளையும் புரட்டி எடுக்கும் சண்டை காட்சிகளையும் சினிமாவில் வைத்தால் அவன் பார்க்கத்தான் செய்வான். இப்படிச் செய்பவன் வியாபாரி மட்டுமே. அவன் நல்ல கலைஞனாக இருக்க முடியாது.

சிவாஜி கணேசனே சொன்னார் கப்பலோட்டிய தமிழன் படம் ஆரம்பத்தில் ஓடவில்லை என்று ...
அதற்காக கப்பலோட்டிய தமிழனை விட  சிறந்த படம் வேறு எதுவும் இருக்க முடியுமா என்ன? 
நாட்டுக்காக பாடுபட்ட தியாகிகளை மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டாமா ?

ஒரு ரிக்ஷா தொழிலாளி தனக்கு ஒரு வேளை உணவு அளித்ததற்காக, அந்தக் குடும்பம் அநாதரவாக  ஆனதை பார்த்து, தான் உழைத்து அந்த குடும்பத்தை காப்பாற்றுகிறான். இது நல்ல கருத்தைச் சொன்ன படமா ?
ஒரு ரிக்ஷா தொழிலாளி 
ரிக்ஷாவோடு ஆட்களோடு  சண்டை போட்டு ,காதலியோடு  டூயட் பாடி 
வில்லனை பழி வாங்குகிறான் என்ற காட்சிகளோடு வந்த படம் சிறந்த படமா ? 

ஒரு நல்ல கலைஞன் எந்த மாதிரி திரைப்படங்களை தேர்ந்தெடுத்து  நடிக்க வேண்டும்?
நல்ல கதை அம்சம் உள்ளதாக இருக்க வேண்டும்.
நல்ல கருத்துக்களை சொல்வதாக இருக்க வேண்டும். 
பொதுமக்களின் ரசனையை வளர்க்க வேண்டும்.
நல்ல நடிப்பை காட்டுவதாக இருக்க வேண்டும்.
இவைகளை மையமாக வைத்து லாப நோக்குடன் திரைப்படங்கள் எடுக்க வேண்டும். 
இந்த வரிசையில் அமைந்த திரைப்படங்களை தான் சிவாஜி கணேசன் செய்தார். இதுதான் ஒரு சமூகத்துக்கு தேவை.

ஒரு சண்டைக் காட்சி இல்லாத ,
கதாநாயகனுக்கு பாடல் காட்சிகளே இல்லாத,
 காதலியுடன் டூயட்  இல்லாத திரைப்படம் தான் தில்லானா மோகனாம்பாள். இந்தப் படத்துக்கு இல்லாத ரசிகர் கூட்டமா ?
இந்தப் படத்தை இப்போது வெளியிட்டால், இதற்கு முன் தமிழில் வந்த எந்த ஒரு திரைப்படத்தையும் இதற்குப் போட்டியாக வெளியிட்டு பார்த்தால் தெரியும் எது ஓடும் என்று ?
ஆனால் இந்தப் படம் நூறு நாட்கள் ஓடிய படம் தான் ..
தில்லானா மோகனாம்பாள் படத்திற்கு முன் இரண்டு 100 நாள் படங்களையும் அதற்குப் பின்பு ஒரு 100 நாள் படத்தையும் கொடுத்து அசத்தியவர் சிவாஜி கணேசன். தொடர்ந்து நான்கு 100 நாள் படங்களை கொடுத்திருக்கிறார். தில்லானா மோகனாம்பாள் வெளிவந்த வருடம் 1968 .
இந்த ஆண்டில் மட்டும் நடிகர்திலகம் 5 ,100 நாள் படங்களை கொடுத்திருக்கிறார்.

இந்தப் படங்கள் தான் ஓடியது என்று ஒப்புமை செய்து நடிகர் திலகத்தின் படங்களை குறை சொல்லி புலம்பிக் கொண்டிருப்பதில் எந்தவித பிரயோஜனமும் இல்லை. எந்த மாதிரி படங்களை கொடுத்திருக்கிறார் என்று பார்க்க வேண்டும்?
புதிய பறவையில் வரும் வசனம் போல, ரேகை  அந்த ரேகை மாத்த முடியுமா?  அது போலத்தான்...
மேலும் ,காலம் மாற மாற சிவாஜி படங்களின் புகழ் ஏறிக்கொண்டே இருக்கும்.

சிவாஜி கணேசனின் படங்களோடு அவரின் நடிப்புத் திறனோடு மற்ற மசாலா படங்களை ஒப்பிட்டு பேசினால், அவை நகைப்புக்கு ஆளாகும் பதிவுகளாக இருக்கும்.
ஒரே ஒரு கூட்டம் தான் மாறாது. ஏனெனில் அந்தக் கூட்டம் எப்பொழுதும் கிணற்றுத் தவளைகள். 

செந்தில்வேல் சிவராஜ் ..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற