சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

உலகம் வியந்த நவ சிவாஜி

நவ சிவாஜி - 9 அற்புதங்கள்
அதிசயமாகத்தான் இருக்கு.நம்பாமயும் இருக்க முடியலேயே.சிவாஜி செஞ்ச 9 வேஷந்தான்.ஒரு வேஷத்துக்கும் இன்னொரு வேஷத்துக்கும் சென்டிமீட்டர் மில்லி மீட்டர் அளவுல ஆராய்ச்சி பண்ணினாலும் ஏதும் கண்டு பிடிக்க முடியலேயே.எல்லாமே ஒண்ணுக்கொண்ணு வித்தியாசமாத்தானே இருக்கு.
அந்த 9 வேஷத்தையும் சிவாஜியாலே நாம பாத்துட்டோம்.சிவாஜி எதைப் பாத்து செஞ்சிருப்பாரு.இந்த ஆச்சர்யம் பாக்குற யாருக்கும் வராம போகாது.

அற்புதம்,பயம்,கருணை ,
கோபம்,சாந்தம்,அருவருப்பு,,
சிங்காரம்,வீரம்,ஆனந்தம் இந்த 9 ரசங்களையும் அவர் நடிச்சப்போ நாமும் அந்த குணங்களுக்கு மாறுகிற உணர்வுகளுக்கு அடிமை படுத்திவிடுவார் பாருங்க  இந்த நவ சிவாஜி.


அற்புதராஜ்
இந்த அற்புதராஜை பாருங்க.அந்த காலத்துலே இங்கிலீஸ் படங்கள பாத்தப்போ அட இவங்க எல்லாம் எவ்வளவு ஸ்டைலிசா இருக்காங்க ,நடிக்கிறாங்க அப்பிடின்னு எல்லாம் பேசிக்குவாங்க.நம்ம ஊர் நடிகர்கள் நம்ம கலாச்சார படி தான் இருப்பங்க ,நடிப்பாங்க.  ஆனா இந்த அற்புதராஜ் நடிப்பை பாக்கையிலே சிவாஜி மேல் நாட்டுல இருந்து வந்தவரோ ,அங்கேயே படிச்சு வளந்தவரோ அப்பிடீன்னு நெனப்பு வந்து போகும்.தோளை மெல்ல தூக்கி ரெண்டு கையையும் சிவாஜி மேலே லேசா ஜெர்க் பண்ணி தூக்கி நடிக்கறத பாக்கறப்போ இங்கிலீஸ் ஜேம்ஸ்பாண்ட் நடிகன்ல இருந்து மத்த  எல்லா நடிகர்களும் வாயடைச்சுத்தான் போகணும்.
வெளிநாட்டுக்காரன் இந்த கேரக்டரை பாத்தா நம்மூர்ல பொறந்த ஆளு இந்தியாவுக்கு நடிக்க போயிட்டாரு தானு நெனப்பான்.
அற்புதராஜ் வர்ற ஒரு சின்ன ஷாட்டை மட்டும் இங்க சொல்றேன்.
சாவித்திரி கிட்ட ,நளினா !நீ உன்ன பத்தி சொல்லாட்டி போனாலும் நான் என்ன பத்தி சொல்றேன் கேளு அப்படீன்னு சொவ்லிட்டு கையில வெச்சிருக்கற கிளவுஸை தூக்கி எறிவாரு பாருங்க.
என்ன அட்டகாசமா ஸ்டைலிசா அதை செஞ்சிருப்பாரு.அந்த கேரக்டருக்குன்னு ஸ்பெசலா சிவாஜி செஞ்ச மேனரிசம் அந்த  அற்புதராஜ் கேரக்டர்.

2)குடிகாரன்- 
இந்த குடிகாரன் பாத்திரத்தை ஓபனிங்லே எப்படி அட்டகாசமா காட்டியிருப்பாங்க படத்துல.
கேரக்டரை காட்டறதுக்கு முன்னாலேயே, ஒரு பாட்டில் உருண்டு வர்ற ஒரு ஷாட்டு வரும்.அந்த ஒரு ஷாட்டே வரப் போறகேரக்டரை நமக்கு புரிய வெச்சுடும்
நீளமா படிக்கட்டை காமிப்பாங்க.அதுக்கு மேலே காமரா போகும்.லைட் போகஸ் மங்கலா இருக்கும்.அங்க உருவம் நின்னுகிட்டு இருக்கும்.அடுத்ததா லைட் எரியும் . சிகரெட் புகைய விட்டுட்டு சிவாஜி நின்னுகிட்டு இருப்பார்.தாடி கசங்கலான சட்டை முரட்டுத்தனமா நின்னுகிட்டு இருப்பார்.சாவித்திரி கத்துவாங்க அவரை பாத்து.உஷ்ஷ்னு ஒரு விரலால அதட்டுவாரு.அதுக்கு பின்னால என்ன நடக்கப்போகுது அப்படிங்கற ஒரு பதை பதைபதைப்பை உண்டாக்கிரும்.அவ்வளவு
காமுகனா நடிச்சதும் கடைசியிலே சாவித்திரி கால்ல விழுந்து துடிக்கறதுமா ப்படியெல்லாம் நடிக்கறதுக்கு துணிவு வேணும்.

3)கருணாகரன்- 
சிவாஜி செஞ்ச மருத்துவர் வேஷம்.சிவாஜி செஞ்ச இந்த கேரக்டர் பற்றி சொல்லனும்னா இந்த காட்சியில வர்ற அந்த போலீஸ்காரர் பேசுற வசனத்தையே உதாரணமா சொல்லலாம் .சார் நீங்க பேசிட்டு இருக்குறத கேட்டுகிட்டே இருக்கும் போது புத்தி மாறாட்டம் உள்ளவங்களும்  பழைய நிலைக்கு வந்துருவாங்க அப்பிடிம்பாரு. அப்படி இருக்கும் அவருடைய பேச்சு பாவனை.மருத்துவர் பாத்திரத்தை பார்த்தா ஆஹா இப்படி தான் டாக்டர்லாம் இருக்கணும் அப்படிங்கிற நினைப்பு வரும். அந்த பாத்திரத்தோட சிறப்ப அவரோட நடையலியும் காட்டி இருப்பார்.

4)கொலையாளி- 
'போலீஸ் உன்னை தேடியா வந்துச்சு ' அப்பிடின்னு சாவித்திரி கிட்ட எகத்தாளமா ஒரு சிரிப்பு சிரிப்பார் பாருங்க.சிவாஜியோட நடிப்புல தியேட்டரே அலறும்.தம்பிய கொன்னவன , 'கைமா' மாரி கொத்தித் தள்ளணும் அப்பிடின்னு வெறிபிடிச்சு பேசறதெல்லாம் பாக்கறப்போ சிவாஜி ஒருத்தர்கிட்ட இருந்துதான் இந்த மாதிரி நடிப்பை நாம எதிர்பார்க்க முடியும்.'சும்மா சுட்டேன்' னு ஆக்ரோசமா பேசறதெல்லாம் அதகளமா இருக்கும்.
குண்டு பாஞ்சு தரையில விழுந்து துடிக்கிற காட்சியில நம்மையும் துடிதுடிக்க வெச்சிடுவார்.

5 .சாந்தப்பன்- 
வெள்ளந்தியான விவசாயி.
பூசாரியா வர்ற நாகேஷை கூட்டிட்டு வந்து சாவித்திரிக்கு பூஜை பண்றது ,நாகேஷ் அப்பப்போ பணம் கொடுக்கணும்னு சொல்லும்போது அப்பப்போதான்னேனு சொல்றது, சாவித்திரி அதட்டறப்போ அடங்கி ஒடுங்கி நிக்கறதுண்ணு மனுஷன் அமைதியா இருந்தே அட்டகாசப்படுத்தி இருப்பாரு.

6)செல்வராஜ்- 
தொழுநோயாளி பாத்திரம்.
உண்மையான ஒரு தொழு நோயாளியத்தான் நாம பாத்துகிட்டு இருக்கறோம் அப்பிடிங்கற நெனப்புத்தான் பாக்கற நம்ம மனசுல இருக்கும்..இடது பக்க கன்னத்தை கொஞ்சம் இழுத்து வச்ச படியே நடிச்சிருப்பாரு சிவாஜி. சிவாஜி நடிச்ச 9 வேஷத்தையும் வெளிநாட்டு காரங்க நம்பலயாம். அதுல இந்த வேஷம் ரொம்பவே வித்தியாசம்.

7.சிங்காரம்- 
கூத்துக் கலைஞரா நடிச்ச வேஷம்.சாவித்திரி கூத்துகலைஞரா நடிக்க வேண்டி சிவாஜிகிட்ட கேட்டு நடிச்சாராம்.சிவாஜி இந்த படத்துல கூடுதலாகவும் செஞ்ச ஒரு கேரக்டர் இது .இதையும் சேத்து சிவாஜி இந்தபடத்துல செஞ்சது 10 வேஷம் அப்பிடின்னு சொல்லலாம்.மேடையிலே வர்ற கூத்து பாட்டு நடிப்பு எல்லாம் இவ்வளவு சிறப்பா வேற படத்துல நாம பாத்துருக்க முடியாது.

8)வீரப்பன்-
போலீஸ் ஆபீசர் பாத்திரம்.இவருடைய 
கம்பீரத்தை காட்டறக்காகவே அவரோட ஓபனிங் சீனுலே புலி வேட்டை ஆடறது மாதிரி காட்சி வெச்சிருப்பாங்க.அந்த சீனு கடைசியிலெ ஒரு சிரிப்பு சிரிப்பாரு பாருங்க. அடேங்கப்பா !ஒரு மனுசனாலே இப்படியெல்லாம் சிரிக்க முடியுமா ?என்ன ஒரு கம்பீரமப்பா .சாவித்திரியை டைனிங் டேபிளில் உட்கார வெச்சு இவரு சாப்பிடறது எப்பிடின்னு சொல்லிக் கொடுக்கறத ரொம்ப ரசனையா
செஞ்சிருப்பாரு சிவாஜி.

9)ஆனந்தன்- 
இந்த பாத்திரத்தை வெச்சுத்தான் அந்த 8 வேஷமும். இதை கடைசியாத்தான் காட்டுவாங்க. 
செத்துடலாம்னு ரூமுக்குள்ள போன பின்னாடி சாவித்திரி வந்து  கதவை திறந்ததும் நம்பாமே அசையாம நின்னு அதை உண்மைன்னு அந்த மனசு எப்படி கொஞ்சம் கொஞ்சமா ஏத்துகிட்டு பழைய சகஜ நிலைமைக்கு அந்த 
கேரக்டரை மாத்தி காட்டுவாரு பாருங்க.படி படியா அந்த உணர்வுநிலையை அவரு கொண்டு வந்து ,
பாக்கற நம்மை அந்த சீனுக்குள்ளே நம்மளை ஐக்கியமாக்கி விடுவார் சிவாஜி .அதை எப்படி மகிழ்ச்சியா கொண்டு வருவார் பாருங்க

இன்னைக்கு இருக்கற டெக்னாலஜிய வச்சுகிட்டு மாட்ரிக்ஸ் மெத்தட்டில் ஒரு நடிகனை 100 என்ன 1000 மாகக் கூட காட்டலாம்.ஆனா அதெல்லாம் ஜெராக்ஸ் காபி மாதிரி தான் இருக்கும்.
ஒரு நடிகன் அப்படினா ஒவ்வொரு வேசத்துக்கும் அதுக்கு ஏத்த மாதிரி நடிப்பு இருக்கணும். அந்த நடிப்புல ஒரு துடிப்பு இருக்கணும். அந்தத் துடிப்புல அதுக்கு ஏத்த உணர்ச்சிகள் இருக்கணும்.
அதுல ஜெயிச்சு காட்டினவர் தான் சிவாஜி.

செந்தில்வேல் சிவராஜ். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற