சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

அதிர வைத்த கோர்ட் காட்சிகள்

நடிகர் திலகம் திரைப்படங்களில் கோர்ட் காட்சிகள்.
கோர்ட் காட்சிகள் என்று பலரால் சொல்லப்படும் போது சிவாஜி கணேசன் முதலில் நடித்த பராசக்தி படத்தை சொல்வார்கள்.
நீதிமன்றம் பல விசித்திரம் நிறைந்த வழக்குகளை சந்தித்து இருக்கிறது என்று ஆரம்பித்து ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் என்று நடிகர் திலகம் பராசக்தியில் முழங்கிய போது 
அந்தப் படமும் ஓடித் தள்ளியது.
சிவாஜியின் அந்த பராசக்தி கோர்ட் சீன்களை வைத்து மழைக்காலங்களில் வைரலாக பரவும் அந்த மழை சம்பந்தப்பட்ட கோர்ட் காட்சிகள் கூட வைரலாக பரவுவதில் இருந்து அதன் தாக்கத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
பராசக்தியில் அந்த கோர்ட் காட்சியில்  சிவாஜி பேசிக் கொண்டிருக்கும்போது இடையே எழுந்து ஒரு குமாஸ்தா கேள்வி கேட்க,
 கை நீட்டும் போது உனக்கேன் அக்கறை என்று பதில் சொல்லும் பாணி எல்லோரையும் கவர்ந்தது. ஒரு சிறு மழை தூரலாக ஆரம்பிக்கும் அந்த வசனம் சிவாஜி பேசி முடிக்கும் போது பெரும் புயலாக முடிந்திருக்கும் .
யாரால் மறக்க முடியும் இந்த கோர்ட் காட்சியை.

அடுத்து எல்லோராலும் ரசிக்கப்படும் அந்த கௌரவம் கோர்ட் காட்சிகள். எல்லா வக்கீல் வேடங்களுக்கும் காட்பாதர் பாரிஸ்டர் ரஜினிகாந்த்.திரையுலகம் அதற்கும் முன்பும் சரி பின்பும் சரி யாரும் பார்த்திராத ஒரு வக்கீல் வேடம் இந்த பாரிஸ்டர் ரஜினிகாந்த் வேடம்.
ஏண்டா அபிஷ்டு அந்த இன்சூரன்ஸ் பாலிசி விஷயம் உண்மையா என்று அடி குரலில் மேஜரிடம் கேட்பாரே அது கூட அமர்க்களம் தான். கௌரவம் பட கோர்ட் காட்சிகளைப் பற்றி பேசும் போது, படு வித்தியாசமாக செய்யப்பட்ட, வீட்டில் வைத்தே வாக்குவாதங்கள் செய்து அதன் தீர்ப்பு கோர்ட்டில் சொல்வது போல் அமைக்கப்பட்டு இருக்கும் அந்தக் காட்சிக்கு இணை எதுவும் இருக்க முடியாது. தமிழ் சினிமாவின் அற்புதமான கோர்ட் காட்சிகளில் உச்சம்  கௌரவம் பட கோர்ட் காட்சிகள்.

எதிரொலி படத்திலும் பல காட்சிகள். படத்தின் ஆரம்பத்தில் வரும், குற்றவாளி சிவாஜியின் கண்ணையே பார்த்து வியக்க வைத்து ,குற்றவாளி செய்த குற்றத்தை ஒப்புக் கொள்ளும் அந்த முதல் காட்சியும் படு வித்யாசமானது தான். எதிரொலி படத்தில் வரும் இறுதிக்கட்ட கோர்ட் காட்சிகள் எல்லாம் மிகுந்த சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். அந்தப் படத்தின் பலமே அந்த இறுதி கட்ட கோர்ட்டு காட்சிகள் தான்.விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் அமைக்கப்பட்டு இருக்கும். 

ஒரு குற்றம் செய்த குற்றவாளிக்கு சரியான வித்தியாசமான தீர்ப்பை சொன்ன ஒரே திரைப்படம் நீதி. இந்தத் திரைப்படம் ஹிந்தி பட தகவல் என்றாலும், இந்த கதை சமூகத்திற்கு அவசியமானது என்ற வகையில் தமிழில் உருவாக்கப்பட்டதை கண்டிப்பாக பாராட்டிய ஆக வேண்டும்.

சிவாஜியின் தங்கையாக வரும் சுமித்ரா மானபங்கபடுத்தபட்டதுதான் 
அண்ணன் ஒருகோயில் படத்தின் பிரதான கரு.இந்த சம்பவத்தை ஒட்டி நடைபெற்ற ஒரு கொலை பற்றிதான்  கோர்ட்டில் விசாரணை நடைபெறுவதாக கட்சி அமைப்புகள் இருக்கும்.முக்கியமான சாட்சியாக சுமித்ரா.ஆனால் சுமித்ராவுக்கு சுய நினைவு இருக்காது.இப்படிப்பட்ட சூழ்நிலையில் விசாரணை நடைபெறும்.த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்ட இந்த பட கோர்ட்டு காட்சிகள் சிறப்பாக இருக்கும்.தாய்மார்களின் மிகுந்த வரவேற்பை பபெற்றவை.

மிலிட்டரி மேனாக நடிகர் திலகம் நடித்த தாவணிக் கனவுகள் படத்தில் இடம்பெற்ற கோர்ட் காட்சி மிகுந்த சுவாரசியமான ஒன்று. பாக்கியராஜ்க்காக வாதாட வரும் சிவாஜி பாக்யராஜை காப்பாற்றுவதற்காக அவர் சொல்லும் வாதங்கள் மிகுந்த ரசனையாக இருக்கும். அவர் பேசிய அந்த துடுக்குத்தனமான பேச்சுக்கு நீதிபதி அபராதம் விதிப்பது போல காட்சி சுவாரசியமாகவும் அதேசமயம் ரசித்து சிரிக்கவும் வைக்கும். 

சிவாஜி கௌரவ வேடத்தில் நடித்த உருவங்கள் மாறலாம் திரைப்படத்தில் இடம்பெற்ற கோர்ட் காட்சிகள் நகைச்சுவைக்கு பஞ்சம் வைக்காத காட்சிகள். நகைச்சுவையுடன் அர்த்தம் பொதிந்த வாக்குவாதங்களால் நீதிமன்றத்தையே மிரளச் செய்யும் படி காட்சி அமைப்புகள் இருக்கும். ரசனையான கோர்ட் காட்சிகளில் இதுவும் ஒன்று. 

சிவாஜி செய்த ஆவேசமான கோர்ட் காட்சி என்றால் அது சிம்ம சொப்பனம் திரைப்படத்தை தான் சொல்ல வேண்டும் .சிவாஜிக்கு எதிராக எதிர் வாதம் புரியும் வக்கீலையே பயப்படச் செய்யும் சிவாஜியின் வாதங்கள்.சிவாஜியின் படத்தில் இடம்பெற்ற கோர்ட் காட்சிகள் ஒன்று போல் இல்லாமல் ஒன்றுக்கொன்று மாறுபட்டவையாக இருக்கும்.

படிக்காதவன் படத்தில் இடம்பெற்ற கோர்ட் காட்சியும் எல்லோராலும் ரசித்துப் பாராட்டப்பட்ட ஒன்று. நீதிபதியாக இருக்கும் சிவாஜி குற்றவாளியாக இருக்கும் ரஜினி தன் தம்பி என்று தெரிந்தவுடன் ரஜினியை காப்பாற்ற வேண்டி வக்கீலாக மாறி அவர் வாதம் செய்யும் காட்சிகள் எல்லாம் விறுவிறுப்பாக இருக்கும்.


கருடா சௌக்கியமா படத்தில் இடம்பெற்ற கோர்ட் காட்சிகளில் சிவாஜியின் நையாண்டி கலந்த எதிர் வாக்குவாதங்கள் பட ஓட்டத்திற்கு மிகவும் விறுவிறுப்பாக அமைந்தவை. இன்று நூற்றுக்கணக்கில் தாதா படங்கள் வந்தாலும் அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டது சிவாஜி செய்த தாதா வேடம். ரசிக்கவும் சிரிக்கவும் வைத்தவை கருடா சௌக்கியமா பட கோர்ட் காட்சிகள் .

நடிகர் திலகம் சிவாஜி இளைய திலகம் பிரபு இணைந்து நடித்த படம் நாங்கள். இந்தப் படத்தில் வரும் கோர்ட் காட்சிகளில் நடிகர் திலகம் பெரிய ஆரவாரம் இல்லாமல் அமைதியாக இயல்புத் தன்மையுடன் ஒரு வக்கீல் வாதம் செய்வது போல காட்சி அமைப்புகள் இருக்கும். 

ஜல்லிக்கட்டு திரைப்படத்திலும் பல கோர்ட் காட்சிகள் இடம் பெற்று இருக்கும்.
இந்தத் திரைப்படத்தில் நடிகர் திலகம் நீதிபதியாக வருவார். படத்தின் இறுதிக் காட்சிகளில் சத்யராஜை காப்பாற்றுவதற்காக வக்கீலாக தோன்றி வாதம் செய்வது போல காட்சிகள் இருக்கும். இந்த படத்தில் நடிகர்திலகத்தின் தோற்றமானது கௌரவம் படத்தை ஞாபகப்படுத்தும்.

இன்னும் பல சிவாஜி படங்களின் கோர்ட்டு காட்சிகள் இருக்ககின்றன.சில முக்கியமான காட்சிகளை மட்டும் இந்த பதிவில் சொல்லியுள்ளேன்.
தமிழ் சினிமாக்களில் கோர்ட் காட்சிகளில் முதன்மையானது சிவாஜி நடித்த திரைப்படங்கள்தான்.

செந்தில்வேல் சிவராஜ் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற