சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

ஜீவபூமி

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த சாண்டில்யனின் ஜீவ பூமி ...

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் & சரோஜாதேவி மற்றும் v.k.ராமசாமி, டி. எஸ். பாலையா, எம். ஆர். ராதா, T.k.பகவதி ,நாகேஷ் ஆகிய அன்றைய முன்னணி நடிகர்கள் நடித்து வெளிவராத சரித்திர திரைப்படம். கிட்டத்தட்ட இந்த திரைப்படம் அதற்கு முன்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த வடநாட்டு  ராஜா கதைகளான தங்கமலை ரகசியம், ராஜ பக்தி, மருதநாட்டு வீரன், சித்தூர் ராணி பத்மினி போன்ற திரைப்படங்களின் கதை சாயலில் தான் இந்த திரைப்படமும்.
 வடநாட்டு ராஜ வம்சத்தில் ஒன்றான ராஜ புத்திர வம்சத்தை அடிப்படையாக வைத்து இந்த திரைப்படமானது சாண்டில்யன் எழுதிய ஜீவ பூமி புதினத்தையும் மேலும் இரண்டு புதினங்களின் கலவையாக  இயக்குனர் சோமு அவர்கள் சிவாஜி கணேசன் மற்றும் சரோஜாதேவிவை வைத்து இயக்கினார். 
இந்த திரைப்படம் 1962 முதல் வெகு நாட்கள் தயாரிப்பில் இருந்து 1965ல் வெளி வருவதாக இருந்தது.படத்தின் காட்சிகள் எல்லாம் வடநாடுகளிலே படமாக்கப்பட்டது. 

அந்த சமயத்தில் சிவாஜி கணேசன் கர்ணன், புதிய பறவை போன்ற பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்தார். 

மேலும் இந்த திரைப்படத்தின் கதை அம்சமானது சாண்டில்யன் எழுதிய ஜீவ பூமி புதினத்தோடு சேர்த்து அவர் எழுதிய மற்ற இணை புதினங்களான நீலரதி, நாகதேவி ஆகியவை சேர்த்து படம் தத்ரூபமாக திரைக்கதையாக்கபட்டது. 

முதலில் நாககன்னியாக சிறிய வேடத்தில் கொஞ்சம் வில்லி கதாபாத்திரத்தில் நடிகை கே. ஆர். விஜயா நடித்திருந்தார். 

அப்போது அவர் பிரபலமாகாத நடிகை .ஒரு வேளை இந்த திரைப்படம் வெளிவந்திருந்தால் கே. ஆர். விஜயாவிற்கு இரண்டாவது படமாக அமைந்திருக்கும். 

நடிகர் திலகத்துடன் இணைந்து தோன்றிய முதல் படமாக அமைந்திருக்கும். 

இதுவரை யாரும் சொல்லாத இப் படத்தின் கதையை முதலில் முழுமையாக பார்ப்போம். ராஜ புத்திரர்கள் அதிகமாக வாழந்த நாடென்று பார்த்தால் தற்போது வடநாட்டில் உள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், பீகார், சட்டிஸ்கர் போன்ற மாநிலங்களில் தான் அவர்கள் ராஜிய எல்லை பரவியிருந்தது. 

மேலும் அந்த ராஜ புத்ர வம்சத்தில் மத்தியநாடான இன்றைய மத்திய பிரதேச நாட்டை ஆண்ட ராணி சத்யபாமா தேவியாக சரோஜாதேவி தோன்றி நடித்திருந்தார். 

அவரது கதாபாத்திரத்தை பொறுத்தவரை மென்மையான போக்கு, ராஜநீதி, பெண்மைக்குரிய அச்சம், நாணம், பயிர்ப்பு, சத்தியமிக்க பேச்சு, கருணையின் நிழல், தர்மத்தின் சிந்தனையுடன் கொண்டதாகும்.தனது செழுமையான நாட்டை வழி நடத்தி சென்று கொண்டிருக்கும் ராணி சத்யபாமாவையும் அவரது நாட்டையும் அடிமையாக்க பக்கத்து நாட்டு மன்னன் முயற்சிப்பார்.

வழக்கம் போல பக்கத்து நாட்டு போர் சூழ்ச்சி வித்தைகளை முறியடிக்கும் விதமாக ராணி சத்யபாமாவின் தளபதியாக நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரத்தன் சந்திரசேகராக தோன்றி நடித்திருந்தார். 

அரசியான சரோஜாதேவிக்கும் அவருக்கு வரும் துன்பம் துயரம் அனைத்தையும் தனது வாள் முனையில் பகைவரை வெட்டி எறியும் போர் தளபதியாக திறம்பட சிவாஜி கணேசன் நடித்து அசத்தி இருந்தார். 

 ராணி சத்யபாமாவின் நாட்டில் நவரத்னங்கள் மற்றும் தங்கசுரங்களையும் கைப்பற்ற பிற நாட்டு மன்னர்கள் மற்றும் ராணி சத்யபாமாவுடன் இருக்கும் அவரது சீடர்கள் ராஜ தர்பாரின் மந்திரிகள் அனைவரும் கைப்பற்ற நினைக்கின்றனர். 

மேலும் அந்த சூழ்ச்சிகளின் வில்லனாக கதாபாத்திரத்தில் ராஜாங்க மந்திரியாக டி. எஸ். பாலையாவும் திவானாக எம். ஆர். ராதாவும் துரோகத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் செம்மையாக நடித்திருந்தனர். 

மேலும் வாள் வீச்சில் பெயர் போன தளபதி ரத்தன் சந்திரசேகரான சிவாஜி கணேசன் எதிரி நாட்டில் இருந்து ஒரு முறை  எதிரி படையெடுத்து வந்த போது அவரது தலைமுடியையும் மீசையையும் தனது வாளிலே எடுப்பது போன்ற காட்சிகள்  எல்லாம் சிவாஜி கணேசன் ஸ்டைல் நடிப்பிற்கு ஏற்ப அமைந்த காட்சிகள். 

எதிரியின் ராஜ சூழ்ச்சிகளில் ஒன்றாக நாகநாட்டு மங்கையாக தோன்றும் கே. ஆர். விஜயாவிடம் தனக்கு நடந்த அவமானத்தை கூற நாகதேவியாக வரும் கே. ஆர். விஜயா பாம்பாக உருமாறி மத்தியநாட்டு இளவரசி சத்யபாமாவான சரோஜாதேவியை சீண்ட அவர் வன உலா வரும் போது சர்ப்பமாக அதாவது பாம்பாக உருமாறி கே. ஆர். விஜயா சரோஜாதேவியை சீண்டுவார். 

ஆனால் சரோஜாதேவி தர்மம், கருணை, சத்யபிறவி நிறைந்த பெண்.அதனால் அந்த பாம்பாக வரும் கே. ஆர். விஜயா ராணி சத்யபாமாவான சரோஜாதேவியை சீண்டிய போது மரணிக்க மாட்டார்.
ராணி சத்யபாமாவை எதிர்ப்பவர்கள் அவளுக்கே அடிமையாவார்கள்  என்ற வரத்தால் ,
சரோஜாதேவியை சீண்டிய நாகதேவியான கே. ஆர். விஜயா ராணி சத்யபாமா உடலில் கலந்துவிடுகிறாள். 

 இந்த இடத்தில் தான் விஷமான நாகம் நவமாக அதாவது நவரத்னமாக ராணியான சரோஜாதேவி வயிற்றில் உருவாகி நீலரதி ஆகிறாள்.மேலும் இது தான் ராஜாங்கத்தையே அழிக்கவல்லதாக மாறுகிறது. 

இந்த காட்சி படலம் வந்த பிறகு ராணி சத்யபாமாவான சரோஜாதேவி கொஞ்சம் வில்லத்தனமாக நடந்து கொள்கிறார். 

அப்போது படை தளபதியான நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ராணியின் செயல்களிலும் நடத்தையிலும் மாற்றம் ஏற்படுவதை கண்டுபிடிப்பது  போன்ற காட்சிகள் எல்லாம் விறு விறுப்பாக இருக்கும்.

சரோஜாதேவி தனது தளபதியும் காதலனுமான சிவாஜி கணேசனை அழிப்பதற்கு எதிரிகளுக்கு  
துணை போகிறார்.

எதிரிகளை அழிப்பதற்காக சிவாஜி கணேசன் தீட்டிய  ராஜ தந்திர சூழ்ச்சிகளை எதிரி நாட்டிற்கு சரோஜாதேவியே தெரியப்படுத்தி தன்னிலை மறந்து நாகத்தின் வலிமையால் சிவாஜிகணேசனை அழிக்க முற்படுகிறார்.

 அவளே எதிரி நாட்டு மன்னனுக்கு புறா மூலம் முன் அறிவிப்பாக சிவாஜிகணேசனின் போர் வியூகத்தை காட்டி கொடுக்கிறாள். 

பின்பு ஒரு நாள் சிவாஜி கணேசன் வகுக்கும் வியூகங்களால் ,எதிரி நாட்டில் போர் கூடாரத்தில் இருக்கும் போதே அந்த புறா கையில் கிடைக்க  அதை வைத்து உண்மைகளை  கண்டுபிடித்து விடுகிறார் .

அப்போது தளபதி சந்திரசேகருக்கு ராணி சத்யபாமா மீதே சந்தேகம் வந்துவிடுகிறது. 

அதன் ராணி சத்யபாமா (சரோஜாதேவி) அவ்வப்போது  வயிற்று வலி தாங்காமல் கத்தி கதறுகிறாள். அதற்கு காரணம் ராஜாங்க வைத்தியருக்கு கூட புலப்படவில்லை. 

மேலும் (சிவாஜி கணேசன்) சந்திரசேகர் அவர்கள் இதற்கு எல்லாம் தீர்வு காண ஒரு பெரிய யோகியாக இருக்கும்  வைத்தியரை அணுகி கேட்கும்  போது அவர் ராணி சத்யபாமாவின் கைநாடி துடிப்பை பார்த்துவிட்டு தற்போது ராணியின் வயிற்றில் நாகதேவி நவமாக அதாவது நவரத்ன வடிவில் நாகமாக மாறி ராணி சத்யபாமாவையும் நமது மத்திய நாட்டையும் சீரழித்து கொண்டு உள்ளது என்று கூறுகிறார்.

அதை தளபதி சந்திரசேகர் நம்ப மறுக்கிறார். 
அதற்கு மருத்துவர் அவர்கள் 
அதை நிரூபிக்க ஒரு உலக்கை எடுத்து வரச் சொல்கிறார்.ராணியின் வயிற்றில் நாகம் இருந்தால் இந்த உலக்கை நிற்கும் .
இல்லை என்றால் நிற்காது என்று கூறிவிட்டு
 மருத்துவர் , நாகேஷ் வயிற்றில் ஒரு பெரிய உலக்கையை வைக்கிறார் . அந்த உலக்கையை நாகேஷ் வயிற்றில் வைத்த போது நிற்கவில்லை. 

உடனே மருத்துவர் வயிற்று வலி மயக்கத்தில் இருக்கும் ராணி சத்யபாமாவான சரோஜாதேவி வயிற்றில் அந்த உலக்கையை வைத்த போது நேர் நிலையாக நிற்கின்றது. 

தளபதியான சிவாஜி கணேசன், மருத்துவர்,நாகேஷ் அனைவரும் அசந்து போகின்றனர். 

அந்த காட்சியை கண்டவுடன் தளபதி சந்திரசேகர் மனமுடைந்து போகிறார். 

அதற்கும் தீர்வை மருத்துவர் கூறுகிறார். இது தான் மாய வாள் .இந்த வாள் ராணி சத்யபாமா வயிற்றில் பட்டால் மட்டுமே போதும். நாகமான  நாககன்னி வெளியில் துள்ளி விழுவாள்.

ஆனால் அதை சாதாரணமாக நடத்த  கூடாது என்று தீர்மானித்து  சிவாஜி கணேசன் மறுநாள்  ராணி சத்யபாமா மூலமாக ராஜசபையை கூட்டுகிறார்.   ராணி சத்யபாமாவுக்கு ராஜாங்க எதிரிகளான எம். ஆர். ராதா, பாலையா ஆகியோர் முன்னிலையில் தளபதி சந்திரசேகரான சிவாஜி கணேசன் விவாதம் நடத்தி யார் நாட்டுக்கு எதிரிகளோ,  இல்லை ராஜாங்க சூழ்ச்சி செய்பவர்களோ அவர்களுக்கு  இந்த  வாளால்  மரண தண்டனை  நிறைவேற்றப்படும் என்று கூறுகிறார்.

அதற்கு உடனே நிறைவேற்றுங்கள் தளபதியாரே என்று ராணி சத்யபாமாவான சரோஜாதேவி கூற உடனே நிறைவேற்றுகிறேன் மகாராணி என்று கூறிவிட்டு ராஜ சபையின் ஒவ்வொரு படிக்கட்டாக ஏறி சரோஜாதேவி இடம் நெருங்கிவர தண்டனை அவர்களுக்கு இல்லை மகாராணி உங்களுக்கு தான் என்று கூறிவிட்டு அந்த வாளால் ராணி சத்யபாமா வயிற்றில் குத்தியவுடன் அவர் வாயிலிருந்து நவரத்னம் துள்ளி விழுந்து நாகமாக மாறியதும் தனது வாளால் தளபதியான சிவாஜி கணேசன் வெட்டி வீழ்த்துகிறார்.

ராணி சத்யபாமா உடலளவிலும் மனதளவிலும் தேர்ச்சி பெற்று விடுகிறார். ராணி சத்யபாமாவை கவிழ்க்க என்னென்ன சூழ்ச்சிகள் செய்யலாம் என்று யோசித்து கொண்டு இருக்கும் எதிரிகள் பல சூழ்ச்சிகள் செய்து இறுதியில் ரத்தன் சந்திரசேகரை சங்கிலியால் பிணைத்து தண்டனை கொடுக்க முயற்சிக்கிறார்கள். அந்த சூழ்ச்சியில் இருந்து அவர் எப்படி தப்பித்து தன்னையும் காப்பாற்றி ராணி சத்தியபாமாவையும் காப்பாற்றுகிறார்  என்பதே இறுதிக்கட்ட காட்சிகள் .

மேலும் இந்த திரைப்படம் வெளிவராததற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் அதில் ஒன்று இந்த திரைப்படத்திற்கு கதாநாயகியான சரோஜாதேவி பல திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்ததால் இந்த படத்தில் அவர் முழு ஒத்துழைப்பு கொடுக்காததும் ஒன்று.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற