சிவாஜி கணேசன் சாட்டையடி காட்சியில் நடித்தமிகவும் கடினமான காட்சிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் .
1) காத்தவராயன் படத்தில் சிவாஜி கணேசன் மகாராணி ஆரியமாலாவான சாவித்திரியை காதலிப்பதை மன்னர் ஈ. வி. சகாதேவன் அறிந்து கொண்டு காத்தவராயனான சிவாஜி கணேசனுக்கு ராஜ தண்டனை கொடுக்கும் விதமாக படத்தின் இறுதி காட்சியில் யானையின் பின் பக்கம் சிவாஜி கணேசனை யானை சங்கிலியால் பிணைக்கப்பட்டு சாட்டையால் அடித்து கொலை களத்திற்கு கொண்டு செல்வதை போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
இந்தகாட்சியில் சி. எஸ். ஜெயராமன் பாடிய
'விதியா சதியா 'பாடல் இடம் பெற்றிருக்கும்.
இந்த பாடல் காட்சியில் சிவாஜி கணேசன் மேல் விழும் சட்டையடிகளை நாம் படத்தில் பார்க்கும்போது சாட்டையடிகள் உண்மையிலேயே அவர் உடம்பில் விழுந்து விட்டதா என்பது போல காட்சியில் சாட்டையடிகள் அனலடிக்கும் விதமாக எடுத்திருப்பார்கள்.ஆம் உண்மைதான்.இந்தகாட்சியில் சிவாஜியின் மேல் 12 சாட்டையடிகள் விழும்.இதில்
உண்மையாகவே 4/5 சாட்டையடிகள் அவர் உடலை பதம் பார்த்து விட்டது.முதுகில் விழுந்த அடிகள் எல்லாம் சிவாஜிக்கு மிகுந்த வலியை கொடுத்தன.அதையும் பொருட்படுத்தாது சிவாஜி தொடர்ந்து நடித்தார் அந்தகாட்சியில்.
அதனால் தான் படத்தில் இந்த காட்சி மிகவும் தத்ரூபமாக அமைந்திருக்கும்.
2) படித்தால் மட்டும் போதுமா திரைப்படத்தில் சிவாஜி கணேசன் சிறிது முரடனாக இருந்தாலும் சிவாஜி கணேசன் படிக்காதவன் என்ற ஒரே காரணத்தால் அவரது மனைவி ராஜ சுலோசனா அவர்கள் படிக்காதவர்கள் அனைவரும் முட்டாள், சோம்பேறி, காட்டுமிராண்டி என்று கூறியவுடன் எதற்கும் கோப்படாத சிவாஜி கணேசன் தன்னை முட்டாள், சோம்பேறி என்று கூறியதை மனதில் இருந்து போக்கி கொள்ள அவருக்கு அதுவரை இல்லாத குடி பழக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு குடித்து கொண்டு வந்து ,ராஜசுலோசனாவிடம்
தன்னை முட்டாள், சோம்பேறி என்று கூறியதை மீண்டும் கேட்டுவிட்டு சாட்டையால் வெளுத்து வாங்கும் காட்சி எல்லாம் நிஜமாகவே அடித்து தள்ளி விட்டாரோ என்பது போல இருக்கும்.இந்தகாட்சியிலும் ராஜசுலோசனாவின் மேல் சில அடிகள் விழுந்து விட்டது.சாட்டையடி காட்சிகளில் உயிர் துடிப்பான இந்தகாட்சியும் மிகவும் பிரபலமான ஒன்று.
3) பழநி திரைப்படத்தில் தான் ஜமீன்தாரிடம் பட்ட கடனிற்காக தனது உறவினரான தேவிகா, புஷ்பலதா ஆகிய இருவரையும் மாடுகளாக ஏறு பூட்டி அவர்களை தென்னகீற்றிலான கசை எனப்படும் சாட்டையால் சிவாஜி கணேசன் அடித்து நிலத்தை உழுவது போல காட்சிகள் மிக மிக மயிர்க் கூச்செறியும் காட்சியாகும்.
தமிழ் சினிமாவில் இப்படி ஒருகாட்சி எந்த திரைப்படத்திலும் வராத காட்சியாகும்.மிகவும் உணர்ச்சி கரமான இந்த காட்சியில் மிக மிக உணர்ச்சி வசமாக நடித்த சிவாஜியின் நடிப்பு எல்லோரையும் திகைக்க வைக்கும்.சிவாஜி சாட்டையை சொடுக்கி இருரையும் அடிக்கும் காட்சிகளில் அடிகள் எல்லாம் நிஜமாகவே விழுவது போல சிவாஜியின் நடிப்பு இருக்கும்.சில அடிகள் தேவிகாவின் மேல் உண்மையாகவே விழுந்தது.
மிக மிக வியப்பூட்டும் சென்டிமென்ட் காட்சி இது.
4) அதன் பிறகு என் தம்பி திரைப்படத்தில் சிவாஜி கணேசன்-சரோஜாதேவி இணைந்து பாடுவதான இரண்டு டூயட் பாடல்களில் 'அடியே நேற்று பிறந்தவள் நீயே'பாடல் மைசூர் பிருந்தாவனத்திலும், கிருஷ்ணராஜசேகரா அணையிலும் பாடல் படமாக்கப்பட்டது.
அதை தொடர்ந்து 'அய்யய்யோ மெல்லதட்டு 'பாடல் ராஜஸ்தானிற்கு சென்று படமாக்கப்பட்டது.
மேலும் அந்த ராஜஸ்தானில் சிந்து நதி பாயும் ஒரு அணையில் தான் சிவாஜி கணேசனும்-பாலாஜியும் வாள்கத்தி சண்டை போடும் காட்சி படமாக்கப்பட்டது.
இந்த 7 நிமிடம் போடும் வாள்கத்தி சண்டை காட்சியில் வெகு நாட்களுக்கு பிறகு சிவாஜி கணேசன் வாள் வீச்சு கத்தி சண்டையை பயிற்சி எடுத்து கொண்டாலும் சில கத்தி வீச்சுகள் சிவாஜி கணேசன் கையை பதம் பார்த்துவிட்டது.
மேலும் இந்த படத்தில் சிவாஜி கணேசன் 'தான் கண்ணன் தான்' என்று பாலாஜியிடம்
நிரூபிக்க வேண்டிய 'தட்டட்டும் கை தழுவட்டும்' பாடல் காட்சியில் சிவாஜி கணேசன் சரோஜாதேவி மீது உள்ள ரோஜா பூக்களை சாட்டையால் அடித்து பறித்து தன்னை கண்ணன் என்று நிருபிக்க வேண்டிய அந்த உச்சகட்ட பாடல் காட்சி.
இந்த பாடல் காட்சியில் சிவாஜி கணேசன்-சரோஜாதேவியுடன் சாட்டை வீச்சு மிகவும் முக்கியமானது ஒன்றாகும்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சாட்டை வீச்சு சாதாரணமான ஒன்றல்ல.
ஒரு சாட்டையடி அடி வாங்குபவரின் தோலை 'சுளீர் 'என்று பதம் பார்த்து சிவந்துவிடும் அதனால் அடி வாங்குபவரின் மீது சிறிதும் சாட்டையடி விழுந்து விட கூடாது என்று சிவாஜி கணேசன் பட குழுவினரிடம் கூறினார்.
அதன் பிறகு சிவாஜி கணேசன், கே. பாலாஜி, ஜாவர் சீதாராமன் படத்தின் கதாசிரியர் ஏ. எல். நாராயணன் அனைவரும் ஏ. வி. ஏம். ஸ்டூடியோவில் சென்று கலந்தாலோசித்த பின்னர் ,கதாநாயகியான சரோஜாதேவியை சாட்டையடி களத்திற்கு வரும்படி அவருக்கு போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அப்போது சரோஜாதேவி தமிழை விட இந்தி, கன்னடம், தெலுங்கு சினிமாவில் கொஞ்சம் பிசியாக இருந்த நேரம் .அதனால் இந்த படபிடிப்பு தளத்திற்கு வர வெகு நேரம் ஆகிவிட்டது.
அதனால் படக்குழுவினரோடு இருந்த சிவாஜி கணேசன் நேரம் போக போக புழுக்கம் அதிகரிக்க சட்டையை கழற்றி கொண்டு வெறும் பணியனோடு அமர்ந்திருந்தார்.
அதன் பிறகு ஏ. வி. எம் ஸ்டூடியோவிற்கு வந்த புடவையோடு மல்லிகை மலர் சூடி வந்த சரோஜாதேவிக்கு ,பாடலின் காட்சியை கதாசிரியர் ஏ. எல். நாராயணனும், ஜாவர் சீதாராமனும் விளக்கி சொல்ல சாட்டையடி விழாமல் இருக்க ஒத்திகை பார்க்கும் விதத்தை சரோஜாதேவி இடம் கூற ,அவரும் சிறிதும் அதை தட்டாமல் ஏ. வி. எம். ஸ்டுடியோவின் மேக்கப் அறைக்கு சென்று ,காட்சிக்கு ஏற்றாற் போல் மல்லிகை மலர் மீது 6 ரோஜா பூக்களை வைத்து கொண்டு சாட்டையடி களத்திற்கு சரோஜாதேவி வந்தார்.
அப்போது சரோஜாதேவியின் கைகளை உயர்த்தி இரண்டு பக்கமும் உள்ள சங்கிலியால்
ஏ. வி. எம். ஸ்டூடியோவில் உள்ள சாட்டையடி களத்தின் பராமரிப்பாளர் சிவலிங்கம் பிணைக்க, சரோஜாதேவி மீது உள்ள பூக்களை சாட்டையால் எடுக்கும் முறையை ஒத்திகை காட்ட இந்தி சண்டை மாஸ்டர் நவாஸ்கான் என்பவர் ஒரு பெரிய சாட்டையுடன் களத்திற்கு வந்து சரோஜாதேவி மீது 4 ரோஜா பூக்களை குறி தவறாமல் பறிக்க அதன் பிறகு நவாஸ்கான் கையில் இருந்த சாட்டையை சிவாஜி கணேசன் வாங்கி அவரை 'வெல்கம் பாய்' என்று கூறி கொண்டு குறி தவறாமல் ரோஜா பூக்களை சாட்டையால் பறிக்கும் போது ஒரு அடி தவறாமல் பட்டுவிட்டது. இது ஒத்திகை பார்க்கப்பட்டபோது.
அதன் பிறகு சிவாஜி கணேசன்-சரோஜாதேவி தட்டட்டும் கை தழுவட்டும் பாடல் படமாக்கப்பட்ட போது சில சாட்டையடிகள் சரோஜாதேவி மீது பட்டுவிட்டது.
என்ன தான் நாம் கவனமாக கையாண்டாலும் சாட்டையடி மட்டுமே சில நேரம் நம்மையும் மீறி அடி கொடுத்து நமது வஞ்த்தை தீர்த்து விடுகிறது என்று சிவாஜி கணேசன் கூறினார்.
அதன் பிறகு சிவந்த மண் படத்தில் பட்டத்து ராணி பாடல் காட்சியில் சிவாஜி காஞ்சனாவை 15 முறை அடிக்கும் போது திவான் (நம்பியார்) சுட்டுவிடுவதான காட்சியில் எந்த சாட்டையடியும் காஞ்சனா மீது படவில்லை.
ஆனால் கடைசியில் ஒரே அடி மட்டும் தவறி காஞ்சனா உடலை பதம் பார்த்துவிட்டது.
மேலும் அந்த படத்தின் பட காட்சியில் நகைச்சுவை நடிகை சச்சு தாமதமாக படபிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டார்.
அதை கண்டிக்கும் விதமாக சிவாஜி கணேசன் சவூதி அரபு ஷேக் வேடத்தில் இருந்து கொண்டு அவரை தமாசாக அழைத்து இங்கே நில் என்று கூறி விளையாட்டாக நடிகர் திலகம் சச்சுவிற்கு 4 சாட்டையடி வலிக்காமல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்துரையிடுக