இப்ப வர்ற ஒண்ணுமில்லாத உருப்படி படத்துக்கு,க்ராபிக்ஸ்ல சண்டை போடற கதாநாயக நடிகனுக்கெல்லாம் 100 கோடி ரூபா சம்பளம் 150 கோடி ரூபா சம்பளம் அப்பிடின்னு கொடுக்கறாங்க.ரசிகர் கூட்டம் இருக்கறதால நாலஞ்சு நாளைக்கு வர்ற கூட்டத்தை வச்சுத்தான் இவங்க சினிமா பொழைப்பே ஓடிக்கிட்டிருக்கு.
இப்ப உச்சத்துல இருக்கற கதாநாயகர்களை வெச்சு அவங்க நடிச்சு வர்ற படங்கள வெச்சு அவங்க வாங்கற சம்பளத்தை வச்சு பாக்கறப்போ சிவாஜி நடிச்ச கர்ணன் ,திருவிளையாடல் படங்கள விடுங்க.இந்த கால ஹீரோயிச படமா எடுத்துகிட்டா சிவந்த மண் படத்தை நினைச்சு பாருங்க. அந்த படத்துல சிவாஜி நடிச்ச காட்சிகளை நினச்சு பாருங்க.நடிகர்களை நினைச்சு பாருங்க.பாட்டுகளை நினச்சு பாருங்க.சிவாஜியோட நடிப்பை நினைச்சு பாருங்க.
இப்படியெல்லாம் பாத்தா சிவாஜிக்கு இந்த கால கணக்குப் படி 500 கோடி சம்பளம் தான் கொடுக்கணும்.
இதே சம்பளத்தை இன்னைக்கு இருக்கற கதாநாயகனுக்கு கொடுத்தாலும் அந்த மதிரி நடிப்பை நாம எதிர்பாக்க முடியுமா ?
நாம சும்மா ஒண்ணும் சொல்லலை.சிவாஜி சிவந்த மண் பட சீனுகளை கொஞ்சம் நினைச்சுப் பாருங்க.
புரட்சி செய்யற வீரர்களை அடக்கறதுக்காக ஹெலிகாப்டர்ல வந்து குண்டு போடுவாங்கல்ல படத்துல.ஹெலிகாப்டர் எவ்வளவு குளோசா பக்கத்துல சிவாஜியோட தலையை டச் பண்ற மாதிரி வரும்.நிமிஷம் கூட இல்ல. எல்லாம் செகண்ட்தான் .அதுக்குள்ள தப்பிச்சாகணும்.சிவாஜிக்கு அந்த நேரத்துல என்ன தோணுச்சோ ,அந்த உள்ளுணர்வோ டக்குண்ணு பக்கம் இருந்த குழிக்குள்ள பாஞ்சு தப்பிட்டாரு.கொஞ்சம் அசந்திருந்தா எப்படிப்பட்ட விபத்து நடந்துருக்கும்.சிவாஜியோட வேல்யூ என்ன? தமிழ் சினிமாவோட பாதி வியாபாரமே சிவாஜிங்கற ஒரே நடிகனை நம்பி ஓடிக்கிட்டு இருந்த காலகட்டம் வேற.அந்தகாட்சி பூரா சிவாஜியோட நடிப்பை நினைச்சி பாருங்க.உணர்ச்சிகரமா அவரு பேசி நடிச்சத பாத்தா நரம்பெல்லாம் எப்படி துள்ளும் பாருங்க.
கப்பலுக்கு வெடிண்டு வைக்க போற காட்சியை நினைச்சு பாருங்க. கப்பலுக்குள்ள அந்த சண்டைகாட்சி எப்படிப்பட்ட ஆக்ஷன் காட்சி.சில கதாநாயகனுக நல்லா சண்டை போடலாம்.ஆனா நடிப்போட ரசிச்சு பாக்கற மாதிரி வருமா? அந்த படத்துல சிவாஜியோட உடலமைப்பு ,அந்த பச்சை கலர் காஸ்ட்யூம்ஸ் டிரஸ்சுக,அருமையான ஒரிஜினர் ஹேர் ஸ்டைல்னு சிவாஜி எப்படி இருப்பார் அந்த படத்துல.கப்பல்ல அந்த சண்டை காட்சியும் நல்ல ஆக்ஷன் காட்சி வேற.
இந்த சீனுல பல ஸ்டைல்ல சண்டைய முடிச்சிட்டு கடல்ல நீந்தி வர்ற காட்சியை எல்லாம் எப்படி எடுத்திருப்பாங்க.ரொம்ப பபரபரப்பா விறு விறுப்பா நம்மள பாக்க வெச்சு சீனுகளாச்சே.
படத்துல ஒரு குளத்தை காட்டுவாங்க. அது ஷெட்டிங்ஸ்னு சொன்னா நம்ப முடியுதா ?எவ்வளவு நீளத்துக்கு குழியை வெட்டி அதுல எந்தளவுக்கு தண்ணியை நிரப்பி எந்தளவுக்கு வேலை செஞ்சிருப்பாங்க. குளம் மாதிரி காமிக்கணும்னு எவ்வளவு மெனக் கெட்டிருப்பாங்க.
நூத்துக்கணக்கான லாரிகளிள்ல தண்ணிய கொண்டு வந்து நிரப்புனாங்களாம்.இந்த ஷெட்டிங் ஸ்டுடியோலதால் போட்டாங்களாம்.ஷீட்டிங் முடியறதுக்குள்ளேயே அந்த குளம் உடைஞ்சு பக்கத்து செட்டுல எல்லாம் புகுந்துகிச்சாம்.இது எவ்வளவு பெரிய சிரமத்தை கொடுத்திருக்கும்.மறுபடியும் குளக்கரையை சரிபண்ணி மறுபடியும் தண்ணிய கொண்டு வந்து நிரப்பி அப்பிடின்னு கேக்கறதுக்கே தலை சுத்துதே நிஜத்துல இது எவ்வளவு பெரிய தலைவலியை கொடுத்துருக்கும்.படத்துல அந்த குளத்துல படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் பாருங்க.எவ்வளவு அழகா இருக்கும்.சிவாஜி காஞ்சனாவை பரிசல்ல உக்கார வெச்சு நாலஞ்சு பேரு அந்த பரிசலை தள்ளிகிட்டு வர்ற மாதிரியான சீனுக ,அந்த குளத்துல ஒரு சண்டை காட்சி ,நம்பியாரை சுடறதுக்காக ஒருசின்ன ரிகர்சல் நாடகம் இப்படி பல பல நல்ல இன்டிரஸ்டிங்கான சீனுக எல்லாம் அந்த குளம் சம்பந்தப்பட்ட காட்சிகள்ல இருக்கும்.
சிவாஜியை கைது பண்ணி ஜெயில்ல போட்ட பின்னாலே அந்த ஜெயில்ல இருந்து சிவாஜி தப்பிக்கற மாதிரி அந்த காட்சிகளை எப்படி எடுத்திருப்பாங்க.ரொம்ப ஜடியா செஞ்சிருப்பாரோ ஸ்ரீதர்.சிவாஜி அந்த சீனுல பிரமாதமா ஆக்ஷன் செஞ்சிரூப்பாரு.சிறைக்கதவை திறந்து சிவாஜியை உள்ள அடைக்க போறப்போ சிவாஜி அந்த சிறைக்குள்ள நுழைஞ்ச வேகத்துலேயே படு ஸ்பீடா ஓடி செவுத்து மேலே காலை வெச்சு ஒரு ஜம்ப் அடிச்சு சடார்னு திரும்பி ரெண்டு போலீசையும்
தள்ளி சாச்சிட்டுட்டு அதே வேகத்துல ஓடி டேபிள்ல குதிச்சு படுத்து அந்த டேபிள்ல இருந்த துப்பாக்கி எப்படி சிவாஜியோட கைக்கு வந்துச்சுன்னே நம்மானாலே யோசிக்க முடியாதபடி அந்த ஷாட் அவ்வளவு ஸ்பீடா இருக்கும்
டேபிள்ல உக்காந்தது இருக்கற போலீஸ் அதிகாரிய அடிச்சு துப்பாக்கிய பின்னாலே வெச்சு மிரட்டி ,அங்க இருக்கற எல்லா போலீசோட துப்பாக்கியையும் காலுக்கு பக்கத்துல வெக்கச் சொல்லி ,ஒவ்வொண்ணா சிறைக்குள்ள தட்டி விடுவாரு பாருங்க.என்ன அட்டகாசமா சீன் க்ரியேட் பண்ணியிருப்பாங்க.இதுக்குமேல ஒரு சீனா ,கை துப்பாக்கிய நீட்டி சிறை அதிகாரிகளை மிரட்டற மாதிரி வச்சுகிட்டு , கைவிலங்கை நீண்ட குழல் துப்பாக்கியோட லிவரை கால் விரல வெச்சு சுட்டு கை விலங்கை சிவாஜி உடைக்க மாதிரி சீனெல்லாம் ரொம்ப ஆக்ஷன் க்ரியேட்டிவிட்டியா எடுத்திருப்பாங்க.சண்டை காட்சின்னா பொதுவா மத்த நடிகர்களை சொல்வாங்க. ஆனா அவங்க அந்த டயத்துல செய்யற பாடி லாங்குவேஜ் ,முக பாவனைகளை யாரும் சொல்லறது கிடையாது.இதுல தான் சிவாஜியோட ஆக்ஷன் பெர்பார்மன்ஸை நாம கவனிக்கனும்.
ஆக்ஷனெல்லாம் செஞ்சிட்டு மூஞ்சிய மரக்கட்டை மாதிரி வெச்சுகிட்டா அதுக்குபேரு நடிப்பா.?
சிவந்த மண்ணுல இந்த சீனை பாருங்க. சிவாஜி எப்படி மிரட்டி எடுத்திருப்பார்னு.
படத்துல எல்லா சீனுலும் சிவாஜி நடிச்ச நடிப்ப சொல்லிகிட்டே இருக்கலாம்.
அரபு ஷேக் மாதிரி வேஷம் போட்டுட்டு பட்டத்து ராணி பாட்டுல நடிச்ச நடிப்பை பாருங்க..
ரயில் குண்டு வெடிப்பு காட்சி முடிஞ்சதும் ,தன் மனைவியே அதுக்கு இடைஞ்சலா இருந்துட்டா அப்படின்னு நெனச்சு காஞ்சனா மேலே கோபப்பட்டு அடிச்சு தள்ளற காட்சியையும் பாருங்க,
ராணுவ அதிகாரியை வர்ற அப்பாவான ரங்காராவ் கிட்ட பேசற வசனங்களாகட்டும்,இப்படி நிறைய நிறைய உயிர் துடிப்பான காட்சிகள்.
இப்ப வர்ற ரொம்ப படங்கள்ல க்ளைமாக்ஸ் சீன எப்படி எடுத்து முடிக்கிறது அப்பிடீன்னு தெரியாம அவங்க முழிச்சிருக்கிறது அவங்க எடுத்த விததத்தை வெச்சே நாம புரிஞ்சிக்கலாம்.
இந்த மாதிரி படங்கள்ல நடிக்கிற உச்ச நடிகர்களுக்குத்தான் 100 கோடி 150 கோடி ரூபா சம்பளமாம் .அப்ப சிவாஜி இந்த படத்துலேல நடிச்ச நடிப்புக்கெல்லாம் 500 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கணும்.
கருத்துகள்
கருத்துரையிடுக