கிருஷ்ணன்-பஞ்சு இந்த இரட்டை இயக்குனர்களில் இயக்கத்தில் முதல் படமான பராசக்தி படத்தில் சிவாஜி கணேசன் நடித்து கொண்டிருக்கும் போது சிவாஜியை ஏளனமாக பலர் பேசியபோது ...
சிவாஜி கணேசனை அரவணைத்து நெஞ்சார தைரியம் கொடுத்தது இயக்குனர்களில் பெரியவர் கிருஷ்ணன் அண்ணன் மட்டுமே மேலும் பராசக்தி படத்தில் நடிக்க வருவதற்கு முன்பு நாடகத்தில் நடித்த அனுபவம் மட்டுமே இருந்ததாலே படங்களில் கேமரா கோணங்களை அரிய செய்து ஆங்கில போஸ் முறையில் நடிக்க யோசனைகள் சொன்னார் கிருஷ்ணன் அவர்கள் .மேலும் அதனாலே அவரது திரைப்படங்களில் நான் நடிக்கும் போது எனக்கொரு தனி உற்சாகம் சந்தோஷம் இனம் தெறியாத நட்பு மேலும் எனக்கும், அவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாத வயது ஆனால் என்னை அவர் கடைசி காலம் வரை மிஸ்டர் கணேஷ் அல்லது சிவா அதிகபட்சமாக வாங்க போங்க என்று மரியாதை நிமித்தமாகவே என்னை அழைப்பார்.
என்னிடம் ஒரு போதும் அதிர்ந்து கூட பேசாத வயதில் பெரிய இயக்குனர்களில் ஒருவர் கிருஷ்ணன் அவர்கள் .
சிவாஜி தன் தாயார் பெயரில் ராஜாமணி பிக்சர்ஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி பாசமலர் படத்தை வெளியிட்ட பின் ,
சிவாஜி கணேசன் அவர்கள் மனதில் ஒரு குறையாக இருந்தது தன்னை அறிமுகம் படுத்திய அபிமானத்துக்குரிய இயக்குனர் கிருஷ்ணன்-பஞ்சு அவர்கள் மூலமாக ஒரு திரைப்படம் இயக்க வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்த போது தனது தம்பி சண்முகம் மூலம் ஒரு கதையை தனது நாடக குரு சக்தி டி. கே. கிருஷ்ணசாமி மூலம் கதை-வசனம் ஏற்பாடு செய்து ராஜாமணி பிக்சர்ஸ் சார்பில் இரண்டாவது வெளியிடாக "குங்குமம்" படத்தை தயாரிக்க முற்பட்ட போது ,இந்த படத்தை இயக்கும் பொறுப்பை யாரிடம் கொடுக்கலாம் என்று சண்முகம் சிவாஜி இடம் கேட்ட போது கிருஷ்ணன்-பஞ்சு அவர்களை தவிர வேறு யாரும் இயக்க கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்து கொண்டார்.
அதனாலே குங்குமம் படத்தை இயக்கும் பொறுப்பு கிருஷ்ணன்-பஞ்சு வசமே போனது அதன் பின் சிவாஜி கணேசன் தமிழ் வாத்தியார், பெண் வேடத்தில் எல்லாம் அந்த திரைப்படத்தில் நடித்து அசத்தியிருப்பார்.
அதன் பிறகு 5 வருடங்கள் கழித்து 1968 ஆம் ஆண்டு உயர்ந்த மனிதன் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் நடிக்க வைக்க ஏ. வி. எம். ஸ்டூடியோவில் ஒப்பந்தம் செய்த போது சிவாஜியிடமும் யோசனை கேட்கப்பட்டது.
பாடல்கள் யார் என்று கேட்கும் போது கவிஞனை போடுங்கள் என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்வார்
இசை மற்றும் கதாபாத்திரங்கள் தேர்வு விடயங்களில் அதிகம் தலையிட மாட்டார்.
இதில் சிவாஜி கணேசன் அவர்கள் படத்தின் இயக்குனராக ஏ. வி. எம்மின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான ஏ. சி. திருலோகச்சந்தர் அவர்களை இயக்க வைக்கலாம் என்று கருத்து தெரிவித்தார்.
ஏ. சி. திருலோகச்சந்தர் ஏ. வி. எம்மில் ராமு தெலுங்கு பதிப்பை இயக்கி கொண்டிருந்ததால் உயர்ந்த மனிதன் படத்தை இயக்க முடியாமல் போய்விட்டது.
அதனால் தவிர்க்க முடியாமல் கிருஷ்ணன்-பஞ்சு அவர்களையே உயர்ந்த மனிதன் படத்தின் இயக்குனராக முடிவு செய்யபட்டது.
இந்த படம் முழுவதும் சிவாஜி கணேசன் அவர்கள் இயக்குனர் கிருஷ்ணன்-பஞ்சுவில் கிருஷ்ணன் இடமே அனைத்தையும் பகிர்ந்து கொண்டு நடித்தார்.
மேலும் இந்த திரைப்படத்தின் வெள்ளி விழாவை அன்றைய தமிழக முதல்வர் அண்ணாதுரை தலைமை தாங்கி நடத்தி கொடுத்த போதிலும் சிவாஜி கணேசன் அவர்கள் நான் நடித்த முதல் படமான பராசக்தி படத்தை இயக்கிய இயக்குனர்களே எனது 125வது படத்தை இயக்கியுள்ளனர் என்பது யாருக்கும் கிடைக்காதா வாய்ப்பு என்று பெருமிதம் அடைந்தார்.
கிருஷ்ணன்-பஞ்சு சிவாஜி கணேசன் இணை 7 வருடங்கள் கழித்து இளைய தலைமுறை படத்தில் இணைந்தனர்.
கடைசி வரை சிவாஜி கணேசன் இயக்குனர் கிருஷ்ணன்-பஞ்சு நட்பு நன்றாக தொடர்ந்து கொண்டிருந்தது.
மேலும் சிவாஜி கணேசன் நடிப்பிலும், அரசியலிலும் தன்னிகரற்ற பெரிய ஆளுமையாக இருந்த போதும் கூட இயக்குனர் கிருஷ்ணன்-பஞ்சுவில் பெரியவர் கிருஷ்ணன் அவர்களை எங்கு கண்டாலும் அவர் காலில் கௌரவம் பார்க்காமல் சமஸ்தானமாக விழுந்து வணங்குவார்.
அந்த அளவிற்கு தொழில் பக்தி என்பதையும் தாண்டி கிருஷ்ணன் மேல் இனம் தெரியாத அலாதியான மரியாதை சிவாஜி கணேசன் கொண்டிருந்தார்.
மேலும் 1980களுக்கு பிறகு கிருஷ்ணன்-பஞ்சு படங்களை இயக்காமல் திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்த போதும் கூட சிவாஜி கணேசன் கிருஷ்ணன் வீட்டிற்கு மாதந்தோறும் பணம் அனுப்பி கொண்டு இருந்தாராம்.
அதன் பிறகு பீ. ஆர். பந்துலுவுக்கும் சிவாஜி கணேசன் இடையேயான உறவு ஆரம்பகாலத்தில் நன்றாகவே இருந்தாலும் நமது நாட்டு தேசிய தலைவர்கள் குறிப்பாக தென்னாட்டை சேர்ந்த பெரும் சுதந்திர போராட்ட தியாகிகள், புராண நாயகர்கள் மற்றும் வீரர்களான வீரபாண்டிய கட்டபொம்மன், வ. உ. சிதம்பரனார், கர்ணன் போன்றார்களை என்னுள் கொண்டு வந்து ரசிக மக்களிடையே பெரும் தாக்கத்தை உருவாக்கிய ஒரு மாபெரும் இயக்குனர் பந்துலு அவர்கள் சுதந்திர வீரர்களை வைத்து படமாக்கிய போதெல்லாம் கூட எங்களிடம் பிரச்சனை ஏதும் வளரவில்லை.
ஆனால் அவ்வளவு பெரிய திரைப்படங்களில் வராத பிரச்சனையும் பிரிவும் அதன் பிறகு வந்த வெளிவந்த முரடன் முத்து படத்திற்கு ஏற்பட்ட வெளியீடு தேதி மற்றும் சிவாஜி கணேசனின் 100 வது படமாக அப்படம் இருக்க வேண்டும் என்ற பந்துலுவின் முடிவாக இருந்தது.
ஆனால் சிவாஜி கணேசன் தம்பி சண்முகம் அவர்கள் ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் சிவாஜி கணேசன் தத்ரூபமாக 9 வேடங்களில் நடித்த நவராத்திரி படம் தான் 100வது படமாக வெளியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
முரடன் முத்து அதற்கு முன்பே வெளிவந்ததால் சிவாஜி கணேசனிடமிருந்து கருத்து வேறுபாடால் வெளியேறினார்.
பின்னர் 1973-1974 ஆண்டு காலகட்டத்தில் வீர சிவாஜி வரலாறை சிவாஜி கணேசனை வைத்து படமாக்க நினைத்த போது பந்துலுவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து போகவே சிவாஜி கணேசனை வீர சிவாஜியாக தமிழ் ரசிகர்கள் பார்க்க முடியாமல் போனது .
இந்த விபரங்கள் அதிகம் தெரியாததால் தான் பந்துலு சிவாஜி கணேசன் நட்பை விபரம் தெரியாமல் தவறாக பேசி வருகின்றனர்.
அதே போல் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி திரைப்படங்கள் தான் அந்த படங்களில் ஒன்றான பேசும் தெய்வம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் ஒன்றான சிவாஜி கணேசன் & பத்மினி தம்பதியருக்கு குழந்தை பிறக்க வேண்டி திருப்பதி கோயில் தேவஸ்தானம் பிரகாரத்திலே படமாக்கப்பட்டது.
அதற்கு எல்லாம் அப்போதும் எப்போதும் அனுமதி இல்லை என்ற போதிலும் சிவாஜி கணேசனின் செல்வாக்கால் அது சாத்தியமானது மேலும் அந்த குழந்தை பிறக்க வேண்டிய வேண்டுதல் காட்சியில் சிவாஜி கணேசன், பத்மினி, ரங்கா ராவ் ஆகியோர் உணர்ச்சி வசமாக நடித்து கொண்டிருந்தனர்.
ஆனால் அப்போது கே. எஸ். ஜி பத்மினியை மனமார பாராட்டினார் மேலும் அந்த காட்சி பதிவு செய்யப்பட்ட போது பொது மக்கள் அனைவரும் அதை பார்த்து கொண்டிருந்தனர்.
அந்த காட்சி முடிந்த பிறகு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ,
கோனா கினா என்று இயக்குனர் திலகம் கோபாலகிருஷ்ணனை சுருக்கமாக அழைத்தார் பத்மினி, ரங்கா ராவ் நடிப்பை பாராட்டும் நீ என் நடிப்பை ஏன் கொஞ்சம் கூட பாராட்டவில்லை பொதுமக்கள் என்னை என்ன நினைப்பார்கள் என்று கேட்ட போது அண்ணா என்னை தப்பா நினைக்காதிங்க அந்த பொது இடத்தில் வெளிப்புற படப்பிடிப்பில் எந்த நடிகையாக இருந்தாலும் கொஞ்சம் தடுமாற்றம் அடைவார்கள் அதைவிட நம்ம ரங்கா ராவ் அவர்கள் வெளிப்புற படப்பிடிப்பிற்கே வரமாட்டார்.
அவர்கள் நடிப்பை உற்சாகப்படுத்தினால் தான் படத்திற்கு தேவையான காட்சி விரைவாக அந்த இடத்தில் முடியும்
உங்கள் நடிப்பை நான் நாலு பேருக்கு முன்னாடி நான் பாராட்டுவதா இது என்ன வேடிக்கை உங்கள் நடிப்பை தான் இந்த உலக மக்களே பாராட்டி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்ற பட்டமே கொடுத்துள்ளார்களே இதில் நான் மட்டும் எப்படி உங்களை தனியாக பாராட்ட வேண்டியுள்ளது.
என்று கே. எஸ். கோபாலகிருஷ்ணன் சொன்ன போது சிவாஜி கணேசன் கே. எஸ். ஜியை கட்டி பிடித்து கொண்டு ஆனந்த கண்ணீர் நடித்து விட்டாராம்
இந்த சம்பவத்தை அப்போது இயக்குனர் திலகமும், நடிகர் திலகமும் உணர்ச்சிவசத்தில் திருப்பதியில் கண்ணீர் வடித்தனர் என்று செய்திகளில் வெளிவந்தது.
தங்கசுரங்கம் படத்தில் முதலில் கதாநாயகியாக சரோஜாதேவியை ராமண்ணா நடிக்க வைக்க நினைத்த போது படத்தின் சப்ஜெக்ட் படி கதாநாயகி கொஞ்சம் நீச்சல் உடை, ஆஃப் டிரெஸ்சில் நடிக்க வேண்டும் இதுவெல்லாம் அணிந்து நடிக்க சரோஜாதேவி ஒப்புக் கொள்வாரா என்று சிவாஜி கணேசன் கேட்ட போது பேசி பார்ப்போம் என்று ராமண்ணா சரோஜாதேவி இடம் அனைத்தையும் கூறிய போது அவர் கணவர் ஸ்ரீ ஹர்ஷா அப்போது சரோஜாதேவியின் கால்ஷீட் பார்த்து கொண்டடிருந்தார் அனைத்தையும் கூறிய போது இரண்டு மூன்று நாட்கள் சிவாஜி கணேசன் சரோஜாதேவி உடன் சில காட்சிகள் கவர்ச்சி உடையில் நடித்தார் என்றாலும் ராமண்ணா அவர்களுக்கு அவர் நடித்த காட்சிகள் கொஞ்சம் கூட அவர் மனது ஏற்கவில்லை.
உடனே சரோஜாதேவி இடமே கொஞ்சம் கூட சூட்டே ஆகவில்லை என்று ராமண்ணா கூறினார் என்றால் அந்த அளவிற்கு சரோஜாதேவி இடம் பெருந்தன்மையான நட்பு இருந்தது.
பிறகு ராமண்ணா அவர்களுக்கு சரோஜாதேவியிடம் உன் உருவத்திலேயே ஒரு பொண்ணு கன்னடம் மற்றும் தெலுங்கு தமிழ் சினிமாவில் நடிக்கிதே அட நம்ம பந்துலு அண்ணன் கூட தமிழ்ல எங்க வீட்டு மகாலட்சுமி படத்தில் அறிமுகமான நடிகை அதன்ன பாரதி என்று சரோஜாதேவி கூற ,அந்த பொண்ணையே சிவாஜி கணேசனுக்கு போட்டுவிடலாம் என்று கூற படத்தில் பாரதி நடிப்பதற்கு சரோஜாதேவியே உறுதுணையாக இருந்தார்.
ஸ்ரீதர் ஊட்டி வரை உறவு படத்தில் சிவாஜி கணேசன் அவர்களுக்கு ஜோடியாக முதலில் ஜெயலலிதாவை முடிவு செய்தார்.ஆனால் இரண்டொரு நாட்கள் சிவாஜி கணேசன் உடன் ஜெயலலிதா இணைத்து பலகாட்சிகள் படமாக்கப்பட்ட போது ஸ்ரீதர் அவர்களுக்கு சிவாஜி கணேசன் உடன் ஜெயலலிதா பொருத்தி பார்க்கும் போது
அவருக்கு அப்போது திருப்தி தரவில்லை.
அதனாலே ஜெயலலிதாவிற்கு பதிலாக கே. ஆர். விஜயா நடித்தார்.
சிவந்தமண் படத்தில் சிவாஜி கணேசனுக்கு கதாநாயகியாக ஹேமா மாலினியை ஸ்ரீதர் ஒப்பந்தம் செய்ய போவதாக சண்முகம் சிவாஜியிடம் சொன்ன போது ,
என்னது இந்தி நடிகை ஹேமா மாலினியா என்று கூறிவிட்டு ஸ்ரீதருக்கு என்ன பணம் அதிகமாக கையில் கிடைத்துவிட்டது என்று கண்மூடித்தனமாக செலவு செய்கிறானா என்ன என்று கேட்டு உடனே ஸ்ரீதரை வரவழைத்து என்ன கதாநாயகியாக ஹேமா மாலினியா ?
இதுவரை நீ இந்த படத்துக்கு செஞ்ச செலவை நான் எதுவும் கேட்கவில்லை.
அதைவிட நான் கேள்விபட்ட வரை இந்தி சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் முன்னணி கதாநாயகியான ஹேமா மாலினியை போட்டால், படம் தயாராக லேட்டாகலாம்.இன்னும் செலவு ஆகலாம்.இந்தகதாநாயகியை போடு என்று நான் யாருக்கும் சொல்வதில்லை.இது ஒரு அபிப்ராயம்தான்.
நமது தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் உள்ளனர் அவர்களையே ஜோடியாக வைத்து படம் இயக்கலாமே என்று கூற காஞ்சனாவை ஒரு வழியாக ஸ்ரீதர் ஒப்பந்தம் செய்தார்.
அதன் பிறகு சிவாஜி கணேசனை வைத்து ஸ்ரீதர் அவர்கள் ஹீரோ 72 என்ற படத்தில் சிவாஜி கணேசன் & ஜெயலலிதாவை வைத்து இயக்க நினைத்த போதிலும் அது அப்போது சிவாஜி கணேசன் & ஜெயலலிதா நடிப்பில் ஹீரோ 72 என்ற பெயரில் விளம்பரத்தோடு நின்று போனது
அதன் பிறகு பல நிதி நெருக்கடியால் இயக்குனர் ஸ்ரீதர் இருந்த போதிலும் , ரசிகர்களை ஏமாற்றாமல் அந்த திரைப்படம் 3 ஆண்டுகள் கழித்து 1975ல் வைர நெஞ்சம் என்ற பெயரில் வெளிவந்தது.
ஆனால் ஸ்ரீதர் அவர்கள் சிவந்த மண் படத்தில் புது நடிகையுடன் சிவாஜி கணேசனை ஜோடி சேர்க்க முடியாமல் போனதை வைர நெஞ்சம் படத்தின் மூலம் பத்மபிரியா என்ற கன்னட நடிகையை நடிகர் திலகத்தின் இணையாக வைத்து இயக்கினார்.
ஆனால் அந்த படத்தில் சிவாஜி கணேசன் நடிக்கும் போது காமராஜர் மறைவு பல அரசியல் பணிகளால் சிவாஜி கணேசனின் இறுதி காட்சிகளில் அவரை போலவே இருக்கும் விவேகா ஆட்ஸ் சுந்தரம் அவர்களை வைத்து படமாக்கினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக