சிவாஜி குடும்பத்தில் இருந்து நடிக்க வந்தவர்கள்:
இதுவரை தோராயமாக தமிழில் 6000 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன என்கிறது ஒரு புள்ளி விபரகணக்கு.
தமிழ்சினிமாவின் முதல் பேசும்திரைப்படம் காளிதாஸ்.
இந்ததிரைப்படம் வெளிவந்த ஆண்டு 1931.
தமிழ் சினிமாவின் 6000 திரைப்படங்களில் சிவாஜி குடும்பத்தை சேர்ந்தவர்கள் நடித்து வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 550 படங்கள் ஆகும்.
இதில் சிவாஜி நடித்த படங்களின் எண்ணிக்கை 300 க்கு மேலிருக்கும்.
தனக்கு பிறகு இந்த சினிமாவில் தன் குடும்பத்தில் இருந்து யாரும் நடிக்க வரக்கூடாது என்பதே சிவாஜியின் விருப்பமாக இருந்தது.காலத்தின் கட்டாயமாக பலரும் சிவாஜி குடும்பத்தில் இருந்து பலரும் நடிக்க வந்தனர்.சிவாஜியின் தம்பி வி.சி.சண்முகம் திரைப்பட தயாரிப்பு பட விநியோகம் மற்றும் சிவாஜியின் கால்ஷீட் ஆகியவற்றை கவனித்து கொண்டார்.சினிமா தொடர்பான அத்தனை விஷயங்களையும் தெரிந்து வைத்திருந்தவர்.
சிவாஜி பட நிறுவனங்களை நல்ல முறையில் வழி நடத்தி சென்றவர்.சிவாஜி குடும்பத்தில் இருந்து நடிக்க வந்தவர்கள் யார் யார் என்பதை இதில் பார்க்கலாம்.
இளையதிலகம் பிரபு.
பிரபுவை போலீஸ் ஆபிசர் ஆக்குவதே சிவாஜியின் விருப்பமாக இருந்தது.ஆனால் தம்பிசண்முகத்துக்கு பிரபுவை சினிமா துறையில் நடிக்க வைக்க விருப்பம் இருந்தது.1982 ல் இயக்குனர் சி.வி ராஜேந்திரன் அவர்களின் விருப்பமும் அந்த சமயத்தில் சண்முகத்திடம் சொல்லப்பட பிரபு சினிமாவில் இறங்க ஒரு முடிவு ஏற்பட்டது.C.V.ராஜேந்திரன் அப்போது இயக்கிய சங்கிலி திரைப்படத்தில் பிரபுவை சிவாஜியோடு நடிக்க வைத்தார்.சங்கிலியில் தொடங்கிய பிரபுவின் திரைப்பயணம் இப்போது வரை 230 படங்கள் வரை வளர்ந்து கொண்டே இருக்கிறது.ஏறக்குறைய 140 படங்களில் கதாநாயகனாக நடத்த இளையதிலகம் அதற்கு பின் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார்.
பிரபுவின் திரைப்பயணத்தில் மாபெரும் திரைப்பட சாதனைகள் பல நிகழ்த்தப்பட்டுள்ளது.
1988 வருடம் 14 படங்கள் நடித்து வெளியானது.இதில் 13 படங்கள் 100 நாட்கள் ஓடிய மாபெரும் சாதனையை பிரபு செய்துள்ளார்.அனேகமாக இத்தகைய ஒரு சாதனையை செய்த வேறு யாரும் செய்திருக்க வாய்ப்பில்லை.
அதே போலே சின்னதம்பி பட சாதனை.சின்ன தம்பி வெளிவந்த 1991 ஆம் ஆண்டு வரை தமிழ்சினிமா தொடங்கியது முதல் 60 ஆண்டுகள் ஆகியிருந்தது.அது வரைக்கும் அதாவது 60 வருட தமிழ் சினிமா வரலாற்றில் எந்த தமிழ் படமும் செய்யாத சாதனையாக 46 தியேட்டர்களில் 100 நாள் ஓடிய முதல் தமிழ்படம் என்ற சாதனையை செய்தது.
இளையதிலகம் பிரபு ஏறக்குறைய 40 இயக்குனர்களை அறிமுகம் அதாவது அந்த இயக்குனர்களின் முதல் படங்கள் என்ற வகையில் 40 இயக்குனர்களுக்கு மேல் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.பிரபு செய்த சாதனைகளின் சிறப்பம்சம் என்னவென்றால் இவருடைய பெரும்பான்மையான படங்கள் பிரமாண்ட பொருட்செவில் தயாரிக்கப்பட்டதல்ல.குறைந்த செலவு செய்து தயாரிக்கப்பட்ட திரைப்படங்களாகும்.
இளையதிலகம் பிரபு தன் தந்தையான நடிகர்திலகத்துடன் இணைந்து மட்டும் 19 படங்களில் நடித்துள்ளார்.பிரபு நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை இவருடன் இணைந்து நடிக்காத கதாநாயகர்களே கிடையாது என்ற சிறப்பும் உண்டு.தயாரிப்பாளர் இயக்குனர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் இளையதிலகம்.இப்படி அன்னை இல்லத்தில் இருந்து வந்து நடிகர்திலகத்தின் பாதிப்பையும் மீறி இளையதிலகம் பல சாதனைகளை செய்ததுடன் பல சிறப்புக்களையும் பெற்றுள்ளார்.
ராம்குமார்.
1986 ல் சிவாஜி புரொடொக்ஷன்ஸ் தயாரித்த படம் அறுவடைநாள்.G.M.குமார் இயக்கிய முதல் படம்.பல புதியவர்களின் கூட்டணியில் உருவான படம் இது.இந்த திரைப்படத்தில் தான் மிகவும் முக்கியமான வித்தியாசமான பாத்திரத்தில் ராம்குமார் நடிகராக அறிமுகம் ஆனார்.சிவாஜியின் குரல் சாயலில் ராம்குமாரின் குரல் இருந்தது.ராம்குமாரின் நடிப்பு நன்றாக வித்தியாசமாக இருந்தது.அறுவடை நாள் படத்திற்கு பின்பு மைடியர் மார்த்தாண்டன் படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் ஒரு சீனில் தலை காட்டியிருப்பார் ராம்குமார்.சிவாஜி பிரபு நடித்துக் கொண்டிருந்ததால் ராம்குமார் நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை.நீண்ட இடை வெளிக்கு பின்பு இயக்குனர் ஷங்கர் அன்னை இல்லத்திற்கு வந்து வற்புறுத்தி கேட்டுக் கொண்டதால் அவரது 'ஐ 'படத்தில் நடித்தார்.பின்பு LKG படத்திலும் நடித்ததுடன் சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார்.
இளையதிலகம்,ராம்குமாருக்கு அடுத்த படியாக அன்னை இல்லத்தில் இருந்து சினிமாவுக்கு நுழைந்தவர் மனோ.முழுப்பெயர்.
ஆரம்பத்தில் இவர் தன்னை சிவாஜி மனோ என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.சிவாஜி புரொடொக்ஷன்ஸ் தயாரித்த படங்களில் தயாரிப்பு என்ற டைட்டிலில் சாந்தி நாராயணசாமி ,T.மனோகர் என்ற பெயர்கள் இடம் பெறும்.இதில் T. மனோகர்தான்
நடிக்க வந்த சிவாஜி மனோ.
இவர் திரையில் அறிமுகம் ஆன முதல் படம் ரத்ததானம்.இந்த படத்தில் பிரபுவுடன் இணைந்து நடித்திருப்பார்.இவரை அறிமுகம் செய்த இயக்குனர் சிவச்சந்திரன்.ரத்ததானம் இவரது முதல் படம் ஆனாலும் பல படங்களில் நடித்து அனுபவம் பெற்றவர் போல் இதில் அவருடைய நடிப்பு அமைந்திருந்ததுடன் நன்றாக நடித்திருக்கிறார் என்று பத்திரிக்கைகளின் பாராட்டையும் பெற்றார்.இந்த படம் 100 நாள் ஓடி வெற்றி பெற்ற படமாகும்.
இந்த படத்திற்கு பின்பு பொண்ணு பாக்க போறேன் ,மதுரை வீரன் எங்க சாமி போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.குணசித்திர நடிப்புக்கு ஏற்ற வகையில் இவர் தோற்றம் அமைந்து இருந்ததால் இவர் அந்த வேடங்களில் மட்டுமே செய்து வந்தார்.பின்னாட்களில் தொலைக்காட்சி சேனல்களில் டிவி சீரியல்கள் பலவற்றில் நடிக்க ஆரம்பித்து இப்போது வரை நடித்து வருகிறார்.
துஷ்யந்த்..
மேலே குறிப்பிட்டவர்களுக்கு அடுத்த படியாக சிவாஜியின் மூத்தமகனான ராம்குமாரின் மூத்த மகன் துஷ்யந்த் சக்ஸஸ் என்ற படத்தில் அறிமுகம் ஆனார்.
இந்த திரைப்படம் வெளிவந்த ஆண்டு 2003.சக்ஸஸ் படத்திற்கு பின்பு துஷ்யந்த் நடித்து வெளியான படம் மச்சி.இந்த இரண்டு படங்களிலும் இவர் டான்ஸ் பைட் எல்லாம் நன்றாக செய்திருப்பார்.இந்த இரண்டு படங்களுக்கு பின் நடிப்பதை தொடரவில்லை.ஆனால் அவர் தொடர்ந்து நடித்திருந்தால் தமிழில் நல்லதொரு இடத்தை பிடித்திருக்க முடியும்.பெரும்பாலான பிரபல நடிகர்கள் தங்களுடைய ஆரம்ப கால படங்களில் அவ்வளவு சிறப்பாக பரிமளித்திருக்க மாட்டார்கள்.நடிக்க நடிக்க அரிதாரம் பூசப்பூச நாளடைவில் நல்ல நிலைமைக்கு வந்தவர்கள் தான் பெரும்பான்மையான நடிகர்கள்.துஷ்யந்த் ஆரம்ப படங்களிலியே நன்றாக செய்திருப்பார்.அதனால் அவர் அப்படியே தொடர்ந்திருந்தால் ஒரு முன்னணிகதாநாயகனாக வலம் வந்திருப்பார்.நீண்ட இடைவெளிக்கு பின் இவர் நடித்து வெளிவந்த படம் 2023 ல் வெளியான தீர்க்கதரிசி.போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார் .
விக்ரம் பிரபு..
கும்கி படம் பாதி வளர்ந்த நிலையில் கூட பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.படம் முக்கால் வாசி வளர்ந்த நிலையில் கூட அதன் புரோமேசன் போஸ்டர்களில் கூட யானை சம்பந்தப்பட்ட காட்சிகள் தான் வெளியிடப்பட்டன.இந்த படத்தில் இளையதிலகத்தின் மகன் விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் என்ற அதிகார பூர்வ தகவல் வெளியான போதுதான் தமிழ் ரசிகர்களிடையே அது மிகுந்த ஆவலை உண்டாக்கி இருந்தது.இளையதிலகத்தின் மகனா ? எப்படி இருப்பார் என்றெல்லாம் எல்லோரலும் ஆவலுடன் பார்க்க காத்திருந்தார்கள்.கும்கி பட இசை வெளியீட்டின் போது நடந்த டிரெயிலரை பார்த்த பின்புதான் ரசிகர்களின் கண்கள் பெரும் வியப்பை காட்டின.டிரெயலரில் காண்பிக்கப்பட்ட காட்சிகள் ,பாடல்கள் அன்றே அந்த படம் பெரும் பிரபல்யம் ஆகும் என்று எல்லோராலும் சொல்லப்பட்டது.அது போலவே அந்த படம் வெளியான டிசம்பர் 12,2012 அன்று முதல் காட்சி ஆரம்பிக்கும் முன்பே கூடிய கூட்டம் படத்தின் வெற்றியை முன்பே சொல்வது போல் இருந்தது.கும்கியின் காட்டுத்தனமான வெற்றி திரையுலகை மிரள வைத்தது.ஒரு சாதாரண கிராமத்து இளைஞனாக விக்ரம்பிரபு நடித்த நடிப்பு பல கஷ்டங்களை கொடுத்தாகும்.தொடர்ந்து வெளியான விக்ரம்பிரபுவின் 5 படங்களும் 100 நாட்கள் ஓடி நல்ல பெயரைபெற்றுத் தந்தன.அதற்கு பின் அவர் தேர்ந்தெடுத்த கதைக்களங்கள் எல்லாம் வித்தியாசமான கதைக்களங்களாகவே இருந்தது.சில திரைப்படங்கள் திரைப்பட காட்சிப்படுத்துதலில் இயக்குனர்களின் சாமார்த்தியம் திறம் பட இல்லை என்றதால் அவருடைய நல்ல உழைப்பு வீணானது என்றே சொல்லலாம்.அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாம் வித்தியாசமான கதையமைப்புகளை கொண்டதாகவே இருக்கும்.
தர்ஷன் ராம்குமார்.
இவர் ராம்குமாரின் இளைய புதல்வர்.இவர் இது வரை திரைப்படங்களில் நடிக்க வில்லை.ஆனால் சில ஆவணப் படங்கள் ,குறும் படங்கள் ,நாடகங்கள் என்று நடித்து இருக்கிறார் .பல புகழ் வாய்ந்த பிரபல பிராண்டட் நிறுவனங்கள் தயாரித்த விளம்பர படங்களில் நடித்திருக்கிறார்.நடித்துக்
கொண்டும் இருக்கிறார்.
விரைவில் திரையுலகில் வலம் வருவார்.அதற்குண்டான முயற்சிகள் நடந்து வருகின்றன.நல்ல கதைக்காக காத்திருக்கிறார்.
வணக்கம்
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக