சிவாஜி ரசிகர்களுக்கும் மத்த
ரசிகர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.அப்படி என்ன வித்தியாசம் ?
பேஸ்புக்க்குல பல நாளுக்கு முன்னாலே ஒரு பதிவ பார்த்தேன்.அந்த பதிவுலே இருந்ததை முதல்ல உங்களுக்கு சொல்றேன் .அப்புறம் என்ன வித்தியாசம் என்பதை கடைசியிலே பாக்கலாம்.
பதிவு இதுதான்.
அந்த நண்பர் இட்ட பதிவு...
சிவாஜி கணேசன் இறந்து விட்டாரா ..?
.
யார் சொன்னது..?
.
கடந்த வாரத்தில் ஒரு நாள் காலை ... ...
சுமார் ஒன்பது மணி இருக்கும்.
.
எனது ஃபேஸ்புக் நண்பர்
அவர்கள் ‘திடீர்’ என ஒரு பதிவு இட்டார்.. என் பெயரை டேக் செய்து..!
.
அது இதுதான்...!
.
“நண்பரே உங்களுக்கு ஒரு சேலஞ்ச் .
சும்மா வெளையாட்டுக்குத்தான்.
‘தில்லானா மோகனாம்பாள்’ படத்துல , இந்தக் காட்சில வர்ற பாட்டுக்கும் , நடிகர் திலகத்திற்கும் ஒரு சிறப்பான ஸ்பெஷாலிடி உண்டு.
யார் மொதல்ல கண்டு புடிக்கிறாங்களோ அவங்களுக்கு ஒரு புத்தகம் பரிசு. அவங்களுக்குப் புடிச்ச புத்தகம். வாங்கி அனுப்புவேன். பரிசுத் தொகை ரூ 500/-“
.
இப்படி எழுதி “தில்லானா மோகனாம்பாள்” காட்சி ஒன்றை ஸ்க்ரீன் ஷாட் ஆகப் போட்டிருந்தார் அவருடைய நண்பர்.
.
காட்சியைப் பார்த்தேன்..! ஊஹூம்..! கண்டு பிடிக்க இயலவில்லை ..!
.
தோல்வியை ஒத்துக் கொண்டேன் .
.
சிரித்தபடி நண்பர் கேட்டார் :
“ கண்டு பிடிக்க முடியலியா ..? நல்ல வேளை 500 ரூபாய் செலவில்லே !”
.
“தெரியவில்லை” என்று நான் சொல்லி விட்டாலும் , உள்மனதுக்குள் ஏதோ ஒரு ராகம் மெல்லியதாக ஒலித்தது.
.
“சட்” என கண்களை மூடி ஆழ்மனதை திறந்து வைத்தேன்.
.
ஆஹா.. அந்தப் பாடல் தெளிவாக என் காதுகளில் ஒலித்தது . அது இதுதான் :
. “ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே...
குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே "
.
அட ... இது “பாவை விளக்கு” பாடல் அல்லவா ..?
சிவாஜி இந்த பாடல் மெட்டைத்தானே “தில்லானா மோகனாம்பாள்” படத்தில் நாதஸ்வரமாக அந்தக் காட்சியில் வாசிப்பார் .
.
பட பட பட வென கீ போர்டைத் தட்டி , பதில் அனுப்பினேன் நண்பருக்கு.
.
சந்தோஷத்துடன் அவருடைய நண்பர் கேட்டார் .
“என்ன புத்தகம் வேண்டும் ஸார் ? சந்தோஷமாக அனுப்பி வைக்கிறேன்.”
.
நான் பதில் சொன்னேன் :
“ ஐயா ...எனக்கு புத்தக பரிசு வேண்டாம்... செங்கோட்டை அரசு மருத்துவமனை நூலகத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான பத்திரிகைகளை அனுப்பி வைக்க மட்டும் ஏற்பாடு செய்யுங்கள்”
.
நூலகம் பற்றி நான் எழுதி அதன் விபரங்களையும் எழுதி அனுப்பி வைத்தேன்.
.
ஆனந்தத்தில் ஆழ்ந்து போனார் நண்பர்.
“அடடா, இதைப் போன்ற நல்ல வார்த்தைகளைக் கேட்க “ஆயிரம் காது போதாது வண்ணக் கிளியே ..!!" சொன்னது போலவே ரூ . 500 தொகையை அனுப்பி வைக்கிறேன்.”
.
.அவருடைய நண்பர் சொன்னதை விட , இரு மடங்கு தொகையை இந்த வாரம் அனுப்பி வைப்பதாக மெசேஜ் அனுப்பி இருக்கிறார்.
.
நன்றி நண்பரே ,
.
இன்னும் ஒரு சுவாரஸ்யமான விஷயம் ..!
.
நானும் சிவாஜி ரசிகன் ..
அவருடைய நண்பர் அவர்களும் தீவிர சிவாஜி ரசிகர் .
ஃபேஸ்புக்கில் நாங்கள் இருவரும் நட்பு வட்டத்திற்குள் வந்ததற்கு , சிவாஜியும் ஒரு முக்கிய காரணம் .
.
அது மட்டும் அல்ல ... சொல்லப் போனால் பொது நலம் நினைத்து நண்பர் வழங்கும் இந்த நூலக உதவிக்கு , சிவாஜிதான் முக்கிய காரணம் .
.
சிவாஜி நடித்த “தில்லானா மோகனாம்பாள்” காட்சி மூலம்தானே , எங்களுக்குள் இந்த போட்டி வந்தது ..? அதுதானே இந்த பரிசையும் கிடைக்க செய்தது..?
.
“பாபு”படத்தில் சிவாஜி பாடியது என் காதுகளில் ஒலிக்கிறது :
.
“பல நூல் படித்து நீயறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
.
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே..”
.
சிவாஜி இறந்து விடவில்லை..!
எங்களைப் போன்ற அன்பு ரசிகர்கள் இருக்கும்வரை , சிவாஜி , இந்த உலகில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் ..!
.
வாழ்க சிவாஜி புகழ் ..!
வாழ்த்துக்களும் , பாராட்டுக்களும்....
.
வாழ்க வளமுடன்..!
இது தான் அந்த பதிவு.இந்த பதிவில் தில்லானா மோகனாம்பாள் பற்றிய நண்பரின் அந்த கேள்வியும் அதற்கு பதில் சொன்ன நண்பரின் பதிவும் பெரிதல்ல.அது முகநூலில் சாதாரண விஷயம்தான்.
ஒரு கேள்வி கேட்டுஅதற்கு பரிசாக புத்தகம் பரிசாக கொடுக்கிறேன் என்று சொன்னாரே அது ஒரு நல்ல விஷயம்.அறிவை வளர்க்கும் செயல்.
அந்த கேள்விக்கு பதில் சொல்லி அந்த பரிசை தனக்கு வேண்டாம் என்றுசொல்லி ,மருத்துவமனை நூலகத்திற்கு அதை பரிசாக கொடுங்கள் என்று சொன்னாரே அந்த நண்பர் அது அதை விட நல்ல விஷயம் .நல்ல மனது.
நண்பர் இப்படி சொல்லி விட்டாரே என்று அவருடைய நண்பர் சொன்ன பரிசுத் தொகையை விடஇரு மடங்கு பரிசுத்தொகையை அனுப்பி வைத்தாரே ,அதுவும் புத்ககங்களாக நூலகத்திற்கு அது அதை விட சிறப்பான நல்ல காரியம்.
இந்த நண்பர்களுக்கு இப்படி எல்லாம் செய்ய தூண்டு கோலாக இருந்தவை எவை .
சிவாஜி சொல்லிக் கொடுத்த வழி.சிவாஜி படங்கள் கற்றுக் கொடுத்த பாடம்.
சிவாஜி எப்படி தான தருமங்கள் செய்தார் ?தேசத்திற்கும் ,கல்வி பணிகளுக்கும் ,நல்ல காரியங்களுக்கும் உதவி செய்தவர் சிவாஜி.
ஒரு நாட்டின் அரசன் எவ்வழியோ அந்த வழிதான் அவனுடைய குடி மக்களும் என்பார்கள்.தலைவன் எவ்வழியோ தொண்டர்களும் அவ்வாறே.
சிவாஜி செய்தார்.நல்லது சொன்னார் .அந்த நல்ல விஷயங்கள் அவருடைய ரசிகர்களின் மனதில் அது போலவே படிந்துள்ளது என்பதற்கு இந்த பதிவு ஒரு நல்ல உதாரணம்.
இன்றைய பிரபல நடிகர்களின் ரசிகர்கள் தங்களுடைய அபிமான நடிகர்களின் கட் அவுட்களுக்கும் பேனர்களுக்கும் ராட்த போஸ்டர்களுக்கும் ,
லட்சக்கணக்கில் பணங்களை தண்ணீராய் வாரி இறைத்து வீணான செலவுகளை யாருக்கும் உபயோகமில்லாத வகையில் செலவு செய்கிறார்கள்.
அதையும் நினைத்துப் பாருங்கள் மேலே கூறப்பட்ட இந்த விஷயங்களையும் நினைத்து பாருங்கள்.
இதுதான் சிவாஜி ரசிகர்களுக்கும் மமற்ற ரசிகர்களுக்கும் உள்ள வித்தியாசம்.
கருத்துகள்
கருத்துரையிடுக